Jump to content

Aljazeera விடம் மாட்டிக்கிட்ட உதயநாணயராக்க (02 May 09)


Recommended Posts

சட்டலைட் படங்கள் வெளிவந்த பிறகுதான் வெளிநாட்டு ஊடகங்கள் எமது செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த இரு தினங்களுக்கு முன், இலங்கையின் மோதல் இடம்பெறும் பாதுகாப்பு வலயத்தில், சிறிலங்கா இராணுவத்தினரின் கனரக ஆயுத பாவணையை உறுதி செய்யும் செய்மதிப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள், வடகிழக்கில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டன.

நேற்று சனிக்கிழமை அதிகாலை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அறுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்த இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஆதாரங்களால், சிறிலங்கா அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பத்தொடங்கியுள்ளன.

நேற்று சனிக்கிழமை அல்ஜசீரா செய்தி சேவையில், முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை தாக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது நாணயகாரவினால் 'கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை எனவும் விடுதலை புலிகள் இருக்கும் பிரதேசங்களை மாத்திரமே தம்மால் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

'மோதலில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும் எதிர் எதிர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால், சர்வதேசத்திற்கு உண்மை புலப்படுவதற்காக மோதல் பிரதேசத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே'என கேட்கப்பட்ட கேள்விக்கு

பதில் அளித்த நாணயக்கார,

'புது மாத்தளன் பகுதிக்கு 30 ஊடகவியாளர்களை அழைத்து சென்றதாகவும், அதில் பிபிசி செய்தியாளர் உட்பட பல வெளிநாட்டு ஊடகவியளாலர்கள் அடங்குவதாகவும்' தெரிவித்தார்.

அப்போது மீண்டும், அதே போல் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே என கேள்வி கேட்கப்பட அப்படி அனுமதித்தால், அவ் ஊடகவியலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட முடியாது' என நாணயக்கார தெரிவித்தார்.

எனினும் 'காசா, ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் மிக ஆபத்தான மோதல்களின் போதே போர்ப்பகுதிகளுக்கு தம் தரப்பிலும், மேலும் பல சர்வதேச ஊடகவியலாளர்கள சென்று வந்ததாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும்,' அல்ஜசீரா செய்திச்சேவை விசனத்துடன் தெரிவித்தது.

'இடம்பெயரும் பொதுமக்கள் அதிகமாக காணாமற்போவது, கடத்தபடுவது, பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்பன தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றனவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .............சுபித் ரன் .....தினமும் இப்படி உண்மை செய்திகளால்...இனவெறி சிங்களம் , அதனுடன் துணை போகும் , அதிகாரிகளும் தலை குனிய வைக்க படவேண்டும்....எவ்வளவு தூரம் வார்த்தைகளால் சமாளிக்கிறார்கள். உண்மை உலகம் அறிய வேண்டும் காலம் ஓடிகொண்டிருக்கிறது . இனம் அழிந்து கொண்டிருக்கிறது .......சர்வதேசம் மெல்ல கண் திறக்கிறது . தேவை ஒரு போர் நிறுத்தம் .அதன் பின் தீர்வு .....மேலும் இத்தகைய பதிவுகளை போடவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். j

Link to comment
Share on other sites

திலீபன் பார்த்திபன் அவர்கள் பொது மக்களின் அவலங்களை உலகுக்கு சொல்லவே மிக ஆவலாக இருந்தார். மிகவும் வரவேற்க தக்கது.எனது ஆதங்கம், தற்கொலை தாரிகளை பாவித்தல், சிறுவர்களை பாவித்தல் போன்ற கேள்விகளுக்கு ஆணித்தரமான விடை ஒன்றை சர்வதேச செய்தி ஸ்தாபனத்துக்கு வழங்கி இருக்க வேண்டும். இப்படியான தருணங்கள் எமக்கு கிடைப்பது புலம் பெயர்ந்த மக்களின் இடை விடாத போராட்டங்களால் தான்.எமக்கு கிடைக்கும் தருணங்களை அருமையாக பாவித்தல் எமக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். இலங்கை அரசும் , எமக்கு எதிரானவர்களும் மேற்கூறிய இரு காரணங்களை வைத்து எம்மை கீழிறக்க பார்க்கிறார்கள். ஆகவே மிக மிக ஆணித்தரமான விடைகள் தலைமையில் இருந்து வர வேண்டும். இதனால் ஊடக போரை எதிர்கொள்ளும் எம்மை போன்ற சிறியவர்களுக்கு விடையளிக்க வசதியாக இருக்கும். நன்றி. அன்பு உறவுகளின் கருக்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.