Jump to content

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி புதிய படம் தயாராகிறது. இதுபற்றிய தகவலை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார்.

ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே இருவர் படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கேரக்டரில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றார். அவர் பிரபாகரன் கேரக்டருக்கான பிரத்யேகமான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து வருகிறார்.

viduppu

Link to comment
Share on other sites

கடவுளே.....

கடவுளே என்றால் என்ன அர்த்தம் ??? இவர் சரியான தேர்வுதான். முகச்சாடை சரியாகவே இருக்கிறது. இவர் இல்லையேல் அஜித் குமார். இல்லையேல் வெளி மாநிலம் போக வேண்டும் . தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ண, ஹிந்தியில் தர்மேந்திர, சன்னி தியோல், ஆதித்ய பன்சோலி,

மேலே உள்ளது முக்கியமான கருத்து அல்ல . ஈழத்தை பற்றி ஆழமாக கருத்துக்களை பரிமாறிய எந்த படமுமே வெளிவரவில்லை. ஈழம் என்பதே பல்வேறு கருத்து மோதல்கள் கொண்ட களம் . அதனால் படம் எடுப்பவரின் காசு காலியாகிவிடும். ஆனால் படம் எடுப்பதாக கூறி படம் எடுக்காமல் விளம்பரம் தேடிக்கொள்ள முடியும் . அனேகமாக இவர்கள் செய்வது இதுதான்

ஈழத்தை பற்றி படம் எடுக்க நான் முயற்சித்த போது நான் பட்ட அனுபவமே ஒரு படம் எடுக்கும் அளவுக்கு ஆனது. அதனால் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கன்னத்தில் முத்தமிட்டால் போல அரைகுறையா தெரிஞ்சிட்டு எடுக்காமல்.. முழுமையா எடுத்தால் நல்லா இருக்கும்

Link to comment
Share on other sites

கன்னத்தில் முத்தமிட்டால் போல அரைகுறையா தெரிஞ்சிட்டு எடுக்காமல்.. முழுமையா எடுத்தால் நல்லா இருக்கும்

அய்யா அரைகுறையாக இல்லை . முற்றிலும் கற்பனைக்கதை. மேலும் உண்மைச்சம்பவங்களை கலந்து. நான் சந்தித்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் நண்பர்கள் சொன்ன கருத்துக்கள் சில ( நான் சினிமாக்காரன் இல்லை என்பதால் இந்த கதையை படமெடுங்கள் என்றுதான் கூறினேன் .)

1. உனக்கு இது தேவையா ?

2. ரொம்ப நல்லா இருக்கு . ஆனா படம் வெளிவராதுப்பா

3. எங்கிட்ட அவ்வளவு காசு இல்ல ( ஏனெனில் அது ஏற்கனவே வெளியான வேற்று மொழி படத்தின் தழுவல் என்பதாலும் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனதாலும் கதை உரிமம் வாங்கவே பாதி பலம்/பணம் போயி விடும்)

4. தம்பி நாலு காசு பார்க்கிற மாதிரி கதை ரெடி பண்ணுப்பா . ( பெரும்பாலோனோர் கதை கேட்டபின் சொன்னது படம் கண்டிப்பா வெளி வராது . குற்றபத்திரிக்கை போல ஆயிடும் )

5. ஒரு மென்மையான காதல் கதைக்கு இவ்வளவு குரூரமும் ஆவேசமும் இன அழுத்தமும் தேவையா ??? ( ஐயா இத முழு காதல் படமா எடுத்து சிங்களவர்களிடமும் பாராட்டு வாங்க நினைத்தாரோ என்னவோ )

6. மொத்த படத்தையும் இலங்கை / கண்டி - யாழ் - ராமேச்வரத்தில் எடுக்க வேண்டி வருமே . இந்த லொகேஷன் ஏற்கனவே பார்த்ததாயிற்றே ???????????????????????

7. ரொம்ப ஈசியா கடலிலேயே ஹெலிகாப்டர் பைட் சொல்லுறியே . நீ சங்கர் சார் கிட்ட போயிருக்கனும்.

8. ஒருத்தன் கதையை அவனுக்கே தெரியாதபடி மாற்றி இருக்கிறாய் . வெரி குட் . ஆனா இது ரொம்ப ரோதனைப்பா . நீ ஒன்னு பன்னு. பேசாமல் இத தொடர்கதையா மாற்றி ஏதாவது வார இதழுக்கு அனுப்பி பார் . கதையாவது மக்களுக்கு தெரிய வரும் . ( ஏனெனில் மூலக்கதை வேறு என்று நான் சொன்ன பின் தான் அட ஆமாம்ல என்று சொன்னார்களே தவிர எவரும் சரியாக கண்டு பிடிக்க வில்லை .

9. இலங்கைக்கே போகாத நீ எழுதும் ஈழக்கதை எந்த அளவிற்கு எடுபடும்????. நீ குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் கால நிலையோடு ஒத்து போகிறது சரி . கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் சரி . அதை கண்முன் காட்டுவது அவ்வளவு எளிதல்ல . மேலும் இந்த கதை பற்றி அதிகமாக யாரிடமும் விவரிக்காதே . கதையாக எழுதுவதே உத்தமம் . அதுகூட தொடர்புடைய வயதுடைய நபர்களிடம் காட்டி மேலும் சில திருத்தங்கள் செய்து வெளிவிடு .

அன்று மனதை பூட்டி விட்டு கால சுழலில் சிக்கி சுழல மறந்தே போயி விட்டேன் . மீண்டும் இப்போது ஞாபகம் வந்தது . பகிர்ந்து கொண்டேன்

அப்பொழுது யார் 9கருநா(ய்)நிதி வேசம் போடுறது ?

கருணாநிதி வேஷத்திற்கு அவரே தான் வர வேண்டும் .

இளம் பிராய கொலைஞருக்கு நிறைய ஆட்கள் கிடைப்பார்கள் . ஏனெனில் சாதாரண முகம் கலைஞருடையது . சிறப்பான முகம் ஒன்றும் இல்லை . புலித்தலைவருக்கு தான் கஷ்டம் . ஏனெனில் அவரின் கண்கள் அவ்வளவு சுலபமாக தேட முடியாதது . அதனால் தான் என் லிஸ்டில் அதிகம் பிற மொழி நடிகர்கள் உள்ளனர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.