Jump to content

மனமிருந்தா உதவுங்கோ


Recommended Posts

இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள்.

ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

....

ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்தால் சந்தோசம்...

வயிற்றுப் பசிக்கு ஒருவேளை கூட உணவின்றி தவிக்கும் சிறார்களுக்கு, முதலில் உணவு கிடைக்குமா? முட்கம்பிகளுக்கு நடுவே பெற்றோரையும், உற்றோரையும் இழந்து, உடல் அங்கங்களையும் இழந்து தவிக்கும் சிறார்கள் பாதணிகள் போட்டுக் கொண்டு எங்கே போகப் போகிறார்கள்?? :D

தயவு செய்து முதலில் உணவு கிடைக்கச் செய்வது சாத்தியமாகுமா என்று பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

Link to comment
Share on other sites

உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்தால் சந்தோசம்...

வயிற்றுப் பசிக்கு ஒருவேளை கூட உணவின்றி தவிக்கும் சிறார்களுக்கு, முதலில் உணவு கிடைக்குமா? முட்கம்பிகளுக்கு நடுவே பெற்றோரையும், உற்றோரையும் இழந்து, உடல் அங்கங்களையும் இழந்து தவிக்கும் சிறார்கள் பாதணிகள் போட்டுக் கொண்டு எங்கே போகப் போகிறார்கள்?? :D

தயவு செய்து முதலில் உணவு கிடைக்கச் செய்வது சாத்தியமாகுமா என்று பாருங்கள்...

வயிற்றுப்பசிக்கு உடனடியாக உதவவேண்டியது உண்மைதான் குட்டி. ஆனால் காலுக்குச் செருப்பின்றி எல்லா அசிங்கங்களுக்குள்ளும் கால்களை வைத்துத் திரிகிறார்கள் அதனால் தொற்று நோய்கள் தாக்குகிறது. தற்போது வெக்கைகாலமாகையால் சுடுவெயிலில் தவிக்கிறார்கள். அந்த அவலத்தை அனுபவிக்கும் பல்லாயிரம் பேரிலிருந்து சிலருடன் கதைத்த போது இந்த உதவியைக் கேட்டுள்ளார்கள். அதனாலேயே இந்த முயற்சியை எடுக்கிறோம்.

ஒரு மலசலகூடத்தை நூற்றுக்கணக்கில் பாவிக்கிறார்கள். சரியாக தண்ணீர் ஊற்ற அனுமதியில்லை. ஆகையால் சிறுவர்கள் முதல் அனைவரும் அதன்மேலே நிற்க வேண்டியுள்ளார்கள்.

அழகான ஆயிரம் ரூபாய் பாதணிகளல்ல அவர்களுக்கு நாம் வாங்கிக் கொடுப்பது வெறும் 100ரூபாய் சிலிப்பர்களே.

அழகாய் அவர்களால் எங்கே போகப்போகிறார்கள் ? தங்கள் கால்களை வெயிற்கொடுமையிலிருந்து காக்கத்தான் வேறெதற்கு ?

Link to comment
Share on other sites

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

சரி காலணி குடுக்க வேண்டாம் சாப்பிட ஏதும் குடுப்பியளோ ? எங்களால் இயன்றது இதுதான். உங்களால் இயன்றதை நீங்களும் செய்யுங்கோ அசன்.

காலணிகளுக்குப் பதிலாக கடதாசி மட்டைகளை வெட்டிச் சணல் நூலால் கட்டிக் கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். அந்தத்துயரை வெளியில் உறவுகளிடம் வந்து போன ஒரு பெண்ணுடன் கதைக்கக் கிடைத்தது. அதைக் கேட்ட பிறகே இப்படியொரு உதவியைச் செய்ய நினைக்கிறோம்.

கால் கை இரண்டையும் இழந்து 22 வயதில் ஒரு பெண் அந்த முகாமுக்குள் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். கணவனை செல் கொண்டுபோயிற்று புதுமாத்தளனில். இப்படி ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களை எல்லோரும் முன் வந்தால் இயங்க வைக்கலாம். இதற்கு யாரும் முன்வரும் நிலையில் இல்லை.

இந்த உதவியைச் செய்வதற்கு அங்கு பணியாற்றும் ஒருவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.

தேவைகள் அவர்களுக்கு அதிகம். எங்களால் இயன்றதைச் செய்ய நினைக்கிறோம். மலையைப்புரட்டும் சக்தியில்லாத நாம் இப்படி அணில்களாக அணிவகுக்கிறோம்.

Link to comment
Share on other sites

உணவுக்குப் பின்தான் மற்றதெல்லாம்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு முக்கியம் தான். அவர்களுக்கு போதுமான அளவில் அது இல்லை என்பதும் உண்மை. ஆனால் உணவை சிங்களவன் மூலமாகத் தான் கொடுக்க வேணும்.உணவு கொடுத்தால் சிங்களவனோட சேர்ந்து கொண்டு வவுனியாக் கச்சேரியில இருக்கிற எங்கட நாயளும் அதைக் களவெடுக்கிறதும் கள்ளக் கணக்குக் காட்டுறதும் தான் நடக்குது. செருப்பும் முக்கியம் தானே? தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளுக்கு உதவுவது நல்லது ஆனால் எப்போதும் விழிப்புடன் இருங்கள்.

தப்பாக என்னை புரிந்துகொள்ள வேண்டாம் நான் சொல்ல வருவது அனுபவத்தில் கண்ட உண்மை.

சிறிய சிறிய தொகைகளை அனுப்பும் வரை உரியவர்களுக்கு போய் சேரும்படி செய்கிறார்கள்

அப்படியே ஒருநாள் நாங்களும் சிறிது சிறிதாக தொகையைக் கூட்டி மொத்தமாக அனுப்பும் பொழுது

காத்திருந்து அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோல் முன்பும் ஒருமுறை நிகழ்ந்து

அதில் எனக்கு அனுபவமுள்ளது. ஆகவே கவனம்.

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

Link to comment
Share on other sites

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

கொஞ்சநாள் முதல் புதிசா யாராவது இங்கை காசு சேத்தினமோ தெரியாது மதுரன். ஆனால் இந்தக்களத்தில் நேசக்கரம் நண்பர்கள் வட்டம் என்று ஒன்று இயங்கிவந்தது சிலவருடங்களாக. அந்த நேசக்கரத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் செயலரங்கம் பகுதியில் அறிவிக்கப்பட்டது. அப்பொறுப்பைக் களநண்பர் டண்ணின் பொறுப்பில் செயற்படுத்தப்பட்டது. இறுதியாக டண் வணங்கா மண்ணுக்குக் கடைசிப்பங்களிப்பு முழுவதும் கொடுத்திருந்தார். அந்த விபரங்களும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஆதாரங்களோடு தனித்தனியே தெரிவிக்கப்பட்டது. உதவிபெற்றவர்களின் கையொப்பங்களுடன் சகலமும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நேசக்கரம் தாயகத்துக்கு எங்கெங்கே உதவியது, எந்த அமைப்பு ஊடாக அல்லது தனிநபர்கள் ஊடாக என்பதையெல்லாம் பங்காளர்களான அனைவரும் அறிவார்கள். சிறுதுளியாய் நேசக்கரம் செய்த உதவிகள் பலருக்குப் பேருதவியாயிருந்தது. பங்களிப்பில் சம்பந்தப்படாதவர்களுக்கு நேசக்கரம் தனது பங்களிப்பை தெரியப்படுத்தவில்லை.

இப்ப நாங்கள் காசு சேர்க்கிறது கூட விருப்பமுள்ள மற்றும் நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் நம்பியே. மற்றும்படி யாரையும் கட்டாயப்படுத்தியல்ல. எல்லாத்தையும் கவனிச்சுத்தான் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :- இச்செய்தியைப் பார்த்துவிட்டுத் தனிமடலில் தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை நல்கச் சிலர் முன்வந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

Link to comment
Share on other sites

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

நீங்கள் சொல்ற வெண்புறாவுக்கு நிகரான அமைப்புகள் ஊடாக நாங்களும் தான் உதவினோம் உதவிக்கொண்டிருக்கிறோம். பணி தொடரும் பட்சத்தில் சொல்லுங்கோ. வெண்புறாவை மீண்டும் வானத்துக்கு அனுப்பும் யோசனையில் ஆலோசனைக்குழு கூடி முடிவெடுத்த பின்னர் சொல்லுங்கோ.

ஆனால் கல்கத்தாவில் உடைக்கப்படவிருக்கும் வணங்காமண்ணை நம்பிக் கடலில் இறங்கத் துணிவில்லை. மில்லியன்களை விழுங்கிய வணங்காமண் கல்கத்தாவில் உடையப்போகிறது அநியாயமாக யாராவது காப்பாற்றுவினமோ ?

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

நேசக்கரம் ஊடாக செய்யலாம் கலைஞன். ஆனால் நேசக்கரத்தில் இருந்தவர்கள் பலர் விலகியுள்ளார்கள். ஆட்களை இணைத்துச் செயற்பட மீண்டும் நேசக்கரத்தில் பங்காற்றியோர் முன்வந்தால் தொடர்ந்து செய்வோம். மற்றும் நேசக்கரம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குத் தொல்லை குடுப்பதா என யோசிச்சிட்டு பழைய நேசக்கர உறவுகள் யாருக்கும் தனிமடல் இடவில்லை.

உங்களுக்கு தனிமடல் இடுகிறேன். இதுதொடர்பான விபரங்கள்.

Link to comment
Share on other sites

அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற
Link to comment
Share on other sites

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

வணங்காமுடி,

உங்களுக்குத் தனிமடல் இட முயற்சித்தேன். முடியவில்லை. எனத மின்னஞ்சல் குறிப்பிடுகிறேன். தொடர்பு கொள்ளுங்கள்.

எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com

தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

தேவைகளைப்புரிந்தமைக்கு நன்றி ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

நான் எனது குடும்ப உறவினர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிவு செய்துள்ளேன்.

எதற்கும் அவர்கள் மன உறுதியும் மனை உறுதியும் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------?

Link to comment
Share on other sites

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

நான் எனது குடும்ப உறவினர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிவு செய்துள்ளேன்.

எதற்கும் அவர்கள் மன உறுதியும் மனை உறுதியும் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------?

குமாரசாமி,

ஏற்கனவே நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த பங்களிப்புக்கள் பலருக்கு உதவியதை இக்கணம் நன்றியுடன் நினைவு கூருகிறேன். நீங்கள் இம்முறை எங்களுடன் இணைந்து உதவவில்லையென யோசிக்காதீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களுக்கு நீங்கள் உதவுங்கள். எப்படியாயினும் அந்த மக்களுக்கு உதவிகள் போய்ச்சேரட்டும்.

எப்போதுமே தமிழ்க்குணம் நன்மைகளுக்கு நடுவில் இப்படிக் கக்குவது வளமைதானே அப்படி எடுத்துக்கொள்வோம் இங்கு வரும் நளின நக்கல்களை.

ஒரு தலைவனின் தலையில் சுமை முழுவதையும் போட்டுவிட்டு தப்பித்த தைரியம் இப்போது இவர் வருவார் என்று மேலும் அந்தத்தெய்வத்தின் தலையிலேயே அனைத்தையும் இறக்க முடிவுபோல உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த இடத்தில் உதவி செய்ய விரும்புபவர்களிடம் நானும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்!

தாயகத்தில் முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் எமது சொந்தங்களின் பிள்ளைகள், உறவினர்கள், அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் தங்கி படித்தோர் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழத்தில், பல்வேறு துறைகளில் தமது கல்வியை தொடரமுடியாத நிலையிலிருக்கின்றனர்.

தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் முகாம்களுக்குள் தொழிலின்றி முடக்கப்பட தமது பாடங்களுக்கான, செலவுகளையோ, அறை வாடகை, புத்தங்கள் என்பவற்றை பெறவோ முடியாமல் அல்லல்ப்படுகின்றனர்.

அதிகமானவர்கள், இறுதியாண்டில் இருப்பதால் அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை எமது இந்த திட்டன் கீழ் 300 வரையாக பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்தம் 3000 தொடக்கம் 5000 வரை தமது தேவைக்கு ஏற்றளவு கோரியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 230 மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Link to comment
Share on other sites

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

நுணாவிலான்,

நேசக்கரம் மூலமான பங்களிப்பு பற்றி நாற்சந்தியில் எழுதியுள்ளேன். அதில் பலர் தமது கருத்துக்களை கூறியுள்ளார்கள். கனடிய நண்பர்கள் கலைஞனுடன் தொடர்பு கொண்டால் கலைஞன் மேலதிக விபரங்களைத் தருவார்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

மனமிருந்தா உதவுங்கோ என்ற தலைப்பில் உதவி கோரி 2மாதங்கள் முடிவடைந்த நிலையில் மீளவும் இத்திரியை ஞாபகம் கொள்ள வைக்கிறேன். பலர் பல கேள்வி கேட்டார்கள். உதவியது சிலர்தான். அவர்களது உதவிகளுக்கு நன்றிகள். உதவிய அனைவருக்கும் பயனடைந்தோரின் படங்கள் விபரங்களுடன் தனிமடலிடப்படும். சிறு அணில்களாக செய்துள்ளோம் சிறு பங்களிப்பு. ஆனால் அது சிலருக்குப் பயன்பட்டுள்ளது.

உதவியவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உதவினார்கள். முகம் அறியோம் ஆனாலும் அவர்கள் நம்பி உதவிய உதவிகளுக்கு நன்றிகள்.

ஆலோசனைகள் முன்னுரைகள் சொன்ன எவரும் இத்திட்டத்தில் பங்கேற்கவில்லையென்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. சத்தமில்லாமல் இருந்தோரால் தான் உதவிகள் கிடைத்தது. அனைவருக்கும் நன்றிகள்.

senthil5000 ; 50டொலர் - நாணயமாற்றுச் செலவு - 2.25USD - 33,33€ கிடைத்தது

வக்தா - 25கனடியடொலர் நாணயமாற்றுச் செலவு - 1.28CAD - 14,23€கிடைத்தது.

இணையவன் 50யூரோக்கள் நாணயமாற்றுச் செலவு - 1.30€- 48.70€ கிடைத்தது.

senthil5000 - 33,33€

சாந்தி - 100யூரோக்கள்

வக்தா - 14,23€

இணையவன் 48.70€ கிடைத்தது.

கிடைத்த மொத்தத்தொகை - 196,26€

மொத்தமாக 250யூரோக்கள் அனுப்பப்பட்டது. அனுப்புக்கூலி 11யூரோ

முப்பத்து ஒன்பதாயிரத்துநூற்றுஇருபத்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.