Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நித்தியா கவிதைகள்


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

கவிதை சூப்பர்...

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்

காதல..உன் வருகைக்காய்

இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்

காதலா..உன்னவளின் வருகைக்காய் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... :lol:
Link to comment
Share on other sites

ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை,

எனக்குத்தோணி இருக்கே :lol:

Link to comment
Share on other sites

                                                                                           என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... :lol:
Link to comment
Share on other sites

காத்திருப்பு கவிதையின் சோகமான வரிகளும் அதனுடன் இணைந்த மெல்லிய இசையும் மனதை வருடும் அதேவேளை கேட்பவர்களை சோகத்தில் அழுத்தவும் செய்கின்றது. அந்த கவிதை முடிந்த பின்பும் 15 செக்கன்களுக்கு மேல் ஒலிக்கும் நமக்கு மிக மிக பரிச்சயமான கண்ணே கலைமானே பாடலின் இசை, கவிதையின் சோகமான கருப்பொருளை உணரவும் கவிதையை மீண்டும் ஒரு முறை சிந்திக்கவும் உதவுகின்றது.

அந்த அமரத்துவம் அடையாத கண்ணதாசன் வரிகளை இந்த கவிதையுடன் இணைந்து நினைத்து பார்த்தல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். (இது இளையராஜாவுடன் இணைந்து கண்ணதாசனின் கடைசி திரையிசை பாடல் என்று இணையத்தில் படித்தேன்)

படம்: மூன்றாம் பிறை

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

இந்த இணைப்பில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கலாம் ....

http://web.music.coolgoose.com/music/song....d=192726

Link to comment
Share on other sites

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்

காதலா, உன் வருகைக்காய்

இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்

காதலா, உன்னவளின் வருகைக்காய்

ம் இந்த வரிகள் நன்றாக தான் இருக்கின்றன. அதுவும் பாடலில் ஒரு பெருமூச்சை தொடர்ந்து இந்த வரிகள் வரும் போது கவிதையில் வரும் காதலியின் ஏக்கத்தை சிறப்பாக வெளிக்காட்டுகின்றது.

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்தவை என்ற வலைப்பூவில் இருக்க வேண்டியது போல இருக்கே. :wink:

நன்றி மதன் அண்ணா பாடலுக்கும் விளக்கத்துக்கும் :P

கே ஜே ஜேசுதாஸ் பாடிய அன்புள்ள அப்பா திரைப்பட பாடலான மரகதவல்லிக்கு மணக்கோலம் ...................என்ற பாடலை எங்காவது தரவிறக்க முடியுமா? :?:

Link to comment
Share on other sites

எல்லாமாக நீ எனக்கு

என்னவாக நான் உனக்கு?

என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.

[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]எல்லாமாக நீ எனக்கு

நீ

இமயமாக இருந்தால்- நான்

உன் மார்பு தொட்டுப் போகும்

கார் முகிலாக இருப்பேன்..

நீ

காற்றாக இருந்தால் - நான்

உன் கன்னம் தொட்டுப் பேசும்

பூவாக இருப்பேன்..

நீ

கண்ணாக இருந்தால் - நான்

உன்னைக் கட்டிக் காக்கும்

இமையாக இருப்பேன்..

நீ

உடலாக இருந்தால் - என்

உயிர் தந்து காக்கும் ஒரு

பிறவியாக இருப்பேன்..

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

Link to comment
Share on other sites

நீ கண்களாக இருந்தால்

நான் உனைக் கட்டிக்காக்கும்

இமையாக இருப்பேன்

சூப்பர் கவிதை. அவரின் வாசிப்பும் வாசிக்கும் போதுள்ள வெட்கத்துடன் கூடிய சிரிப்பும் சூப்பர். வெட்கம் வாசிப்பிலேயே தெரியுது. இசையும் அருமையாக இருக்கு. மேலும் தொடர வாழ்த்துக்கள் நித்தியாக்கா. :P :P

Link to comment
Share on other sites

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... :P

Link to comment
Share on other sites

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... :P

தொடர்ந்து வாசிக்க சொல்லுங்க வாசிப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நித்தியா

மேலே சொன்ன வசனங்களின் பாணியில் ஒரு பாடல் இருக்கிறதல்லவா?

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

இது நியாயமான கேள்வி :lol:

Link to comment
Share on other sites

நித்தியாவின் இன்னொரு கவிதை.

[url=http://www.vannithendral.net/soundclips/suvaasam.mp3]சுவாசம்

காதலை மறப்பது எவ்வளவு கடினம் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

எல்லாமாக நீ எனக்கு

என்னவாக நான் உனக்கு?

என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.

[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]எல்லாமாக நீ எனக்கு

தான் எப்படியெல்லாம் காதலனை தாக்குவேன் என்று சொல்லி நீ என்ன செய்வாய் என்று கேக்கும் கவிதை குரல் வடிவில் கேட்க நல்லாயிருக்கின்றது.

Link to comment
Share on other sites

இது நியாயமான கேள்வி :lol:

அது தான் காதலன் தான் கவிதையில் காதலிக்கு சொந்தமான இமயமாகவும் காற்றாகவும் கண்ணாகவும் உடலாகவும் இருக்கின்றானே. இதைவிட வேறு என்ன வேண்டும் குளக்ஸ் :P

Link to comment
Share on other sites

[

அது தான் காதலன் தான் கவிதையில் காதலிக்கு சொந்தமான இமயமாகவும் காற்றாகவும் கண்ணாகவும் உடலாகவும் இருக்கின்றானே. இதைவிட வேறு என்ன வேண்டும் குளக்ஸ் :P

அப்பிடியா நித்தியா சொல்லி இருக்கங்க மதன் வடிவா கேட்டு வாசியுங்க

Link to comment
Share on other sites

காதலா

kathalaa_136.jpg

ஏய் காதலா

நில்! ஏன் ஓடுகிறாய்?

திரும்பிப் பார்க்காமல் -என்னை

தொட்டுப் பார்க்காமல்

நான் தொடத் தகாதவள் அல்ல

நுனிவிரல் தீண்டிப்பார் -என்

தேகமும் சூடாய் இருக்கும்..

தோல் உரித்துப்பார் -எனக்கும்

இரத்தம் வரும்..

ஓர் சூடு போட்டுப்பார் -என்

உடலும் கருகும்..

அழவைத்துப்பார் -என்

கண்ணீரிலும் உப்புக் கரிக்கும்..

அணுக விரும்பவில்லை என்றால்

தூர நின்று புன்னகைத்துப் பார் -என்

புன்னகையிலும் மனிதம் இருக்கும்

நான் வேற்றுலகக் காரியில்லை -உன்னால்

வேறுபடுத்தப்பட்டவள்..

வெறுப்புடன்

நித்தியா

Link to comment
Share on other sites

என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை :lol:

கவிதை என்ன காதலனிலை வெறுப்பா வருதா இல்லை........வெறுப்பென்று பேச்சிலும் உள்ளத்தில் பாசத்துடனும் வருதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
    • ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.
    • விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..! பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்… பால பாடங்களில்… பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு…! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை… ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை…. தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்… புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் இன்று அந்நியரின் அயோக்கியரின் அனாதை விந்துகளின் அநியாயப் பாய்ச்சலில் சரிகிறார் மங்கையர்..! தூக்கிலும் கிணற்றிலும் சாவுகள்..! இது என்ன இன அழிப்பா சுய இருப்பழிப்பா.. சிந்தியுங்கள்..! முதிர் கன்னிகளாய் இளம் கன்னிகளாய் பள்ளிச் சிறுமிகளாய் பேரிளம் பெண்களாய் எல்லா நிலையிலும் அவர் வாழ்வு சீரழிவு..! அன்று அண்ணன் வழியில் அடைந்த ஒழுக்கம் இன்று அந்நியர் வழியில் அடைகிறது சாவு..! இப்படியே போனால் புவிதனில்.. எங்கே வாழும் எம் தமிழினம்..???! முடிவு தான் என்ன..????! சத்தமின்றி யுத்தமின்றி தமிழினம் தானே அழியும்..!   2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம்.  https://kuruvikal.wordpress.com/page/21/
    • Published By: VISHNU 02 APR, 2023 | 03:57 PM   கணினி குற்றங்களை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.    சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/151955
    • வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்   Published By: NANTHINI 02 APR, 2023 | 04:08 PM   வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.   இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.  இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.  அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.  இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.   அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை.  ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.  அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/151954
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.