Jump to content

கொடிக்கவி


Recommended Posts

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்

அருளிச் செய்த

கொடிக்கவி

உரையாசிரியர்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

eswaramoorthypillaisun.jpg

ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் துதி

பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்

பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்

கண்ட இரு தயகமல முகைகளெல்லாம்

கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன்

விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு

மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்

புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்

பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்

(அருணந்தி தேவ நாயனார்)

ஸ்ரீ உமாபதி தேவ நாயனார் துதிப் பாடல்கள்

அடியார்க் கெளியன் எனத்தில்லை

அண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

பரம முத்தி அப்பொழுதே

உடலும் கரைவுற் றடைந்திடுவான்

உயர்தீக் கையினை அருள்நோக்கால்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

கமல மலரின் கழல்போற்றி.

திருவார் கயிலைத் திருநந்தி தேவர் திருமரபில்

வருமா சிரியன் மறைஞான சம்பந்த மாகுரவன்

அருள்சார் உமாபதி தேகிகன் செஞ்சர ணாம்புயமென்

மருவார் மலரிணை யுள்கி வழுத்தி வணங்குதுமே.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

ஆசியுரை

பழனி காசிவாசி சித்தாந்த சரபம்

மகாமகோபாத்தியாய சிவாகம ஞானபானு

ஈசான சிவாசாரிய சுவாமிகள்

கொடிக்கவி, சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று; 'சைவ சித்தாந்த சாத்திரம்,' மெய்கண்ட சாத்திரம் என வழங்கப்பெரும். சைவம் சிவசம்பந்தமுடையது: சித்தாந்தம் சிவாகமங்கள். 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும்' என்பது சித்தியார். ஆகமம் ஆப்தனால் சொல்லப்பட்டது. ஆப்தன், உண்மை உரைப்போன்; மெய்கண்டவன்; மெய்ந்நெறியை வகுத்தோன்; மெய்கண்டான். அவர் சிவபெருமானே: அவரே அநாதி மெய்கண்டார்: அவர் 'பரகுரு': திருநந்தி தேவர் முதல் பரஞ்சோதி முனிவர்வரை யுள்ளோர் 'பரபரகுரு'. திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் 'அபரகுரு' அநாதி மெய்கண்டார்வழி வந்தமையின் சைவசித்தாந்த சாத்திரம் 'மெய்கண்ட சாத்திரம்' என வழங்கப்பெறும். அவ்வாறு வழங்கப் பெறுவது இக் கருத்துப் பற்றியேயாகு. அத்துணை, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு, திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரண மீறானவைகளாம். இவை, பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மை கூறுமுகத்தால், நியாய தருக்க நெறி பிறழாமல், சித்தாந்த சைவச் சிறப்பினை தெரித்துணர்த்தி, சாதனமும் பயனும் ஒப்பக் கூறுதலால், சாஸ்திரப் பிரபஞ்சங்களுள் வியாபகமானவை. ஏனைய சாஸ்திரங்கள் வியாப்பியமாம். புலன்களுக்கு அடிமைப்பட்டு அவற்றிற்கு ஆவனவே செய்து அவற்றின் வழியில் அழுந்தி அலமரும் உயிர்களை அத்துன்பச் சூழலினின்று கடப்பிக்கும் நூல்கள் 'சாத்திரங்கள்' எனப் போற்றப்படும். மேலே சுட்டிய முப்பொருள்களை உணர்த்துவதோடமையாது, அந்தப் பொருள்களையும் அவற்றின் பகுதியவாகிய, சிவம், சத்தி, உயிர், உயிரறிவை மறைக்கும் மலம், அம் மறைப்பு நீங்குந்தனையும் துணையாக நிற்கும் மாயை, மாயா கருவிகள் கூடுதலால் உண்டாம் சகல நிலை, நீங்குதலால் வரும் கேவல நிலை, இவைகளையும் இல்லை எனக் கூறும் கோளை மறுத்து இவை உள்பொருள்களே எனப் பிரதிக்ஞை செய்து சிவசந்நிதியிலே, எந்த முயற்சியுமின்றி விருஷபத் துவசக்கொடிமேல் நோக்கிச்சென்று பறந்திடுமாறு செய்தலின் இது கொடிக்கவி என்னும் அப் பெயர் பெற்றது. தீக்ஷ¡கரமத்தால் உயிர்கள் அருள் பொருந்துமாற்றைத் தெரிப்பது: ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதி உய்யுமாறு அவற்றின் வகையும் சிறப்பும் கூறுவது. ஏனைய பதின்மூன்று சாத்திரங்களில் கூறப்படும் உண்மைகளைச் சிவசந்நிதியில் பிரதிக்ஞா ரூபமாக இனிது நாட்டுவது இந்நூல்.

இதனைத் தெளிந்த உரையுடன் நமக்கு உபகரிப்பவர்கள், நமது சைவசித்தாந்த பண்டிதர் சைவத்திருவின் சார்வே பொருள் எனக் கொள்ளும் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் ஆவர். இவர்கள் சித்தாந்த சைவபரிபாலனமே தமக்குரிய கடப்பாடாகக் கொண்டு பணிபுரியும் ஞானவீரர்: புறச்சமய நிராகரணமும் சுவமதத் தாபனமுமே தமது வாழ்நாளின் பரமலக்ஷ்யமாமெனக்கொண்டு வாழ்கின்றவர்கள். இந்தத் தெளிந்த உரை, அந் நூற்பொருளை யுணர்தற்குச் சிறந்த சாதனமாம். இந்த உரையின் வாயிலாகச் சைவ நன்மக்கள் சிவஞானப் பேறு பெறுவர் என்பது திண்ணம்.

சைவசித்தாந்த ஞானநூற்பிரவேசம், முறையால் சிவநேசர்கள் பால் வளர்க. (உமாபதி சிவம்) 'குருவருள்' துணை புரிவதாக.

ஈசான சிவாசாரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடிக்கவி

Link to comment
Share on other sites

சிவமயம்

பதிப்புரை

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற ஒளவையார் வாக்கைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களில் திருநெல்வேலியுறை செல்வர்கள் பாராட்டப் பெற்றவர்கள். திருநெல்வேலியின் ஒரு பகுதியான திருமங்கை நகரம் என்னும் பேட்டையில் கொல்லம் 1014ம் ஆண்டில் சேனையர் மரபினர் ஒரு விநாயகர் கோவில் கட்டத் தீர்மானித்து வாணம் வெட்டும்போது வெல்லக் கட்டியுடன் ஒரு விநாயகர் உருவமும் தென்பட்டது. அந்த விநாயகரையே கோவில் கட்டி முடிந்தவுடன் சைவத்திரு.பூலாம் மூப்பனார் அவர்களும், சப்பாணி மூப்பனார் அவர்களும் பிரதிஷ்டை செய்து சர்க்கரைக் கட்டியுடன் அவ்விநாயகர் காட்சிகொடுத்த அருளை எண்ணி, அவருக்கு "சர்க்கரை விநாயகர்" என்று திருநாமமிட்டு வணங்கி வருகிறார்கள். கொல்லம் 1034ம் ஆண்டு தை மீ சதய நட்சத்திர நன்னாளில் பேட்டை சைவத்திரு பொ.பேச்சிமுத்து மூப்பனார் அவர்களும் அவர்கள் சகோதரர்கள் சைவத்திரு. பொ.இராமலிங்க மூப்பனார் அவர்களும், சைவத்திரு, பொ.திரவிய மூப்பனார் அவர்களும் சேர்ந்து கர்ப்பக்கிரஹம் கட்டி மூலஸ்தானத்தில் விநாயகர் புதிய மூர்த்தி பிரதிஷ்டை செய்து முதல் முதல் கண்டெடுத்துப் பிரதிட்டை செய்து வணங்கிவந்த சர்க்கரை விநாயகரை முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தார்கள். அப்புண்ணியசீலர் பொ.பேச்சிமுத்துமூப்பனார் அவர்களின் வழி வந்தவர்கள் சைவத்திரு.பே.சி.சு.ந. சங்கரநாராயணன் அவர்கள். சைவத்திருப்பணியில் ஈடுபட்டு முன்னோர்கள் எழுதி வைத்த தர்மங்களை முறை தவறாது நடத்திவரும் பேறு பெற்றவர்கள். மேற் கூறிய சர்க்கரை விநாயகர் கோவிலில் எழுந்தருளப் பெற்றிருக்கும் ஸ்ரீசந்திரசேகரப் பெருமாளுக்கு, தில்லைச் சிதம்பரத்தை அனுசரித்து மார்கழி மீ உற்சவமும் சுவாமி எழுந்திருந்து முதலானவையும் சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்வுற்சவத்தின் கொடியேற்றுவிழாக் கட்டளையும் ஸ்ரீ சங்கரநாராயணன் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நடத்தி வருகிறார்கள். அக்கொடியேற்று விழாவன்று இக்'கொடிக்கவி' என்னும் நூல் திரு.சங்கரநாராயணன் அவர்களாலேயே வெளியிடப்படுகிறது. எடுத்த இப்பிறப்பிலே சித்தாந்த சாத்திரங்களின் பொருள் தெரிந்து, ஓதி, ஞானாசிரியர் திருவடியடைந்து, உபதேசம் பெற்று, அவ்வுபதேச நெறியில் வழுவாமல் நின்று ஒழுக வேண்டும் என்ற குறிப்பை ஸ்ரீ உமாபதி சிவாச்சார்ய சுவாமிகள் இக்கொடிக்கவியில் அருளிச் செய்திருக்கிறார்களாதலாலே, அந்நூலைப் பலரும் ஓதி உய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலை வெளியிட முன்வந்த திரு.சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி செலுத்த நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். அப்புண்ணிய சீலருக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் சகல சம்பத்துக்களும், மென் மேலும் பெற்று வாழ அருள்புரிவாராக.

இக்கொடிக்கவி நூலுக்கு எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி விளக்கமாக உரையெழுதித்தந்த சித்தாந்த பண்டித பூஷணம் சைவத்திரு.ஆ.ஈசுரமூர்த்திப்பி

ள்ளை அவர்கள், ஸ்ரீசர்க்கரை விநாயகர் எழுந்தருளியிருக்கும் பேட்டை நகர வாசியும், தமது வீடு மனை முதலியவற்றை ஸ்ரீ மெய்கண்ட சிவாச்சாரிய சுவாமிகள் குருபூசை முதலிய தர்மங்களுக்கு உரிமைப்படுத்தித் தமது கால்வழிகளை அவ்வாச்சாரிய சுவாமிகளுக்கு அடிமை யாக்கியவர்களுமான ஸ்ரீலஸ்ரீ த.ஆறுமுகநயினார் பிள்ளை யவர்களது மூத்த புதல்வர். அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் சித்தாந்தச் செந்நெறிக்கே அர்ப்பணம் செய்துவரும் தவசிரேஷ்டர்.

"இந்நூலுக்குப் பல பழைய உரைகள் உண்டு. அத்தனை உரைகளிருப்பினும், இப்பொழுது ஸ்ரீ ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் எழுதி யுபகரித்த உரையும் வேண்டற்பாலதேயாகும். தமிழ்க் கல்வியும் சைவசமய நூலுணர்வும் குறைந்து மேனாட்டு நாகரிகம் மிதந்து கிடக்கும். இக்காலத்தில் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சைவர்கள் அனைவரும் சமய சாத்திரங்களை எளிதிற் கற்றுணர்ந்து சமய ஞானம் பெறுமாறு இந்நூலுக்குத் தெளிவான பதவுரை கருத்துரை யென்பன எழுதி வெளியிட்ட பேருதவிக்குச் சைவ உலகமும் தமிழுலகமும் என்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையன."

என்று சைவத் திரு வீ. சிதம்பரராமலிங்க பிள்ளையவர்கள் (காலஞ் சென்ற துறைசை ஆதீன வித்வான்) இந்நூலின் முதற்பதிப்புக்கு ஆசியளித்திருக்கின்றார்கள் என்றால் நம்போல்வர் அவர்களது பெருமையை எடுத்துப் பேசுவது மிகையாகும். ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களுக்கும் இக்கழகத்தார் நன்று செலுத்துவதுடன், இவ்வாறே பல சைவத் தொண்டு புரிவதற்கு அவர்களுக்குத் திருவருள் சுரக்கும்படி, ஸ்ரீ காந்திமதியம்பா சமேத ஸ்ரீ நெல்லையப்பரைப் பிரார்த்திக்கிறோம்.

சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார்

திருநெல்வேலி டவுண்

17-12-1958

Link to comment
Share on other sites

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

கொடிக்கவி(விளக்கம்)

தோற்றுவாய்

மெய்கண்ட *சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் ஒன்று கொடிக்கவி யென்பது. அதற்கு ஆசிரியர் ஸ்ரீமத் உமாபதி சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் தில்லைத் திருவுடையந்தண குல தீபமாய் விளங்கியவர்கள். அத்தலத்தில் ஸ்ரீமத் நடராஜப் பெருமானாரின் திருவிழா வந்தது. அக்காலைக் கொடியேற்றுமுறை அவ்வாசாரிய சுவாமிகளுக்குரியதாயிற்று. ஆனால் மற்றை வேதியர்களால் அவர்கள் அவ்வுரிமையினின்றும் விலக்கப்பட்டிருந்தார்கள். விலக்கிய சில வேதியர் அக் கொடியை ஏற்ற முயன்றனர். கொடி ஏறவில்லை. திகைத்தன ரவர். 'எம் அன்பன் உமாபதி சிவன் வந்து ஏற்றினால் அ·தேறும்' என்று தாண்டவயர் அதனைக் கேட்டு அவ்வாசாரிய சுவாமிகள் இருக்குமிடஞ் சென்று அவர்களை வணங்கிச் சிவபிரானாரின் அருளிப்பாட்டை விண்ணப்பித்து, வந்தருளுமாறு வேண்டினர். சர்வலோக சரண்யராகிய பரசிவப் பிரபுவின் திருவடிப்பற்றையே பற்றாகக்கொண்டு அவரருள்வசமாய் நின்று வரும் ஸ்ரீ மத் சுவாமிகள் அச் சிவாஞ்ஞையைச் சிரமேற் கொண்டு ஆலயத்துக்கு வந்து இரு கரங்களையுங் கூப்பிக் கூத்துடைப் பெருமானாரைச் சிந்தித்த வண்ணமாய் நின்று நான்கு திருப்பாட்டுக்களைப் பாடியருளினார்கள். கொடிதானாக ஏறியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். வான வாத்தியங்கள் முழங்கின. ஆங்குக் குழுமியிருந்த வேதியர் முதலிய அனைத்துச் சிவபக்த சீலர்களும் ஹர ஹர முழக்கஞ் செய்தார்கள். அந்நான்கு பாட்டுஞ் சேர்ந்து கொடிக்கவி யென்னும் இந் நூலாயிற்று. இது கொடிப்பாட்டு எனவும் படும். முதற் பாட்டுக் கட்டளைக் கலித்துறை. மற்றவை வெண்பாக்கள்.

கொடிமரம் சிவமயம், கொடிச்சீலை திரோதன் சத்தி; அதில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர். கொடிக் கயிறு அருள். அதனோடியைந்துள்ள தருப்பைக் கயிறு பாசம். சிவபிரான் ராஜாதி ராஜர். உயிர்கள் அவரின் குடிகள். அக் குடிகளை வருத்தும் வேடராதியோர் பாச வகைகள். அவரை யொழித்து அவ் வுயிர்களைத் தம்பா லாக்கிப் பரிபாலிப்பவர் அச் சிவ ராஜரே. அத்திறன் அவருக்கேயுண்டு. அவர் திருமுன் ஏற்றப்படுங் கொடி அவ்வுண்மையை விளக்கும். கொடி ஏறுகின்றது. வேடரெல்லாஞ் சத்தி கெட் டோடுகின்றனர். உயிர்களெல்லாம் உய்தி கூடிப் பேரின்ப வாழ் வெய்துகின்றன. வைதிக சைவ ராஜாங்க கெளரவ மன்றோ அவ் விடபக் கொடி. அது கம்பீரமாய்ப் பறந்திடுக.

eswaramoorthypillaimoonflag.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

* மெய்கண்ட சாத்திரங்கள் 14

..................................................... நூல் ஆசிரியர்

1. சிவஞான போதம் --------------ஸ்ரீ மெய்கண்ட தேவ சுவாமிகள்

2. சிவஞான சித்தியார்

(சுபக்கம், பரபக்கம்) ---------------- ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்

3. இருபா இருபது------------------- ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்

4. திருவுந்தியார்--------------------- திருவியலூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்

5. திருக்களிற்றுப்படியார்------------ திருக்கடவூர் ஸ்ரீ உய்யவந்த தேவர்

6. உண்மை விளக்கம்-------------- திருவதிகை ஸ்ரீ மனவாசகங் கடந்தார்

7. சிவப்பிரகாசம்--------------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

8. திருவருட்பயன்---------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

9. வினா வெண்பா--------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

10. போற்றிப்ப·றொடை----------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

11. கொடிக்கவி-------------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

12. நெஞ்சுவிடுதூது--------------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

13. உண்மை நெறி விளக்கம்--- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

14. சங்கற்ப நிராகரணம்---------- கொற்றங்குடி ஸ்ரீ உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

Link to comment
Share on other sites

முதற் பாட்டு

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிட

மொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளடரா

துள்ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள

தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும்படி

கொடி கட்டினனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க சனம் சாகுது தமிழினினமே அழியப்போகுது என்டு எல்லாரும் பதற்றாங்கள் நீர் இங்க வேதம் ஓதுகிறிரோ நல்ல முயற்சி

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

:icon_idea::o

நாவலரை தனியா விடுங்கோ கு.மா அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_idea::o

நாவலரை தனியா விடுங்கோ கு.மா அண்ணா.

காமடி பண்றதுக்கு ஒரு அளவே இல்லையா?

Link to comment
Share on other sites

திருச்சிற்றம்பலம்

டேய் ஆறுமுகம்!

வாடா வெளியிலை.

உன்ரை சொறிமுகத்தை காட்டடா வெளியிலை

எனக்கு தெரியுமடா பக்தி என்னெண்டால்.

டேய் ஆறுமுகம்?

எங்கடை சனம் அழிஞ்சுகொண்டு போகுது.

நீ என்னடாவெண்டால் குண்டிகழுவுறதுக்கும் எந்ததிசையிலை குந்தியிருந்து கழுவோணும் எண்டு பாடம் படிப்பிக்கிறாயோ?

டேய் ஆறுமுகம்!

சனம் முழுக்க ஒப்பாரிவைச்சுக்கொண்டு திரியுது.நீ இப்பவும் பக்தி பரவசத்திலை திரியுறாய் வெங்கிடாந்தி

திருச்சிற்றம்பலம்

யோ அந்தாள் பாட்டுக்கு தானும் தன்பாடும் எண்டு எழுதிக்கொண்டிருக்குது ஏனப்பா வம்புக்கு இழுக்குறீங்கள்?..

Link to comment
Share on other sites

ரோமாபுரி நீரோ நாவலருக்கு பதில் தந்த கு.சா வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

பதவுரை

ஒளிக்கும் - சிவஞானத்துக்கும்

இருளுக்கும் - ஆணவமலத்துக்கும்

ஒன்றே இடம் - ஆன்ம வர்க்கம் ஒன்றுமட்டுமே தங்கு மிடமாகும்

ஒன்று மேலிடில் - சிவஞானம் ஆணவ மலமாகிய

[இரண்டனுள் ஒன்று மேலிட்ட காலத்தில்

ஒன்று ஒளிக்கும் - மற்றொன்று மறைந்து விடும்

எனினும் - என்றாலும்

இருள் - ஆணவ மலமானது

அடராது - (சிவஞானத்தைப்) பந்தியாது

உயிர்க்கு உயிராய் - எல்லா உயிர்களுக்கும் உயிராகி

உள்தெளிக்கும் - அவைகளறிவை விளக்குகின்ற

அறிவு - சிவஞானமானது

திகழ்ந்து உளதேனும் - (பூர்வ புண்ணிய விசேடத்தினால்சிறிது)

உயிர் - அவ்வான்மா [ஆன்மாவின் மாட்டு விளங்கினாலும்]

திரிமலத்தே - (ஆணவம், கன்மம், மாயை ஆகிய ) மும்மலங்களிலே

குளிக்கும் - பந்தப் பட்டுத்தான் இருக்கும் (ஆகையால் அவ்வுயிர்)

அருள் கூடும்படி - (தீக்ஷ¡க் கிரமத்தினாலே மல நீக்கம் பெற்றுத் ) திருவருளைப் பொருந்தும்படி

கொடி கட்டினன் - (நான்) துவசங் கட்டினேன்.

குறிப்பு :- பதவுரையில் இடதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் உரைநடையாகும். வலதுபுறம் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தொடர்ச்சியாக ஓதப்பெறின் பொழிப்புரையாகும்.

Link to comment
Share on other sites

கருத்து

சிவஞானம் ஒன்று ஆணவ மலம் மற்றொன்று இவ்விரண்டற்கும் தங்குமிடம் உயிர். அவ்விரண்டனுள் ஒன்று மேலிட்டபோது மற்றொன்று மறையும். ஆனாலும் ஆணவ மலம் சிவஞானத்தைப் பந்தியாது. சிவஞானம் உயிர்க் குயிராகும், அதனறிவை விளக்கும். உயிர் செய்த பூர்வ புண்ணிய விசேடத்தால் அதன்பால் அந்த ஞானம் சிறிது விளங்கக்கூடும். ஆனாலும் அவ்வுயிர் மும்மலபந்தம் நீங்கப் பெறாது. அவ்வுயிர்க்குத் தீக்கைப்பேறு அவசியம்: அதனால் அவ்வுயிர் அம் மல நீக்கம் பெறும், திருவருளிற் பொருந்தும். அது நிகழும்படி நான் கொடியை யேற்றினேன்.

Link to comment
Share on other sites

விளக்கம்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்:- தத்துவங்கள் முப்பத்தாறு. அவற்றுள் ஒன்று ஆங்கார மென்பது. அது மூவிதம். சாத்துவிக அகங்காரம். இராசத அகங்காரம். தாமச அகங்காரம் என்பன அவை. சாத்துவிக அகங்காரத்தில் சத்துவ குணம் மேலிட்டிருக்கும்: இராசத தாமத குணங்கள் அடங்கி யிருக்கும். இராசத அகங்காரத்தில் இராசத குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ தாமச குணங்கள் அடங்கியிருக்கும். தாமச அகங்காரத்தில் தாமச குணம் மேலிட்டிருக்கும்: சத்துவ இராசத குணங்கள் அடங்கியிருக்கும். தாமத அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய சத்துவ குணம் பரிணமிப்பதா லுண்டாவதே ஒளி. சாத்துவிக அகங்காரத்தில் அடங்கி யிருக்கு மென்று சொல்லப்பட்ட இரண்டு குணங்களில் ஒன்றாகிய தாமத குணத்தின் சாரம் பரிணமித்து இருளாகும். இருள் மறைக்கும். ஒளி விளக்கும். ஆகலின் அவ்விரண்டும் மறுதலைப் பொருள்கள். ஆயினும் அவை ஏக காலத்தில் ஒரே யிடத்தி லிருப்பன. அதனை 'ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்' என்றது கவி.

ஒன்று மேலீடில் ஒன்று ஒளிக்கும்:- பகலிலும் இருள் உண்டு. இரவிலும் ஒளியுண்டு. பகலில் இருளில்லை யென்றால் வெயிற் காலத்தில் மரத்தினடி முதலிய விடங்களில் நிழல் உண்டாத லில்லை. இரவில் ஒளியில்லை யென்றால் கார்காலத்தில் இருள் நடுவில் மின்னல் உண்டாத லில்லை. பகலில் ஒளி மிக்கிருக்கும். இருள் அதி லடங்கிக் கிடக்கும். அத்தனையே. இருள் கண்ணைக் கவர்ந்து நிற்கும் போது கண் எதனையுங் காண மாட்டாமல் மயங்கும். ஒளி கண்ணைக் கவர்ந்த போது கண் பொருளைக் காணும் விளக்கம் பெறும். இருள் மேலிட்டால் ஒளி மடங்கும், ஒளி மேலிட்டால் இருள் மடங்கும் என்பதற்குப் பொருள் அதுவே. அதனை 'ஒன்று மேலிடில் ஒன்று ஒலிக்கும்' என்றது கவி.

Link to comment
Share on other sites

இருள் அடராது:- ஒளி போல்வது சிவம். இருள் போல்வது மலம். கண்போல்வது உயிர். சிவமும் மலமும் பகைப் பொருள்கள். அவை ஏக காலத்தில் உயிர்மாட்டுள்ளன. சிவம் நிலைபெற்று விளங்கும் ஞானத்தை யுடையது. அந்த ஞானம் சூக்குமம். அது விளங்குதற்கு வியஞ்சகம் வேண்டாம். மலம் அந்த ஞானத்தைப் பந்தியாது. ஞாயிற்றின்முன் இருள்போல் அம்மலத்துக்குச் சிவத்தின்முன் செயலில்லை. 'இருள் அடராது' என்ற அடிக்குப் பொருள் அது.

உயிர்க்கு உயிராய் உள்தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே குளிக்கும்:- உயிரறிவு ஏகதேசம். அது தூலம். ஆதலின் வியஞ்சகமின்றி அது விளங்காது. அதனைப் பற்றிக்கொண்டது மலம். அதாவது உயிரே மலவயப்பட்டு மயங்குகிறதென்பது. அதுதான் மலம் மேலிட்ட நிலை உயிருக்கு மேலிட வேண்டுவது சிவத்துவம். அது மேலிடின் அவ்வுயிரி னறிவு விளங்கும்.

உயிரிற் சிவம் ஒன்றி யிருக்கிறது. உயிர் மலச்சூழலிற்பட்டுக் கிடக்கும்போதும் சிவம் அதற்குத் தோன்றாத் துணையே. உயிர் பிறவி தோறும் புண்ணியங்களைச் செய்யும். அப் புண்ணியத்துக்குப் பயனுண்டு. சிவம் அவ் வுயிர்மாட்டு ஓரளவிற்கு விளங்கித் தோன்றுவதே அப் பயன். ஆயினுமென்? அம் மலச் சூழல் அவ் வுயிருக்கு அறவே நீங்காது. அதனை 'உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கும்' என்றது கவி.

Link to comment
Share on other sites

அருள் கூடும்படி:- உயிர் புண்ணியத்தைச் செய்ய வேண்டும். புண்ணியங்கள் பல. அவை இருவகையா யடங்கும். ஒன்று பசுபுண்ணியம். வேள்வி முதலிய அது. இன்னொன்று பதிபுண்ணியம். சரியையாதிய அது. உயிர் தான் செய்த புண்ணியங்களுக்குத் தக மேன்மேற் சமயங்களிற் போய்ப் பிறக்கும். ஆயின் அது சைவத் திறத் தடைதல் அருமையினும் அருமை. அதில் அவ் வுயிர் சரியை கிரியா யோகங்களைச் செய்து ஞானத்தைப் பெறும். சரியை யாதிகள் போலச் சிவதீக்கையும் வேண்டப்படுவதே. உயிரை அதன் நல்வினைப் பயனால் மேல்நோக்கிச் செலுத்துவது திரோதான சத்தி. அது மலத்தைப் பற்றி நின்று தொழிலாற்று. அ·தாவது அம்மலத்தைப் பாகப்படுத்தலாம். பாகம் - பக்குவம். மலம் பரிபாகம் அடைந்து தேய்ந்து கொண்டே வரும். மலப்பிணிப்பு நெகிழ்தலே அத் தேய்வு. அத்திரோதான சத்தி, சிவத்தின் கருணை மறம். கருணை மறம் - மறக் கருணை. மலம் தேயத் தேய அக் கருணை சிறிது சிறிதெ அறக் கருணையாக மாறி உயிரின்மாட்டுப் பதியும். அறக் கருணை - கருணை. அதுதான் சிவத்தின் சிற்சத்தி. சிற்சத்தி - பராசத்தி. அப் பராசத்தி உயிரின் மாட்டுப் பதிவது சத்திநிபாத மெனப்படும்.

உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை. அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும். சமய தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும். அத் தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப் பயனே. அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும். அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும் உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத் தரா. அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம். ஞானமொன்றே வீடு பேற்றை நேரே யருளும்.

Link to comment
Share on other sites

தீக்கை யென்பதற்கு மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தலென்பது பொருள். அதனை உயிர்க்குச் சற்குறவன் செய்வன். அது சிவத்தின் கிரியாசத்தி வியாபாரம். கிரியாசத்தி, ஞானசத்தியின் வேறன்று. ஆகலின் அத்தீக்கை மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் கூடுமென்க. அத் தீக்கையின் விதங்களும் பல. அவை சாதாரம் திராதாரமென இரண்டாயடங்கும். நிராதார தீக்கை பிரளயாகல விஞ்ஞான கல வுயிர்களுக்குச் செய்யப்படுவது. சகல உயிர்களுக்கு ஆவது சாதார தீக்கை. சிவம் குருமூர்த்தியினறிவில் தங்கி அருளுமுறையே. சாதார தீக்கை, அதுவும் மல பரிபாகத்துக்கேற்பப் பலவகையாம். அவற்றுட் சிறந்தது ஒளத்திரி யென்பது. நயனம், பரிசம், மானதம், வாசகம் சாத்திரம், யோகம் என்பன ஒளத்திரிக்கு அங்கமாகவும், அங்கமல்லாமற் சுதந்திரமாகவுஞ் செய்யப்படும். ஒளத்திரியும் ஞானவதி, கிரியாவதி, யென்றிருவகைத்து. சதாசாரியன் பக்குவமடைந்த வுயிருக்கு அவ்விரண்டனு ளொன்றைச் செய்வன். அவ்வுயிர் எடுத்த வுடம்பால் அனுபவிக்கும் வினைப் பகுதி பிராரத்த மெனப்படும். அதுபோக. எஞ்சி நின்ற பகுதி சஞ்சிதமாகும். அது பற்றிக்கிடப்பதற்கு இடங்கொடுத்து நிற்பன ஆறத்துவாக்கள். அவை மாயே யமல மெனப்படும். அம் மலமும், அவ் வினையும் தீக்கையாற் சுத்தியாகும். சுத்தியாதலாவது ஒழிதல். தீக்கை சிவத்தின் கிரியா சத்தியாதலால் அது அச் சுத்தியைச் செய்யுமென்பது பொருந்தும். ஆணவ மலமும், ஆகாமிய வினையும் சிவத்தின் ஞானசத்தியால் ஒழியற்பாலன. பிராரத்தத்தை அவ்வுயிர் அனுபவித்துத் தொலைக்கும். உயிரின் பிறவிக்கு ஹேது ஆணவ மலம். உயிரினிடம் சிவம் பிரகாசித்தற்கு ஹேது ஞானம். தீக்கையோ அத்துவ சுத்தி செய்யு முகத்தால் அந்த ஆணவ மலத்தைக் கெடுத்து அந்த ஞானத்தை யுதிப்பிக்கும். கவியிலுள்ள அருள்' என்றது அந்த ஞானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :wub:

17 ம் திகதியிலயிருந்து .

Link to comment
Share on other sites

இதை வாசிக்க கொஞ்சம் இன்ரஸ்டா இருக்கு .

எப்பத்தில இருந்து இதுக்க இறங்கினீர் :rolleyes:

17 ம் திகதியிலயிருந்து .

:wub:

ஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா?

சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.