Jump to content

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்......


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

childinpaintingqap.jpg

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்

கவிதை - இளங்கவி

அழகான இந்தச் சித்திரத்தை

அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர்

இனக்கொலையின் அலையடிப்பில்

நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....!

ஏனென்று தெரியாமல்

இறக்கும் நம் செல்வங்கள்.....

அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட

ஈழத்து நெருஞ்சி முட்கள்....

எதிரியின் கால்படும் இடமெல்லாம்

கண்டபடி குத்தி நிற்கும்....

அவன் வாழ்வின் நின்மதியை

என் நாளும் கெடுத்து நிற்கும்......

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி உங்கள் கவிதைக்குப் பொருத்தமான படம் போட்டிருக்கிறீர்கள்

கவிதை இன்றைய நிலையை, உண்மையை கூறுகின்றது.

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயாவுக்கு

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு..... நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன் எங்கள் அவலங்கலைச் சொல்வதற்காக...

Link to comment
Share on other sites

childinpaintingqap.jpg

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்

கவிதை - இளங்கவி

....

ஏனென்று தெரியாமல்

இறக்கும் நம் செல்வங்கள்.....

அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட

ஈழத்து நெருஞ்சி முட்கள்....

எதிரியின் கால்படும் இடமெல்லாம்

கண்டபடி குத்தி நிற்கும்....

....

இளங்கவி

மீண்டும் அவதானமாக சொற்களை சேர்த்து, காலத்திற்கு ஏற்ற கவி தந்தமைக்கு நன்றி இளங்கவி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..நெஞ்சிலே கனன்று கொண்டிருக்கும் தீயாக எம் சந்ததி தோறும் கனன்று எழவேண்டும்.........எமது மண் ........எமது நிலம் ..........எனது இனம் .......

எனது மொழி ..........என்று .இது அணையும் நெருப்பு அல்ல பற்ற வைக்க பட்ட தீயாக .......தற்போது நெஞ்சங்களிலே கனன்றாலும் இனி

வரும் காலங்களில்........கொழுந்து விட்டு எரிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு... சொல்லச் சொல்ல மாளாத சோகம் எம் வாழ்வில் புதைந்துள்ளதுவே... தமிழர் வாழ்வில் சந்தோசம் ஏற்பட்டு அதைச் சொல்லும் காலம் வெகு விரைவில் வரவேண்டுமென்பதே எல்லோரினதும் ஆசை... மீண்டும் நன்றிகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

மனதில் எதிரி தோற்றிய இந்த மாறாத செந்தணலில் பீனிக்ஸ் பறவைபோல் எங்கள் விடுதலை தேசம் நிச்சயம் பிறந்தே தீரும்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியவனின் குண்டு...

இந்த பால் மாறாத மழலையை-என்ன

பாடுபாடு படுத்தியிருக்கிறது பாருங்கள்......

இந்த குழவியின் இரத்தத்தாலலேயே....

அதற்கே எத்தனைவிதமான சித்திரங்கள்...

பிரியமுடன்:யாயினி கனா. :rolleyes:

Link to comment
Share on other sites

கவிதைக்கு ஏற்ற படத்தை போட்டு கண் கலங்க வைத்து வீட்டீர்கள்... காலத்திர்க்கு ஏற்ற கவிதை குடுத்து இருக்கிறிர்கள் நன்றி... தொடர்ந்து எழுதுங்கள் நம் இழப்புகளை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

என் வரிகளுக்கு எழுதிய பதிலில் உங்களின் வலிகளையும் சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றால் போல் படம் போட நினைப்பதுண்டு ஆனால் நேரம் கிடைப்பதில்லை, இனி முயற்சிக்கிறேன்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.