Jump to content

Recommended Posts

களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க)

இதோ குறு நாடகம்

அங்கம் ஒன்று

திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்

வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்

நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய் களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.

மன்னர்: ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை

(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர் அப்போது இரு இளம் பெண்கள் தலைவிரி கோலமாக உள் நுளைகிறனர்.

ஒருத்தி: மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா

மன்னர்: என்ன இங்கு மலிவு விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன பிரச்சனை

ஒருத்தி : மன்னா எனது பெயர் தமிழினி இதோ இவளது பெயர் அஸ்வினி

மன்னர் : மொத்தத்திலை எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா

தமிழினி: மன்னா

மன்னர்: என்னா

தமிழினி: நான் எனது கணவர் சிதம்பரத்தாருக்கு காச்சல் எண்டு முகத்தாரின் கடையில் பாண் வாங்கி கொண்டு போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த அஸ்வினி பாணை பறித்து வைத்துகொண்டு அது தன்னுடைது எண்டு பொய் சொல்லுகிறாள் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.

அஸ்வினி: இல்லை மன்னா இல்லை இதோ பாருங்கள் பாண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவள்தான் பொய் சொல்கிறாள்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நீட்டுகிறாள்)

தமிழினி: மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்

(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)

மன்னர்: சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.

தமிழினி: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்

மன்னர்: ஆமா இந்த நாட்டுக்கு அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண் தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி மதனை வரச்சொல்லுங்கள்

மதன் வந்து வணங்கிவிட்டு: மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை வெட்ட வேண்டும். துடிக்கிறது முக்கு முடி(அவருக்குமீசையில்லை)

மன்னர்: அமெரிக்காவை அடிச்சு பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்

தளபதி மதன்: மன்னா ஒரு பிரச்சனை

மன்னர்; : உமக்குமா என்னய்யா பிரச்சனை

தளபதி மதன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....

மன்னர்: யோவ் நாம் இப்ப சண்டை தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)

;தளபதி மதன்:ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பாணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)

(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)

மன்னன்: யாரய்யா அது புதிசா திறந்த வீட்டிற்கை சே கோட்டைக்கை டண்ணின்ரை நாய் புகுந்த மாதிரி.நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்

வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் முகத்தார் எனது கடை பாணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்

மன்னர்: கொஞ்சம் முதல் வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்

முகத்தார் : மன்னிக்கவும் மன்னா நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம் செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து

மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்

முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்

மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?

முகத்தார் : பீடி வாங்கத்தான் மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள் மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்

மன்னர் : காலங்காத்தாலை என்னது வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

சாத்திரி நாடகம் நல்லாத்தான் இருக்குது ஆனாக் கவனம் புதுசு புதுசா விதி முறையள உருவாக்கிக் கொண்டிருக்கினம், யாராவது வித்தியாசம எழுதினாலோ அல்லது வேண்டியவை கடதாசி போட்டா கத்திதான்.

பேசாம வெட்டி ஒட்டி முக நயனங்களப் போட்டா பிரச்சனை இல்லப் போல.குத்தகைக் காரர் வருவினம், நான் வாறன்...

Link to comment
Share on other sites

சாத்திரி நாடகம் அருமை. :lol: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :oops:

உங்கள் அனுமதி கிடைக்குமா? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு நன்றி அண்ணா :P

அன்புடன்

jothika

Link to comment
Share on other sites

சாத்திரி நாடகம் அருமை. :டழட: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :ழழிள:

உங்கள் அனுமதி கிடைக்குமா? (ரசிகா)

தாராளமாக போடுங்கள் எந்த பல்கலை கழகத்தில் படிக்கிறீர்கள். ஆனால் குறு நாடகமென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது வரவேண்டுமே வசனங்கள்; காணாதே மீதியை நீங்கள் எழுத போகிறீர்களா ? அல்லது அங்கம் இரண்டு விரைவில் வரும்

Link to comment
Share on other sites

சாத்திரி நாடகம் அருமை. :டழட: நான் இதை எனது பல்கலைக்கழக கலை விழாக்கு செய்யலாம் என நினைக்கிறேன். :ழழிள:

உங்கள் அனுமதி கிடைக்குமா? (ரசிகா)

தாராளமாக போடுங்கள் எந்த பல்கலை கழகத்தில் படிக்கிறீர்கள். ஆனால் குறு நாடகமென்றால் குறைந்தது 15 நிமிடங்களாவது வரவேண்டுமே வசனங்கள்; காணாதே மீதியை நீங்கள் எழுத போகிறீர்களா ? அல்லது அங்கம் இரண்டு விரைவில் வரும்

நன்றிகள் சாத்திரி

ஆமா நீங்கள் சொல்வது சரி. உங்கள் அங்கம் 2 வந்ததும் அதையும் சேர்த்து பொடுறன் இல்லாவிட்டால் மிகுதியை நான் எழுதுகிறேன். பார்ப்பம் நேரம் கிடைத்தால்.

Link to comment
Share on other sites

சாத்திரி, கலக்குறிங்க...அங்கம் 2 எப்பொழுது வெளிவருகிறது?

Link to comment
Share on other sites

சாத்திரி நீ மானிப்பாய் இந்து கல்லூரி பழைய மாணவன் எண்டதை புரூவ் பண்ணிவிட்டாய் (கள உறவுகளுக்காக அப்பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டியிலும் இல்லங்களுக்கிடையே நாடகப் போட்டி வைப்பார்கள் இதன் மூலம் மாணவர்களின் கலைத்திறமை வளர்க்கப்படுகிறது என்பதால் )

அந்த வகையில் வந்த சாத்திரிக்கு ஊர்உறவெண்ற முறையில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...............முகத்தார

Link to comment
Share on other sites

ஐயா சாத்திரி கதை நல்லாகத்தான் இருக்கு, தொடருங்கள், ஆனால் கதையில் கள உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்துகிறீர்கள், யாருடைய மனதையும் புண்படுத்தாமலும் யாருடைய பெயருக்கும் களங்கம் வராமலும் கவனமாக உங்கள் கதையை தொடருங்கள், அரசகுடும்பத்தை சேர்ந்த உறப்பினர்கள் தேவையில்லா வில்லங்கங்களை சந்திக்கவிரும்புவதில்லை!

Link to comment
Share on other sites

மன்னாஹரி பயப்பட வேண்டாம் இது முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதபடுவது யாரையும் நோகடிக்க அல்ல யாராவது தங்கள் பெயர் இதில்வருவதை விரும்பாவிட்டால் எனக்கு தனிமடல் முலம் அறியதரும்படி கேட்டுள்ளேன். ஆனால் மன்னர் தான் பாவம் என்ன செய்யபோறாரோ தெரியாது

Link to comment
Share on other sites

அப்ப எனக்கு அல்வா இருக்கு என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? பரவாயில்லை நான் எதையும் தாங்கும் உள்ளம், மற்றவர்களை நோகடிக்காமல் இருந்தால் சரி, மந்திரியாரே...! பார்த்தீரா ? மன்னர் பட்டத்தை 2005க்கு பதிவுசெய்யாமல் விட்டது தப்பாக போய்யிட்டுது

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு..........................தொடருங்கள்...

...........

கொஞ்சமாவது சிரிக்கலாம்.

Link to comment
Share on other sites

அங்கம் இரண்டு

திரை விலகுகிறது

மன்னர் அந்தபுரத்தில் கட்டிலில்படுக்கவைக்கபட்டிர

Link to comment
Share on other sites

தளபதி: ஆகட்டும் மன்னா வெற்றி வேல் வீரவேல்

மன்னர் : தளபதியே வாளை கையில் வைத்துக்கொண்டு எதுக்கையா வேல் வேல் எண்டு கத்துறீர்

தளபதி : அதுவா மன்னா வாள் வாள் என்று கத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காதல்லவா கழுதை என்று நினைத்து விடுவார்கள் அதனால்தான் வேல் வேல் எண்டு கத்துறன்

:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப எனக்கு அல்வா இருக்கு என்று சொல்கிறீர்கள்? அப்படித்தானே? பரவாயில்லை நான் எதையும் தாங்கும் உள்ளம், மற்றவர்களை நோகடிக்காமல் இருந்தால் சரி, மந்திரியாரே...! பார்த்தீரா ? மன்னர் பட்டத்தை 2005க்கு பதிவுசெய்யாமல் விட்டது தப்பாக போய்யிட்டுது

என்ன மன்னா பதிவு செய்யுறது.. உங்களை பற்றி தானே ரொம்ம சாதிரியார் சொல்லுறார் அப்ப நீங்கள் தனே மன்னர் . பேந்து என்ன கவலை ஆனால் என்ன எல்லாம் மன்னரை பற்றி உண்மையை சொல்லுறாரோ.. :wink: :D

நன்றாக இருக்கு சாத்திரியார் .. தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

«ôâ º¡ò¾¢Ã¢, ¿¡¼¸õ «ó¾ Á¡¾¢Ã¢ :D ... ¸ÄìÌí§¸¡ ¸ÄìÌí§¸¡... ¿¨¸îͨŠ«í¸í¸û ¦¾¡¼Ã Å¡úòÐì¸û. «§¾¡¼ ¸Ç ¯È׸Ǣýà §À¨ÃôÀ¡Å¢ì¸¢È¾¢Ä ¬ð§ºÀ¨É ¯ûÇ¡ì¸û þôÀ§Å ¦º¡øÄ¢ô§À¡Îí§¸¡. .«ðÄ£Šð º¡ò¾¢Ã¢ìÌ ¾É¢Á¼øÄ¡ÅÐ ¾ÂÅ¡ ¦¾Ã¢Å¢Ôí§¸¡ :D

Link to comment
Share on other sites

மன்னர்: மன்னர் மயங்கி விழுந்து மணி மாலை களவு போய்விட்ட தென்று மற்றைய நாட்டரசர்கள் அறிந்தால் காறி துப்ப மாட்டார்களா? பேசாமல் எமது ஒற்றர் தலைவன் டண்கனை வரச்சொல்லும் அவர்முலம் துப்பறிந்து இரகசியமாக பிடிக்கலாம்
என்னத்த துப்பறியப்போறார்? இவரும் இவரின் நாய்யும், இவரின் நாய் கொழும்பில் ஒரு போஸ்ட் கம்பத்தையும் விட்டுவைக்காது காலை தூக்கி தூக்கி தன்ட வேலைசெய்யவே அதுக்கு நேரமில்லை அது போய் துப்பறியப் போகுதாம்.24.gif
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.