Jump to content

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........

என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த

உரை யாடலாம .?........

சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ?

அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் .

சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார்

சுடசொன்னது ..........

அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........

சிஜன் : அந்த லீடருக்கு எத்தனை வயசு ..அவர் கார்ட் அட்டாக் வந்து சாக

மாடாரோ ?அப்ப சண்டை நடக்காது தானே .......

அம்மா : அவர் செத்தா வேறு ஒரு வர வந்து திரும்பவும் இதை தான் செய்வார் . எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் இது எல்லாம் இருக்காது ....(அவன் விடுவதாயில்லை )

சிஜன் : அம்மா , ஒரு நாடு வர என்ன செய்யவேணும் , ஒரு லீடர் வர வேணுமோ ?

அம்மம்மா: ஓம் அதுக்காக தான் புலி மாமாக்கள் சண்டை பிடிகினம்.

சிஜன் .........நான் கொழும்புக்கு போகட்டோ ? (சிரித்து )

அம்மாம்மா ......ஏன் குஞ்சு போய் என்ன செய்து வர போறீங்கள்.

சிஜன் : ................நான் போய் ...லோயர் மாமாவை கூடி கொண்டு போய் ......உங்களோட ஒரு அலுவல் கதைக்க வேணும் என்று சொல்லி .... சிங்கள லீடாரை ....சுட்டு போட்டு வரட்டா.....

அம்மம்மா .........ஐயோ குஞ்சு ...இந்த வேலை பார்க்க பெரிய மாமாக்கள் இருக்கினம் நீங்க படிச்சு .....பெரிய ஆளாய் வந்து அங்க கால் இல்லாம் கை இல்லாம இருக்கிற ஆட்களுக்கு வைத்தியம் செயுங்கோ .....

.அம்மம்மா எனக்கு நித்தா வருகுது ....காலயில் எழுப்பி விடுங்கோ ........நான் படிக்க வேணும் ...பெரிய ஆளாய் வந்து ...டாக்டரை வரவேணும் ...பிறகு கொழும்புக்கு போய் ஒரு ஆஸ்பத்திரி ....வைச்சு ....டாக்டராய் வரவேணும் ....பிறகு எலாரையும் ....சுகமாக்க வேணும் ..........

.( கடவுளே இந்த பிஞ்சின் மனதில் இத்தனை ஆசைகள். ....இனும் மனம் மாறாத எத்தனை மனிதர்கள். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான்,வேதனையும் தருகுது

தமிழ் பெற்றோரின் சுயநலத்தை அந்த அம்மா வெளிகாட்டிஉள்ள. என்ட பிள்ள doctor ஆக வேணும் , மத்தவன் பிள்ள இருக்கிறன் போராட.

எத்தனையோ பெறோர் , தமது பிள்ளைகளின் புலி நண்பர்களுடன் கதைக்க வேணம் என்று தடுத்திருக்கிறார்கள். ஏனென்றல் அவர்கள் தமது பிள்ளைகளையும் போராட கூட்டி போய்விடுவார்கள் என்று.

அந்த புலி நண்பர்கள் தான் தனது பிள்ளையை இராணுவத்திடம் இருந்து பாதுகாக்கிறது என்று அந்த தமிழ் பெற்றோருக்கு தெரியாது.

அந்த அம்மா நீ பெரிய ஆள வந்து போராட போ என்று சொல்லவில்லை

Doctor ஆகிவிடு

சுயநலமே இரத்தத்தில் ஊறி போன எம் இன்னத்துக்கு போராடுவதில் பயன் ஒன்றும் இல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் சீலன் ..........புலம் பெயர்ந்து வந்த நீங்க சொல்ல கூடாது ......என் பேரன் போராட போக வேணும் என்று .....ஆயுதம் தூக்குவது மட்டும் தான் போராட்டம் அல்ல வன்னியில் வைத்திய துறையில் இருப்பவர்களும் தான் போராடுகிறார்கள். நம் இனத்தைக்காக்க ......இரவு பகல் பாராது அவர்களது சேவையும் ஒரு போராட்டம் மக்களை காக்கும் போராட்டம் .......பேரனை இங்கிருந்து சம்பாதிக்காமல் வெளி நாடு வாழ்கை வாழாமல் அங்கு சென்று சுகமாக்க வேணும் வைத்திய சேவை செய்யவேண்டும் என்பதும் ஒரு வகை போராட்டம் ...............நாடு மக்களை காப்பது ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்தில் டாகுத்தர் மாருக்கு பஞ்சமே இல்லை.....எம் இனத்தவர்கள் "போர்விமான ஒட்டிகளாக" பயிற்சி எடுத்தால் தான் நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவனுக்கு உள்ள பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது...

எமது இனத்தில் டாகுத்தர் மாருக்கு பஞ்சமே இல்லை.....எம் இனத்தவர்கள் "போர்விமான ஒட்டிகளாக" பயிற்சி எடுத்தால் தான் நல்லம்

எங்கட இனத்தில பஞ்சமில்ல தான். அதுல எத்தின பேர் யாழ்ப்பாணத்திலயும் மற்ற தமிழர் பிரதேசத்திலும் (இலங்கைக்குள்) இருக்கினம் என்று சொல்லுங்கோவன்... படிச்சுப்போட்டு ஸ்கொல் என்று சொல்லி வெளிநாடு போனவர்களில் எவரும் திரும்பி தாயகம் வரவில்லை... ஞாபகம் வைத்திருங்கள்... துப்பாக்கி தூக்குவது மட்டும் தான் போராட்டமல்ல... தோள்கொடுப்பவனும் போராளி தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனுக்கு உள்ள பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது...

எங்கட இனத்தில பஞ்சமில்ல தான். அதுல எத்தின பேர் யாழ்ப்பாணத்திலயும் மற்ற தமிழர் பிரதேசத்திலும் (இலங்கைக்குள்) இருக்கினம் என்று சொல்லுங்கோவன்... படிச்சுப்போட்டு ஸ்கொல் என்று சொல்லி வெளிநாடு போனவர்களில் எவரும் திரும்பி தாயகம் வரவில்லை... ஞாபகம் வைத்திருங்கள்... துப்பாக்கி தூக்குவது மட்டும் தான் போராட்டமல்ல... தோள்கொடுப்பவனும் போராளி தான்...

நீங்கள் சொல்வது சரிதான்...ஆனால் கதையில் புலம் பெயர்ந்த சிறுவனை பற்றி சொல்லுகிறார்கள்....புலம்பெயர் மக்களின் பிள்ளைகள் அதிகமாக டாக்குத்தருக்கு தான் படிக்கிறார்கள்...எனைய துறைகளில் படிப்பது வெகு குறைவு...முக்கியமாக ஊடகதுறையை எடுத்தோமாயின் மிகமிக குறைவு... :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலன் .........புத்தன் .........அன்பன் , உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.