Jump to content

கொடிக்கவி


Recommended Posts

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்

அருளிச் செய்த

கொடிக்கவி

உரையாசிரியர்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

eswaramoorthypillaisun.jpg

ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் துதி

பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்

பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்

கண்ட இரு தயகமல முகைகளெல்லாம்

கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்

விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு

மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்

புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்

பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்

(அருணந்தி தேவ நாயனார்)

ஸ்ரீ உமாபதி தேவ நாயனார் துதிப் பாடல்கள்

அடியார்க் கெளியன் எனத்தில்லை

அண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

பரம முத்தி அப்பொழுதே

உடலும் கரைவுற் றடைந்திடுவான்

உயர்தீக் கையினை அருள்நோக்கால்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

கமல மலரின் கழல்போற்றி.

திருவார் கயிலைத் திருநந்தி தேவர் திருமரபில்

வருமா சிரியன் மறைஞான சம்பந்த மாகுரவன்

அருள்சார் உமாபதி தேகிகன் செஞ்சர ணாம்புயமென்

மருவார் மலரிணை யுள்கி வழுத்தி வணங்குதுமே.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

ஆசியுரை

பழனி காசிவாசி சித்தாந்த சரபம்

மகாமகோபாத்தியாய சிவாகம ஞானபானு

ஈசான சிவாசாரிய சுவாமிகள்

கொடிக்கவி, சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று; 'சைவ சித்தாந்த சாத்திரம்,' மெய்கண்ட சாத்திரம் என வழங்கப்பெரும். சைவம் சிவசம்பந்தமுடையது: சித்தாந்தம் சிவாகமங்கள். 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பது சித்தியார். ஆகமம் ஆப்தனால் சொல்லப்பட்டது. ஆப்தன், உண்மை உரைப்போன்; மெய்கண்டவன்; மெய்ந்நெறியை வகுத்தோன்; மெய்கண்டான். அவர் சிவபெருமானே: அவரே அநாதி மெய்கண்டார்: அவர் 'பரகுரு': திருநந்தி தேவர் முதல் பரஞ்சோதி முனிவர்வரை யுள்ளோர் 'பரபரகுரு'. திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் 'அபரகுரு' அநாதி மெய்கண்டார்வழி வந்தமையின் சைவசித்தாந்த சாத்திரம் 'மெய்கண்ட சாத்திரம்' என வழங்கப்பெறும். அவ்வாறு வழங்கப் பெறுவது இக் கருத்துப் பற்றியேயாகு. அத்துணை, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு, திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரண மீறானவைகளாம். இவை, பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மை கூறுமுகத்தால், நியாய தருக்க நெறி பிறழாமல், சித்தாந்த சைவச் சிறப்பினை தெரித்துணர்த்தி, சாதனமும் பயனும் ஒப்பக் கூறுதலால், சாஸ்திரப் பிரபஞ்சங்களுள் வியாபகமானவை. ஏனைய சாஸ்திரங்கள் வியாப்பியமாம். புலன்களுக்கு அடிமைப்பட்டு அவற்றிற்கு ஆவனவே செய்து அவற்றின் வழியில் அழுந்தி அலமரும் உயிர்களை அத்துன்பச் சூழலினின்று கடப்பிக்கும் நூல்கள் 'சாத்திரங்கள்' எனப் போற்றப்படும். மேலே சுட்டிய முப்பொருள்களை உணர்த்துவதோடமையாது, அந்தப் பொருள்களையும் அவற்றின் பகுதியவாகிய, சிவம், சத்தி, உயிர், உயிரறிவை மறைக்கும் மலம், அம் மறைப்பு நீங்குந்தனையும் துணையாக நிற்கும் மாயை, மாயா கருவிகள் கூடுதலால் உண்டாம் சகல நிலை, நீங்குதலால் வரும் கேவல நிலை, இவைகளையும் இல்லை எனக் கூறும் கோளை மறுத்து இவை உள்பொருள்களே எனப் பிரதிக்ஞை செய்து சிவசந்நிதியிலே, எந்த முயற்சியுமின்றி விருஷபத் துவசக்கொடிமேல் நோக்கிச்சென்று பறந்திடுமாறு செய்தலின் இது கொடிக்கவி என்னும் அப் பெயர் பெற்றது. தீக்ஷ¡கரமத்தால் உயிர்கள் அருள் பொருந்துமாற்றைத் தெரிப்பது: ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதி உய்யுமாறு அவற்றின் வகையும் சிறப்பும் கூறுவது. ஏனைய பதின்மூன்று சாத்திரங்களில் கூறப்படும் உண்மைகளைச் சிவசந்நிதியில் பிரதிக்ஞா ரூபமாக இனிது நாட்டுவது இந்நூல்.

இதனைத் தெளிந்த உரையுடன் நமக்கு உபகரிப்பவர்கள், நமது சைவசித்தாந்த பண்டிதர் சைவத்திருவின் சார்வே பொருள் எனக் கொள்ளும் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் ஆவர். இவர்கள் சித்தாந்த சைவபரிபாலனமே தமக்குரிய கடப்பாடாகக் கொண்டு பணிபுரியும் ஞானவீரர்: புறச்சமய நிராகரணமும் சுவமதத் தாபனமுமே தமது வாழ்நாளின் பரமலக்ஷ்யமாமெனக்கொண்டு வாழ்கின்றவர்கள். இந்தத் தெளிந்த உரை, அந் நூற்பொருளை யுணர்தற்குச் சிறந்த சாதனமாம். இந்த உரையின் வாயிலாகச் சைவ நன்மக்கள் சிவஞானப் பேறு பெறுவர் என்பது திண்ணம்.

சைவசித்தாந்த ஞானநூற்பிரவேசம், முறையால் சிவநேசர்கள் பால் வளர்க. (உமாபதி சிவம்) 'குருவருள்' துணை புரிவதாக.

ஈசான சிவாசாரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடிக்கவி

Link to comment
Share on other sites

சிவமயம்

பதிப்புரை

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற ஒளவையார் வாக்கைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களில் திருநெல்வேலியுறை செல்வர்கள் பாராட்டப் பெற்றவர்கள். திருநெல்வேலியின் ஒரு பகுதியான திருமங்கை நகரம் என்னும் பேட்டையில் கொல்லம் 1014ம் ஆண்டில் சேனையர் மரபினர் ஒரு விநாயகர் கோவில் கட்டத் தீர்மானித்து வாணம் வெட்டும்போது வெல்லக் கட்டியுடன் ஒரு விநாயகர் உருவமும் தென்பட்டது. அந்த விநாயகரையே கோவில் கட்டி முடிந்தவுடன் சைவத்திரு.பூலாம் மூப்பனார் அவர்களும், சப்பாணி மூப்பனார் அவர்களும் பிரதிஷ்டை செய்து சர்க்கரைக் கட்டியுடன் அவ்விநாயகர் காட்சிகொடுத்த அருளை எண்ணி, அவருக்கு "சர்க்கரை விநாயகர்" என்று திருநாமமிட்டு வணங்கி வருகிறார்கள். கொல்லம் 1034ம் ஆண்டு தை மீ சதய நட்சத்திர நன்னாளில் பேட்டை சைவத்திரு பொ.பேச்சிமுத்து மூப்பனார் அவர்களும் அவர்கள் சகோதரர்கள் சைவத்திரு. பொ.இராமலிங்க மூப்பனார் அவர்களும், சைவத்திரு, பொ.திரவிய மூப்பனார் அவர்களும் சேர்ந்து கர்ப்பக்கிரஹம் கட்டி மூலஸ்தானத்தில் விநாயகர் புதிய மூர்த்தி பிரதிஷ்டை செய்து முதல் முதல் கண்டெடுத்துப் பிரதிட்டை செய்து வணங்கிவந்த சர்க்கரை விநாயகரை முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தார்கள். அப்புண்ணியசீலர் பொ.பேச்சிமுத்துமூப்பனார் அவர்களின் வழி வந்தவர்கள் சைவத்திரு.பே.சி.சு.ந. சங்கரநாராயணன் அவர்கள். சைவத்திருப்பணியில் ஈடுபட்டு முன்னோர்கள் எழுதி வைத்த தர்மங்களை முறை தவறாது நடத்திவரும் பேறு பெற்றவர்கள். மேற் கூறிய சர்க்கரை விநாயகர் கோவிலில் எழுந்தருளப் பெற்றிருக்கும் ஸ்ரீசந்திரசேகரப் பெருமாளுக்கு, தில்லைச் சிதம்பரத்தை அனுசரித்து மார்கழி மீ உற்சவமும் சுவாமி எழுந்திருந்து முதலானவையும் சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்வுற்சவத்தின் கொடியேற்றுவிழாக் கட்டளையும் ஸ்ரீ சங்கரநாராயணன் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நடத்தி வருகிறார்கள். அக்கொடியேற்று விழாவன்று இக்'கொடிக்கவி' என்னும் நூல் திரு.சங்கரநாராயணன் அவர்களாலேயே வெளியிடப்படுகிறது. எடுத்த இப்பிறப்பிலே சித்தாந்த சாத்திரங்களின் பொருள் தெரிந்து, ஓதி, ஞானாசிரியர் திருவடியடைந்து, உபதேசம் பெற்று, அவ்வுபதேச நெறியில் வழுவாமல் நின்று ஒழுக வேண்டும் என்ற குறிப்பை ஸ்ரீ உமாபதி சிவாச்சார்ய சுவாமிகள் இக்கொடிக்கவியில் அருளிச் செய்திருக்கிறார்களாதலாலே, அந்நூலைப் பலரும் ஓதி உய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலை வெளியிட முன்வந்த திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி செலுத்த நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். அப்புண்ணிய சீலருக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் சகல சம்பத்துக்களும், மென் மேலும் பெற்று வாழ அருள்புரிவாராக.

இக்கொடிக்கவி நூலுக்கு எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி விளக்கமாக உரையெழுதித்தந்த சித்தாந்த பண்டித பூஷணம் சைவத்திரு.ஆ.ஈசுரமூர்த்திப்பி

ள்ளை அவர்கள், ஸ்ரீசர்க்கரை விநாயகர் எழுந்தருளியிருக்கும் பேட்டை நகர வாசியும், தமது வீடு மனை முதலியவற்றை ஸ்ரீ மெய்கண்ட சிவாச்சாரிய சுவாமிகள் குருபூசை முதலிய தர்மங்களுக்கு உரிமைப்படுத்தித் தமது கால்வழிகளை அவ்வாச்சாரிய சுவாமிகளுக்கு அடிமை யாக்கியவர்களுமான ஸ்ரீலஸ்ரீ த.ஆறுமுகநயினார் பிள்ளை யவர்களது மூத்த புதல்வர். அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் சித்தாந்தச் செந்நெறிக்கே அர்ப்பணம் செய்துவரும் தவசிரேஷ்டர்.

"இந்நூலுக்குப் பல பழைய உரைகள் உண்டு. அத்தனை உரைகளிருப்பினும், இப்பொழுது ஸ்ரீ ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் எழுதி யுபகரித்த உரையும் வேண்டற்பாலதேயாகும். தமிழ்க் கல்வியும் சைவசமய நூலுணர்வும் குறைந்து மேனாட்டு நாகரிகம் மிதந்து கிடக்கும். இக்காலத்தில் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சைவர்கள் அனைவரும் சமய சாத்திரங்களை எளிதிற் கற்றுணர்ந்து சமய ஞானம் பெறுமாறு இந்நூலுக்குத் தெளிவான பதவுரை கருத்துரை யென்பன எழுதி வெளியிட்ட பேருதவிக்குச் சைவ உலகமும் தமிழுலகமும் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையன."

என்று சைவத் திரு வீ. சிதம்பரராமலிங்க பிள்ளையவர்கள் (காலஞ் சென்ற துறைசை ஆதீன வித்வான்) இந்நூலின் முதற்பதிப்புக்கு ஆசியளித்திருக்கின்றார்கள் என்றால் நம்போல்வர் அவர்களது பெருமையை எடுத்துப் பேசுவது மிகையாகும். ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களுக்கும் இக்கழகத்தார் நன்று செலுத்துவதுடன், இவ்வாறே பல சைவத் தொண்டு புரிவதற்கு அவர்களுக்குத் திருவருள் சுரக்கும்படி, ஸ்ரீ காந்திமதியம்பா சமேத ஸ்ரீ நெல்லையப்பரைப் பிரார்த்திக்கிறோம்.

சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார்

திருநெல்வேலி டவுண்

17-12-1958

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

கொடிக்கவி(விளக்கம்)

தோற்றுவாய்

மெய்கண்ட *சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் ஒன்று கொடிக்கவி யென்பது. அதற்கு ஆசிரியர் ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் தில்லைத் திருவுடையந்தண குல தீபமாய் விளங்கியவர்கள். அத்தலத்தில் ஸ்ரீமத் நடராஜப் பெருமானாரின் திருவிழா வந்தது. அக்காலைக் கொடியேற்றுமுறை அவ்வாசாரிய சுவாமிகளுக்குரியதாயிற்று. ஆனால் மற்றை வேதியர்களால் அவர்கள் அவ்வுரிமையினின்றும் விலக்கப்பட்டிருந்தார்கள். விலக்கிய சில வேதியர் அக் கொடியை ஏற்ற முயன்றனர். கொடி ஏறவில்லை. திகைத்தன ரவர். 'எம் அன்பன் உமாபதி சிவன் வந்து ஏற்றினால் அ·தேறும்' என்று தாண்டவயர் அதனைக் கேட்டு அவ்வாசாரிய சுவாமிகள் இருக்குமிடஞ் சென்று அவர்களை வணங்கிச் சிவபிரானாரின் அருளிப்பாட்டை விண்ணப்பித்து, வந்தருளுமாறு வேண்டினர். சர்வலோக சரண்யராகிய பரசிவப் பிரபுவின் திருவடிப்பற்றையே பற்றாகக்கொண்டு அவரருள்வசமாய் நின்று வரும் ஸ்ரீ மத் சுவாமிகள் அச் சிவாஞ்ஞையைச் சிரமேற் கொண்டு ஆலயத்துக்கு வந்து இரு கரங்களையுங் கூப்பிக் கூத்துடைப் பெருமானாரைச் சிந்தித்த வண்ணமாய் நின்று நான்கு திருப்பாட்டுக்களைப் பாடியருளினார்கள். கொடிதானாக ஏறியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். வான வாத்தியங்கள் முழங்கின. ஆங்குக் குழுமியிருந்த வேதியர் முதலிய அனைத்துச் சிவபக்த சீலர்களும் ஹர ஹர முழக்கஞ் செய்தார்கள். அந்நான்கு பாட்டுஞ் சேர்ந்து கொடிக்கவி யென்னும் இந் நூலாயிற்று. இது கொடிப்பாட்டு எனவும் படும். முதற் பாட்டுக் கட்டளைக் கலித்துறை. மற்றவை வெண்பாக்கள்.

கொடிமரம் சிவமயம், கொடிச்சீலை திரோதன் சத்தி; அதில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர். கொடிக் கயிறு அருள். அதனோடியைந்துள்ள தருப்பைக் கயிறு பாசம். சிவபிரான் ராஜாதி ராஜர். உயிர்கள் அவரின் குடிகள். அக் குடிகளை வருத்தும் வேடராதியோர் பாச வகைகள். அவரை யொழித்து அவ் வுயிர்களைத் தம்பா லாக்கிப் பரிபாலிப்பவர் அச் சிவ ராஜரே. அத்திறன் அவருக்கேயுண்டு. அவர் திருமுன் ஏற்றப்படுங் கொடி அவ்வுண்மையை விளக்கும். கொடி ஏறுகின்றது. வேடரெல்லாஞ் சத்தி கெட் டோடுகின்றனர். உயிர்களெல்லாம் உய்தி கூடிப் பேரின்ப வாழ் வெய்துகின்றன. வைதிக சைவ ராஜாங்க கெளரவ மன்றோ அவ் விடபக் கொடி. அது கம்பீரமாய்ப் பறந்திடுக.

eswaramoorthypillaimoonflag.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

* மெய்கண்ட சாத்திரங்கள் 14

..................................................... நூல் ஆசிரியர்

1. சிவஞான போதம் --------------ஸ்ரீ மெய்கண்ட தேவ சுவாமிகள்

2. சிவஞான சித்தியார்

(சுபக்கம், பரபக்கம்) ---------------- ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்

3. இருபா இருபது------------------- ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்

4. திருவுந்தியார்--------------------- திருவியலூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்

5. திருக்களிற்றுப்படியார்------------ திருக்கடவூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்

6. உண்மை விளக்கம்-------------- திருவதிகை ஸ்ரீ மனவாசகங் கடந்தார்

7. சிவப்பிரகாசம்--------------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

8. திருவருட்பயன்---------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

9. வினா வெண்பா--------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

10. போற்றிப்ப·றொடை----------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

11. கொடிக்கவி-------------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

12. நெஞ்சுவிடுதூது--------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

13. உண்மை நெறி விளக்கம்--- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

14. சங்கற்ப நிராகரணம்---------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

Link to comment
Share on other sites

முதற் பாட்டு

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட

மொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளடரா

துள்ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள

தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும்படி

கொடி கட்டினனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க சனம் சாகுது தமிழினினமே அழியப்போகுது என்டு எல்லாரும் பதற்றாங்கள் நீர் இங்க வேதம் ஓதுகிறிரோ நல்ல முயற்சி

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

:icon_idea::o

நாவலரை தனியா விடுங்கோ கு.மா அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_idea::o

நாவலரை தனியா விடுங்கோ கு.மா அண்ணா.

காமடி பண்றதுக்கு ஒரு அளவே இல்லையா?

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

யோ அந்தாள் பாட்டுக்கு தானும் தன்பாடும் எண்டு எழுதிக்கொண்டிருக்குது ஏனப்பா வம்புக்கு இழுக்குறீங்கள்?..

Link to comment
Share on other sites

ரோமாபுரி நீரோ நாவலருக்கு பதில் தந்த கு.சா வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

பதவுரை

ஒளிக்கும் - சிவஞானத்துக்கும்

இருளுக்கும் - ஆணவமலத்துக்கும்

ஒன்றே இடம் - ஆன்ம வர்க்கம் ஒன்றுமட்டுமே தங்கு மிடமாகும்

ஒன்று மேலிடில் - சிவஞானம் ஆணவ மலமாகிய

[இரண்டனுள் ஒன்று மேலிட்ட காலத்தில்

ஒன்று ஒளிக்கும் - மற்றொன்று மறைந்து விடும்

எனினும் - என்றாலும்

இருள் - ஆணவ மலமானது

அடராது - (சிவஞானத்தைப்) பந்தியாது

உயிர்க்கு உயிராய் - எல்லா உயிர்களுக்கும் உயிராகி

உள்தெளிக்கும் - அவைகளறிவை விளக்குகின்ற

அறிவு - சிவஞானமானது

திகழ்ந்து உளதேனும் - (பூர்வ புண்ணிய விசேடத்தினால்சிறிது)

உயிர் - அவ்வான்மா [ஆன்மாவின் மாட்டு விளங்கினாலும்]

திரிமலத்தே - (ஆணவம், கன்மம், மாயை ஆகிய ) மும்மலங்களிலே

குளிக்கும் - பந்தப் பட்டுத்தான் இருக்கும் (ஆகையால் அவ்வுயிர்)

அருள் கூடும்படி - (தீக்ஷ¡க் கிரமத்தினாலே மல நீக்கம் பெற்றுத் ) திருவருளைப் பொருந்தும்படி

கொடி கட்டினன் - (நான்) துவசங் கட்டினேன்.

குறிப்பு :- பதவுரையில் இடதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் உரைநடையாகும். வலதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் பொழிப்புரையாகும்.

Link to comment
Share on other sites

கருத்து

சிவஞானம் ஒன்று ஆணவ மலம் மற்றொன்று இவ்விரண்டற்கும் தங்குமிடம் உயிர். அவ்விரண்டனுள் ஒன்று மேலிட்டபோது மற்றொன்று மறையும். ஆனாலும் ஆணவ மலம் சிவஞானத்தைப் பந்தியாது. சிவஞானம் உயிர்க் குயிராகும், அதனறிவை விளக்கும். உயிர் செய்த பூர்வ புண்ணிய விசேடத்தால் அதன்பால் அந்த ஞானம் சிறிது விளங்கக்கூடும். ஆனாலும் அவ்வுயிர் மும்மலபந்தம் நீங்கப் பெறாது. அவ்வுயிர்க்குத் தீக்கைப்பேறு அவசியம்: அதனால் அவ்வுயிர் அம் மல நீக்கம் பெறும், திருவருளிற் பொருந்தும். அது நிகழும்படி நான் கொடியை யேற்றினேன்.

Link to comment
Share on other sites

விளக்கம்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்:- தத்துவங்கள் முப்பத்தாறு. அவற்றுள் ஒன்று ஆங்கார மென்பது. அது மூவிதம். சாத்துவிக அகங்காரம். இராசத அகங்காரம். தாமச அகங்காரம் என்பன அவை. சாத்துவிக அகங்காரத்தில் சத்துவ குணம் மேலிட்டிருக்கும்: இராசத தாமத குணங்கள் அடங்கி யிருக்கும். இராசத அகங்காரத்தில் இராசத குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ தாமச குணங்கள் அடங்கியிருக்கும். தாமச அகங்காரத்தில் தாமச குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ இராசத குணங்கள் அடங்கியிருக்கும். தாமத அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய சத்துவ குணம் பரிணமிப்பதா லுண்டாவதே ஒளி. சாத்துவிக அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய தாமத குணத்தின் சாரம் பரிணமித்து இருளாகும். இருள் மறைக்கும். ஒளி விளக்கும். ஆகலின் அவ்விரண்டும் மறுதலைப் பொருள்கள். ஆயினும் அவை ஏக காலத்தில் ஒரே யிடத்தி லிருப்பன. அதனை 'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்' என்றது கவி.

ஒன்று மேலீடில் ஒன்று ஒளிக்கும்:- பகலிலும் இருள் உண்டு. இரவிலும் ஒளியுண்டு. பகலில் இருளில்லை யென்றால் வெயிற் காலத்தில் மரத்தினடி முதலிய விடங்களில் நிழல் உண்டாத லில்லை. இரவில் ஒளியில்லை யென்றால் கார்காலத்தில் இருள் நடுவில் மின்னல் உண்டாத லில்லை. பகலில் ஒளி மிக்கிருக்கும். இருள் அதி லடங்கிக் கிடக்கும். அத்தனையே. இருள் கண்ணைக் கவர்ந்து நிற்கும் போது கண் எதனையுங் காண மாட்டாமல் மயங்கும். ஒளி கண்ணைக் கவர்ந்த போது கண் பொருளைக் காணும் விளக்கம் பெறும். இருள் மேலிட்டால் ஒளி மடங்கும், ஒளி மேலிட்டால் இருள் மடங்கும் என்பதற்குப் பொருள் அதுவே. அதனை 'ஒன்று மேலிடில் ஒன்று ஒலிக்கும்' என்றது கவி.

Link to comment
Share on other sites

இருள் அடராது:- ஒளி போல்வது சிவம். இருள் போல்வது மலம். கண்போல்வது உயிர். சிவமும் மலமும் பகைப் பொருள்கள். அவை ஏக காலத்தில் உயிர்மாட்டுள்ளன. சிவம் நிலைபெற்று விளங்கும் ஞானத்தை யுடையது. அந்த ஞானம் சூக்குமம். அது விளங்குதற்கு வியஞ்சகம் வேண்டாம். மலம் அந்த ஞானத்தைப் பந்தியாது. ஞாயிற்றின்முன் இருள்போல் அம்மலத்துக்குச் சிவத்தின்முன் செயலில்லை. 'இருள் அடராது' என்ற அடிக்குப் பொருள் அது.

உயிர்க்கு உயிராய் உள்தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே குளிக்கும்:- உயிரறிவு ஏகதேசம். அது தூலம். ஆதலின் வியஞ்சகமின்றி அது விளங்காது. அதனைப் பற்றிக்கொண்டது மலம். அதாவது உயிரே மலவயப்பட்டு மயங்குகிறதென்பது. அதுதான் மலம் மேலிட்ட நிலை உயிருக்கு மேலிட வேண்டுவது சிவத்துவம். அது மேலிடின் அவ்வுயிரி னறிவு விளங்கும்.

உயிரிற் சிவம் ஒன்றி யிருக்கிறது. உயிர் மலச்சூழலிற்பட்டுக் கிடக்கும்போதும் சிவம் அதற்குத் தோன்றாத் துணையே. உயிர் பிறவி தோறும் புண்ணியங்களைச் செய்யும். அப் புண்ணியத்துக்குப் பயனுண்டு. சிவம் அவ் வுயிர்மாட்டு ஓரளவிற்கு விளங்கித் தோன்றுவதே அப் பயன். ஆயினுமென்? அம் மலச் சூழல் அவ் வுயிருக்கு அறவே நீங்காது. அதனை 'உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கும்' என்றது கவி.

Link to comment
Share on other sites

அருள் கூடும்படி:- உயிர் புண்ணியத்தைச் செய்ய வேண்டும். புண்ணியங்கள் பல. அவை இருவகையா யடங்கும். ஒன்று பசுபுண்ணியம். வேள்வி முதலிய அது. இன்னொன்று பதிபுண்ணியம். சரியையாதிய அது. உயிர் தான் செய்த புண்ணியங்களுக்குத் தக மேன்மேற் சமயங்களிற் போய்ப் பிறக்கும். ஆயின் அது சைவத் திறத் தடைதல் அருமையினும் அருமை. அதில் அவ் வுயிர் சரியை கிரியா யோகங்களைச் செய்து ஞானத்தைப் பெறும். சரியை யாதிகள் போலச் சிவதீக்கையும் வேண்டப்படுவதே. உயிரை அதன் நல்வினைப் பயனால் மேல்நோக்கிச் செலுத்துவது திரோதான சத்தி. அது மலத்தைப் பற்றி நின்று தொழிலாற்று. அ·தாவது அம்மலத்தைப் பாகப்படுத்தலாம். பாகம் - பக்குவம். மலம் பரிபாகம் அடைந்து தேய்ந்து கொண்டே வரும். மலப்பிணிப்பு நெகிழ்தலே அத் தேய்வு. அத்திரோதான சத்தி, சிவத்தின் கருணை மறம். கருணை மறம் - மறக் கருணை. மலம் தேயத் தேய அக் கருணை சிறிது சிறிதெ அறக் கருணையாக மாறி உயிரின்மாட்டுப் பதியும். அறக் கருணை - கருணை. அதுதான் சிவத்தின் சிற்சத்தி. சிற்சத்தி - பராசத்தி. அப் பராசத்தி உயிரின் மாட்டுப் பதிவது சத்திநிபாத மெனப்படும்.

உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை. அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும். சமய தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும். அத் தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப் பயனே. அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும். அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும் உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத் தரா. அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம். ஞானமொன்றே வீடு பேற்றை நேரே யருளும்.

Link to comment
Share on other sites

தீக்கை யென்பதற்கு மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தலென்பது பொருள். அதனை உயிர்க்குச் சற்குறவன் செய்வன். அது சிவத்தின் கிரியாசத்தி வியாபாரம். கிரியாசத்தி, ஞானசத்தியின் வேறன்று. ஆகலின் அத்தீக்கை மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் கூடுமென்க. அத் தீக்கையின் விதங்களும் பல. அவை சாதாரம் திராதாரமென இரண்டாயடங்கும். நிராதார தீக்கை பிரளயாகல விஞ்ஞான கல வுயிர்களுக்குச் செய்யப்படுவது. சகல உயிர்களுக்கு ஆவது சாதார தீக்கை. சிவம் குருமூர்த்தியினறிவில் தங்கி அருளுமுறையே. சாதார தீக்கை, அதுவும் மல பரிபாகத்துக்கேற்பப் பலவகையாம். அவற்றுட் சிறந்தது ஒளத்திரி யென்பது. நயனம், பரிசம், மானதம், வாசகம் சாத்திரம், யோகம் என்பன ஒளத்திரிக்கு அங்கமாகவும், அங்கமல்லாமற் சுதந்திரமாகவுஞ் செய்யப்படும். ஒளத்திரியும் ஞானவதி, கிரியாவதி, யென்றிருவகைத்து. சதாசாரியன் பக்குவமடைந்த வுயிருக்கு அவ்விரண்டனு ளொன்றைச் செய்வன். அவ்வுயிர் எடுத்த வுடம்பால் அனுபவிக்கும் வினைப் பகுதி பிராரத்த மெனப்படும். அதுபோக. எஞ்சி நின்ற பகுதி சஞ்சிதமாகும். அது பற்றிக்கிடப்பதற்கு இடங்கொடுத்து நிற்பன ஆறத்துவாக்கள். அவை மாயே யமல மெனப்படும். அம் மலமும், அவ் வினையும் தீக்கையாற் சுத்தியாகும். சுத்தியாதலாவது ஒழிதல். தீக்கை சிவத்தின் கிரியா சத்தியாதலால் அது அச் சுத்தியைச் செய்யுமென்பது பொருந்தும். ஆணவ மலமும், ஆகாமிய வினையும் சிவத்தின் ஞானசத்தியால் ஒழியற்பாலன. பிராரத்தத்தை அவ்வுயிர் அனுபவித்துத் தொலைக்கும். உயிரின் பிறவிக்கு ஹேது ஆணவ மலம். உயிரினிடம் சிவம் பிரகாசித்தற்கு ஹேது ஞானம். தீக்கையோ அத்துவ சுத்தி செய்யு முகத்தால் அந்த ஆணவ மலத்தைக் கெடுத்து அந்த ஞானத்தை யுதிப்பிக்கும். கவியிலுள்ள அருள்' என்றது அந்த ஞானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :wub:

17 ம் திகதியிலயிருந்து .

Link to comment
Share on other sites

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :rolleyes:

17 ம் திகதியிலயிருந்து .

:wub:

ஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா?

சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.