Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

  • Replies 141
  • Created
  • Last Reply

"ஃ" எட்டுவோம் என்றிருந்தோம் .... ஆனால் இன்று மீண்டும் "அ" வில் நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்னை வைத்து தான் எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படி என்றால் என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? இனி மேலாவது மற்றவர்களை துரோகி ஆக்காமல் எல்லோருடனும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.

எனக்கு உங்களை தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை...நான் உங்களை குறைகூறவும் இல்லை...பொதுவாக எனது கருத்தை முன்வைத்தேன். தனிப்பட முறையில் ஒருவரை தாக்குவது கருத்துகள விதிகளுக்கு முரணானது. யாரையும் நான் இங்கு துரோகி ஆக்கவில்லை....எனது கருத்துக்கள் எப்போதும் வெளிப்படையானவை ஒளிவு மறைவு அற்றவை...

'தொப்பி உங்களுக்கு அளவு எண்டா போட்டுகொளுங்கோ..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்னமும் இங்கு ஆயுதப் போராட்டக்கனவில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் யாராவது வவுனியா தடுப்பு முகாமில் இருந்தால் அவர்களிடம் சிறிது நேரம் தொடர்பு கொண்டு கதை;து விட்டு இங்கு வந்து கருத்தெழுதுங்கள்..ஏனென்றால் இன்று அங்கிருப்பவர்களிற்கு ஒருவேளை உணவும் ஒதுங்க ஒரு இடமும்மதான் உங்கள் உறவுகளை தேடிப்பிடிக்கமுடியாவிட்டால
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இறந்து விட்டார் என்பது கவலைப் படவேண்டிய விடயமே ஒழிய சோர்வடைய வேண்டிய விடயம் அல்ல. தலைவர் மேல் உள்ள விசுவாசத்தினை அவரின் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை கண்டு பிடிப்பதிலும், அவரினால் நேசிக்கப் பட்ட போராளிகளின் தியாயங்களை போற்றுவதிலும் காட்டுங்கள். அவரால் தொடரப் பட்ட மக்களின் விடுதலைகான பயணத்தினை மேலும் முன்னெடுங்கள்.

தலைவரின் சாவு, அடர் துயர் நிரம்பிய நிகழ்வாக இருக்க வேண்டிய விடயமே தவிர சோர்ந்து போகும் விடயம் அல்ல. அவ்வாறு சோர்வடைந்தால் அது அவரிற்கு காட்டப் படும் உச்ச கட்ட அவமானமாகவே இருக்கும். அத்துடன் அதனைத் தான் எதிரியும் விரும்புவார்கள்

பிரபாகரன் எனும் சகாப்தம், அவரிற்கு பின்னாலும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும். அது தான் அவரிற்காக, இறுதி வரைக்கும் அவருடன் இருந்த பானு அண்ணா, ஜெயம் அண்ணா போன்ற உன்னத தளபதிகளுக்கான குறைந்த பட்ச நன்றிக் கடன்.

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

Link to comment
Share on other sites

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

THE war is not going to end soon,” said Brigadier Udaya Nanayakkara, the Sri Lankan army’s spokesman, last month. “It will take some time to completely eradicate terrorism from the country – we think about two years.”

http://www.newvision.co.ug/D/8/20/683164

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறப்பு தனக்கும் உண்டென்பதை ஒவ்வொரு போராளியும் அறிந்துதான் போராளிகள் ஆனார்கள். அவர்களது ஒவ்வொரு இழப்பும் நிழலி சொன்னது போல அடர்துயர்தானே ஒழிய அதுவே இறுதியான ஓய்வு அல்ல.

மிஞ்சிய 3லட்சம் பேரையும் காக்க எவருக்கும் துணிச்சலில்லை. தங்கள் மடியிலிருந்து 10யூரோ அந்த உயிர்களுக்காக கொடுக்க முடியாதவர்கள் தேசநலன் பேசுவதில் பயனில்லை. வேணுமானால் கருத்துமட்டும் எழுதி தங்களை புனிதர்களாக்கலாம்.

மக்களின் பணத்தில் வெற்றிலைக்கணக்குப் பார்க்க முடியாத வருத்தம் சிலரது கருத்தில் வெளிப்படுகிறது.

வியாபாரிகள் மிஞ்சியிருக்கும் மக்களை காப்பதற்கான வழிகளைத் தேடுவதுதான் அந்தத்தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடன்.

நீங்கள் சொல்லும் பசியை எவ்வவாறு போக்க போகின்றீார்கள்? வவுனியாவில் ள்ள முகாம்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படாத மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவா? அல்லது கையாலகத்தனமாக நீதியை ஆநீதியின் பக்கம் வைத்திருக்கும் நீதவான் ஊடாகவா? நீங்கள் முகாம்களுக்கு புலத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டுமெனில் குறைந்தது 4 பேருக்காவது கையூட்டு வழங்கியே தீரவேண்டும்.

அவர்களும் தமிழர்கள் தான்!

முள்ளிவாய்க்கால் எம் கைகயில் இருக்கும் போதே நாம் அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்தோம்...இன்றும் உதவுகின்றோம். ஆனால் எந்த அமைப்பின் பெயரிலும் உதவ முடியாத நிலை. எமது தொண்டர்் ஒருவர் மதவாச்சியில் வைத்து கனேடிய கடச்சீட்டு வைத்திருந்தார் என்பதால் திருப்பி அனுப்பபட்டார். இருந்தும் வேறு வழிகளில் (மீண்டும் கையூட்டு) உட்சென்று முகாம்களிற்குள் சென்று நிலமையை அறிந்த நாம் ஒரு முகாம் முழுமைக்கு பாரமெடுக்க தயராய் இருந்த போதும் ( கனடாவில் தரோகி ஏன்றும், அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் தேசியவாதிகள் கூறிய போதும்) அந்த வேண்டுகோள் இலங்கை அரசால் மறுதலிக்கப்பட்டது. அது மட்டுமன்றி எதுகும் செய்ய முடியாத கையாலாகத்தனத்துடன் அரசாங்க அதிபர்! இரு சிங்கள அரச அதிபர்களே அகதிமுகாம்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Link to comment
Share on other sites

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

உண்மையான கருத்துக்கள் இவர்கள் எல்லாம் தேவையற்று இந்த செய்தியை மீண்டும் மீண்டும் பதிந்து மக்களின் மனதை மழுங்கடிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு......

கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன்.

பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை.

சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம்.

நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம்.

இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும்

ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன்.

தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.

குளக்காட்டன் அவர்களே நீங்கள் சற்று வித்தியாசமாக ஒரே விடயத்தை சொல்லியிருக்கிறீர்கள்!

எல்லாம் ஒரே சந்தை தான் ஆனால் விற்க்கப்படும் விதம் மட்டுமே வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள்் சொல்லும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கின்றனரா? அதற்க்கு முதல் இந்த தலைப்பில் யார் எது பற்றி விமர்சனத்தை முன் வைத்தனர்? அவர் அவரவர் கருத்தை முன்வைக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஒருவர் பின் ஒருவராக தலைவர் வீரச்சாவு, தலைவர் வீரச்சாவு என்று ஒப்்பாரி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வதற்க:கு பெயர் விமர்சனம் அல்ல.

இவையணைணத்தையும் எமக்கெதிரான பரப்புரைகளில் ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். ஏன் எனில் இன்று கனடாவில் தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெறும் போராட்டத்தில் பங்கு பற்றும் மக்கள் தொகை அதை மேலும் உறுதி செய்யும் என்று நம்புகின்றேன்.

புலிகளின் பின்னடைவு, மக்களின் இழப்பு, போராளிகளின் சரணடைவு இவை அணைத்துவே உண்மையாகவே இருக்கட்டும். இவை அனைத்தையும் தலைவரால் சரி செய்ய முடியும் என்று இன்னும் என்்னை போன்ற பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை பொய் என்று சொல்லுமிவர்களிடம் அடுத்த கட்டம் பற்றிய தெளிவு உண்டா? இன்னும் தலைவரின் கட்டளைக்காக எத்தனையோ ஆயிரம் போராளிகள் காத்திருக்கின்றனர். அவர்களின் மனனதில் எந்த சலனமும் இல்லை. ஒரு மாதம் அல்ல பத்து வருடங்கள் கூட (சரணடைந்தவர்ககள் தவிர) அவர்கள் காத்திருக்கும் உறுதியை கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவை இல்லாது இங்கு இருக்கு செயற்ப்பாட்டாளர்கள் விமர்விப்பதும், ஊடகங்களை விமர்சிப்பதும், அதை விட மக்களின் உணர்வுகளுக்கு அப்பால் அவர்களை விமர்ச்ிப்பதும் எந்த விதத்தில் நியாயமாகும்?

Link to comment
Share on other sites

கட்டுரையில் மறுப்பதற்கு எதுவுமே இல்லை. எம் தேசியத் தலைவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள எம் மனங்கள் மறுக்கின்றது அதன் வெளிப்பாடாக அவருக்கும் அவருடன் வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் நாம் செய்யவேண்டிய கடமையை செய்யாமல் இருக்கின்றோம். எமது வாழ்வுரிமைப் போராட்டம் எமது தலைவரும் தளபதிகளும் அற்ற நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறத

Link to comment
Share on other sites

சரி தலைவர் எங்கோ இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் எத்தனை தளபதிகளையும் போராளிகளையும் இழந்திருக்கிறோம் ஏன் அவர்களுக்குத்தன்னும் எம்மால் ஒரு வீரவணக்கம் செலுத்த முடியவில்லை?

இதற்கு பதிலளித்தால், அதன் பின் இங்குள்ள பூசாரிகளின் இராஜபோக வாழ்வுகள் அஸ்தமனமாகி போய்விடும்!!! ஆகவே ....... இன்னும் ....ம், தளபதிகளும் இருக்கிறார்கள் ......... வன்னியில் 70% கட்டமைப்பு சிதறுறாமல் இருக்கிறது ......

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.

இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.

இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.

இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன்

Link to comment
Share on other sites

நான் இங்கு எழுதிய கருத்தை தனியே ஒரு தலைப்பில் வைக்கலாமா என எண்ணினேன். பின்னர் தனியே ஒரு தலைப்பை தொடங்கி அது கவனிப்பார் அற்று முடங்கி போவதை தவிர்க்கவே இந்த பகுதியில் எழுதினேன்.

எல்லாம் ஒரே சந்தை தான் ஆனால் விற்க்கப்படும் விதம் மட்டுமே வேறுபட்டுள்ளது. இப்போது நீங்கள்் சொல்லும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கின்றனரா? அதற்க்கு முதல் இந்த தலைப்பில் யார் எது பற்றி விமர்சனத்தை முன் வைத்தனர்? அவர் அவரவர் கருத்தை முன்வைக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை மாற்றுக்கருத்தின்றி ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, ஒருவர் பின் ஒருவராக தலைவர் வீரச்சாவு, தலைவர் வீரச்சாவு என்று ஒப்்பாரி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்வதற்க:கு பெயர் விமர்சனம் அல்ல.

தலைவர் வீரச்சாவடைந்து விட்டாரா? இல்லை சூழ் நிலைகாரணமாக தலை மறைவாக இருக்கிறாரா என்ற விடயத்தை பற்றி நான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவும் இல்லை. சொல்ல போவதுமில்லை. அதே போல தலைவருக்கு வீர வணக்கம் செய்வதா? இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் விர வணக்கம் செய்யாது இருப்பதா என்பது அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது. அதை நான் விமர்சனம் என்று கருதவும் இல்லை. அதை தான் விமர்சனம் என்று கருதி மேலே சொன்ன கருத்துக்களை எழுதவும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்வதை 2 வருடம் தள்ளி வைத்து விட்டு இப்போது எது தேவையோ அதை செய்ய ஒன்று பட வேண்டும் என்பதே நல்லதாக இருக்கும் என கருதுகிறேன்.

என் கருத்தின் அடி நாதமே எதை வேறு. அதை புரிந்தவர்கள் எடுத்துகொள்ளலாம் இல்லாதவர்களுக்கு எனக்கு என சொல்வது என்று தெரியவில்லை.

யாருக்கும் துரோகி பட்டம் கொடுப்பதை தவிருங்கள்...... சொல்லும் கருத்தை உள்வாங்கி நல்லதா? கெட்டதா என ஆராய முற்படுங்கள்.

இன்றைய தேவை எமது போராட்டத்தை மாறும் உலக சமன் பாடுகளுக்கு ஏற்ப உலகினை ஆட்டி படைக்கும் சக்திகளுடன் முட்டி மோதாத வகையில் எவ்வாறு எடுத்து செல்வது என்பதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறாரா இல்லலையா என்பது அவரவர் மனப்பக்குவத்திற்கேற்ப நம்பவேண்டிய விடயம்.

நகத்தாலுரிக்கக்கூடிய பனங்கிழங்கை ஆப்பு வைத்துப் பிழக்க வேண்டியதில்லை. தலைவரின் மனைவி பிள்ளைகள் உயிரோடுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இதுபற்றித் தெரியாமல் இராது. அவர்களின் உறவினர்கள் அனைவரும் தமிழர்களே. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் புதைக்கப்படுவதும் அதைப்பார்த்து வாய்பிளந்து தமிழினம் நிற்பதும் அவசியமற்ற விடயங்களாகும். தலைவரின் (தலை) மறைவை நாசூக்காக எடுத்துச் சொல்லிவிட்டு அதுபற்றிய வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து எம் இனமானத்தை இதுவரை காத்த மாவீரர் புகழ் போற்றி போராட்டத்தைப் புதிய பரிமாணங்களில் எடுத்துச் செல்வதே இன்றைய தேவையாகும். தலைவரின் தாகம், மாவீரர்தாகம், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். அதுவே எமது எமது உயிர் மூச்சாகுக.

திசை திருப்ப யாராவது முனைந்தால் அவர்கள் வசப்பட்டுப் போயிருக்கும் தேசியச் சொத்துக்களையிட்டுக் கவனம் செலுத்துக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் பசியை எவ்வவாறு போக்க போகின்றீார்கள்? வவுனியாவில் ள்ள முகாம்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் வழங்கப்படாத மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகவா? அல்லது கையாலகத்தனமாக நீதியை ஆநீதியின் பக்கம் வைத்திருக்கும் நீதவான் ஊடாகவா? நீங்கள் முகாம்களுக்கு புலத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டுமெனில் குறைந்தது 4 பேருக்காவது கையூட்டு வழங்கியே தீரவேண்டும்.

அவர்களும் தமிழர்கள் தான்!

முள்ளிவாய்க்கால் எம் கைகயில் இருக்கும் போதே நாம் அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்தோம்...இன்றும் உதவுகின்றோம். ஆனால் எந்த அமைப்பின் பெயரிலும் உதவ முடியாத நிலை. எமது தொண்டர்் ஒருவர் மதவாச்சியில் வைத்து கனேடிய கடச்சீட்டு வைத்திருந்தார் என்பதால் திருப்பி அனுப்பபட்டார். இருந்தும் வேறு வழிகளில் (மீண்டும் கையூட்டு) உட்சென்று முகாம்களிற்குள் சென்று நிலமையை அறிந்த நாம் ஒரு முகாம் முழுமைக்கு பாரமெடுக்க தயராய் இருந்த போதும் ( கனடாவில் தரோகி ஏன்றும், அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் தேசியவாதிகள் கூறிய போதும்) அந்த வேண்டுகோள் இலங்கை அரசால் மறுதலிக்கப்பட்டது. அது மட்டுமன்றி எதுகும் செய்ய முடியாத கையாலாகத்தனத்துடன் அரசாங்க அதிபர்! இரு சிங்கள அரச அதிபர்களே அகதிமுகாம்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கின்றின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

பறவைகள் கேள்விப் பட்ட எல்லாம் நானும் கேள்விப் பட்டேன். ஆனால் பறவைகள் போல் இல்லாமல் இங்கே பகிரங்கப் படுத்துகிறேன். புலம் பெயர் தமிழர்கள் அவதானமாக இருக்க இது உதவும்:

முகாமுக்குள் இருக்கும் உறவுகளுக்கு நாங்கள் அனுப்பும் எதுவும் நேரடியாகப் போய்ச் சேர வாய்ப்பில்லை. அது வவுனியா செயலகம் ஊடாகச் செல்கிறது. அந்த வழியில், உணவுப் பாசல் முதற்கொண்டு வேறு பொருட்கள் வரை முகாமுக்குச் செல்லாமல் வெளியே விற்கப் பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. வவுனியா செயலக அதிகாரிகள் வேண்டுமென்று செய்கிறார்களா அல்லது பயத்தினாலா என்று தெரியவில்லை. ஆனால் இந்த கீழ்த் தரமான திருட்டுக்கு அவர்களும் ஒத்துழைக்கிறார்கள் என்றே எனக்குக் கிடைக்கும் தகவல் சொல்கிறது. வெளியார் ஏதாவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த அன்பளிப்பை அரசு வழங்க வேண்டிய நிவாரணத்தில் சேர்த்து விட்டு நிவாரணத்தில் அந்தப் பங்கை தங்கள் பொக்கற்றில் போட்டுக் கொண்டு கணக்குக் காட்டுகிறார்கள். நூறு பேருக்கு கூடுதல் உணவு/உடை கிடைக்கட்டுமே என்று ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு உண்மையில் அந்த நூறு பேருக்குக் கிடைப்பதில்லை என்பதே உண்மை. வேறு சிலர் முகாம்ளுக்குள் நுழைய தங்களுக்கு இருக்கும் அனுமதியைப் பயன் படுத்தி முகாம் வாசிகளிடம் மலிவு விலைக்கு தங்க நகைகள் வாங்குவதில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இந்த மக்களையும் புலம் பெயர் மக்கள் மத்தியில் இருக்கும் கடமையுணர்வையும் பயன் படுத்தி ஒரு பெரிய வியாபாரமே நடக்குது வவுனியாவில். அதனால் நாங்கள் சும்மா இருந்து விடவும் முடியாது. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு கட்டுப் படுத்தப் பட்ட அளவில் உதவி செய்ய அனுமதி இருக்கிறது. அவர்களுக்குக் கொடுக்கிற உதவிகள் உறவுகளுக்கு சுவற வாய்ப்பு உண்டு. கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரிகள் வைத்திய சாலையில் இருப்போருக்கு நேரடியாக உதவ அனுமதி உண்டு. அவர்கள் மூலமும் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரிகள் வைத்திய சாலையில் இருப்போருக்கு நேரடியாக உதவ அனுமதி உண்டு. அவர்கள் மூலமும் கொடுக்கலாம்.

பரவாயில்லை, இதுகளாவது இப்ப மனசாட்சியுடன் நடந்து கொள்ளுதுகளா?

நல்லது தான்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்களை தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லை...நான் உங்களை குறைகூறவும் இல்லை...பொதுவாக எனது கருத்தை முன்வைத்தேன். தனிப்பட முறையில் ஒருவரை தாக்குவது கருத்துகள விதிகளுக்கு முரணானது. யாரையும் நான் இங்கு துரோகி ஆக்கவில்லை....எனது கருத்துக்கள் எப்போதும் வெளிப்படையானவை ஒளிவு மறைவு அற்றவை...

'தொப்பி உங்களுக்கு அளவு எண்டா போட்டுகொளுங்கோ..."

அப்ப சரி தொப்பி எனக்கு அளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவுதல்களில் நேரத்தை கழிக்காமல் அடுத்த கட்டத்தை எண்ணுவோம். நினைத்துப்பார்க்க முடியாதவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. எஞ்சியவர்களையாவது பாதுகாப்போம்.

எல்லோரையும் கூட்டிச்செல்வது சிரமம் என்றால் எல்லோராலும் நம்பப்பட்டவர்கள் நம்பியவர்களுக்குச் செய்தது மோசமல்லவா. இத்தனை காலமும் தங்களை இந்த விடுதலையென்ற தீயுக்கள் ஆயிரமாயிரமாய் அழித்தவர்களும் அதை நம்பிப் பின் சென்றவர்களும் பாதுகாக்கப்பட முடியாதளவுக்கு பலியெடுக்க விட்டது நம் எல்லோரின் துரோகமும்தான்.

தலைவர் இறந்துவிட்டார் என்று திரும்ப திரும்ப எழுதுவதுதான் மீதியுள்ளோரை காப்பாற்றுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா, உங்களுக்கு நிறை தெளிவாக கருத்து எழத தெரியுதே ஒழிய ஒழுங்காக மக்களின் மனங்களை அறிய முடியல்ல. நீங்கள் சொல்லுற உறுதி எத்தினைமக்களிட்ட ஏன் போராளிகளிட்ட இருக்கு என்பதை புரிந்து கொள்ள முயற்ச்சியுங்கள்.

தேசியத்தலைவர் வீரச்சாவடைந்தார் என்பது வேறு உயிரோடு ஒருக்கும் தலைவரை கொல்வது வேறு...!

மேன்மைதாங்கிய நீ்ங்கள் வாழும் கனடாவில் இருக்கும் சில அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து அதற்க்கு எஸ்.பத்மநாதளை துணைக்கழைத்து செய்த நாடகங்களை நம்ப முடியாது. இவர்களின் நாடகங்களே நாளை தலைவருக்கு ஆபத்து என்றாகி விட்டால் அதை ஏற்றுக்கொள்ள இங்கு அவர்களின் பரப்புரைகளை நம்புவோர் தயரா? என்பது கேள்விகக்குறியே!

தலைவர் பற்றி செய்திகள் இன்னமும் அடங்கிய பாடில்லை. சாத்திரி அண்ணா சொல்வது போலவோ, சாந்தியக்கா ஆவேசப்படுவது போலவோ தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய தேவை நமக்கில்லை. ஏன் எனில் அவர் இப்போதும் உயிரோருக்கிறார் என்பதை நம்பும் 95வீதமான ஈழத்தமிழர்களில் நானும் ஒருவவன்.

தலைவரை மோசம் செய்த சக்திகள் மீண்டும் நமக்குள் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு கூத்துப்பாக்கிறது. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று ஆத்மாதத்மமாக நம்பும் யாரும் தலைலவர் வீரச்சாவடைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதற்காக இல்லை அவர் மரணித்து விட்டார் என்பதை நீ ஏற்றுக்கொள் என்று யாரும் திணிக்க முடியாது.

நீங்கள் உங்கள் நம்பிக்கை மீது நம்பிக்கை கெரள்ளுங்கள் அதே நேரமம் மற்றறவர்களின் நம்பிக்கையை மழுங்கடிக்க வேண்டிய தேவையோ அவசியமோ இன்றில்லை. தலைவரின் வீரச்சாவு செய்தி கனேடிய தேசத்தில் ஈழம் தொடர்பான செயற்ப்பாடுகளில் எவ்வளவு முட்டுக்ககட்டையை போட்டு மக்களை குழுப்பியுள்ளது என்பது அதனுள்ளிலிருந்து பார்ப்போருக்கு நன்றாகவே புரியும்்.

நீங்கள் எல்லோரும் சும்மா விளையாட்டாய்... அல்லது சீரியசாய் எழுதலாம்.. ஆனால் அது எத்தனை போரின் நம்பிகக்கையை குலைக்கிறது என்பதை சிந்திக்க தவறாதீர்கள்...

சாந்தியக்கா... 10 யூரோவில் தீரும் பசிப்பிரச்சினை அல்ல இது. நாளும் பலியாடுகளாக இழுத்து செல்லப்படும் எம் உறவுகளின் நிலை பற்றியது. இன்றை கால கட்டத்தில் சோறு முக்கியமல்ல உயிர் முக்கியம். அந்த உயிரை காக்க உணவு முக்கியம் என்று எனக்்கும் தெரியுமம் அதே நேரம்....

எம் மக்கள் எதிரியின் குண்டுகளுக்கு இப்போதும் பலியாவது எத்தனை பேர் நினைவில் வைத்திருக்ககின்றீர்கள்...

சாத்திரி அவர்கள் தெண்டு நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர் என்றால் அவருக்கு இவை பற்றி நன்நாகவே தெரியும். புளொட் அமைப்பு முதல் ஈ.பி.டி.பி வரை மட்டுமல்லாது வவுனியாலி் தெருச்சண்டியர்களாய் நின்றவர்கள் கூட இன்று எம் மக்களின் பெயரில் தான் பிழைப்பு நடக்கிறது.

அடிப்படையில் நான் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவன்... அந்த நகரோடு தினமும் தொடர்பு கொள்பவன் என்பதால் சில விடயங்கள் மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவெ தெரிகின்றது.

பல விடயங்களை எம்மால் எழுத முடிவதில்லை.எழுத்தால் எழுதி அதை ஒரு செய்தியாக்கிட நாம் விரும்பவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை தன் குடும்பத்திடம் சென்ன ஒரேகாரணத்துக்காக மறுநாள் தன் தங்கையை சிலரின் பசிக்கு இரையாக்கி கொண்டிருக்கும் அக்கா மார்களின், தங்ககள் குடும்பத்தவரை காக்க முடியாத கையாலகத்தனத்துடன் இருக்கும் இளைஞர்கள்... பற்றி கவலைப்படுங்கள்.

தலைவரைப்பற்றி ஆராட்சிகளை சற்றே ஒரு 2 வருடத்துக்காகவது தள்ளி வைக்குங்கள்... அதன் பின் நீங்களே தெளிவுறுவீர்கள் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது.

மறைப்பது என்று முடிவு செய்தால் அதை மறைபதற்கும் முயற்சி செய'ய வேண்டும். சில முக்கியமானவர்களின் கருத்துக்கள் ஊடக பேட்டிகள் என்பன காலத்தின் தேவை. அதை நாம் விமர்சனம் செய்யலாகாது. ஊதாரணத்திற்கு இராணுவ பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் மடுவை நோக்கி இராணுவம் முன்னேறிய போது சொன்னார் மடுவை இராணுவம் கைபற்றினால் நாம் மதவாச்சியில் நிற்போம் என்று. அது காலத்தின் தேவை அதற்காக அவரை சாட முடியுமா? இது வாரலாறு காணாத துரோகங்களுக்கு முகம் கொடுக்கும் போர் ஆகவே விமர்சனங்களை தயவு செய்த சிந்தித்து வையுங்கள் என்பது என்னுடை தாழ்ந்த கோரிக்கை. எல்லோரையும் சாடும் நாம் இத்தனை துரோகங்களுக்கு பிள்ளையார் சுளி போட்ட நோர்வேயை யாரும் சாடவும் இல்லை எமது புலம்பெயர் அதிரடி ஆய்வாளர்கள் கண்ணுக்கு அது தெரியவும் இல்லை. காரணம் யாபரும் அறிந்ததுதான் ஆய்வாளர்களின் அறிவு அவ்வளவுதான். காலத்தின் சதியில் முழுதாக வீழாமல் ஒர நகர்வு நடப்பது தெளிவாக தெரிகின்றது. அதுவே தற்போதைய சமிஞை. ஆனால் அதிரடி ஆய்வாளர்கள் விடுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரில் இருந்த அனைவருக்கும் துரோகி, ஒட்டுக்குழு , துரோகக்கும்பல், துணை இராணுவக்குழு என அனைத்து பட்டங்களும் வசவுகளும் வாரி வழயங்கியாகி விட்டது. ஏன் எதற்கு என்று கேட்காமல் நாங்களும் அழைத்துப்பழகி விட்டோம்

இப்போது வீழ்ந்தார் ? வீழ்த்தப்பட்டார் ? வாழ்ந்தார் ? , வாழ்கிறார் ? , என்ற வாதப்பிரதி வாதங்களுடன் துரோகி , விலைபோவிட்டான் என்ற புதுப்பட்டங்களை வழங்கத் தொடங்கி விட்டோம்

யாரும் மன்னிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ தயாரில்லை. கடந்த கால தவறுகளை ஏற்று நிகழ்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வெல்வதே

ஈழக் கனவை தாங்கி ஈழத்தின் விடிவிற்காய் வீரமரணம் அடைந்த அனைத்து விடுதலை போராளிகளுக்கும் , பொதுமக்களுக்கும்

நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய அஞ்சலி

இனியும் பிரிவு வேண்டாம்

ஐக்கியப்டுவோம் , கனவுகளை நனவாக்குவோம்

நீங்கள் எதையோ சொல்ல வருகின்றீர்கள்.....? ஆனால் முழுமையாக சொன்னால்தானே எமக்கு புரியும்.

துரோகிகளையும்...... ஒட்டுக்குழுக்களையும் நாம் விடுதலை போராளிகள் என்று அழைத்திருக்க வேண்டும் என்பது உங்கள் ஆசைபோல் உள்ளது. நாம் அழைத்து என்ன பலன் ஐயா? உண்மை உறங்கிடுமா? நீங்கள் சொல்வதுபோல் பார்த்தால் யாரையும் நான் அழைக்க வேண்டிய அவசியமில்லை. நானே ஒரு பெரிய வழிகாட்டி இந்த உலகிற்கு....... அந்த பன்றிகளுக்கு அத்தனை தகுதி இருப்பின் இந்த தகுதி எனக்கிருப்பதில் எந்த குறையுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் தற்போது 24 மணிநேரமும் மனித இறைச்சிக்கடை திறந்து வைக்கப்படுள்ளதாம்.

புலம்பெயர் மக்கள் விரும்பினால் சிறுநீரகம் மற்றும் முக்கியமான மனித உதிரிப்பாகங்கள் தேவையாயின் சிங்கள-டமிழ் முகவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 000 சரண் அடைந்த போராளிகள் தடுப்பு முகாம்களில்.

16 17 18 19 திகதிகளில் பல தளபதிகள் வீரமரணம்

குறித்த திகதிகளில் புலிகளின் வசம் இருந்த கட்டுபாட்டு பிரதேசம் வெறும் 2சதுர கிலோமீற்றர்கள்

18ம் திகதி இரவு நந்திகடலுடாக ஊடறுத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்த 70 வரையிலான புலிகள் மரணம்

19ம் திகதி தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி புலிதேவன் ரமேஸ் உட்பட அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் பலி ( பின்னைய தகவல்கள் அவர்கள் சரணடைய வெள்ளை கொடியுடன் சென்றபோது கொல்லபட்டார்கள்)

19ம் திகதி தலைவரின் இறந்த உடலை கைபற்றியதாக ஸ்ரீலங்கா - இந்தியா கூட்டு அறிவிப்பு ( முதலில் அன்புலன்ஸ் வாகனத்தில் தப்பி செல்ல முயற்சித்தார். பின்பு முதல்நாள் இரவு நந்திகடலுடாக முயற்சி செய்த போது கொல்லபட்டார்)

ஸ்ரீலங்காவை பாதுகாக்க மேலும் 1 00 000 இராணுவம் தேவை ஸ்ரீலங்கா இராணுவ தளபதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ( ஐந்து நாட்களின் முன்பு)

6 மாதங்களுக்கு முன்பே முழுமையாக கைபற்றபட்ட கண்டிவீதி இராணுவத்தின் வரலாற்று பயணம் ஒன்றுடன் அப்படியே கிடக்கின்றது.

அம்பாறையில் புலிகள் தாக்குதல் 2 சிறப்பு படை இராணுவத்தினர் பலி ( இராண்டுநாள் முன்பு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. காசே தான் கடவுளடா! காசுக்காக ராஜபக்சேவுக்கும் கவி பாடும் கூட்டமடா!

2. யாரோ ஒருவர் எழுதும் (குழப்பும்) ஆரய்ச்சி?? கட்டுரைக்கும், ஆராயாமல் கருத்கெழுதும் கூட்டமடா!

3. அரை நூற்றாண்டு போராட்டத்தை அரை நொடியில் அழிக்கும் சூழ்ச்சியடா! ஆரய்ச்சி கட்டுரையடா!

4. புரிந்து கொள்ளடா! மனம் தெளிந்து நில்லடா! நண்பா! புரிந்து கொள்ளடா! மனம் தெளிந்து நில்லடா!

5. உன் நாடு உன் கையில் வந்து சேரும் வரை, துணிந்து நில்லடா! மனம் தெளிந்து நில்லடா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.