Jump to content

அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி

மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி

மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி

அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க

அருகதை சிறிதும் எனக்கோ இல்லை

தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி

இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி

கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி

கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி

வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி

உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய

உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி

வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில்

அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி

சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி

"பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி

இரவென்றும் பகலென்றும் பாராது மருத்துவம் செய்த

,மரணித்த மருத்துவர் தாதியர் பணியினருக்கு அஞ்சலி

அஞ்சலி சொல்ல தகுதியற்ற புலம் பெயர் அகதி நான்

வன்னி வாழ்ந்த மக்களுக்கு சொல்லும் கண்ணீர் அஞ்சலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மக்களால் நிரம்பிக்கிடந்த எங்கள் வன்னி மண் இப்பொழுது எங்கள் அஞ்சலிகளால் மட்டுமே நிறைந்து கிடக்கிறது அந்தளவுக்கு இனப்படுகொலை நிகழ்ந்தேறி விட்டது இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கவிதைக்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலியோ டாறாத கண்ணீரைக் காணிக்கையாய்

வெஞ்சமரில் வேல்பட்டு வீழ்ந்த வீரன்

கொஞ்சு மன்னை தனைநினைந்து உருகுமாறே

மிஞ்சுகவி தந்தெமக்கு துயர்பகிர்ந்த தமிழமுதே

துஞ்சலிலே தூயதொரு வித்தான தூமணிகள்

வஞ்சக ரழித்ததனால் வருந்தாதே சோதரியே!

தஞ்சமென வந்தாலும் தாயை மறக்கவில்லை

பஞ்சம் பட்டினியால் பரிதவித்த நிலையறிந்தீர்

அஞ்சிநாம் வந்தாலும் ஆதரவு என்றுமுண்டு

நெஞ்சார்ந்த தமிழ்த்தலைவ னழியவில்லை யெம்மிடையே

விஞ்சுபுக ழீழமது விரைவினிலே வழிசமைத்து

ஆஞ்சநேய பலத்துடனே அரசாள்வார் ஆணையிதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேய பலத்துடனே அரசாள்வார் ஆணையிதே!!...........

..ஆஞ்சநேய பலமுடன் .....மீண்டும் ஆளவேண்டும் நம் தலைவன். நன்றி கவிக்குமரா .

தேன் தமிழின் சுவை கண்டு கவி நயம் கண்டு ...கானகத்து மயிலானே..அழகு தமிழ் அமுதம் போல் இருந்தது

.......கவியே வாழ்க நின் கவிப்புலமை வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலியால் நெஞ்சமதை கரைய வைத்த நிலாமதியக்காவே,

உணர்வால் ஒன்றித்து உரிமையை வென்றிடுவோம்.

பேரர்களுடன் சாகிறேன் என்ற பாட்டியரே

உங்கள் உடல் வேகியிராது

என்பது அறிவோம் நாம்

உரிமை வேண்டுமென்று

உங்களது பிள்ளைகளை

களத்திற் கனுப்பிவிட்டு

காந்திருந்த வீரமறத்தியரே

விடியும் ஒருநாளில்

அடையும் உங்கள் ஆத்மா சாந்தி !

விண்ணதிரும் படையமைத்து

வெளியிருந்து நாம் நடந்து

மண் மீட்டு எம் மானம் காப்போம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மண்ணில் உயிர் நீத்த எம் போரளிகள், தளபதிகள், எம் உறவுகள் ஆத்தம சாந்திக்கும், அவர்தம் இலட்சியம் நிறைவேற நாம் திடசங்கற்பம் எடுப்பதுடன், உங்களுடன் பென்மன் தனது கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான்.

தமிழர் தாகம் - ஈழம்

பென்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.