Jump to content

Recommended Posts

நல்லாயிருக்கு! நல்லா வாழ்த்துச்சொல்லும், நீர் எல்லாம் ஒரு மந்திரி, எனக்கு பழைய செருப்பால அடிக்கனும்! கொஞ்சம் பொறும் சுத்தி சுத்தி சாத்திரியார் உம்மட ஏரியாவுக்கும் வருவார் :evil: :evil:

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நாடகம் நகைச்சுவையாக இருக்கிறது....பாவம் தந்தை தான்.....தந்தை நல்லவர் என்பதற்காக இப்படியா செய்றது சாத்திரி :wink: :wink:

Link to comment
Share on other sites

நகைசுவையாக இருக்கின்றது ..... தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன நாடகம் மனிசன் பொழுது பட்டாபிறகு போட்டிட்டு வீட்டிலை காட்டுவார் பாருங்கோ நாடகம் பாக்க ஆயிரம் கண் வேண்டும்

Link to comment
Share on other sites

இதென்ன சாத்திரின்ட முனியம்மா விஷ்னுவுக்குப் போட்டியா நிண்டு இந்த ஆட்டம் ஆடுறா,சாத்திரி கவனம் பிறகு வீடே மேடை ஆயிரும்

musik05.gif

Link to comment
Share on other sites

இதென்ன சாத்திரின்ட முனியம்மா விஷ்னுவுக்குப் போட்டியா  நிண்டு இந்த ஆட்டம் ஆடுறா,சாத்திரி கவனம் பிறகு வீடே           மேடை ஆயிரும்

musik05.gif

உதென்ன மருமோன் முனியம்மா சின்னமோளம் ஆடுறதுக்கு பக்க வாத்தியெங்களே
Link to comment
Share on other sites

இல்ல மேல வியாசன் வயலின் வாசிக்கிறார் ,முனியம்மா டான்ஸ் ஆடுறா நானும் உந்தக் கலையள வளர்ப்பம் எண்டுதான் ஒரு கோஷ்டியப் பிடிச்சிருக்கிறன். நீங்களும் வாங்கோவன் ஒரு கச்சேரி வப்பமென்.

musik15.gif

Link to comment
Share on other sites

அந்தகாலத்து பைலா பாட்டுக்கள் ..பம் பம் பம்மெருகை.....டிங்கிரி டிங்கிரி மீனாட்சி பாட்டுகளுக்கு உந்த மியூசிசுக்கள் தொங்கலாயிருக்கும்.. இந்தா வாறன்

Link to comment
Share on other sites

ஏன்

கள்ளுக் கடை பக்கம் போகாதே

உந்தன் காலைப் பிடிச்சு கென்ச்சுகேறேன்

மற்றது,

சின்ன மாமியே உந்தன் சின்ன மகளெங்கே

பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாளோ,

அட வாடா மருமகா

எந்தன் அழகு மருமகா எண்டெல்லாம் படிச்சதெல்லாம் மறந்திட்டிங்களோ அம்மான்.

Link to comment
Share on other sites

பாட்டப் போட்டுட்டு முனியம்மான்ட ஆட்டத்தப் பாக்க சரியா உந்தப் பாட்டுக்கு ஆடுற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

டண்கன் : வணக்கம் மன்னா நீங்கள் கூட்டிவரச்சொன்னதாக தளபதி மதன் தும்புதடியுடன் வந்தார் என்னவிடயம்

நல்லா காலம் சாத்திரி மன்னர் அள்ளிக் கொண்டு வரச் சொல்லவில்லை அப்பிடி எண்டால் தளபதி கடகத்திலைதான் டண்ணைக் கொண்டு வந்திருப்பார் என்ன....

Link to comment
Share on other sites

ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான்

:P

Link to comment
Share on other sites

ஓய் சின்னகுட்டி நாரதர் லொள்ளா நானே அஞ்சுபெட்டையளை பெத்து போட்டு எப்பிடி கரைசேக்கிறதெண்டு தெரியாமல் திண்டாடுறன் உங்களுக்கு என்னை பாத்து பாட்டா? மனுசன் அறிஞ்சா அவ்வளவுதான்

அதுக்கேன் கவலப் படுகிறியள்,

அன்சு பெட்டயளப் பெத்த நீங்களே இப்படி

வடிவா ஆடுறுயள் எண்டா உங்கட பெட்டயளப் பற்றிச் சொல்லவா வேணும்.

அதுகள் புளியங் கொம்பாப் பிடிச்சுக் கொண்டு வருங்கள்,

கவலைப் படாதயிங்கோ.

Link to comment
Share on other sites

அதுக்கேன் கவலப் படுகிறியள்,

அன்சு பெட்டயளப் பெத்த நீங்களே இப்படி

வடிவா ஆடுறுயள் எண்டா உங்கட பெட்டயளப் பற்றிச் சொல்லவா வேணும்.

அதுகள் புளியங் கொம்பாப் பிடிச்சுக் கொண்டு வருங்கள்,

கவலைப் படாதயிங்கோ.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

காட்சி 3

(சமையல்காரன் சின்னா சங்கிலிகளால் பிணைத்தபடி மன்னன் முன் நிறுத்தபடுகிறான்)

டண்கன் : மன்னா இதோ சின்னா ஊர் எல்லையில் சோமபானம் அருந்திகொண்டிருந்தார் பிளாவும் கையுமாய் பிடித்து வந்தேன்

மன்னன் :ஒ நீர்தான் சமையல் சின்னாவோ

சின்னா : ஆ நீர்தான் மங்களாபுரி மக்கு மன்னரோ?

மன்னன் : உமக்கு கொழுப்பு அதிகம்

சின்னா : என்றுதான் வைத்தியரும் சொன்னார் அதனால் தான் உணவில் நான் எண்ணெய் சேர்ப்பதில்லை

மன்னர் : ஆ நான் யார் தெரியுமா?

சின்னா : எனக்கென்ன கண்பார்வை குறைவா அதுதான் சொன்னேனெ மக்கு மன்னர் என்று

மன்னர் :நக்கல் நளினம் உமக்கு

சின்னா அது என் கூட பிறந்த குணம் அதை மாற்ற மனைவி சின்னாச்சியால் கூட முடியாது

மன்னர் :என் தோள்கள் துடி துடிக்கிறது கைகள் படபடக்கிறது உம்மை என்ன செய்கிறேன் பாரும்

சின்னா : அது விற்றமின் குறைபாடாக இருக்கும் நல்ல வைத்தியராய் பாரும்

மன்னர் : யாரங்கே இவன் திருடியது மட்டுமல்லாமல் திமிராக வேறு பேசுகிறான் எனவே இவனை தூக்கிலிடுங்கள்

சின்னா : வாழ்வில் புன்னகையை மட்டுமே தெரிந்த எனக்கு பொன்நகை திருடிய குற்றமா யக்கம்மா

மந்திரி :மனைவி பெயர் சின்னாச்சியென்றீர் யாரது யக்கம்மா

சின்னா : பக்கத்து வீட்டுகாரி யோவ் உம்மடை சகா எனக்கு தூக்க எண்டிட்டார் உமக்கு நக்கலா

மந்திரி : உம்மை தூக்கிலை போட்டாலும் திருந்த மாட்டீர். மன்னா எதை செய்தாலும் நாம் நல்ல நேரம் பாத்து தானே செய்வது வழமை எனவே சின்னாவை தூக்கிலிட சுப நேரம் பார்க்க வேண்டுமே

மன்னர் :அடடா மறந்து விட்டேன் இதுக்குதான் உம்மை மாதிரி அறிவுள்ள மந்திரி அருகில் வேண்டும் என்ற சொல்வது எங்கே எமது அரண்மனை சாத்திரியாரை அழைத்து வாருங்கள்

(சாத்திரியார் கையில் ஒரு வெத்திலை பெட்டி சில ஏடுகள் என்பனவற்றுடன் அரண்மனைக்குள் தாண்டி தாண்டி நுழைகிறார்)

சாத்திரி :வணக்கம் மன்னாஅழைத்தீர்களாமே

மன்னர் : ஆமாம் சாத்திரியாரே ஏன் தாண்டி தாண்டி நடக்கிறீர்கள்

சாத்திரி : ஓ அதுவா வா வாழ்க்கையெண்றால் பல துன்பங்கள் வரும் அதையெல்லாம் தாண்டி நடக்கவேண்டும் என்று எனது தந்தை சொன்னார் அதுதான்

மந்திரி : நல்லது இதோ இங்கு நிக்கும் சின்னாவை தூக்கில்போட நீங்கள் ஒரு சுப முகூர்த்தம் குறித்து கொடுங்கள்

சர்த்திரி : நல்ல விடயம் (சாத்திரி வெத்திலை பெட்டியை திறந்து ஒரு வெத்திலையை எடுத்து அதில் மையை தடவி உத்து பாக்கிறார்) ஆகா இன்றிரவு சாமம் 12 மணிக்கு ராகுவும் கேதுவும் சந்திக்கின்றனர் நல்ல நேரம் அப்போ தூக்கில் போடலாம்.

மன்னர் : யாரய்யா அது ராகு கேது அவங்கள் சாமத்திலை சந்திக்கும்வரை நான் நித்திரை முழிக்கேலாது அவன்களை நேரத்திற்கு வரச்:சொல்லும்

மந்திரி : மன்னா ராகு கேது என்பது கிரகங்கள் அதை தான் நம் மட சாத்திரியார் வெத்திலையிலை பாத்து செல்லுறார்

மன்னன் : ஓ அப்படியா அண்ட வெளியில் உள்ள கிரகங்களை உந்த அழுகின வெத்திலையிலை பாக்கலாமா?? அப்ப ஏன் மொக்குதனமா உந்த உலக நாடுகள் கஸ்ர பட்டு காசு செலவழிச்சு விண்வெளிக்கு போகினம்

சாத்திரி : மன்னா எனது தொழிலை கேவலமாக போசாதீர்கள் பின்னர் சாமி குத்தம் வந்து உம்மடை கண்ணை அம்மாளாச்சி நோண்டி போடுவா

மன்னர் : அப்படியா மன்னிக்கவும் ( எழுந்து தோப்புகரணம் போட்டு கடவுளிடம் மன்னிப்பு கேக்கிறார்)

சாத்திரி : மன்னா உந்த சமையல் சின்னா சரியான கேடி ஒருமுறை எனக்குசாம்பாறில் பேதி மருந்து கலந்து கொடுத்தவன் எனவே மன்னித்து விட்டு விடாதீர்கள்.

மன்னர் : ஆகட்டும் யாரங்கே இரவு வரும்வரை சின்னாவை வீதியால் போவோர் வருவோர் எல்லோரும் பாக்கும் படியாக வெளியில் கட்டி வையுங்கள். சின்னா உனது கடைசி ஆசை எதும் இருந்தால் கூறலாம்

சின்னா : ஆமாம் மன்னா ஒரு அஞ்சு நிமிசம் என்னை அவிட்டு விடுங்கோ உந்த குறுக்காலை போன சாத்திரியை தொண்டையிலை கடிச்சு கொண்டிட்டு நானும் சாகிறன்

( பயத்தில் மன்னர் மந்திரி சாத்திரி எல்லோரும் கதிரையின் பின்னால் ஒளிந்து கொள்ள காவலர்கள் சின்னாவை இழுத்து போகிறார்கள்) திரை...................

உறவுகளே சில அலுவல்கள்காரணமாக களத்திற்கு 4 நாட்கள் வர மடியாத காரணத்தால் அவசரமாக் இதனை இணைத்து போகிறேன் அடுத்த தொடரில் சின்னாவை தூக்கில் போடலாமா அல்லது காப்பாத்தி விடலாமா?? என்பதை நீங்களே சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

ம்ம்மம் பாவம் காப்பாத்தி விடுங்கள் சாத்றி நாடகம் மிகவும் அருமை தொடருங்கள்...

Link to comment
Share on other sites

அண்ணா நாடகம் மிகவும் அருமை தொடருங்கள்...ம்ம் சின்னாவை என்ன செய்வம்? ம்ம்ம் சரி பாவமா இருக்கு காப்பாத்தி விடவும் :wink:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு நாடகம் மிண்டும் தெடரவாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.