Jump to content

சிட்னி முருகனுமா எமக்காக குரல் குடுக்க தயங்குகின்றார்?


Recommended Posts

நேற்றைய தினம் சிட்னியில் இருந்து கன்பெராவுக்கு வாகனப்போராட்டம் எம்மக்களால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பக்கம் தமிழீழ கொடியும், மறுபுறம் ஒஸ்திரேலிய கொடியும் பறக்கவிட்டபடி 3 மணித்தியால பயணம் ஒஸ்திரேலிய தலைநகராம் கன்பெராவில் இருக்கும் பார்லிமன்ற் ஹவுஸை நோக்கி நகர்ந்தது. இப்போராட்டத்தில் மற்றைய மாகண மக்களும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் இன்றோடு 12 நாளாக உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதாவும் பங்கெடுத்தார். மிகவும் முடியாத நிலையில் உள்ள சுதாவை ஒரு வாகனத்தில் படுக்க வைத்தே எடுத்து செல்ல முடிந்தது. தொடர்ந்து வாந்தி எடுத்தாலும் மனம் தளராது கொள்கையே முக்கியம் என சுதா போராட்டத்தில் பங்கெடுத்தார்.

எப்போதும் போல எம்பிகள் 'பார்த்திட்டு தான் இருக்கோம், செய்வதை செய்திட்டு தான் இருக்ககோம்' என சொன்னார்கள். பின்னர் உண்ணாநிலையில் இருக்கும் சுதா அவர்கள் தன்னை மக்கள் பார்க்கும் இடத்தில் தன்னை இருக்க விடுமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோள் மக்களை நோக்கியே இருந்தது. மக்கள் 'சிட்னி முருகன் ஆலயம்' தான் சரியான தேர்வு என முடிவு செய்தார்கள். அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகியது...

3 மணித்தியாலங்கள் பயணம் செய்து முருகன் ஆலயத்திற்கு மக்கள் சுதாவை கொண்டு வந்தால் 9 மணிக்கு பூட்ட வேண்டிய கோவில் கதவு 8.30 மணிற்கே பூட்டப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகத்தினர் கவுன்ஸிலால் தமக்கு 9 மணிக்கு மேல் இருக்க அனுமதியில்லை என கூறி மறுத்தார்கள்.

வந்திருந்த மக்கள் ஈழத்தில் எம் மக்களில் நிலையை சொல்லி, சுதாவின் நிலையையும் சொன்ன பின்னரும் கோவில் நிர்வாகத்தினர் அசைந்து குடுப்பதாக இல்லை. அங்கிருந்த இளையோர் அனைவரும் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்தவே பெரியோருக்கு பெரும்பாடாக இருந்தது. மணித்துளிகள் செல்ல செல்ல மக்கள் கோவில் வீதியிலேயே இருந்து இடம் தருமாறு போராட தொடங்கிவிட்டார்கள். இறுதியில் இன்று மதியம் வரை தங்கலாம் என்றும் பின்னர் கவுன்ஸிலால் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கூறி அனுமதித்தார்கள்.

வெறும் ஒரு கொட்டிலில் குளிர் தரையில் இந்த நிமிடம் வரை சகோதரன் சுதா தன் கொள்கையில் பிடிவாதமாக உள்ளார். குளிர் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது...சிட்னி மக்கள் காரணங்கள் சொல்லாது ஒரு சில நிமிடங்களாவது சுதாவோடு சிலவழிக்க வேண்டும். உண்ணாநிலை என்பது இலகுவான காரியமா? சுதா ஒரு போராட்ட வீரன்....அவருக்கு நிச்சயம் எம்மால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டும்.

இன்னும் சிறிது நேரத்தில் சுதாவை காண என் நண்பர்கள் இருப்பதால் சுதாவுக்கு நீங்கள் ஏதும் சொல்ல விரும்பினால், உடனே இந்த பதிவில் மறுமொழியாக எழுதுங்கள். பதிவை படித்து விட்டு சென்றுவிடாதீர்கள்....இது வழமையான பதிவல்ல..ஒரு தன்மானமிக்க தமிழனின் போராட்டத்தை பற்றியது....அவனுக்கு சில வரிகளை மறக்காமல் விட்டு செல்லுங்கள்...

http://thooya.blogspot.com/2009/05/blog-post_13.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதம் இல்லாவிடில் கடவுளூம் இல்லை

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனை மதித்தால் மதங்கள் தேவையில்லை கடவுளுக்குக்கூட கட்டளை இடுகின்றார்கள் ஒருவிதத்தில கடவுளை வழிநடத்துகிறார்களோ என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போராட்டத்தில் இன்றோடு மூன்றாவது நாளாக

பன்னிரண்டாவது நாள் தூயா....ஜயோ கோயிலுக்குள்ள அரசியல கொண்டுவராதயுங்கோ என்று சொல்லியிருப்பினமே...தேவை ஏற்படின் புத்த சிலையையும் வைப்பம் என்று சொல்லியிருப்பினமே...

சிட்னி முருகனுக்கு எங்க நேரம் எங்களுக்காக கண்திறக்க?...அவரும் அரசியல்வாதி போல பொறுமையாகத்தான் அறிக்கை விடுவார்...

சுதாவை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சொல்லுங்கோ.....இவரின் உண்ணாவிரதத்தால் அவுஸ்திரலியா தனது மெளனத்தை கலைக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதாவுக்கு என் பாராடுக்கள். உங்கள் தாயகத்துகான முயற்சி வெற்றி பெறட்டும் ஆனால் ..............மனிதம் மரணித்து விட்ட நாட்டில் இனதுவேசியின் ஆட்சியில் எதற்கும் அசைந்து கொடா சர்வாதிகாரி , உலகநாடுகளுக்கே தலை வணக்க மறுக்கிறான்........அஹிம்சை தோற்று விட்டது .நீதி தூங்குகிறது .........உலகம் தயங்கு கிறது எனவே உன் உயிரை காத்து வேறு வழியில் தாயகத்தை நோக்கி செயற்படு ...........

Link to comment
Share on other sites

புலம் பெயர் நாடுகளில் கோயில் என்பது பணம் கொள்ளையிடும் உயரிய நோக்கங்களுக்காக கட்டப்பட்ட நிறுவனம்

அங்கு கடவுளையும் தேடாதீர்கள்

மனிதாபிமானம், இனமானம் என்பதனையும் தேடாதீர்கள்

Link to comment
Share on other sites

சுதா தன் முடிவின் மிகவும் உறுதியாக உள்ளார்.

மக்கள் நாம் தான், அவர் ஆரம்பித்த போராட்டத்தை வெளி கொண்டுவர வேண்டும்...

Link to comment
Share on other sites

சிட்னி முருகன் ஆலயம் வேற்று இனத்தவர்களால் நடாத்தப்படுகின்ற ஆலயமா?? அதாவது வெள்ளையர்களால்.. அல்லது தமிழர்களால் நடாத்தப்படுகின்றதா?? வேற்று இனத்தவர்களால் என்றால்.. அவர்களிடம் நிலைமையை விளங்கப்படுத்தி அதற்கான அனுமதியை கோருங்கள் ... தமிழர்களால் அது நடாத்தப்படுவதாக இருந்தால்.. கோயில் நிருவாகத்தினரிற்கு பல்லை உடைத்து கையில் கொடுங்கள்...ஏனென்றால் தமிழர்களிற்கு இனி விளங்கப்படுத்தத் தேவையில்லை..

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் சுத்தமாக இது கோயிலே இல்லை. கோயில்கள் என்பது உண்மையில் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அந்தக்காலத்தில் உருவாக்கப்பட்டன என்று நான் சிறுவயதில் படித்து இருக்கின்றேன். இதனாலேயே கோயில்களில் மடங்கள் கட்டப்பட்டன, காணப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனால்... இன்றைய காலத்தில் கோயிலை வியாபாரமாக்கி வயிறுவளர்க்கும் கும்பல்கள் தமது வியாபார வர்த்தக நிலையமாக கோயில்களை பயன்படுத்துகின்றன. இப்படியான கோயில்களில் கடவுள் குடியிருப்பாரா? சிட்னி முருகன் சிட்னி முருகன் என்று எல்லாரும் ஊட்டி ஊட்டி வியாபாரிகளை வளர்த்துவிட்டீங்கள். இப்ப அனுபவியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்மணியகாரனை கூப்பிட்டு மறைவிடத்திலை வைச்சு பஞ்சபுராணத்தை நல்லவடிவாய் கொட்டனாலை சொல்லிக்குடுங்கோ.

சிங்களவனை விட உப்புடியான நாய்களைத்தான் முதலிலை அழிச்செடுக்கோணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொருவனிடம் கேட்டால் நல்ல பொல்லு ஒண்டு தருவார்.... நிறைய அள்ளி குடுத்து கொண்டு இருந்தவர் கொஞ்சம் முன்ன தான்...

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry514361

:o

Link to comment
Share on other sites

அவர்களிடம் நிலைமையை விளங்கப்படுத்தி அதற்கான அனுமதியை கோருங்கள் ... தமிழர்களால் அது நடாத்தப்படுவதாக இருந்தால்.. கோயில் நிருவாகத்தினரிற்கு பல்லை உடைத்து கையில் கொடுங்கள்...ஏனென்றால் தமிழர்களிற்கு இனி விளங்கப்படுத்தத் தேவையில்லை..

நல்லாச்சொன்னீங்கள் அண்ணா !!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.