Jump to content

தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்


Recommended Posts

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றேன். சிங்கள கடும் போக்காளர் எஸ். எல். குணசேகர புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள அந்நூலின் அறிமுக விழாவிற்கு சிங்கள தேசத்தின் ஆங்கிலம் பேசும் மேலாண்மையாளர்களில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். கூட்டம் முடிந்ததும் இவர்களுள் எனக்குத் தெரிந்த ஒருசிலருடன் நாட்டு நடப்புகளைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு மிகவும் உறுதியாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தனர். ~கருணா சிறிலங்கா படையினரோடு இணைந்திருக்கும் வரை விடுதலைப் புலிகள் கடைசிவரை போருக்கு வரமாட்டார்கள்| என அந்த சிங்கள பௌத்த மேலாண்மையாளர் அறுதியிட்டுக் கூறினார். இதன் காரணமாகவே சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகாவும் அமைதிப் பேச்சுக்களை தொடங்காமல் இழுத்தடித்து வருகிறார் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த விடயத்தை அடுத்தடுத்த நாட்களில் கொழும்பிலுள்ள அரசுக்கு நெருக்கமான சில விடயமறிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். மட்டக்களப்பில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அல்லது அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினால் புலிகளுடைய கவனம் எல்லாம் கிழக்கை சரிப்படுத்துவதிலேயே திசை திருப்பப்படும் எனவும், இதன் காரணமாக அவர்கள் மீண்டும் போரில் ஈடுபடுவதற்கான அரசியல் மற்றும் படைத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும் எனவும் அரச தரப்பில் சிலர் இன்னும் நம்புகின்றனர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமன்றி மேற்படி சிங்கள மேலாண்மையாளர் என்னிடம் கூறிய கருத்தும் சந்திரிகா தரப்பில் உண்மையாகவே நிலவுகின்றது என்பதையும் அறியக்கூடியதாயிற்று.

சுருக்கமாகச் சொல்லப்போனால் தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனமுரண்பாட்டை தீர்ப்பது தவிர்ந்த ஏனைய வழிமுறைகளையே சிங்கள தேசத்திலுள்ள பெரும்பான்மையானவர்கள் இன்னும் நாடுகின்றனர் என்பதையே மேற்படி விடயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. நீதியான அரசியல் தீர்வொன்றைக் கொடுத்தால் தமிழ் மக்களுடைய சிக்கலுக்கும் போருக்கும் முடிவு காணலாம் என்பதை விடுத்து காலத்துக்குக் காலம் எமது உரிமைப் போரட்டத்தை ஒரேயடியாக முறியடிப்பதற்கான வழிவகைகளையே சிறிலங்கா ஆட்சியாளர்களும் சிங்கள மேலாண்மையாளரும் தேடி வந்துள்ளனர்.

கடந்த 15 வருடங்களாக சிங்கள ஊடகத்துறையோடும் தென்னிலங்கையின் கருத்தியலாளர் பலரோடும் பழகியதிலிருந்து இன்னொரு விடயத்தையும் நான் புரிந்துகொண்டிருக்கிறேன். தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதையே கேட்க தயாராய் இருக்கின்றது என்பதே அந்த உண்மை. எனவேதான் ~புலிகளைத் தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறார்கள்|, ~உட்பிரச்சினை காரணமாக புலிகளுக்கு அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது|, ~புலிகளுக்கு வெளிநாட்டுத் தமிழர்களிடம் கடும் எதிர்ப்பு இருக்கிறது|, ~புலிகள் தம்மைச் சுட்டுவிடுவார்கள் என்று அஞ்சியே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்| போன்ற கருத்துக்களையே சிங்கள மேலாண்மையாளர் - ஏன்? சிங்களப் பொதுமக்கள் கூட - கேட்க விரும்புகின்றார்கள். இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கின்ற, விரித்து விளக்குகின்ற தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய நியாயமான அரசியல் உரிமையை வழங்காமையாலேயே விடுதலைப் போர் நடைபெறுகிறது, எனவே அதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை என எழும் தமிழ் குரல்களை கேட்கச் சிங்கள தேசம் இன்றுவரை தயாராக இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை இந்த உண்மையை காண மறுத்து எமது உரிமைப் போரை நசுக்க அரசியல் தீர்வு தவிர்ந்த வேறு வழிவகைகளை கண்டுபிடிப்பதிலும் அவற்றில் பெருமுதலீடு செய்வதிலுமே சிங்கள தேசம் நாட்டம் காட்டி வருகின்றது. தென்னிலங்கையில் காணப்படும் இந்த அடிப்படை உளவியல் பாங்கை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் சிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை நன்றாகப் புரிய வைப்பதற்கான முயற்சிகளை எடுத்தால் எல்லாம் சரிவந்துவிடும் என்ற மாயையை நம்பி நாம் மீண்டும் மீண்டும் மோசம் போய்க் கொண்டிருப்போம்.

சிங்கள தேசத்திற்கு எமது பிரச்சினையை விளக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் புலிகள் இப்போது இறங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் நல்லது. ஆனால் சரிவராது.

எமது பிரச்சினையைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தான் விரும்பியதை மட்டுமே கேட்கும். இதுவே உண்மை.

எமது போராட்டத்தை நசுக்க சிங்கள தேசம் காலத்துக்குக் காலம் நம்பிய அரசியல் தீர்வு அல்லாத மற்ற வழிவகைகள் சிலவற்றை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். அதனடிப்படையில் இப்போது சிங்கள மேலாண்மையாளர் எமது பிரச்சினையை அணுகுவதற்கு கையாளும் அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிவகைகளை புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

எண்பதுகளில் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டை திட்டமிடப்பட்ட இராணுவக் குடியேற்றங்கள் மூலமாக படிப்படியாகச் சிதைத்து விட்டால் எமது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு சிங்கள மேலாண்மையாளர் பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். மணலாறு, மூதூர் தெற்கு, மட்டக்களப்பில் வடமுனை என சிறிலங்கா அரசும் படைகளுமாக இணைந்து பல சிங்களக் குடியேற்றங்களையும் அவற்றை ஒட்டிய இராணுவ நிலைகளையும் ஏற்படுத்தலாயினர். இந்தத் திட்டங்கள் பற்றிய பல முக்கியமான விபரங்களை கடும் சிங்களப் போக்காளரான மாலிங்க குணரட்ன குழச ய ளுழஎநசநபைn ளுவயவந என்ற நூலில் எழுதியுள்ளார்.

இதற்கடுத்ததாக தமிழகத்தில் எமது விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்துவிட்டால் அல்லது இல்லாதொழித்துவிட்டால் எமது உரிமைப் போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடலாம் என சிங்கள மேலாண்மையாளர்கள் திடமாக நம்பினர். இதுபற்றி கொழும்பிலிருந்து வரும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களில் அந்நேரத்தில் தொடர்ச்சியாக கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும், கேலிச் சித்திரங்களும் வெளிவந்தவண்ணமிருந்தன. தமிழகத்தில் எமது உரிமைப் போராட்ட நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்காக சிறிலங்கா அரசு அப்போது பல திட்டங்களைத் தீட்டியது. இதற்கு அடித்தளமாக ஜேர்மனியில் சிறிலங்காவின் தூதுவராக இருந்த திஸ்ஸ ஜயக்கொடி சென்னைக்குக் அனுப்பப்பட்டார். இந்தியாவிற்குத் தூதுவராகவேண்டிய தகமையிலுள்ள ஒரு மூத்த வெளிநாட்டலுவல்கள் அதிகாரி ஏன் சென்னையிலுள்ள துணைத் தூதரகத்திற்கு பொறுப்பாக அனுப்பப்படுகின்றார் என்ற கேள்வி அன்று பலருக்கும் தோன்றிற்று. திஸ்ஸ ஜயக்கொடியின் புலனாய்வுப் பின்னணி பலருக்கும் அந்நேரத்தில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

தமிழீழ விடுதலை இயக்கங்களோடு இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியப் புலனாய்வுத் துறையினருக்கும் தமிழ்ப் போராளிகளுக்குமிடையில் சந்தேகத்தையும் முரண்பாட்டையும் தூண்டிவிடுவதே ஜெயக்கொடியின் நோக்கமாக இருந்தது. இதுவிடயத்தில் அவர் ஓரிரு வெற்றிகளைக் கண்டார். அது மட்டுமன்றி அப்போது சென்னையில் தமிழீழ விடுதலை இயக்கங்களினுடைய செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொறுப்பாகவும் இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வுத்துறையான ~றோ|வின் தென்பிராந்திய செயற்பாடுகளுக்கு தலைமை அதிகாரியாகவும் இருந்த உன்னிகிருஷ்ணனை கையாளும் வேலைக்காகவும் திஸ்ஸ ஜெயக்கொடி சென்னைக்கு அனுப்பப்பட்டார் என நம்பப்படுகிறது. (உன்னிகிருஷ்ணன் அப்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஊஐயு இற்கு வேலை செய்து வந்ததும், 1985இல் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டதும் பலரும் அறிந்த செய்தி.)

திஸ்ஸ ஜெயக்கொடி சென்னைவந்து தாஜ் கொரமன்டல் ஹோட்டலில் முகாமடித்து (இவர் தனது அதிகாரப+ர்வ வாசஸ்தலத்தில் தங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

வேலை தொடங்கிய அதே காலப்பகுதியில் சிறிலங்கா தேசியப் புலனாய்வுத் துறை தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு எதிராக தமிழக மக்கள், தமிழகக் காவல் துறையினர் ஆகியோரை திசைதிருப்பும் நோக்கில் ஒரு திட்டத்தை வகுத்தது. சென்னையில் சில முக்கியமான பகுதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்து பழியை தமிழ் இயக்கங்களில் தலையில் போடுவதே அந்தத் திட்டமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் காவல்துறையினரும் தமிழ் இயக்கங்களை வெறுத்து அவற்றை தமிழக மண்ணிலிருந்து துரத்திவிடுவார்கள். தமிழகத்தில் பின்தளம் இல்லாவிட்டால் எமது விடுதலை இயக்கங்களை சிறிலங்கா இராணுவம் மிகச் சுலபமாக நசுக்கி ஒழித்துவிடுமென அப்போதிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையும் சிங்கள மேலாண்மையாளரும் திடமாக நம்பினர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா தேசியப் புலனாய்வு அமைப்பில் அப்போது வேலை செய்துகொண்டிருந்த தமிழர் ஒருவர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். தமிழகத்தின் தலைநகரில் அவரது முயற்சியில் ஒருசில குண்டுகள் வெடித்தன. ஆனால் தமிழகக் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நபர் சிறைமீண்ட பின்னர் மலையக அரசியலில் இறங்கி தன் சுயமுன்னேற்றத்திற்கு தற்போது ~ஆவன| செய்துவருகிறார்.

இப்படியாக எமது உரிமைப் போராட்டத்தின் பின்தளத்தை தமிழகத்தில் சிதைப்பதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனினும் அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழகத்திலிருந்து இயக்கங்களை முற்றாக வெளியேற்றுமாறு நேரடியாகவே டெல்லியை அழுத்தி வந்தனர். இரண்டாம் ஈழப்போர் 1990ஆம் ஆண்டு தொடங்கியபோது தமிழ் நாட்டில் புலிகள் இயங்க முடியாவிட்டால் அவர்களால் ஓரிரு மாதங்களுக்கு மேல் போரிட முடியாது என சிறிலங்கா படைத்தளபதிகளும் பல சிங்கள மேலாண்மைக் கோட்பாட்டாளர்களும் திட்டவட்டமாக நம்பினர். இந்த அடிப்படையிலேயே டெல்லிக்கு அப்போது கொழும்பிலிருந்து பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ரஜீவ் காந்தியினுடைய கொலையின் பின்னர் புலிகள் தமிழகத்திலோ இந்தியாவிலோ இனிக் கால் பதிக்கவே முடியாது என்ற நிலை தோன்றிய போது தமிழரின் உரிமைப்போரை நசுக்கி முற்றாக வென்றுவிட்டதைப் போன்ற உணர்வில் சிங்கள மேலாண்மையாளர்களும் சிறிலங்காப் படை அதிகாரிகளும் அன்று பேசியவற்றையும் எழுதியவற்றையும் பலர் மறந்துவிட்டார்கள். ஆனால் தமிழகத்திலிருந்து முற்றாக வெளியேறிய பின்னரே புலிகள் மரபுவழிப் படைவலுவைப் பெற்றனர் என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டி வந்தபோது தமிழருடைய உரிமைப் போரை நசுக்குவதற்கு சிங்கள மேலாண்மையாளர் நம்பியிருந்த இரண்டாவது வழியும் அர்த்தமற்றுப் போனது.

இந்தவேளையில் சோர்ந்திருந்தவர்களுக்கு மாத்தையாவின் வடிவில் ஒரு புதுவழி திறந்தது. 1993ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினை தென்னிலங்கையில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு முக்கியமான சிறிலங்கா அரச திட்டமிடலாளர் ஒருவர் ஆணித்தரமாக ஒரு கருத்தை என்னிடம் தெரிவித்தார். 'புலிகளில் இரண்டாவது தலைமைப் பதவியை வகிப்பவர் மாத்தையா. இந்தியா செல்லாமல் நீண்டகாலம் களத்திலே நின்று வேலை செய்தவர். இவருடைய பிரச்சினை காரணமாக புலிகள் இயக்கம் விரைவில் சிதைந்து போவது எந்தவகையிலும் தவிர்க்கமுடியாதது" என்பதே அவரது கூற்று. இதுபற்றி நான் தெரிவித்த மாற்றுக் கருத்துக்களை அவர் செவிமடுக்கவில்லை. மாறாக தனது கூற்றையே வலியுறுத்திக் கொண்டிருந்தார். 'இதில் நான் உங்களோடு வாதிடவில்லை. இன்னும் ஒருசில மாதங்களில் புலிகளின் மாவீரர் நாள் வருகிறது. அதையொட்டி அவர்கள் ஏதாவது தாக்குதலில் ஈடுபடுவார்கள். அது சிறியளவில் இருந்தாலோ அல்லது நடக்காவிட்டாலோ நீங்கள் கூறுவது சரி என நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பெரியளவில் ஏதாவது நடந்துவிட்டால் நான் கூறுவது சரி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என நான் அவரிடம் கூறிச் சென்றேன். புலிகளின் ப+நகரித் தாக்குதலின் பின்னர் அவரை ஓரிரு முறை நான் சந்தித்தபோதும் அவர் மாத்தையா என்ற பேச்சை எடுக்கவேயில்லை. சிங்கள ஊடகங்களும் சிங்கள மேலாண்மையாளர்களும் அவருடைய கருத்தையே அன்று கொண்டிருந்தார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிடவேண்டும்.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியபோது தமிழரின் உரிமைப் போராட்டத்தை இனி ஒரேயடியாக நசுக்கிவிடலாம் என சிங்கள தேசத்தில் சீன வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். 'எதிரியின் படைகளையும் படைத் தளபாடங்களையும் குறிப்பிடத்தக்களவில் அழிப்பதையே வெற்றியென போரியலாளர் வரைவிலக்கணப்படுத்துகின்றனர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.