Jump to content

புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர்


Recommended Posts

pulikal.jpg

கடந்த இதழில் வெளியான "பிரபாகரனின் வெற்றிக்குத் துணை நிற்கும் மதிவதனி' கட்டுரையில் பிரபாகர னுடனான தனது முதல் சந்திப்பை பதிவு செய்திருந்தார் ஓவியர் நடராசா.

"32 வருடங்களுக்கு முன் பிரபாகரனுக்கு உங்களிடமிருந்து ஓவியம் எதுவும் தேவைப்பட்டதா?'

நமது கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்தப் பெரியவர்.

""எனக்குத் தெரிந்த மாறன் என்ற இலங்கை மாணவர் இரண்டு யாழ்ப்பாண இளைஞர் களை அழைத்து வந்தார். அவர்களின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பேச்சுவாக்கில் மாறன் ஒருவரை "தம்பி' என்றும், மற்றொருவரை "பேபி' என்றும் அழைத் தார். ஆனால் பேபியோ, தம்பியை மணி என்றே கூப் பிட்டார். இவர்கள் யாராக இருந்தால் என்ன? இவர் களின் உண்மையான பெயர் என்னவாக இருக் கும் என்பதிலெல்லாம் நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனா லும் இலங்கைத் தமிழர்கள் மீதான பற்றால், "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அந்தத் தம்பி "நாங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்திருக் கிறோம். அதற்கு "தமிழீழ விடு தலைப் புலிகள்' என்று பெயர்கூட வைத்துவிட்டோம். இந்த இயக்க மானது சிங்கள இனவெறி அரசுக் கும், அதன் அடக்குமுறைக்கும் எதிரானது. பண்டைய காலத்தில் தமிழன்தான் இலங்கையை ஆண் டான் என்பதற்குச் சான்றுகள் இருக் கிறது. அந்த சோழமன்னன் புலிக்கொடி பறக்க இலங்கையில் ஆட்சி நடத்தியிருக்கிறான். அதனால் எங்கள் இயக்கத்தின் சின்னத்திலும் புலி இடம்பெற வேண்டும் என்று விரும்பு கிறோம். சிவகாசி பட்டாசு லேபிள்களில் வரையப்பட்டிருந்த புலிப்படங்கள் சிலவற்றைப் பார்த்தோம். எங்களுக்குப் பிடிக்கவில்லை. புலி என்றால் சீறவேண்டும். புலியின் முகத்தில் சீற்றம் பூரணமாக வெளிப்பட வேண்டும். இப்படி ஒரு படத்துக்காக பல இடங்களில் பல நாட்கள் அலைந்துவிட்டோம். எதுவும் மனநிறைவாக இல்லை. பிறகுதான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.

அவர்களின் எண்ணத்துக்கேற்ப நான் வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம் கொண்ட புலியின் முகம் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டது. அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. அப் போது நான், "வளையத்தைத் தாண்டி வெளியே வருவதுபோல் புலிகளின் நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால் நன்றாக இருக் குமே' என்று எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். உடனே தம்பி "அப்படியே வரையுங்கள் அண்ணா' என்றார் ஆர்வத் தோடு. பிறகுதான் வளைவை மூன்றாகப் பிரித்து ஒவ் வொன்றிலும் 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக் களை வரைந்தேன். அவர்களின் விருப்பப் படியே நுனியில் குத்துக்கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகள் ஒன்றுக் கொன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்தேன். இப்படித்தான் அந்த இயக்கத்துக்கு புலிச்சின்னம் உருவாயிற்று.

இந்தச் சின்னத்துக்கு பிளாக் எடுத்துத்தரும்படி என்னிடம் கேட்டார் தம்பி. நானும் செய்து கொடுத்தேன். அந்த மூலப்படம் மற்றும் ஃபிலிம் நெகட்டிவ்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. பிறகு புலிச்சின்னம் பொறித்த லெட்டர்பேடு, அடையாள அட்டைகள் அச்சடித்துத் தரவேண்டுமென்றார். அதையும் நிறைவேற்றிக் கொடுத்தேன்.

இப்படித்தான் பேச்சினூடே "இயக்கத்தின் இன்னொரு தேவையும் பூர்த்தியாகாமலே காலம் கடந்துகொண்டிருக்கிறது' என்றார். அது விடுதலைப்புலிகளின் சீருடை சம்பந்தப்பட்டது. உடனே நான் "முயற்சித்துப் பார்ப்போமே' என்று ஜவுளிக்கடையில் காக்கித்துணி வாங்கிவரச் செய்து, அதில் சில வண்ணங்களை பட்டைப் பட்டையாகத் தீட்டினேன். பிறகு பிரபாகரனுக்கு ஏற்ற அளவில் அத்துணியைத் தைத்து அணியச்செய்து, என்.சி.சி. தொப்பியும், பெல்ட்டும் வாங்கி தொப்பியில் பித்தளையிலான புலிச் சின்னத்தை மாட்டி அவரை போட்டுக்கொள்ளச் செய்து, பின்னணியில் என் மனைவியின் சேலையைக் கட்டித் தொங்கவிட்டு எனது நிக்கான் கேமராவில் பல போட்டோக்களை எடுத்தேன். அப்போது அவர் ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்றை கம்பீரமாகக் கையில் வைத்துக்கொண்டார். சின்ன வயதில் மட்டுமே போட்டோ எடுத்திருந்த தம்பி, விவரம் தெரிந்த பிறகு எந்தச் சூழ்நிலையிலும் தன்னை யாரும் படம் எடுக்க அனுமதித்ததில்லை. அதற்குக் காரணம் அவரது தலைமறைவு வாழ்க்கைதான்.

pulikal1.jpg

ஆனாலும் இயக்கத்துக்காக முதல் முதலாக சீருடை அணிந் திருந்த படத்தை என்மீது நம்பிக்கை வைத்து எடுத்துக்கொண்டார். பின்னாளில் இந்தச் சீருடையே மாற்றம் கண்டு, தமிழ்நாட்டில் நடந்த பயிற்சி முகாம்களின்போது புலிகளின் சீருடை யானது. இன்று உலகமே வியந்து போற்றிக்கொண்டி ருக்கும் வீரத்தலைவன் "அதிரடியான சாதனை ஒன்றை நிகழ்த்திக் காட்டிவிட்டே மீண்டும் மக்கள் முன் தோன்றுவார்' என்று கோடானுகோடி தமிழர் களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தம்பியின் மன தில் அன்று நான் இடம்பிடித்ததை பெரும் பாக்கியமாகவே எண்ணு கிறேன்.

தம்பியும்கூட இயக்கத்தில் முப்படையையும் அமைத்து ஹைடெக் கான நடவடிக்கைகளை மேற்கொள் ளக்கூடிய பெரிய தலைவராகிவிட்ட பிறகும்கூட சாமானியனான என்னை மறந்துவிடவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் நலிவுற்ற நிலையில் நான் இலங்கைக்குப் போனபோது, அவர் என்னை உபசரித்த விதமும், அங்கே வீரர்கள் பலரும் ஆர்வத்தோடு என் னுடன் புகைப்படம் எடுத்துக்கொண் டதும் இன்னும் நெஞ்சில் நிழலாடிக் கொண்டேயிருக்கிறது. அங்கே என்னை விடுதலைப்புலிகளின் கப்பல் தளத்துக்கு அழைத்துச் சென்றார் தம்பி. அங்கே நாங்கள் ஏறிய கப்பல், கப்பல் படைத்தலைவர் சூசையின் கட்டளையை ஏற்று செயல்பட்டது. அப்போது தம்பி, சூசையிடம் வடக் குப் பக்கம் பீரங்கியைத் திருப்பி சிறிது மேல்நோக்கி சுடச்சொன்னார், அதன் செயல்பாட்டை நான் அறிந்துகொள்வதற்காக. அப்படியே கப்பலில் நீண்டிருந்த பீரங்கியால் சுட்டார்கள். அந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் பல மைல் தொலைவு சென்று தாக்கக்கூடியது என்றார் தம்பி. அப்போது கப்பலின் மேலே பறந்த கொடியைக் காண்பித்து "நீங்கள் வரைந்த புலிச்சின்னத்தைத் தாங்கி எத்தனை கம்பீரமாகப் பறக்கிறது பாருங்கள் அண்ணா...' என்றார் ஒரு குழந்தையைப் போல. எனக்கு உடம்பெங்கும் சிலிர்த்தது'' என்று கண்களை மூடி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"அன்பின் அண்ணா விற்கு...

நலம். நலமேயுள் ளோம். அதுபோல் நீங்க ளும் நலமேயிருக்க அன் னைத் தமிழை வேண்டு கிறேன்' -என்று பிரபா கரன் 1980-களில் தனக்கு எழுதிய கடிதங்களை இன்றும் பாதுகாத்து வரும் ஓவியர் நடராசா, ""தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் வெளியீடான அண்டன் பாலசிங்கம் எழுதிய "சோசலிசத் தமிழீழத்தை நோக்கி...' என்ற புத்தகத்துக்கு என்னை அட்டைப்படம் வரையச் சொன்னார் தம்பி. ஏ.கே.47 துப்பாக்கியை வீரன் ஒருவன் தூக்கிப்பிடிக்க... பின்னணியில் இலங்கைத் தீவில் தமிழ் ஈழநாடு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும்படி வரைந்துகொடுத்தேன்.

அப்போது தம்பி என்னிடம் சொன்னார்... "அண்ணா! புத்தகத்தில் ஒன்றை எடுத்து முழுமையாகப் படித்துப் பார்ப்பேன். அவற்றில் ஒரே ஒரு எழுத்துப்பிழை இருந்தால்கூட, புத்தகங்கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திவிடுவேன். ஏனென்றால்... இயக்கத்திலிருந்து வெளியிடப்படும் முதல் வெளியீட்டில் ஒரு சிறு பிழையும் இருந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்றார். அப்படி அவர் சொன்னது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. தம்பி முன்னின்று நடத்துகிற இந்த இயக்கத்தில் பிழை என்பதே இருக்கக்கூடாது என்பதில் அவருக்கிருந்த கடுமையான உறுதிப்பாடு மீண்டும் என்னை வியக்க வைத்தது.

எனக்கே சிக்கலை ஏற்படுத்திய, நான் வரைந்த ஓவியங் களைப் பற்றிச் சொல்கிறேன். இந்திய அமைதிப்படை ஈழத் திற்கு சென்ற பிறகு நடந்த சம்பவங்களின் அடிப்படையில் சில படங் களை வரைந்துகொடுத்தேன். அதிலே ஒரு படத்தில் ஒரு குள்ளநரி யானது ஒரு வேடுவன் காலைப் பிடித்துக்கொண்டு ஒரு புலியைச் சுட்டிக்காட்டி, அதன்மீது அம்பு எய்து கொல்லும்படி தூண்டிக் கொண்டிருப்பது போலவும், அந்த வேடுவனும் தந்திரம் நிறைந்த குள்ளநரியின் பேச்சைக் கேட்டு, அம்பால் அந்தப் புலியின் அருகில் சென்று எய்துவிட்டது போலவும், அம்பால் அடிபட்ட அந்தப்புலி கடுமையுடன் எய்தவன் மீது கோபமாகத் திரும்புவது போலவும் வரைந்து, ராஜீவ்காந்தியை வேடுவனாகவும், ஜெயவர்த்தனேயை குள்ளநரியாகவும் சித்தரித்திருந்தேன். இன்னொரு படத்தில் ராஜீவ் காந்தி ஒரு புலியின் வாலை வலியச் சென்று இழுப்பது போலவும், அருகே ஜெயவர்த்தனே கைகொட்டி மகிழ்வது போலவும் வரைந்திருந்தேன்.

நான் வரைந்த இந்தப் படங்களே, ராஜீவ்காந்தி கொலையில் எனக்கும் சம்பந்தமிருப்பதாக ஒரு சந்தேகத்தை உண்டுபண்ணி என்னை காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தியது. ராஜீவ்காந்தி யின் மரணம் என்னை உலுக்கியதையும், ராஜீவ்காந்தி கொலைத் திட்டம் எதுவும் எனக்குத் தெரியாது என்பதையும் உள்ளது உள்ளபடி க்யூ பிராஞ்ச் போலீஸ் விசாரணையின்போது தெளிவாக்கினேன். அவர்களும் ஒரு ஓவியன் என்ற முறையில் என் கருத்தினை வெளிப்படுத்திய படங்களே அவை என்பதை புரிந்துகொண்டு விசாரித்ததோடு என்னை விட்டுவிட்டார்கள்.

pulikal2.jpg

மரணம் நெருங்கிவிட்ட இந்த வயதிலும் என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி இது-

"நான் ஒரு புலி அங்கத்தினனா?' என்று புன்முறுவல் பூத்தவர்...

""தமிழீழ விடுதலைக்காக வீர மரணத்தைத் தழுவிய பல்லாயிரம் வீரர்களும் துயில் கொள்ளும் அம்மண்ணில் தமிழர்கள் இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

தமிழீழத்தை வென்றெடுக்காமல் பிரபாகரன் உயிர் பிரியவே பிரியாது

இதை தான் எல்லோரும் நம்புகிறோம், ஆனால் சிலர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் எண்ணத்துக்கேற்ப நான் வரைந்து கொடுத்த படத்தில் சீற்றம் கொண்ட புலியின் முகம் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டது. அவர்களுக்கும் திருப்தியாக இருந்தது. அப் போது நான், "வளையத்தைத் தாண்டி வெளியே வருவதுபோல் புலிகளின் நகங்கள் விரிந்த கால்கள் இருந்தால் நன்றாக இருக் குமே' என்று எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன். உடனே தம்பி "அப்படியே வரையுங்கள் அண்ணா' என்றார் ஆர்வத் தோடு. பிறகுதான் வளைவை மூன்றாகப் பிரித்து ஒவ் வொன்றிலும் 11 தோட்டாக்கள் என 33 தோட்டாக் களை வரைந்தேன். அவர்களின் விருப்பப் படியே நுனியில் குத்துக்கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகள் ஒன்றுக் கொன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்தேன். இப்படித்தான் அந்த இயக்கத்துக்கு புலிச்சின்னம் உருவாயிற்று.

அந்த 33 தோட்டாக்களையும் , 33 வருடங்களுடன் ஒப்பிட்டுள்ளதை எங்கோ படித்த ஞாபகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியைப் படிக்கும் போதே கண்கள் உணர்ச்சி மிகுதியால் குளமாகின்றன.தமிழனுக்கு அடையாளத்தைக் கொடுத்த ஓவியரே வாழ்க பல்லாண்டு.

Link to comment
Share on other sites

அந்த 33 தோட்டாக்களையும் , 33 வருடங்களுடன் ஒப்பிட்டுள்ளதை எங்கோ படித்த ஞாபகம் .

அப்படியா சிறி.!! வேறேதோ கருத்துள்ளதாக நான் நினைத்தேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா சிறி.!! வேறேதோ கருத்துள்ளதாக நான் நினைத்தேன். :(

தெரியவில்லையே ....... நுணாவிலான் , சொல்லுங்களேன் . :(

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள். சரியோ தெரியவில்லை. அதை தான் சிறி நீங்கள் கருதினீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.