Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

தலைவர் இருக்கிறார்/இல்லை என்று கதைத்தே பொழுதைப்போக்கக்கூடாது.

இங்கே ஏற்கனவே கூறப்பட்டது போல தலவரை அழித்துவிட்டோம் என்று அறைகூவல் விடுக்கும் இலங்கை அரசு இனி தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்று பார்க்கவேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் சர்வதேச அரசாங்கங்கள் இந்த விஷயத்தை மறந்துவிடாது இருக்க வைக்கவேண்டும். சரியான அத்தியாவசியத்தேவைகள், வைத்தியத்தேவைகள் அங்கே முகாம்களில் உள்ள மக்களுக்கு கிடைக்கபோராடவேண்டும். மேலும் அரசாங்கத்தின் 2 அல்லது 3 வருட களையெடுப்பு சிந்தனைய முறியடித்து முகம்களில் உள்ள மக்களை துரிதமாக மீளக்குடியமர வைக்கச்செய்ய வேண்டும். இந்தபோராட்டங்களுக்கு தலைமை இல்லை என்பது உதவும். அதனால் தலவர் தான் இருப்பதை இப்போது அறிவிக்காமல் இருக்கலாம். அவர் எபோதும் தமிழரின் உரிமைக்காக போரடியவர். தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களில் இருந்து மீளவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கால அவகாசம் வேண்டும்.

பத்ம நாதன் 19ம் திகதி தலவர் இறக்கவில்லை என்று கூறிவிட்டு, 24ம் திகதி தலைவர் 17ம் திகதியே இறந்துவிட்டார் என்று கூறும் போது உண்மையான செய்தி அவருக்கு 19ம் திகதி கிடக்கமல் இருந்திருக்கலாம்.

ஆனால், கடைசி நேரத்தில் நடேசன் மற்றவர்களை(!) நம்பாது தானே மரீ கொல்வினுடனும் (Times reporter) ரோகான் சந்திரனேருவுடனும் (MP)தானே தொடர்புகளை ஏற்படுத்தி வெள்ளைக்கொடியுடன் வெளியே வர முயற்சித்துள்ளார். அவர் துணைவியார் சிங்களத்தில் இராணுவத்தினருடன் உரையாடியும் அவர்கள் உயிருடன் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இது நம்பவைத்து மோசம் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அவர்கள் வெளியே வந்தால் ஏதும் கூறிவிடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.

நாம் இனி முகாம்களில் உள்ள, மற்றும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை தொண்டு நிறுவனங்களினூடாகவும், சர்வதேச அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் செய்விக்கவேண்டும்.

தலவர் இருக்கிறார்/இல்லை - காலம் அல்லது தலவரே பதில் சொல்லட்டும். காத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”
Link to comment
Share on other sites

முதலில் நாம் செய்ய வேண்டியது - அங்கு முகாம்களில் அவல நிலையில் இருக்கும் மக்களிற்கு உதவுவது!

இரண்டாவது - தெற்கில் வசிக்கும் நம் சொந்தங்களை உடன் வடக்கு கிழக்கிற்க திரும்பிச்சென்று குடியமர வழி சமைப்பது.

முன்றாவது தொடரந்த அரசியல் போராட்டம் மூலம் பாதுகாப்பு வலயம் மற்றும் பலவந்த சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது. இதற்கு நாம் அனைவரும் அரசியற் பேரம் பாராது அனைத்து தமிழ் கட்சிகளையும் (குறிப்பாக தேசிய விடுதலைக்கு அதரவான அனைத்து சக்திகளையும்) ஒன்றினைத்து போராடுவது.

இது நடைபெறுகையில்.....

தெற்கில் காலப்போக்கில் மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தலைதூக்கும். இதற்கு எதிராக இயங்கும் எந்த பேய்களுக்கும் ஆதரவு கொடுத்து போராட வைப்பது. முடிந்தால் ஒரு ஆயுதக்கிளர்ச்சி செய்ய முனையும் சிங்கள போராளிகளுக்கு நம் முழுஆதரவையும் வழங்குவது.

நம்மினத்தின் குருதி ஒருதுளியம் சிந்தாது சிங்கள தேசத்தின் அழிவிற்கு நாம் வழிவகுப்போம்!

இதுவே நம் தலைவனுக்கு நாம் செய்யும் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது - தெற்கில் வசிக்கும் நம் சொந்தங்களை உடன் வடக்கு கிழக்கிற்க திரும்பிச்சென்று குடியமர வழி சமைப்பது.//

புலம்பெயர்ந்த தமிழர்கள்.....????

Link to comment
Share on other sites

புலம் பெயர் சொந்தங்கள் நாடுதிரும்புவது அவர்களின் சுயவிருப்பு! ஆனால் தெற்கில் நம் சொந்தங்களின் இருப்பு தெற்கை பணரீதியாக வளர்ப்பதுடன் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை வழிசமைக்க உதவும். புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களை விட தெற்கில் இருக்கும் நம் சொந்தங்களின் நிதி தேவையை பூர்த்தி செய்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே! ஒரு 5வீதமானவர்களே அங்கு சுயமாக சம்பாதித்து வாழ்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கு தங்குவதில் பிரச்சனை கிடையாது. அனால் புலம் பெயர் நாடுகளில் இருந்து தெற்கிற்கு செல்லும் பணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சென்றால் வடகிழக்கில் தொழில் வாய்புகள் அதிகமாவதுடன் முதலீடுகளும் அதிகமாகும்! நான் தெற்கில் இருப்பவர்கள் வடகிழக்கிற்கு செல்லவேண்டும் என்பதன் முக்கிய காரணி அதவே! அத்துடன் இனிவரும் காலங்களில் தெக்கிலேயே அசம்பாவிதங்கள் நடைபெற சாத்தியம் இருக்கிறது. இது பாதுகாப்பு காராணமாகவும் இருக்கலாம்!

Link to comment
Share on other sites

தலைவர் இருக்கிரார்.. ஒருநாள் அவர் வருவார்.... இதுதான் உண்மை.

அவர் வருவதற்கு ஏற்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும்.

இதுதான் உண்மை நிலவரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்பவையை நம்புதல்

+ அடிக்கடி ஆய்வு எழுதுதல்

+ மற்றவர்களையும் குழப்புதல் = சாத்திரி

எழுத நேரமின்மையால் அதிகம் எழுதமுடியல... வசி , ரதி இவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.

Link to comment
Share on other sites

அந்த சூழ்மிலையை எம்மால் ஏற்படுத்தமுடியாவிட்டால்.. தலைவர் வரவை மட்டுமல்ல. இலங்கையில் தமிழர் இருப்பை கூட உறுதி செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு உதவி வேணும்... சனங்கள் எண்டைக்குத்தான் திருந்துமெண்டு யாராச்சும் சொல்லமுடியுமா???........................

என்ன நிலவன் அண்ணா காமடி பண்ணுறிங்க ஒரு தலைவன் இல்லை ஓராயிரம் தலைவர் வந்தாலும் திருந்தாதுகள் வேணும் என்றால் என்னோடு பந்தயம் கட்டுங்கள் என் உயிருக்கு நான் பந்தயம் கட்டுகிறேன்..........சவால்..........

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன்.

இது என் உணர்வு நிலை சார்ந்தது.

வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன்.

ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது.

தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது

காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது

மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது,

:நிழலி

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன்.

இது என் உணர்வு நிலை சார்ந்தது.

வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன்.

ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது.

தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது

காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது

மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது,

:நிழலி

நிழலி அந்தப்புள்ளியிலிருந்து எல்லோரும் வெளியே வரவேண்டுமென்பதே என்விருப்பம்.. ஆனால் இங்கு பலர் எனது பதிவின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கருத்தெழுதிக்கொண்டிருக்கி

Link to comment
Share on other sites

மன்னிக்கனும் சாத்திரி, நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதற்க்கு மிக கொஞ்ச சந்தர்பங்களே உள்ளன! ஏன் எனில் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் புலிகள் அல்லரே! அது மட்டுமன்றி முன்னாள் போராளிகள், மற்றம் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படையில் பணி புரிந்தோர், வானொலி பத்திரிகையில் பணியாற்றியோர், ஏன் இன்றும் சேரன் சோழன், பாண்டியனில் பணி புரிந்தோர் என்று எல்லாருமே புலிகள் என்ற அடிப்படையில் தான் அடக்கப்படுகின்றனர்.

எனவே அதில் எத்தனை சத வீதம் உண்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கேள்விக்கிடமானதே!

மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

நிதர்சன் நானும் 10000 போராளிகள் என்றே குறிப்பிட்டிருந்தேன்.. புலிகள் என்று குறிப்பிடவில்லை ... வேண்டுமானால் பதிவை திரும்பவும் படிக்கவும்.. நன்றி.

Link to comment
Share on other sites

காவடி தலைவர் இறந்ததை தலைவரே வந்து சொல்ல வேண்டும் என இல்லை அவரோடு இருந்தவர்கள் அதாவது தளபதிகள் வந்து சொல்லலாம் தானே[உ+ம்]ஜெயம்,பானு போன்றவர்கள்.தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சர்வதேச ரீதியில் விரைவான ஓர் தீர்வைப் பெற இத் தளபதிகள் மறைந்து வாழ்ந்தால் ஏன் தலைவர் மறைந்து வாழக் கூடாது அது தான் என் கேள்வி .

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊடக அவியலாளர்களின் அவியல் நேரம் போல..!

யாழ் களம்.. ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவர் நாலா மாடியில.. இவர் வன்னிக்க.. 10,000 பேர் புலியள்.. 15,000 போராளிகள் என்று.. இவர்களே காட்டிக் கொடுப்பாங்க போல இருக்கே..!

ஊடக அவியலாளர்கள் தங்களுக்கு இன்னொரு நபர் மூலம் தெரிந்த விடயத்தை இங்கு சொல்ல அனுமதிக்கக் கூடாது. சரியான ஆதார அடிப்படைகளோடு செய்திகளை பிரசுரிக்க வேண்டுமே தவிர.. அவர் சொன்னார்.. இவர் சொன்னார்.. என்று நானும்.. எனது கற்பனைகளை பதிவாக்க முடியும்..!

யாழ் நிர்வாகம் மக்களைக் குழப்பும் இவ்வகையான ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது நன்று மட்டுமன்றி.. மக்களின் பாதுகாப்பிற்கும் உதவும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாத விதண்டா வாதங்களை விடுத்து தயவு செய்து எம்மவருக்கான அடுத்த கட்டத்தை சிந்தியுங்கள்.

வன்னிபோரின் வெற்றியை சிங்களவன் இன்னும் பெருவீதிகள் தொடக்கம் குச்சொழுங்கை வரைக்கும் தோரணங்கள் கட்டி கொண்டாடுகின்றான்.

ஆனால் நாங்கள் இன்னும் கிணற்று தவளைமாதிரியே குறுகியவட்டத்திற்குள் கத்திக்கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

தலைவரை வீழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகரவேண்டிய தேவை இருக்கிறது. எங்களுடைய தாயக மீட்புப் போராட்டம் தலைவருடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எல்லோருக்குள்ளும் முளைவிட்ட விருட்சம். சற்று ஆடிப்போனோம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை எம்மை உடைத்துவிடலாகாது. எந்தத் தலைவரைப் பின்பற்றினோமோ, எந்தத் தலைவரை நேசித்தோமோ, அந்தத் தலைவர் தன் சிந்தனையின் மூலம் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார். எங்கள் உறவுகளைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணத்தில் மனம் சோர்ந்து உழன்று கொண்டிராது வதை முகாம்களுக்குள் எஞ்சியிருக்கும் எங்களின் உறவுகளைக் காக்க ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும்.
Link to comment
Share on other sites

யாழ் களம்.. ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவர் நாலா மாடியில.. இவர் வன்னிக்க.. 10,000 பேர் புலியள்.. 15,000 போராளிகள் என்று.. இவர்களே காட்டிக் கொடுப்பாங்க போல இருக்கே..!

யாழ் நிர்வாகம் மக்களைக் குழப்பும் இவ்வகையான ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது நன்று மட்டுமன்றி.. மக்களின் பாதுகாப்பிற்கும் உதவும்..! :D

:rolleyes:

உண்மை!

யாழ்கள நிர்வாகிகள் இதை தயவுசெய்து கவனத்தில் எடுங்கள்!

இங்கு கருத்துக்கள் எழுதிய நண்பர்கள் பலரதும் உணர்ச்சிக் கொந்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் வெறும் உணர்ச்சிப் பித்தர்களாகி, வீரவணக்கம் செலுத்துகிறேன் என்றும்,

இல்லை அது எல்லாம் தேவை இல்லை மீண்டும் வருவார் என்றும் உளறித்தள்ளி,

எமக்குள் குழாயடிச் சண்டை நடத்தி, காலவிரயம் செய்யக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழவில்லை.

உறங்குவதற்கும் நேரமில்லை வீணாய் உளறுவதற்கும் இது நேரமில்லை!

புறப்படு தமிழா!! புதியதோர் உலகு செய்வோம்!!!

Link to comment
Share on other sites

நான் ஒரு வலைப் பூவிலே பார்த்தது, தலைப்புடன் ஒன்றியிருப்பதால் இணைக்கிறேன். பிழையாக இருந்தால் பெரிய கத்தியால் ஒரே வெட்ட வெட்டி விடுங்கோ.... :(

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களை பார்த்து பொறுக்க முடியாமல் எழுதுகிறேன். இந்த பேட்டிகள் தாயக ஊடகங்கள் என்று செல்லப்படுபவைக்கும் கொடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். தாயாமோகன் முதலில் CMR ற்கு தான் பேட்டி கொடுத்தார் அதை அவர்கள் வெளியே விடவே இல்லை..

ஆமாம் உங்களிடம் சொல்லிவிட்டுதான் கொடுத்தார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்வதற்கு உங்களுக்கு ஆர்வம். இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது இவர்கள் தலைமை பதிவிக்கு ஆசைப்படுபவர்கள் போல் சந்தேகம் வருகின்றது.

நண்பாகளே உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூருகின்றேன். குர்திஸ்தான் தலைவர் ஒச்சலாடனை துருக்கிய அரசு இன்னுமொரு நாட்டிலிருந்து இராணுவ அதிரடிதாக்குதல் மூலம் துருக்கிக்கு கடத்திச்சென்றது. பத்மநாதன் முதலில் தலைவர் நலமாக இருக்கின்றார் என்றுவிட்டு

பின்பு இறந்தவிட்டார் என்று கூறுகின்றார். முதலில் தலைவர் பாதுகாப்பான இடம் ஒன்றை உருவாக்கிவிட்டு மக்களுக்கு அறிப்பார் என்றார். எந்த ஒரு மனிதனும் சாவுக்கு விதி விலக்கல்ல. ஆனால் இபபோது தலைவர் இறந்திருக்க சந்தர்ப்பமில்லை. இங்குள்ள பலர் ஒச்சலாடனின் நிலை தலைவருக்கும் வரவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்.சாத்திரியார் தமிழினி புதுவை ஆகியோர் சரணடைந்ததாக கூறுகின்றார்.அது உண்மைதான் எல்லோரையும் பாதுகாப்பாக கூட்டிச்செல்வது சாத்தியமில்லை.

இதுவரை ராஜபக்ச எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லவில்லை.

சிரிப்பு மந்திரிகள்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை நீட்டிச் செல்வதற்கு முன்னர் ஒன்றை சிந்தியுங்கள் ...

1) கழிந்து போன ஏழு நாட்களில் நீங்கள் தாயகவிடுதலை மற்றும் எமது மக்கள் நலன் நோக்கி என்ன என்ன செய்தீர்கள் என்பதை பட்டியிலிடுங்கள் ..

2) உங்கள் பட்டியல் நீண்டு காணப்பட்டால் .. அவற்றை தெரியப்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளை இங்கு எழுதுங்கள் ..

3) பட்டியலிட எதுவுமில்லை என்றால், இங்கு எதுவும் வெட்டியாய் எழுதாதீர்கள் இன்னொரு ஏழு நாட்கள் பொறுத்திருங்கள் பின்னர் 1) இலிருந்து ஆரம்பியுங்கள் ...

உங்கள் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்துவிட்டு எழுதுங்கள் ..

Link to comment
Share on other sites

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

நிறுவுதல்களில் நேரத்தை கழிக்காமல் அடுத்த கட்டத்தை எண்ணுவோம். நினைத்துப்பார்க்க முடியாதவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. எஞ்சியவர்களையாவது பாதுகாப்போம்.

.சாத்திரியார் தமிழினி புதுவை ஆகியோர் சரணடைந்ததாக கூறுகின்றார்.அது உண்மைதான் எல்லோரையும் பாதுகாப்பாக கூட்டிச்செல்வது சாத்தியமில்லை.

எல்லோரையும் கூட்டிச்செல்வது சிரமம் என்றால் எல்லோராலும் நம்பப்பட்டவர்கள் நம்பியவர்களுக்குச் செய்தது மோசமல்லவா. இத்தனை காலமும் தங்களை இந்த விடுதலையென்ற தீயுக்கள் ஆயிரமாயிரமாய் அழித்தவர்களும் அதை நம்பிப் பின் சென்றவர்களும் பாதுகாக்கப்பட முடியாதளவுக்கு பலியெடுக்க விட்டது நம் எல்லோரின் துரோகமும்தான்.

Link to comment
Share on other sites

இங்கு கருத்தாடும் அனைவரும் ஆதாரங்களை இழந்து நிற்போரை ஆளுக்கொரு குடும்பத்தை ஆளுக்கொரு குழந்தையை பராமரிப்பீர்களா ? அப்படி மனிதாபிமானப்பணி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

சிதிலமாய்க் கிடக்கும் எங்கள் சிறுவர்கனை பெண்களை மீளவும் புதுவாழ்வு பெறும் வழிகளைத் திறந்து விடுவோம்.

ஆயிரமாயிரமாய் வேண்டாம் ஆளுக்கு ஒருவர் மாதம் பத்து யூரோ பங்களிக்க முடியுமானால் தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன்.

இது என் உணர்வு நிலை சார்ந்தது.

வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன்.

ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது.

தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது

காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது

மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது,

:நிழலி

இதை அனைவருரும் மனதால் ஏறு்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வால் உண்மைகளை ஒத்துக்கொள்வோரால் இலகுவாக விடுபட முடியும்.

இத்தோடு இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறேன். மனிதாபிமானப்பணிகள் செய்ய விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த கட்டத்தை தாண்டட்டும் எமது மக்கள்.

Link to comment
Share on other sites

உறவுகளே யார் இருக்கிறார் யார் இறந்து போனார் என்ற விவாதங்களை

எல்லாம் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு நாம் தமிழர்

எங்களின் நாட்டுக்காகவும் எங்களின் மக்களுக்காகவும் இனியாவது.........

என்ன உருப்படியாக் செய்யப் போகிறோம் என்று சிந்திப்போம்.......

நாங்கள் எங்கள் தலைவரின் மறைவின் உண்மை நிலையை அறிவதில்

முழு நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்க ஏற்கனவே மரண வேதனையில்

வாழ்ந்து கொண்டிருக்கம் எம் உறவகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்து

விடுவார்கள்........ தமிழர்கள் ஆகிய நாங்கள் போனதை திரத்தி பிடிப்பதிலும்

முடிந்ததை விவாதிப்பதிலும் வல்லவர்களாக இருந்து எதிர்கால நிகழ்வுகளை

கோட்டை விட்டவர்கள்...........

எனவே மீண்டும் மீண்டும் ஒரே தப்பை செய்து மற்ரவர்களுக்கு பயனற்ரவர்களாக

வாழாமல் இனி என்றாலும் சிந்தித்து செயல் படுவோம்..........

குறிப்பு: சரணடைந்த போராளிகளைப் பற்றி நாம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளு முன்

நாம் எம் நாட்டுக்காக என்ன செய்தோம் என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்!!!!!

சில மணித் துளிகளை புலத்தில் இருந்து தன் சொந்த உறவுகளுக்காக குரல் கொடுக்காத

துப்புக் கெட்ட சனங்கள் எல்லாம் போராட்டத்தின் இன்றய நிலை பற்றி கதைப்பதும் விவாதிப்பதும் எந்த வகையில் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படும்???

தமிழன் எப்போது தன் சொந்த மொழியையும் தன் சொந்த மண்ணையும் தன்மானத்தையும்

மட்டும் தன் வாழ்க்கையின் சொத்தாக கொள்கிறானோ அன்று விடியும் எம் இனம்......

அது வரை இப்படியான கொடூரங்கள் தான் மிகுதியாக மிஞ்சிக்கிடக்கும்...................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.