Jump to content

மனமிருந்தா உதவுங்கோ


Recommended Posts

இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள்.

ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

....

ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்தால் சந்தோசம்...

வயிற்றுப் பசிக்கு ஒருவேளை கூட உணவின்றி தவிக்கும் சிறார்களுக்கு, முதலில் உணவு கிடைக்குமா? முட்கம்பிகளுக்கு நடுவே பெற்றோரையும், உற்றோரையும் இழந்து, உடல் அங்கங்களையும் இழந்து தவிக்கும் சிறார்கள் பாதணிகள் போட்டுக் கொண்டு எங்கே போகப் போகிறார்கள்?? :D

தயவு செய்து முதலில் உணவு கிடைக்கச் செய்வது சாத்தியமாகுமா என்று பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

Link to comment
Share on other sites

உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்தால் சந்தோசம்...

வயிற்றுப் பசிக்கு ஒருவேளை கூட உணவின்றி தவிக்கும் சிறார்களுக்கு, முதலில் உணவு கிடைக்குமா? முட்கம்பிகளுக்கு நடுவே பெற்றோரையும், உற்றோரையும் இழந்து, உடல் அங்கங்களையும் இழந்து தவிக்கும் சிறார்கள் பாதணிகள் போட்டுக் கொண்டு எங்கே போகப் போகிறார்கள்?? :D

தயவு செய்து முதலில் உணவு கிடைக்கச் செய்வது சாத்தியமாகுமா என்று பாருங்கள்...

வயிற்றுப்பசிக்கு உடனடியாக உதவவேண்டியது உண்மைதான் குட்டி. ஆனால் காலுக்குச் செருப்பின்றி எல்லா அசிங்கங்களுக்குள்ளும் கால்களை வைத்துத் திரிகிறார்கள் அதனால் தொற்று நோய்கள் தாக்குகிறது. தற்போது வெக்கைகாலமாகையால் சுடுவெயிலில் தவிக்கிறார்கள். அந்த அவலத்தை அனுபவிக்கும் பல்லாயிரம் பேரிலிருந்து சிலருடன் கதைத்த போது இந்த உதவியைக் கேட்டுள்ளார்கள். அதனாலேயே இந்த முயற்சியை எடுக்கிறோம்.

ஒரு மலசலகூடத்தை நூற்றுக்கணக்கில் பாவிக்கிறார்கள். சரியாக தண்ணீர் ஊற்ற அனுமதியில்லை. ஆகையால் சிறுவர்கள் முதல் அனைவரும் அதன்மேலே நிற்க வேண்டியுள்ளார்கள்.

அழகான ஆயிரம் ரூபாய் பாதணிகளல்ல அவர்களுக்கு நாம் வாங்கிக் கொடுப்பது வெறும் 100ரூபாய் சிலிப்பர்களே.

அழகாய் அவர்களால் எங்கே போகப்போகிறார்கள் ? தங்கள் கால்களை வெயிற்கொடுமையிலிருந்து காக்கத்தான் வேறெதற்கு ?

Link to comment
Share on other sites

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

சரி காலணி குடுக்க வேண்டாம் சாப்பிட ஏதும் குடுப்பியளோ ? எங்களால் இயன்றது இதுதான். உங்களால் இயன்றதை நீங்களும் செய்யுங்கோ அசன்.

காலணிகளுக்குப் பதிலாக கடதாசி மட்டைகளை வெட்டிச் சணல் நூலால் கட்டிக் கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். அந்தத்துயரை வெளியில் உறவுகளிடம் வந்து போன ஒரு பெண்ணுடன் கதைக்கக் கிடைத்தது. அதைக் கேட்ட பிறகே இப்படியொரு உதவியைச் செய்ய நினைக்கிறோம்.

கால் கை இரண்டையும் இழந்து 22 வயதில் ஒரு பெண் அந்த முகாமுக்குள் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். கணவனை செல் கொண்டுபோயிற்று புதுமாத்தளனில். இப்படி ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களை எல்லோரும் முன் வந்தால் இயங்க வைக்கலாம். இதற்கு யாரும் முன்வரும் நிலையில் இல்லை.

இந்த உதவியைச் செய்வதற்கு அங்கு பணியாற்றும் ஒருவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.

தேவைகள் அவர்களுக்கு அதிகம். எங்களால் இயன்றதைச் செய்ய நினைக்கிறோம். மலையைப்புரட்டும் சக்தியில்லாத நாம் இப்படி அணில்களாக அணிவகுக்கிறோம்.

Link to comment
Share on other sites

உணவுக்குப் பின்தான் மற்றதெல்லாம்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு முக்கியம் தான். அவர்களுக்கு போதுமான அளவில் அது இல்லை என்பதும் உண்மை. ஆனால் உணவை சிங்களவன் மூலமாகத் தான் கொடுக்க வேணும்.உணவு கொடுத்தால் சிங்களவனோட சேர்ந்து கொண்டு வவுனியாக் கச்சேரியில இருக்கிற எங்கட நாயளும் அதைக் களவெடுக்கிறதும் கள்ளக் கணக்குக் காட்டுறதும் தான் நடக்குது. செருப்பும் முக்கியம் தானே? தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளுக்கு உதவுவது நல்லது ஆனால் எப்போதும் விழிப்புடன் இருங்கள்.

தப்பாக என்னை புரிந்துகொள்ள வேண்டாம் நான் சொல்ல வருவது அனுபவத்தில் கண்ட உண்மை.

சிறிய சிறிய தொகைகளை அனுப்பும் வரை உரியவர்களுக்கு போய் சேரும்படி செய்கிறார்கள்

அப்படியே ஒருநாள் நாங்களும் சிறிது சிறிதாக தொகையைக் கூட்டி மொத்தமாக அனுப்பும் பொழுது

காத்திருந்து அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோல் முன்பும் ஒருமுறை நிகழ்ந்து

அதில் எனக்கு அனுபவமுள்ளது. ஆகவே கவனம்.

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

Link to comment
Share on other sites

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

கொஞ்சநாள் முதல் புதிசா யாராவது இங்கை காசு சேத்தினமோ தெரியாது மதுரன். ஆனால் இந்தக்களத்தில் நேசக்கரம் நண்பர்கள் வட்டம் என்று ஒன்று இயங்கிவந்தது சிலவருடங்களாக. அந்த நேசக்கரத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் செயலரங்கம் பகுதியில் அறிவிக்கப்பட்டது. அப்பொறுப்பைக் களநண்பர் டண்ணின் பொறுப்பில் செயற்படுத்தப்பட்டது. இறுதியாக டண் வணங்கா மண்ணுக்குக் கடைசிப்பங்களிப்பு முழுவதும் கொடுத்திருந்தார். அந்த விபரங்களும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஆதாரங்களோடு தனித்தனியே தெரிவிக்கப்பட்டது. உதவிபெற்றவர்களின் கையொப்பங்களுடன் சகலமும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நேசக்கரம் தாயகத்துக்கு எங்கெங்கே உதவியது, எந்த அமைப்பு ஊடாக அல்லது தனிநபர்கள் ஊடாக என்பதையெல்லாம் பங்காளர்களான அனைவரும் அறிவார்கள். சிறுதுளியாய் நேசக்கரம் செய்த உதவிகள் பலருக்குப் பேருதவியாயிருந்தது. பங்களிப்பில் சம்பந்தப்படாதவர்களுக்கு நேசக்கரம் தனது பங்களிப்பை தெரியப்படுத்தவில்லை.

இப்ப நாங்கள் காசு சேர்க்கிறது கூட விருப்பமுள்ள மற்றும் நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் நம்பியே. மற்றும்படி யாரையும் கட்டாயப்படுத்தியல்ல. எல்லாத்தையும் கவனிச்சுத்தான் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :- இச்செய்தியைப் பார்த்துவிட்டுத் தனிமடலில் தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை நல்கச் சிலர் முன்வந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

Link to comment
Share on other sites

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

நீங்கள் சொல்ற வெண்புறாவுக்கு நிகரான அமைப்புகள் ஊடாக நாங்களும் தான் உதவினோம் உதவிக்கொண்டிருக்கிறோம். பணி தொடரும் பட்சத்தில் சொல்லுங்கோ. வெண்புறாவை மீண்டும் வானத்துக்கு அனுப்பும் யோசனையில் ஆலோசனைக்குழு கூடி முடிவெடுத்த பின்னர் சொல்லுங்கோ.

ஆனால் கல்கத்தாவில் உடைக்கப்படவிருக்கும் வணங்காமண்ணை நம்பிக் கடலில் இறங்கத் துணிவில்லை. மில்லியன்களை விழுங்கிய வணங்காமண் கல்கத்தாவில் உடையப்போகிறது அநியாயமாக யாராவது காப்பாற்றுவினமோ ?

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

நேசக்கரம் ஊடாக செய்யலாம் கலைஞன். ஆனால் நேசக்கரத்தில் இருந்தவர்கள் பலர் விலகியுள்ளார்கள். ஆட்களை இணைத்துச் செயற்பட மீண்டும் நேசக்கரத்தில் பங்காற்றியோர் முன்வந்தால் தொடர்ந்து செய்வோம். மற்றும் நேசக்கரம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குத் தொல்லை குடுப்பதா என யோசிச்சிட்டு பழைய நேசக்கர உறவுகள் யாருக்கும் தனிமடல் இடவில்லை.

உங்களுக்கு தனிமடல் இடுகிறேன். இதுதொடர்பான விபரங்கள்.

Link to comment
Share on other sites

அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற
Link to comment
Share on other sites

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

வணங்காமுடி,

உங்களுக்குத் தனிமடல் இட முயற்சித்தேன். முடியவில்லை. எனத மின்னஞ்சல் குறிப்பிடுகிறேன். தொடர்பு கொள்ளுங்கள்.

எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com

தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

தேவைகளைப்புரிந்தமைக்கு நன்றி ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

நான் எனது குடும்ப உறவினர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிவு செய்துள்ளேன்.

எதற்கும் அவர்கள் மன உறுதியும் மனை உறுதியும் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------?

Link to comment
Share on other sites

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

நான் எனது குடும்ப உறவினர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிவு செய்துள்ளேன்.

எதற்கும் அவர்கள் மன உறுதியும் மனை உறுதியும் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------?

குமாரசாமி,

ஏற்கனவே நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த பங்களிப்புக்கள் பலருக்கு உதவியதை இக்கணம் நன்றியுடன் நினைவு கூருகிறேன். நீங்கள் இம்முறை எங்களுடன் இணைந்து உதவவில்லையென யோசிக்காதீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களுக்கு நீங்கள் உதவுங்கள். எப்படியாயினும் அந்த மக்களுக்கு உதவிகள் போய்ச்சேரட்டும்.

எப்போதுமே தமிழ்க்குணம் நன்மைகளுக்கு நடுவில் இப்படிக் கக்குவது வளமைதானே அப்படி எடுத்துக்கொள்வோம் இங்கு வரும் நளின நக்கல்களை.

ஒரு தலைவனின் தலையில் சுமை முழுவதையும் போட்டுவிட்டு தப்பித்த தைரியம் இப்போது இவர் வருவார் என்று மேலும் அந்தத்தெய்வத்தின் தலையிலேயே அனைத்தையும் இறக்க முடிவுபோல உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த இடத்தில் உதவி செய்ய விரும்புபவர்களிடம் நானும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்!

தாயகத்தில் முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் எமது சொந்தங்களின் பிள்ளைகள், உறவினர்கள், அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் தங்கி படித்தோர் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழத்தில், பல்வேறு துறைகளில் தமது கல்வியை தொடரமுடியாத நிலையிலிருக்கின்றனர்.

தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் முகாம்களுக்குள் தொழிலின்றி முடக்கப்பட தமது பாடங்களுக்கான, செலவுகளையோ, அறை வாடகை, புத்தங்கள் என்பவற்றை பெறவோ முடியாமல் அல்லல்ப்படுகின்றனர்.

அதிகமானவர்கள், இறுதியாண்டில் இருப்பதால் அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை எமது இந்த திட்டன் கீழ் 300 வரையாக பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்தம் 3000 தொடக்கம் 5000 வரை தமது தேவைக்கு ஏற்றளவு கோரியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 230 மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Link to comment
Share on other sites

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

நுணாவிலான்,

நேசக்கரம் மூலமான பங்களிப்பு பற்றி நாற்சந்தியில் எழுதியுள்ளேன். அதில் பலர் தமது கருத்துக்களை கூறியுள்ளார்கள். கனடிய நண்பர்கள் கலைஞனுடன் தொடர்பு கொண்டால் கலைஞன் மேலதிக விபரங்களைத் தருவார்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

மனமிருந்தா உதவுங்கோ என்ற தலைப்பில் உதவி கோரி 2மாதங்கள் முடிவடைந்த நிலையில் மீளவும் இத்திரியை ஞாபகம் கொள்ள வைக்கிறேன். பலர் பல கேள்வி கேட்டார்கள். உதவியது சிலர்தான். அவர்களது உதவிகளுக்கு நன்றிகள். உதவிய அனைவருக்கும் பயனடைந்தோரின் படங்கள் விபரங்களுடன் தனிமடலிடப்படும். சிறு அணில்களாக செய்துள்ளோம் சிறு பங்களிப்பு. ஆனால் அது சிலருக்குப் பயன்பட்டுள்ளது.

உதவியவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உதவினார்கள். முகம் அறியோம் ஆனாலும் அவர்கள் நம்பி உதவிய உதவிகளுக்கு நன்றிகள்.

ஆலோசனைகள் முன்னுரைகள் சொன்ன எவரும் இத்திட்டத்தில் பங்கேற்கவில்லையென்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. சத்தமில்லாமல் இருந்தோரால் தான் உதவிகள் கிடைத்தது. அனைவருக்கும் நன்றிகள்.

senthil5000 ; 50டொலர் - நாணயமாற்றுச் செலவு - 2.25USD - 33,33€ கிடைத்தது

வக்தா - 25கனடியடொலர் நாணயமாற்றுச் செலவு - 1.28CAD - 14,23€கிடைத்தது.

இணையவன் 50யூரோக்கள் நாணயமாற்றுச் செலவு - 1.30€- 48.70€ கிடைத்தது.

senthil5000 - 33,33€

சாந்தி - 100யூரோக்கள்

வக்தா - 14,23€

இணையவன் 48.70€ கிடைத்தது.

கிடைத்த மொத்தத்தொகை - 196,26€

மொத்தமாக 250யூரோக்கள் அனுப்பப்பட்டது. அனுப்புக்கூலி 11யூரோ

முப்பத்து ஒன்பதாயிரத்துநூற்றுஇருபத்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.