Jump to content

புயல் கடந்த தேசம் ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். .

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .அகதி முகாமிலே ,அடக்கம் செய்ய படாமல் , கவனிக்காமல் நமது உறவுகள் சீரளைக்கபடுகிறார்கள். உலக போரில் இரு நகரங்கள் சீரழித்தது போல எல்லாம் தரை மட்டமாக்க படுகிறது . தடயங்கள் இன்னும் யாரையும் உள்நுழைய விடவில்லைல். இறுதி நாளில் மட்டும் இருபதினாயிரம் மக்களுக்கு மேல கொல்லபடார்கலாம் இன்னு ம அழுவதற்கும் கண்ணீர் இன்றி வற்றிய உடலுடன் மன வேதனையுடன் முட்கம்பி வேலிக்கு பின் நம் உறவுகள் , குடும்ப பிரிந்த துயரம் ,இளையவர்களுக்கு ஏற்படும் கொடுமை இவற்றை எண்ணி பாருங்கள்.

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புயல் கடந்த தேசம் ...........

ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு முட்கம்பி வேலிகளுக்கு பினால் அகதியாக நிற்கும் உறவுகளை ஆற்றுப்படுத்தி சொந்த இடத்தில குடியமார்த்தவேண்டும்.இதுவரை ராணுவபலம் மூலம் சார்வதேச தயவுடன் அழித்த சிங்கள தேசம் .......பொருளாதாரநிலையில் அடித்தளத்தை அடைய வைக்கவேண்டும் .ஸ்ரீலங்கா பொருட்களை வாங்காது செய்யவேண்டும். வேற்று உறவுகளுக்கும் சொல்லவேண்டும். வரலாற்று கடமையை முன்னெடுக்கவேண்டும். அப்போது தான் நாடுக்காக மாண்ட தளபதிகளும் போராளிகளுக்கும் கொல்லபட்ட மக்களுக்கும் .செய்யும் ஆன்மசாந்தி .நாம் ஒன்றிணைந்தால் சிதறடிக்கபட்ட யூத இனம் போல ஒன்றிணையவேண்டும்

நாம் தோற்கவில்லை ஆயுத போராட்டம் மெளனிக்க பட்டு இருக்கிறது .நாம் உறவுகள் உட்பட இவ முன்னேடுக்காவிடால் .எமக்காக யார் செய்வார். எம் சந்ததி எம்மை மன்னிக்காது .புத்தி ஜீவிகள் அரசியல் அனுபவசாலிகள் படித்தவர்கள் மூலம் அனைவரையும் அனைத்து ,ஒன்றிணைந்து ஏமாத்து விடுதலையை முன்னெடுக்க வேண்டும் . இது எமது வரலாற்று கடமை .

எமது உறவுகளிடம் மொழிப்புலமை ,பணபலம் ,மனவலிமை உங்ண்டு .இவற்றை ஆர்றலாக்கி செயலாற்ற வேண்டும் எல்லாம் முடிந்தது என்று இராமல் ,போராட்ட வடிவம் மாற்ற பட்டத்தை உணர்ந்து ,வயது வேறுபாடின்றி ,அரசியல் ரீதியான போராட்டத்தை நடத்தவேண்டும் ஒற்றுமை வேண்டும் வளமான எதிர்காலம் பிறக்கும் ...........விடிவு வரும் நாடு மீளும்......

.நன்றி இதை படித்தமைக்கு .

நிலாமதியக்காவுக்கு, வடித்தமைக்குப் பாராட்டுகள்.

அரசியல் சொல்லாடல்களுக்கப்பாலான யதார்த்தத்தைச் சுட்டியுள்ளீர்கள். இதனைப் புரிந்து கொண்ட மக்களே உண்மையான அரசியல் சமூக விடுதலையைப் பெறமுடியும். எனவேதான் எம் தலைவன் தனித்துவமான பாதையை வகுத்துப் பயணத்தைத் தொடர்ந்து அனைத்துலக பரிணாமத்துள் கொண்டுவந்து விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் கடமையானது எமது கரங்களில் என்பதை உணர்ந்து கொண்டு உரிமைக்காய் ஒன்றிணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருட பூர்த்தியில் உங்கள் மனம் திறந்தது கண்டு மகிழ்வு.

வாழ்த்துகள்.

எங்கே உங்கள் அழகான அந்த அவாட்டரை காணேல்ல அம்மணி

Link to comment
Share on other sites

சிங்களவனின் குண்டியை கழுவிக்கொண்டு அடிமையாக வாழ்வதுதான் தமிழர்களுக்கு நல்லது எண்டு தமிழ் புத்திசீவிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறீனம். இதுக்கு மிஞ்சி என்னத்தை சொல்லிறது நிலாமதி அக்கா. யாழில் நீங்கள் ஒருவருடம் கருத்துப்பரிமாற்றம் செய்து எங்களுடன் இணைந்து இருப்பது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புயல் கடந்த தேசம் ...........

.......................................................

.நன்றி இதை படித்தமைக்கு .

தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மைதான் அக்கா!

பொருளாதார யுத்தம் தான் அடுத்த நிலை. சிங்களர்களின் பொருட்களை வாங்குவதை தமிழர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் தவிர்க்க வேண்டும். இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் ஏதோ ஒரு பானத்தை நம் மக்கள் விரும்பி வாங்கி அருந்துகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முதலில் இது போன்ற ஆட்களை சரி செய்ய வேண்டும்.இலங்கையின் தேயிலையை விரும்பி வாங்கும் மேனாட்டு மக்களை பரப்புரை செய்து மாற்ற வேண்டும்.சிங்களவன் அனுப்பும் பொருட்களில் ரத்தம் படிந்துள்ளது என்ற உண்மையை நமக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இவற்றை விற்பனை செய்யும் கடைகாரர்களுகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.