Jump to content

விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம்:பாஜக


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பா.ஜ. கட்சியின் மூத்த தலைவர் வெங்கையநாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’2 லட்சம் இலங்கை தமிழர்கள், குறைந்தபட்சம் கழிவறை வசதிகூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள். ஆனால் இங்கு உண்ணாவிரதம் என்ற சில மணிநேர நாடகத்தை நடத்தி, அங்கு போர் நிறுத்தம் வந்துவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே அதுபற்றி பேசவே இல்லை. எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டிய உண்ணாவிரதம், பந்த் போன்ற போராட்டங்களை யாருக்கு எதிராக இவர்கள் நடத்தினார்கள்?

இலங்கைத் தமிழர்களுக்கு அங்கு சமஉரிமை, அந்தஸ்து அவர்கள் நாட்டில் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தரப்பட வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளையோ தீவிரவாதத்தையோ நாங்கள் ஆதரிக்கமாட்டோம்.

ஆயுதத்தை விடுதலைப் புலிகள் கீழே போட்டாலும் இலங்கை ராணுவம் தொடர்ந்து போரிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை என்று நாட்டைச் சுற்றி இருக்கிற அனைத்து நாடுகளோடும் பிரச்சினைதான் ஏற்பட்டு உள்ளது. நமது வெளியுறவுத் துறைக்கு என்ன ஆனது?

இலங்கையில் தனி ஈழம் அமைப்பதற்கு இந்தியாவில் இருந்து ராணுவத்தை அனுப்புவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இதை அவர்கள் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினரே ஏற்கமாட்டார்கள். ஏற்கனவே ஐ.பி.கே.எப். என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பியதால் பிரச்சினைதான் உருவானது.

பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அங்கு இந்திய ராணுவத்தை அனுப்பமாட்டோம். சர்வதேச பத்திரிகையாளர்களை போர் முனைக்கு அனுப்பி, அங்குள்ள நிலையை இலங்கை அரசு உலகத்துக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யாமல் சில புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகின்றனர். இலங்கையுடன் நல்லுறவு இருக்கும் போது அதை பயன்படுத்தி போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்தலாமே’’என்று தெரிவித்தார்.

Nakkheran

Link to comment
Share on other sites

ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டில் உங்களுக்க ஒரு சீற் கூடக் கிடைக்காதுங்கோ. இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் புலிகள்தான் அரசை நிர்ணயிக்கும் சக்தியாகவுள்ளனர்.

Link to comment
Share on other sites

அதைத் தான் அம்மா செய்கிராரே அப்படியானால் அம்மா வேறு கூட்டணியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் அம்மா செய்கிராரே அப்படியானால் அம்மா வேறு கூட்டணியா

இது போன்ற விடயங்கள் தமிழகத் தேர்தலுக்கு முன்பாக வருவது மிகவும் நல்லது. ஏனென்றால் ஏதோ பா.ஜ.க வந்தால் தமிழீழத்தில் பாலும் தேனும் ஓடப்போவதாகக் கற்பிதம் செய்து எமது செயற்பாடுகளின் வேகத்தைக் குறைப்பதைத்தான் செய்கிறோமேயன்றி வேறில்லை.

எமது விடுதலையை நாமே போராடிப் பெறவேண்டியது எமது கடமை. எமக்காக நாமே. தமிழகத் தொப்புள் கொடி உறவுகளும் எம்மோடு நிற்பார்கள்.

அம்மா தலைமையில் (அ.இ.அ.தி.மு.க தலைமையில் பா.ம.க, ம.தி.மு.க, மற்றும் பொதுவுடமைக்கட்சி) ஏனைய கட்சிகளின் கூட்டணியே களத்தில் உள்ளது. இதில் பா.ஜ.க தனியே நிற்கிறது. பா.ஜ.க ஒரு தேசியக் கட்சியாகத் தன்னைக் காங்கிரசுக்கு நிகராக வளர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தினது ஆதரவின்றி மத்தியில் எக்கட்சியாலும் ஆட்சியை அமைக்க முடியாதென்ற யதார்த்தம் அண்மைக்காலமாக உள்ளது. ஆனால் அதனைச் சரியாகப் பயன்படுத்தாமையின் விளைவாகத் தமிழக மக்களது உயிரிழப்புகளைக் கூடத் தடுக்க முடியாத கையறுநிலையில் நிற்கிறார்கள்.

அமெரிக்க அரசியலில் மாற்றம் வந்தால் எல்லாம் சுமுகமாக மாறிவிடும் என்றதுபோல் , இந்திய அரசியல் மாற்றமும் ஏதோ பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுமென ஏமாறாது எமது தலைவனை நம்பி அவரது கரங்களைப் பலப்படுத்துங்கள். எமது பலத்தையும் நாங்கள் நம்புவதும் அவசியமானது. இளையோரைப்பாருங்கள் உலகை அசைக்கும் விசையாய் உலகெங்கும். அவர்களோடு இணைவோம் பக்கபலமாக நிற்போம். பகலவனைத் தொடர்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.