Jump to content

நட்புடன் ஒரு தாய்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெய்தியையும் வெளியிடும் முன், தற்போது இலங்கையில் உள்ள ஓட்டு மொத்த உண்மையான தமிழர், இயக்கம் எஞ்சியிருந்தால் பற்றி ஒருதடவை சிந்தியுங்கோ. அரசும் அரச கூட்டுபடையும் இயக்கம் முற்றாக இல்லை என்பதை ஏன் நாமும் ஆமாம் போட்டு உலகை தமிழராக நியாயம் நீதி கோரி தக்க ஆதாரங்களை திரட்டி விரைந்து செயட்படகூடாது. எல்லாம் முடிந்து விட்டது என்று கணக்கு காட்னவை இப்போ திடீரெந பத்தாயிர கணக்கு சொல்லுது????

நான் தமிழச்சியாய் தமிழுணர்வு இருப்பதால் கடந்த ஏழு மாதமாக என்கல்வியை, குடும்ப பராமரிப்பை தொடரமுடியாமல் அவதிபடுகிறேன். என்னால் முடிந்தவரை எனைசுற்றியுள்ள நம்மின, வேற்றின மக்களுக்கு நேற்று இன்று நாளை போல் தமிழர் நிலையை விளங்கபடுதுகிறேன். அவர்கள் ஆரம்பத்தில் என்னைப்பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது அனால் அவர்களே பின் நான் கூறியவை அதாரபூர்வமாக வேற்றின பத்திரிகைகளில் வரும்போது எனக்கு கவலை பட்டு கடிதம் எழுதுகிறார்கள். அனாலும் அவர்கள் என்னையும் என்குடும்பம் பாதிக்கப்பட்டதா என்பதில் தான் அதிகம் பார்க்கிறார்கள். மேட்கதயர்கள் பொதுவாக தான் தனது குடும்பம் என்பதில் அதிகம் கவனமானவர்கள். எம்மைபோல் அல்ல. இப்போதுள்ள ஐரோப்பிய சந்தாதிகள் போர்வாடை இன்றி வளர்வதால் (நம்மவரை சொல்லவில்லை) நாம் ஏன் எங்கோ நடப்பதுக்காக எம்வாழ்வை தொலைக்கிறோம் என்றும் நினைக்கிறார்கள். சில சமயம் விரக்தியே மிஞ்சுகிறது.

கடந்த சில நாட்களாக இன்டர் நெட் பார்த்து வெறுத்துப்போய் எழுதுகிறேன்.

எத்தனை வியாபாரம், எத்தனை விதண்டாவாதம், எத்தனை புலனாய்வுகள். இப்போ இவை தேவைதானா? என்னமோ மீண்டும் குண்டு சட்டிக்குள் குதிரையே! என்னையும்சேர்த்து.

பிற்குறிப்பு:

முன்பு ஒரு ஆங்கில இணையத்துக்கு கருத்து எழுதுங்கள் என்று யாழ் இணையத்தில் வந்ததை பார்த்து அந்த பக்கத்துக்கு சென்று பக்கத்திலுள்ள கருத்துக்களை வாசித்தபோது ஒருவர் எழுதியிருந்தார், யாழ் இணையத்தில் கருத்தெளுத சொன்னதால்தான் இவளவு கருத்துக்கள் வந்திருக்குது என்று. இந்த நபர் யாராயினும் தமிழ் வசிக்கதேரிந்தவர் என்பது் தெளிவாகிறது. ஆகவே மிகுதியை புரிந்துகொள்ளுங்கள்.

நட்புடன் ஒரு தாய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு ..........

.மேலுள்ள பதிவை யாழ் வாசகி ஒருவர் பதிந்து விடும்படி இ மெயில் மூலம் கேடார் அதனால்இதை பதிந்தேன். விரும்பியவார்கள் கருத்து எழுதினால் அவர் வாசிப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளனென்பவன் தனது இனத்தினது உண்மை நிலைகண்டு, அது எழுச்சியாயினும் சரி வீழ்ச்சியாயினும் சரி சீர்தூக்கிப் பார்த்து, தனது இனத்தினது சுய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் செய்திகளை எடுத்து வருவதே பொருத்தமாகும். இது "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல்" இருக்கிறது. சில ஊடகங்களது செயற்பாடு. அதனை அவசரமாகக் காவிவருவதும் இதுபோன்றதே. இறுதி நாட்களில் வன்னியின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்று சாட்சிகளே இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளது. இருக்கின்ற முக்கிய சாட்சிகளை அழிக்கும் அல்லது செயலற்றதாக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது.தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர்கள் தொடர்பாக ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் செய்தோமா? இவர்களை விடுவிக்க என்ன செய்யலாம். சிறிலங்காவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலையே இப்படியாயின், சாதாரண மக்களது நிலை என்ன? நாம் வாழும் நாடுகளில் உள்ள, எமது பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பான கோரிக்கைகளை அனுப்புவது கூட அவசியமானது.

நாங்கள் தற்போது என்ன தேவையோ அதனை நாம் செய்வதே எம்மினம் விடிவதற்கானதொரு வழியாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.