Jump to content

“இதயமில்லாத சிறிலங்காவின் ஆட்சியை நாம் புறக்கணிக்க வேண்டும்” - த ரைம்ஸ்


Recommended Posts

“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது.

“2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனால், ஐரொப்பிய ஒன்றியத்திடன் இருந்து வருடத்துக்கு குறைந்தது $2.9 பில்லியனைச் சிறிலங்கா சம்பாதிக்கிறது. இதில் பிரித்தானியாவின் கணக்கே கூடியது”. என மேலும் த ரைம்ஸ் பத்திரிகையில், ஜெறெமி பேஜ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இல்லாமல், "பிரித்தானியாவானது சிறிலங்காவின் சுற்றுலாத் தொழிலையும் கட்டியெழுப்பியுள்ளது. சிறிலங்காவுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களில் 18.5 விகிதமானோர் பிரித்தானியர்கள். பலர் அங்கு முக்கியமாக தெற்கு கோல் நகரத்தைச் சுற்றி வீட்டுச் சொத்துகளும் வைத்திருக்கிறார்கள்.”

“அதனால், கொள்வனவு சேய்பவர்களும், சுற்றுலாப் பயணிகளும் நோக்கும் கேள்வியானது: அவர்கள் தொடர்ந்து சிறிலங்காவின் ஆடை மற்றும் சுற்றுலாத் தொழில்களை ஆதரிப்பதா? என்பதுதான். துக்கத்துடன், இதற்கு பதில் இல்லை என்றே இருக்க வேண்டும்.” என மேலும் த ரைம்ஸ் கூறியுள்ளது.

http://www.pathivu.com/news/1915/54//d,view.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.