Jump to content

கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது


Recommended Posts

இதில வாற கருத்துக்களைப் பார்த்தா எல்லாரும் சேர்ந்துதான் நாட்டியம் போட வெளிக்கிட்டிருக்கினம். அதற்குள்ள ஒரு குழு முந்திட்டுது. மகளிர் அமைப்புக்கள்.. இந்த நாட்டியம் மூலம்.. எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்றால்.. நல்லாப் போடட்டும் விடுங்கள். மகளிர் அமைப்புக்கள் வன்னியில் இராணுவம் அடைத்து வைத்துள்ள மகளிரை இந்த நாட்டியங்களை ஆடிக் காப்பாற்றும் என்றால் நல்லா போடட்டும் விடுங்கள்.

இதில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு நிகழ்வை நடத்த (தாயகச் சூழலையும் பெரிதுபடுத்தாமல்.. இரண்டு தாயகப் பாடலுக்கு ஆடிட்டு.. அப்புறம் சினிமாவுக்கு ஆடுறதுதானே.. தாயகப்பற்று.! ம்ம்.. நல்லா வேசம் போடுறாங்க.. எப்பதான் கழன்று கொட்டுனப் போகுதோ..??! ) எல்லோரும் துணை போயிருக்கினம்.. சிலர் முந்திக் கொண்டுட்டினம்.. சிலர் தங்களில பிழை வந்திடக் கூடாது என்று நினைக்கினம்.

எவரும் வன்னியில் தென் தமிழீழத்தில் மகளிரின் நிலைக்காக வருந்துவதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் ஒரு மகளிர் அமைப்பு. நாட்டியம் போடவா..???! :o :o :D

வன்னியில் பெண்கள் இராணுவ விலங்குகளுக்கு இரையாகிறார்கள். தெந்தமிழீழத்தில் சிறுமிகள் கூலிகளுக்கு இரையாகிறார்கள்.. இவற்றை உலகின் கண்களின் முன்னிறுத்த எவரும் இல்லை.. ஆனால் நாட்டியம் போட மட்டும்.. ஆயிரத்தெட்டு மகளிர் அமைப்புக்கள். பெண்ணியம்.. பொடியியம் பேச மட்டும் கூட்டம் போடுவார்கள். குடுமியா.. சவரி முடியா பெண்களுக்கு வசதி என்று ஆராய்ச்சி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால்.. ஆமிக்காரன்.. செய்யிற கொடுமையை உலகின் கண்களின் முன்னிறுத்த ஆக்களில்ல.. குங்குமப் பொட்டுக்கும்.. தாலிக்கும் விடுதலை வாங்க பலர் வரிஞ்சு கட்டிக் கொண்டு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறார்கள்..! ஆனால் ஊரில் வதை முகாம்களுக்குள் கிடக்கும் பெண்களுக்கு விடுதலை கேட்க யாரும் இல்லை..! இவர்கள் மகளிரா.. ஏன் மனிதரா..???! :o :o :D

மன்னிக்கவும் நெடுக்ஸ்... இதனை நடாத்தியது எந்த மகளிர் அமைப்பும் அல்ல....ஆனால் ஒரு சில உறுப்பினர்களின் பிள்ளைகள் இதில் இடம்பெற்றிருந்தனர். இதனைப் போன்று பல நிகழ்வுகள் சிறு பிள்ளைகளை வைத்து நடாத்த்த முன்னர் ஒழுங்கு செய்யப்பட்டு பின் அனைத்தும் நிறுத்தப் பட்டன, இந்த நிகழ்ச்சி நீங்கலாக....... இப்படியான நிகழ்வினை ஒழுங்கு செய்ததில் புலிகள் பெயரைச் சொல்லித் திரிந்த முன்னனி அமைப்புகளும் அடங்கியிருந்தன

கனடாவின் மகளிர் அமைப்புகள் பல, கடும் குளிர் காற்று என்பனவற்றின் மத்தியிலும் நின்று பல நூற்றுக் கணக்கான போராட்டங்களை நடாத்தி வருகின்றன. இளையோர் சமூகத்தின் போராட்டத்திற்கு பக்க பலமாக நின்று தம் முழு பங்களிப்பையும் தருகின்றன. மேலே சொல்லப் பட்ட ஒரு சில உறுப்பினர்கள் போன்று எல்லா அமைப்புகளிலும் சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்களின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு இனம் காட்டினால் போதும்....

Link to comment
Share on other sites

லோயர்,

அடங்காப் பற்றை ஒத்திவைத்ததன் காரணம் காவல்துறையினர் தான் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. காவல் துறையின் அனுமதி பெறாமல் இவர்கள் இத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்கள் என்பதை நம்பவே முடியாது..... சரி, அது தான் காரணம் என்றால் மக்கள் எல்லாரையும் உண்ணாவிரதம் இருக்கும் குயின்ஸ் பார்கிற்கு வரச்சொல்லி இருக்கலாம் தானே? ஏன் அவர்களால் அப்படி அறிவிக்க முடியவில்லை? ஏனெனில்...அவர்களுக்கு பிடித்தமானவர் அல்ல அங்கு உண்ணாவிரதம் இருப்பது... யார் பெரியவர் என்ற பாழாய்ப் போன போட்டி எண்ணங்களும் சுயலாப நோக்கான குறுகிய எண்னங்களும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட தடுத்தன. அப்படி அறிவித்து இருந்தால் உண்ணாவிரத போராட்டமே பெரும் ஆதரவினை பெற்று வெற்றிகரமானதாக அமைந்திருக்கும்

காவல் துறைதான் காரணம் எனில் அதனை வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு அறிவிப்பதில் என்ன நட்டம் வந்தது இவர்களுக்கு? அப்படி அறிவிப்பது, பொலிசுடன் விரும்பத்தகாத பிரச்சனைகளை ஏற்படுத்த முனையும் பேர்வழிகள் பற்றிய நல்ல விழிப்பை மக்களுக்கு ஏற்படுத்தகூடிய சந்தர்ப்பமாக அல்லவா இருக்கும்?

நடன நிகழ்வை குறிப்பிட வேண்டி வந்ததன் காரணம், இத்தகைய பேர்வழிகளின் முகத்திரையை கிழிப்பதற்காகவே. தமிழ் தேசியத்தின் பெயரால், தமக்கு லாபம் வராத விடயங்களை எதிர்த்து கொண்டு, தமக்கு லாபம் வரக்கூடிய வகைகளை செய்யும் இந்த பேர்வழிகளினால்தான் எம் போராட்டம் பல்லாண்டுகளாக நீடித்து கொண்டு ஈற்றில் ஒட்டுமொத்த வன்னி மக்களிற்கும் சவக்குழிகளை கிண்டிக் கொண்டூ இருக்கின்றது. இத்தகைய பேர்வழிகளை பற்றி மக்களிற்கான ஊடகங்களில் எழுதுவதை ஏன் விமர்சிக்க முயல்கின்றீர்கள். ஒற்றுமை என்பது போலிப் பேர்வழிகளினுடனும் ஒத்துப் போவது அல்ல. இத்தகைய பேர்வழிகளின் ஆட்டம் இன்னும் தொடருமாயின் கனடா எங்கும் இவர்களின் முகத்திரையை கிழிக்கும் போஸ்ரர்களை வெகு விரைவில் காணலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

தலைவர் பிரபாகரன் அவர்கள், புலம் பெயர் நாடுகள் எங்கும் போராட்டத்தினை இளையோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றால் போல் இளையோர்கள் அணிதிரண்டு வருவதை பிடிக்காத ஒரு கூட்டம் தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்து கின்றது. ஏனெனில், இளையோரின் தன்னலமற்ற அணிதிரள்வினால் தம் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் வயிற்றுப் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயம். அத்தகையவர்கள் தான் ஒரு நூறு பேரை வைத்து கொண்டு செய்ய சாத்தியமே இல்லாத சாலை மறியலை செய்ய முயன்று காவல்துறையினருடன் இளையோர்களை மல்லுக் கட்ட வைத்து அவர்களின் அணிதிரள்வின் மீது சேறு பூசினர்

சரியானபாதையில்தான் செல்கிறீர்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்கள், புலம் பெயர் நாடுகள் எங்கும் போராட்டத்தினை இளையோர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றால் போல் இளையோர்கள் அணிதிரண்டு வருவதை பிடிக்காத ஒரு கூட்டம் தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்து கின்றது. ஏனெனில், இளையோரின் தன்னலமற்ற அணிதிரள்வினால் தம் தமிழ் தேசியத்தின் பெயரால் செய்யும் வயிற்றுப் பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயம். அத்தகையவர்கள் தான் ஒரு நூறு பேரை வைத்து கொண்டு செய்ய சாத்தியமே இல்லாத சாலை மறியலை செய்ய முயன்று காவல்துறையினருடன் இளையோர்களை மல்லுக் கட்ட வைத்து அவர்களின் அணிதிரள்வின் மீது சேறு பூசினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[நிழலி சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். நண்பர்களே கனடாவில் நிறைய துரோக குழுக்கள் இருப்பது உள்ளங்கை புண். இந்த போராட்டத்தை எந்த பதவிக்கும் ஆசைப்படாத நம் மாணவர்கள் எடுத்து நடத்திக்கொண்டு இருப்பதை பொறுக்க முடியாத துரோகிகள் வேலை இது.

இனயும் நம் பொறுத்து போக முடியாது. உலகம் முழுவதும் நடக்கிறது ஆனால் கனடா.

இங்கு தலைமைக்கு நிற்கும் அந்த ........................... தேவை conservative,liberal,.NDP ஒன்றில் கிடைக்கும் எம்பி சீட். கெட்ட கெட்ட வார்த்தையால திட்டத்தான் வருகிறது.

நாம் எமது நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பதை எந்த துரோகி நாயும் தடுக்க முடியாது.

city இடம் அனுமதி வாங்கி மாணவரே தொடருவோம் போராட்டத்தை.

இனியும் நாம் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை.

உணர்வுள்ள ஒவ்வொருவனும் வருவான். எவன் தடுக்கிறான் பார்போம்.

புலி தோல் போர்திய நரிகள் இங்கே இருக்குது.

தோல் உரித்து காட்டுவோம். வாருங்கள். வாருங்கள்.

Link to comment
Share on other sites

நிழலி நீங்கள் கூறுவதில் உண்மையிருந்தாலும், சில மறைமுகமான சதிகளும் நடந்துள்ளன.

மகளிர் அமைப்பைச்சார்ந்த பல உறுப்பினர்களும் இதில் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான்.

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

இதைப்பற்றிய பல சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன, இவைபற்றி விவாதிப்பதிற்குரிய நேரம் இதுவல்ல என்ற காரனத்தால் சில விடயங்களை அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது.

ஆனால் சந்தர்ப்பம் வரும்போது ..........எல்லாம் வெளியில் வரலாம்.

Link to comment
Share on other sites

ஐயா நிழலி அவர்களே, எத்தகைய செய்தி எண்டாலும் ஆதராபூர்வமாக தெரிந்துகொண்டாலும், ஏவள், இடம் பொருள் தெரிந்து கதைக்கபாருங்கள், இப்படி வெளிப்படையாக ஊடகங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை பொறுக்கி வீசாதீர்கள், எம் தமிழருக்குள் ஒற்றுமை இல்லை எண்டது உலகறிந்த உண்மை, இப்பொழுது பிரச்சினை யார் பெரிது எண்டது இல்லை, வன்னியில் உள்ள மக்களின் எமது உறவுகளின் உயிர்களே, கனடாவில் 3 நேரமும் மூக்குமுட்ட வெட்டிவிட்டு அரங்கேற்றம் செய்து தொழில் சம்பாதிக்கும் மக்கள் பற்றியது அல்ல,

ஒரு வேளை நீங்கள் மேலே கூறிய செய்திகள் 100% உண்மை எனில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? மறைக்க வேண்டியவற்றை மறைத்து, எமது மக்களை எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும் என்பதை பற்றி கதைச்சிருக்கவேண்டும், இப்ப்பொழுது நீங்கள் செய்யும் செய்கையால் மக்களிடையே மேலும் பிளவை உண்டுபன்ணுகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

வீட்டில் இருப்பவர்களே சதி செய்தல் அது தான் துரோகம் வல்வை மனிதா. இவர்களால் தானே பிரச்சினை. அல்லது எப்பவோ தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். எதனை துரோகிகளை தான் தலைவரும் சமாளிப்பது.

கடந்த மாவீரர் நாள் உரை போதும் நம் தலைவரின் தீர்கதரிசனாதிற்கு..

எங்கள் தலைவன் எல்லாமும் ஆனவன்.

Link to comment
Share on other sites

ஐயா நிழலி அவர்களே, எத்தகைய செய்தி எண்டாலும் ஆதராபூர்வமாக தெரிந்துகொண்டாலும், ஏவள், இடம் பொருள் தெரிந்து கதைக்கபாருங்கள், இப்படி வெளிப்படையாக ஊடகங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை பொறுக்கி வீசாதீர்கள், எம் தமிழருக்குள் ஒற்றுமை இல்லை எண்டது உலகறிந்த உண்மை, இப்பொழுது பிரச்சினை யார் பெரிது எண்டது இல்லை, வன்னியில் உள்ள மக்களின் எமது உறவுகளின் உயிர்களே, கனடாவில் 3 நேரமும் மூக்குமுட்ட வெட்டிவிட்டு அரங்கேற்றம் செய்து தொழில் சம்பாதிக்கும் மக்கள் பற்றியது அல்ல,

ஒரு வேளை நீங்கள் மேலே கூறிய செய்திகள் 100% உண்மை எனில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? மறைக்க வேண்டியவற்றை மறைத்து, எமது மக்களை எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும் என்பதை பற்றி கதைச்சிருக்கவேண்டும், இப்ப்பொழுது நீங்கள் செய்யும் செய்கையால் மக்களிடையே மேலும் பிளவை உண்டுபன்ணுகிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

ஐயா டன்ங்கிளாஸ் அவர்களே... யாரிற்கு மறைக்கச் சொல்கின்றீர்கள்? இவர்களை நம்பி ஏமாந்து போய் கிடக்கும் மக்களுக்கா? மக்களுக்கு உண்மையை மறைத்து தத்தம் லாபங்களுக்காக இளையோர் சமூகத்தின் எழுச்சியினை அடக்க முனனயும் இவர்களை இனம் காட்டாமல் ஈழத்தில் இருக்கும் மக்களுக்கான போராட்டம் வெற்றியளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிளவை உண்டு பண்ணக் கூடாது என்பதன் அர்த்தம் இளையோர் சமூகத்தின் போராட்டத்தினை முடங்கச் செய்பவர்களுக்கு ஒத்து ஊதுவது அல்ல

புலம் பெயர் தேசமெங்கும் இளையோர் சமூகத்தின் எழுச்சியான போராட்டத்தினை சரியாக முன்னெடுக்க எல்லோரும் பாடுபடும் போது கனடாவில் மட்டும் அதனை முற்றாக முடக்க எடுக்கும் செயல்களைப் பார்த்தும் மெளனமாக இருத்தலே ஒற்றுமையின் அடையாளம் என்கின்றீர்களா?

எதற்கும் நீங்கள் லண்டனில் இருந்து இங்க ஒருக்கா வந்து பாருங்கள்... என்ன நடக்கின்றது என்பதை புரிய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி நீங்கள் யாருக்கும் பயபடதேவை இல்லை. உங்கள் கருத்துக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். அடக்கி வைத்த கோபம் எல்லாம் இப்போ yarl.com மூலமாக தான் நானும் கொண்டு வருகிறேன். தேவை இல்லாம இந்த சதிகரருக்காக நான் ஏன் என் பிபி யை கூட்டுவான்.

ஒரு மாதிரி கொடியை முடகினர்கள். இப்போ மனித சங்கிலி? இனி??????????????? வன்னியில் எங்கள் உறவினர் இருந்தால் தான் எங்களுக்கு துடிக்க வேண்டுமா. எமது இனம். தமிழ் நாடு மக்களுக்கு இருக்கும் உணர்வு கனடிய தமிழா உனக்கு எங்கே?

Link to comment
Share on other sites

நிழலி நீங்கள் யாருக்கும் பயபடதேவை இல்லை. உங்கள் கருத்துக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். அடக்கி வைத்த கோபம் எல்லாம் இப்போ yarl.com மூலமாக தான் நானும் கொண்டு வருகிறேன். தேவை இல்லாம இந்த சதிகரருக்காக நான் ஏன் என் பிபி யை கூட்டுவான்.

ஒரு மாதிரி கொடியை முடகினர்கள். இப்போ மனித சங்கிலி? இனி??????????????? வன்னியில் எங்கள் உறவினர் இருந்தால் தான் எங்களுக்கு துடிக்க வேண்டுமா. எமது இனம். தமிழ் நாடு மக்களுக்கு இருக்கும் உணர்வு கனடிய தமிழா உனக்கு எங்கே?

ஈழினி இந்த தேசியக்கொடி முடக்கம் என்றவுடன் என்னை அறியாமலே ஒரு கோபம்தான்.

ஜனவரி மாதம் 10ந்திகதி செய்தியாக இந்த ஆக்கத்தை நான் பதிவு செய்திருந்தேன் அதாவது தேசியக்கொடியை பின்தள்ளியிருந்த சந்தர்ப்பத்தில்.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா?

இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது.

அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகின்றது.

இன்று வெளிவரும் அறிக்கைகளும், கோசங்களும் ஆக்கங்களும் விடுதலைப்புலிகள் பலவீனமாகிவிட்டார்கள,; இனிமேல் நீங்கள் தான் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்ற தொனிப்பில், தமிழர்களை அழிக்கவேண்டும் என்று யார், யாரெல்லாம் துடிக்கின்றார்களோ அவர்களையே நோக்கியதாகவே உள்ளது.

இந்த செயல்பாடுகள் எல்லாம் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்துகொண்டுதான் செய்கின்றோமா?

இப்போது வெளிவரும் ஆக்கங்களிலோ அல்லது எங்களின் செயல்பாடுகளிலையோ போராட்டத்தின் நியாயப்பாடுகள் மிக குறைவாகவே முன்னிலைப் படுத்தப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் தான் எங்களது உண்மையான தலைமை என்ற கருத்தை நாம் இப்போது உச்சரிப்பதில்லை. இதன்பிரகாரம் எமது பொது எதிரியின் தேவையுடன் நாமும் ஒத்துப்போகின்றோமா?

கிட்டத்தட்ட 22,000 போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து, எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டு எமது மக்களின் விடிவுக்காக தங்களது சுகபோகங்களை எல்லாம் இழந்து, புலம்பெயர்ந்து வாழும் எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா?

அந்தந்த நாடுகளின் சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்பட்டுத்தான் நாம் செயல்படவேண்டும் என்ற நியாயப்பாட்டை நாம் முன்வைக்கலாம்.

ஆனால் ஜனநாயக நாடுகளிலை எங்களை கட்டாயப்படுத்தி யாரும் எதையும் எங்களுக்கு திணிக்கமுடியாது அதைப்போல் எங்களுடைய கருத்துச் சுதந்திரத்தையும் யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது.

மனம்வைத்தால் அதைப்போல் உண்மையான உணர்வும் இருந்தால் உந்த சட்ட திருத்தங்களாலை எங்களை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.

யாரினதும் மனதை புண்படுத்துவதோ அல்லது இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அமைதி வழிப்போராட்டங்களை இழிவு படுத்துவதோ எனது நோக்கம் அல்ல.

அதாவது அகதிகளை எப்படி பாதுகாப்பது என்பதுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போல் அகதிகள் உருவாகாமல் பண்ணுவது எப்படி என்பதுக்கும் அதிகம் கவனம் செலுத்த முயற்சி பண்ணவேண்டும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.

இணைவோம் தமிழராய்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

பெப் 22ந் திகதி அதாவது தேசியக்கொடிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் என்னால் பதியப்பட்ட ஆக்கம்.

இறுதியான தீர்வு தமிழீழம் தான்!

நாம் ஜக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகளை நோக்கி புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டங்களை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிற்கும் சில தினங்களிற்கு முன்பு இடம்பெற்ற போராட்டங்களிற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களும் முன்னேற்றங்களும் இருக்கின்றன.

இதையே நான் எதிர்பார்த்து ஒரு ஆக்கத்தை யாழில் பதிவு செய்திருந்தேன் அதில் நான் எதிர்பார்த்த குறை இப்போது நீங்கிவிட்டதாகவே உணருகின்றேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl=

அதாவது தற்சமயம் இடம்பெறும் அறவழிப்போராட்டத்தில் இடம்பெறும் கோசங்கள் தமிழ்த்தேசியம் மற்றும் தேசியத்தின் தலைமை சம்பந்தமாக மட்டுமன்றி எங்களது தேசியக்கொடியும் அதிகளவில் இந்த போராட்டங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

உலகமே அதாவது எங்களுடைய மக்களை அழிப்பதிற்கு ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் சர்வதேசங்களே!

எங்களுடைய மக்களை காப்பாற்றுங்கள், யுத்த நிறுத்ததிற்கு ஸ்ரீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுங்கள் என்ற கோரிக்கைகளை மட்டுமே அதிகமாக காணக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசியக்கொடியோ, அல்லது விடுதலைப்புலிகள் சம்பந்தமான உச்சரிப்புக்களோ, அல்லது எங்களது உறுதியான, இறுதியான தீர்வு தமிழீழம் தான் என்ற கருத்துக்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஆனால் இன்றைய நிலைப்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் திறமையையும், அரசியல் அனுபவத்தையும் பார்க்கின்றபோது பாராட்டாமல் இருக்க முடியாது.

தமிழர் தரப்பினர் தங்களது தேசியப் போராட்டத்தினை சர்வதேச நடைமுறைகளுக்குத் தக்கமாதிரி நெழிந்து சுழிந்து சரியான பாதையில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாத்தரப்பினரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆகவே எங்களுக்குள் இருந்த சிறு, சிறு முரண்பாடுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் தமிழர் என்ற தேசிய ரீதீயாக சிந்தித்து ஒரே குடையின் கீழ் இணைவோம், வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தோடு ஒரே அணியாக திரள்வோம், விடுதலைப் புலிகள்தான் எங்கள் தலைமை என்பதை ஏற்றுக்கொண்டு போராடுவோம், தமிழீழம் கிடைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது என்பதை வரலாறு சொல்லட்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl=

இதற்குபின்பு மீண்டுமொரு முறை தமிழ்த்தேசியக்கொடி பின் தள்ளப்பட்டிருந்ததை பார்த்தபோது!

Link to comment
Share on other sites

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை [வியாழக்கிழமை, 07 மே 2009, 08:46 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்போடு கதைப்பது அனைவருக்கும் நன்று.

குயின்ஸ் பார்க்கில் நடக்கின்ற நிகழ்வுக்கு எத்தனை பேர் போகின்றார்கள்?? கலந்து கொள்கின்றார்கள்...

நிழலிக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும். இளையோர்கள் தனித்துவமாக இயங்கினாலும், அவர்கள் மற்றவர்களோடு இணைந்தே செயற்படுகின்றார்கள் என்றே நான் நம்புகின்றேன். எனவே, நீங்கள் பிரச்சனையைத் தூண்டும் வகையில் நடப்பது சரியல்ல... ஆனால், ஒரு பிரச்சனை நடக்கின்றது.... வாறவன் போறவன் எல்லாம் தாங்கள் ஏதோ இளையோர் சார்ந்த அமைப்பின் பெயரைச் சொல்லிக் கொள்கின்றான்.

உண்மையில் பார்த்தால் அப்படி யாருமே உறுப்பினராக அறியவில்லை....

நேற்றும் கூட தாங்கள் இளையோர் சார்ந்த அமைப்பு என்று யாரோ பிரச்சனை. ஆனால் ஆளைப் பார்த்தால் 35,40 வயதிருக்கும்.... அதை விடத் தாடியோடு...

நீங்கள் எவ்வளவு குறைவாக அங்கு நிற்கின்றீர்களோ, அதை எதிரி நிரப்பிக் கொள்கின்றான். முதலில் அதை நிறைவு செய்யுங்கள்.

வேறு வேலையில்லாமல் இளையோர்களோடு, வேறு யாரையும் சீண்டி முடிகின்ற வேலை வேண்டாமே... ஆனால் இளையோர் என்று சொல்லிக் கொண்டு யாராவது திரிந்தால் அவர்கள் குறித்த சந்தேகங்களைக் குறித்தவர்களுக்குத் தெரிவியுங்கள்.... அது தான் தேவையும் கூட

Link to comment
Share on other sites

நிழலி, உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். தங்களின் சுயலாபத்திற்காக, இளையோர்களின் கை ஓங்கிவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிடப்பட்டுச் செய்த சதியே இது. இளையோர்களுக்கும் காவல்துறையினருக்கும் பிரச்சனைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதுவும் செய்யாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குக்கூட அவர்கள் முயற்சிக்கவில்லை. அதுமட்டுமின்றி, இரவுநேரங்களில் இவர்களையோ அல்லது இவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களைச் சேர்ந்தவர்களையோ காணமுடிவதில்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த ஊடகங்களில் தாங்களும் இரவிரவாக அங்கிருந்தார்கள் என்று பேட்டி வேறு கொடுப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த நடனநிகழ்ச்சி 'பரதநாட்டிய நிகழ்ச்சி' அல்ல. அது 'பறைநடனநிகழ்ச்சி'. ஏனெனில், தாயகத்தில் அன்றாடம், உடல்கள் கருகிவிழ, அதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியல்லவா? 'பறைநடனமும்' எமது கலைகளில் ஒன்றுதானே? ஆகவே, அந்தக் கலையை முன்னெடுத்த அந்த இளைய நடனஅழகிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இவ்வாறு, தினம்தினம், உயிர்கள் கருகும் இந்த நேரத்திலும், தங்கள் சுயலாபத்திற்காக தேசியத்தைப் பயன்படுத்தும் இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா? இந்தத் துரோகிகளுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Get Flash to see this player.

"ஐயோ நானும் தம்பியும் ஆருமற்று தெருவில் நிற்கிறோம்."

உறவின் குரல் உயிரை உலுக்கிறது.

எதற்கு நாங்கள் பிழைத்தோம் இனம் காக்க முடியா சாபம் ஏந்தி உழல்வதற்கா?

Link to comment
Share on other sites

பெயருக்கும், தலைப்புக்கும் எதுவித பொருத்தத்தையும் காண இல்லை. அடங்காப்பற்று என்று சொல்லப்படுகின்றது. இதை எப்படி ஒத்திவைக்க முடியும்? அப்படி என்றால் அதற்கு பெயர் உண்மையில் அடங்காப்பற்று அல்ல. வேறு ஏதோ பற்றாக இருக்க வேண்டும்.

ஐயா, ஒழுங்கமைப்பாளர்களே... அடுத்த தடவை பேரணி முடியும்வரை அதற்கு ஏதாவது பெயர் வைத்து சொதப்பி விடாதீர்கள். பேரணியின் ஆரம்பத்திலேயே பெயர்சூட்டி மகிழாது பேரணி முடிந்தபிற்பாடு பெயர்சூட்டி மகிழுங்கள்.

அடங்காப்பற்று இருந்து இருந்தால் குயின்ஸ்பார்க்கில் உண்ணாநோன்பு உள்ள இடத்திற்காவது மக்களை செல்லுமாறு கூறி இருக்கலாமே? சுமார் 20 - 50 வரையான மக்கள் மட்டும் ஏதோ உண்ணாநோன்பு உள்ளவருக்கு ஆதரவாக நிற்கின்றார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் தாங்கள் தாங்கள் ஒழுங்கமைக்கும் நிகழ்வுகளிற்கு மக்கள் வரவேண்டும். அவர்கள் அல்லாத வேறு யாராவது சுயமாக ஏதாவது அடங்காப்பற்றுடன் ஏதாவது செய்தால் அதற்கு ஆதரவு கொடுக்கத் தேவை இல்லை.

இனியாவது இப்படியான தவறுகள் நிகழாதவாறு குறிப்பிட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அடங்காப்பற்றுடன் இருக்கின்றோம். ஆனால் எங்களால் தாயகத்தில் நடைபெறுகின்ற மனிதப்பேரவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி நீங்கள் கூறுவதில் உண்மையிருந்தாலும், சில மறைமுகமான சதிகளும் நடந்துள்ளன.

மகளிர் அமைப்பைச்சார்ந்த பல உறுப்பினர்களும் இதில் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான்.

மற்றதாக ஈழினி நீங்கள் கூறுவதுபோல் துரோகக்குழுக்களின் சதி என்றும் இதை கூறமுடியாது கிட்டத்தட்ட இதுவொரு உள் வீட்டுச்சதிபோல்தான் தோன்றுகின்றது.

இதைப்பற்றிய பல சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன, இவைபற்றி விவாதிப்பதிற்குரிய நேரம் இதுவல்ல என்ற காரனத்தால் சில விடயங்களை அடக்கி வாசிக்கவேண்டியுள்ளது.

ஆனால் சந்தர்ப்பம் வரும்போது ..........எல்லாம் வெளியில் வரலாம்.

ஐயா டாங்க்லாஸ்,

நிழலி சொன்னதில் 100% கருதுடன்படுகிறேன் ஆவேசப்படுகிறேன். உங்களுக்கு ரோசம் இல்லையெண்டால் அல்லது உங்களுக்கு எதாவது தொடர்பு இருந்தால் உமது வாயை மூடுமையா. மற்றவர்கள் கருத்தை அவமதிக்க உமக்கு உரிமை இல்லை. இங்கே உமதும் தூயவன் ஐயாவின் கருத்தும் மட்டும்தான் ஏனையவர்களை விட முரண்படுகிறது.

இது தமிழர்களை பிரிப்பதற்காக சொல்லும் கருத்து அல்ல. அப்படி சொன்னால் உங்கள் இருவரின் மட்டும் வியூகம் அது. களையெடுப்பது என்பதும் இருக்கு இதில் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? தலையாட்டுவதற்காக அல்ல தமிழர்கள்.

இன்று புதினத்த்தில் முக்கிய செய்தியாக என்ன வந்தது தெரியுமவோய்?

ஈலினி சொன்னது போல் ஈழப்போராட்டத்துக்கு களங்கம் வர நினைப்பர்களை அடையாளம் காண நாம் பயப்படத்தேவயில்லை.

நிழலி, உங்களை போல பல கருத்துக்களை வேறு நிகழ்வுகளில் ஆராய்ந்து பதில் கேட்டு வேறு சந்தர்ப்பங்களில் எழுதியதும் பலருடன் கதைத்தும் உண்டு.

மக்கள் மனசு திசை திருப்பப்படுகிறது என்பது தெரிந்தால் அதை களை எடுத்து முன்னேற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தை உபயோகங்கள் மற்றவர்களை காயபடுதாமல் இருப்பது நன்று. தமிழரின் ஒற்றுமையற்ற குணத்தை எங்கு போனாலும் இந்த இனம் விடுவதாய் இல்லை. அந் நிகழ்வு நடந்ததன் மூலம் நிழலி என்ன இழந்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் யார் எவ்வளவும் லாபம் கண்டார்கள் என்று கூறுவதை பார்த்தால் இவருக்கும் பங்கு இருக்குமோ???

உண்மையில் நிகழ்வு மூலம் ஈட்டப்பட்டது நாட்டுக்கே அர்பணிக்கப்பட்டது என்பதை நான் எனது இரண்டு கண்களால் கண்ட உண்மை....

உண்மை தெரியாமல்... யாரும் வைத்தெரிச்சலில் உளறி... எம் இனத்தை குழப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

பஞ்சன் மகன்... இதனையும் பாருங்கள்

sydneyp.jpg

கனடாவின் இளையோர் அமைப்பும் இப்படி ஒன்றை வெளியிட்டால் நல்லம் என்று நினைக்கின்றேன்

புலிகள் புலம் பெயர் மக்களை வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுகின்றனர். பூட்டிய அறையில் பாட்டுப் பாடி, நாட்டியம் ஆடி, காசு சேர்த்து பிரபலம் ஆகுங்கள் என்று அல்ல.

Link to comment
Share on other sites

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நிறுத்தம்.

திகதி: 08.05.2009 // தமிழீழம்

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2009, தாயக உறவுகளின் அவலநிலை காரணமாக 30.05.2009 அன்று நடைபெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.

- தமிழர் மேம்பாட்டுப் பேரவை

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58017

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஞ்சான் மகன், உமது வார்த்தை பிரயோத்தை முதலில் சரி செய்து மற்றவரை நிமிர்த்த பாரும். நீர் கதைக்கும் விதம் புண் படாது அடக்குவது போல், மற்றவர் கதைக்கும் விதம் புண்படுவதா? மூக்கை நுழைத்து இன்னும் இந்த விளக்கத்தை கொடுக்காமல் இருந்தால் கதை தொடராது. இப்போது இதை மேலும் கதைக்க தொடங்கி தொடரவைக்கிறீர். கதைக்க விரும்பினால் தொடரலாம் இல்லை. இப்போ அவசத்தை கூட்டி பிளவுபடுத்துவது நீர்தான்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை உபயோகங்கள் மற்றவர்களை காயபடுதாமல் இருப்பது நன்று. தமிழரின் ஒற்றுமையற்ற குணத்தை எங்கு போனாலும் இந்த இனம் விடுவதாய் இல்லை. அந் நிகழ்வு நடந்ததன் மூலம் நிழலி என்ன இழந்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் யார் யார் எவ்வளவும் லாபம் கண்டார்கள் என்று கூறுவதை பார்த்தால் இவருக்கும் பங்கு இருக்குமோ???

உண்மையில் நிகழ்வு மூலம் ஈட்டப்பட்டது நாட்டுக்கே அர்பணிக்கப்பட்டது என்பதை நான் எனது இரண்டு கண்களால் கண்ட உண்மை....

உண்மை தெரியாமல்... யாரும் வைத்தெரிச்சலில் உளறி... எம் இனத்தை குழப்ப வேண்டாம்.

பஞ்சன்மகன் உண்மை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தயவு செய்து உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை எனக்கு அறியத்தரவும்.

மெளனம் நிலைக்கும் வரை மகிமை தெரியாது மாறி எழுந்தால் பின்னர் மெளனிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தைக் சிதைத்து அந்தச் சிதைவுகளில் இருந்து தம்மை வளர்க்க எத்தணிக்கும் ஒட்டுண்ணிகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுவதே தமிழ்த் தேசியத்தினது இருப்புக்கு அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி, இன்றைய தமிழர் நிலை கருதி......

விடுதலை வியாபாரிகளையும், ஒட்டுண்ணிகளையும், சமயம் பார்த்து தம்மை வளர்ப்பவர்களையும் கூட வைத்திருந்து மாரடிக்கவேண்டிய தலைவிதி தமிழனுக்கு......

கேட்ட கேள்விக்கு பஞ்சன்மகன் பதில் தரட்டுமே....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.