Jump to content

குருதியின் விம்பங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு ஒற்றை ரோஜாவை

பார்க்கும் போதெல்லாம்

என்னிடம் காதல்

வரவில்லை

என் அன்புத் தோழியே

என்னினம் சிந்திய

குருதியின் விம்பங்கள்

பட்டுத் தெறிக்கும்

இதை இனிமேல்

காதல் சின்னம் என்று

சொல்லாதீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ரோஜாக்களை பார்க்கும் போது இனிக்காதல் வராது என இனம் சிந்திய ரத்தம் " என எண்ணும் தீயாவுக்கு ........ரோஜாவின் வாசத்தை மறக்கவேண்டாம் தமிழ் ஈழாத்தின் வாசம் என்றோ ஒரு நாள் வீசத்தான் .............போகிறது நானும் நீங்களும் இல்லாது போனாலும் நம் சந்ததி அதை நுகரும். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான பூவிலும் எம் இனத்தின் அவலம் கண்ட தீயாவின் வரிகள் உங்கள் உள்மனதை சொல்கிறது.

பல்லாயிரம் மக்கள் உயிரிழந்து மண்ணில் ஓர் பேரவலம் நிகழ்ந்த தருணமும் துருக்கியின் கடல்கரை விடுமுறைக்கு காசு கூடப்போகிறது என்று நண்பர் கூட்டத்தை விரைவில் காசை செலுத்துமாறும் அப்பத்தான் குறைந்த விலையில் விடுமுறைக்கான விமான கடவுச்சீட்டைப் பெறமுடியும் என்று சொன்ன தமிழர்களும் என் கண்முன்னே திரிகிறார்கள்... இல்லை இல்லை அவர்கள் இப்போ விடுமுறையில் உள்ளார்கள். அவர்கள் இரத்தப் பெருகிலும் சந்தோசம் காண்பார்கள்.

மனம் மிகவும் வலிக்கிறது தீயா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.