Jump to content

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார்

[24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை]

இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும்.

இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது; அனுமதி வழங்க வேண் டும் என்றும் செயலாளர் நாயகம் வற்புறுத்தினார்.

இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நேற்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிற் பகல் 4 மணிக்கு சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் கண்டி குயீன்ஸ் ஹோட் டலில் நேற்றிரவு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.

அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள், தகவல்கள் வருமாறு:

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்க ளும் அமைதியான வாழ்க்கையை முன் னெடுக்க அரசு உதவ வேண்டும். எல்லா மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையின மக்களின் பிரச் சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். அவர்கள் மத்தியில் நல் லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண் டும். அவ்வாறு செய்யப்பட வில்லையெனில் இந்த நாட்டில் முந்திய நிலையேமீண்டும் உருவாகும் என்பதனை சகலரும் மனதில் கொள்ளவேண்டும்.

அகதி முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச தொண் டர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது. அந்த அமைப் புக்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேவை கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நிறைவேற்றக் கூடிய வளங்கள் போதியளவு அரசிடம் இல்லை.

மக்களின் தேவைக்கும் அவர்களுக்கு என்ன உதவி வழங்க வேண்டும் என்பதற் கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது.

உணவு, மருந்து, குடிதண்ணீர், அடிப் படை சுகாதார வசதி ஆகியன போதிய அளவு கிடைக்கவில்லை என மக்கள் என் னிடம் முறையிட்டனர்.

போதுமான உதவிகள் இல்லை

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை இலங்கை அரசு ஒரளவுதான் பூர்தி செய்து வருகின்றது. அந்த உதவி போதுமானதாக இல்லை என்பதை அவதானிப்தேன்.

முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 80 சதவீதமானவர்களை இவ்வருட முடிவுக்குள் அவர்களது செõந்த இடங்களில் மீள் குடியேற்றி விடுவோம் என்று இலங்கை அரசு என்னிடம் தெரிவித்துள்ளது.

மக்களின் மீள்குடியமர்வுக்கு சர்வதேச உதவி தேவை என ஐ.நா கருதுகிறது. மோதல் நடந்த பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தமது சர்வதேச பங்காளர்கள் மூலம் உதவுவோம்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை விமானம்மூலம் சென்று பார்வையிட்டேன். பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதையிட்டு கவலை அடைகிறேன்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தேன். அவர்களுக்கு உரிய புனர்வாழ்வுத் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நா. அமைப்புக்கள் தயாராகவுள்ளன. ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை அந்த அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவற்றை அகற்ற ஐ.நா. தனது உதவிகளை வழங்கும்.

அகதிகளின் கல்வி நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக உள்ளது என்று தெரிவித்தார் பான் கீ மூன்.

நேற்றிரவு 11.30 மணிக்கு ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியூயோர்க் திரும்பினார்.

நன்றி உதயன்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.