Jump to content

சிட்னி போராட்டத்தில் சிங்கள காடையர்களின் அக்கிரமம்


Recommended Posts

இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது.

கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்ளது. கார்களில் வந்த சிங்களவர்கள் எம் இளையோரை தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயமுற்று அம்புலன்ஸ் வண்டி வந்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். எம் இளையோரிலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்ற போது வக்கீலுடன் வருமாறு கூறியுள்ளனர்.

கோவிலுக்கு திரும்பிய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகின்றது. எம் இளையோர் ஒருவர் மேல் காரை ஏற்றிவிட்டதாகவும், அவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் பிந்தி கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இருப்பினும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் இன்னமும் கோவிலுக்கு திரும்பாததால் எதையும் சரியாக அறிய முடியவில்லை.

உண்ணாநிலையில் இருக்கும் சகோதரர் சுதா உடனடியாக அங்கிருந்த மக்களுடன் பேசினார். இது எம் போராட்டத்தை திசை திருப்ப இலங்கை அரசால் நடத்தப்படும் சூழ்ச்சி, இதற்கு நாம் பலியாகக்கூடாது என கேட்டுக்கொண்டார். எம் இளையோரை இந்த நேரத்தில் உணர்ச்சி வசப்படாமல், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இருப்பினும் இளையோர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகின்றது. அவர்களை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகவே உள்ளது.

நாளை காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து ஒஸ்திரேலிய தலைநகரில் அமைந்திருக்கும் U.S.A & U.K எம்பஸிகளுக்கு செல்ல இருப்பதால் சிட்னியில் வாழும் அனைத்து தமிழர்களையும் வருமாறு அறிவித்துள்ளனர்.

நான், நீ என பார்க்காமல் நாடு பெரிது, எம் மக்கள் பெரிதென மதித்து நாளை சிட்னி தமிழர்கள் அனைவரும் கன்பெராவுக்கு போய்வருவோம்....

Link to comment
Share on other sites

நான் இப்போதும் கோவிலில் தான் உள்ளேன்....

இளையோரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல்..

Link to comment
Share on other sites

இங்கு இப்படி செய்கிறார்கள் என்றால் எமது நாட்டில் உள்ள தமிழ் மக்களை என்னவெல்லாம் செய்வார்கள்...........

Link to comment
Share on other sites

இங்கும் நேற்று குயின்ஸ்பார்க்கில் நின்ற நம்மவர் ஒருவரின் மண்டையை சிங்கள குண்டன் ஒருவன் உடைத்தபோது அவன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டதாய் நேற்று கவனயீர்ப்பில் நின்றபோது கதைத்தார்கள். செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

இளையோரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.