Jump to content

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஈழத்தமிழர்களிற்கு சேகரித்த உணவுப்பொருளுங்களையும் மருந்துகளையும் ஈழத்திற்கு அனுப்ப விடாமல் தடைசெய்து விட்டு பின்னர் நெடுமாறன் அவங்க உண்ணா விரதம் இருந்தப்போ பொருட்களை ஈழத்திற்கு அனுப்ப ஒரு வார காலத்தில் ஒழுங்கு செய்யிறோமின்னு சொல்லி வாக்குறுதி கொடுத்திட்டு அப்படியே கிடப்பில் போட்டவரும்.. பின்னர் தானே 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திட்டு இலங்கையில் போர் முடிந்து விட்டது என்னு அறிக்கை விட்ட கருணாநிதியை பத்தித்தானே இங்கு எழுதியிருக்கீங்க.. அவரு நிச்சயம் ஏதாவது செய்வார்..அப்படியே எதிர்பாத்து காத்திருந்தே செத்துப்போயிடுங்க..

என்ன ஒரு பாசம் , தமிழர் சாவதில் .......... :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜினி இரா,

உங்களுக்கு தேவையானவற்றை கோடிட்டு மகிழ்ந்திருக்கிறீர்கள். ஒன்று நன்றாகப்புரிகிறது 'வணங்கா மண்' தனது நோக்கததை நிறைவேற்றிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்கிறீ்ர்கள் என்பது . அந்த எண்ணத்துடன் இருந்தால் எதை எழுதினாலும் இப்படித்தான் இருக்கும். வணங்கா மண் திட்டத்தின் நோக்கம் பற்றி எழுதியிருந்தேன், அதில் ஒன்று பிழைத்தாலும் மற்றொன்று நிறைவேறும் என்றும் எழுதியிருந்தேன். எந்த இடத்திலும் கப்பல் போய் சேராது என தெரிந்து கொண்டு அனுப்பியதாக எழுதவில்லை. ஆனால் இத்திட்டலிருந்த ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை மறைக்கத் தேவையில்லை.

ஒரு நாடில்லாத தேசிய இனம், அதுவும் எண்ணி்க்கையில் குறைந்த மக்கள் தொகுதி, ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது அத்தனை இலகுவானதல்ல. அதுவும் செயற்திறனுடைய பத்துப்பேரையும் சாய்மனைக்கதிரை விமர்சகர்கள் 100 பேரையும் வைத்துக் கொண்டு செய்வது மிகவும் கடினமானது.

"As you may have seen, I have also written to the Sri Lankan High Commissioner calling on Sri Lanka to allow the Captain Ali mercy ship to unload its cargo of humanitarian aid. This ship was not allowed to dock in Sri Lanka. The Government of Sri Lanka said this was due to problems with its papework, but given the terrible conditions in the internment camps, I think an exception should be made."

மேற்கண்டவை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்திலிருந்தவை. இது போல வேறும் சில பிரித்தானிய அரசியல் தலைவர்களும். தொண்டு நிறுவன அதிகாரிகளும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடத்தார்கள். இவ்விதம் கப்பலில் மனிதாபிமான உதவி அனுப்பது ஒரு முட்டாள்தனமான விவகாரம் என அவர்கள் கருதியிருந்தால், அவர்கள் தங்கள் நேரத்தை வீணடித்திருக்க மாட்டார்கள்.

கருணாநிதி கூட இதுவிடயத்தில் தனது அக்கறையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். சொந்த சகோதரர்களின் துன்பத்திலும் இன்பம் காண்கிற வக்கிரப்பேர்வழிகளை விட, இந்த அரசியலவாதிகளே மேல் எனக் கூறலாம்.

இந்ததெண்டு நிறுவனம் தவறு செய்வது இதொண்ணும் முதல் தடைவை இல்லியே.. ஏற்கனவே பெரிய விளம்பரத்தோடை ஈழத்தில் ஊனமுற்றவர்களிற்காக செயற்கைக் கால்கள் வழங்கப்போறமுன்னு மண்டபம் எடுத்து நிகழ்ச்சியெல்லாம் செய்து பணம் சேத்து செயற்கை கால்களும் வாங்கி அனுப்பினாங்க அதிலை ஒண்ணுகூட எங்களோடை உறவுகளிற்கு போய் சேரலை என்கிறது எத்தினை பேருக்கு தெரியும் ..அத்தனை செயற்கை கால்களும் சிங்களவனுகக்கே போய் சேந்தது.. இது உண்மையான விடயமுங்க வேணுமின்னா அந்த நிறுவனம் சம்பத்தப்பட்ட யாரிற்காவது போனை போட்டு கேட்டுப்பாருங்க..அது மட்டுமில்லீங்க யெர்மனியிலை அதே நிறுவனம் 6 மாத்திற்கு முன்னாடி ஈழத்தமிழரிற்கு உணவு அனுப்புறோமின்னு ஒரு பட்டியலும் தயார்பண்ணி பொருள்களை சேமித்து கொண்டுபோய் பேர்லிலை உள்ள தமிழர்களோடை வீடுகளில் நிலவறைகளிலையும் கார்கராஜ்சுகளிலேயும் கிடந்து இன்னிக்கு ரைக்கும் இழுபடுது...இதெல்லாம் யார் கேகக்கிறது...கடைசியா நீங்க சொன்னமாதிரி அரசியல் வாதிங்:க மேல்தான்..அதுதான் நீங்களும் அரசியல் வாதியாயிடலாமுன்ணு படாத பாடு படுறிற்க பாரிசிலையெல்லாம் இரகசிய சந்திப்பு நடத்துறீங்க.. ஏதோ நல்லது நடந்தா சரிங்க ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தக் கப்பலுக்குக் கோமாளித்தனமான பெயரை வைத்து விளம்பரஞ்செய்து பேய் வேலையளப் பார்க்காமல் ஒரு சர்வதேச உதவி நிறுவனத்துடைய அனுசரணையோட சேர்த்த சாமான்னகளை அனுப்பியிருந்தால் அது உரியமுறையில் போய்ச் சேர்ந்திருக்கும். இந்த நாடகத்தனந்தான் எல்லாத்தையும் கெடுத்தது. டான்ஸ் ஆடி ஆடிப் பிச்சை போடப்போனதுபோல புதினங்காட்டியிருக்கத் தேவையில்லை. இதுபற்றிய கருத்தை ஆரம்பத்திலேயே எழுதியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

என்ன ஐயா உங்களுக்கு இப்ப பிரச்சினை ??

கப்பலுக்கு வணங்காமண் என்று பெயர் வைத்ததாலய அவன் உள்ளே விடல ...

குறை சொல்லி சொல்லியே இனத்தை சாகடிப்போம் ....நானும் செய்யமாட்டன் மற்றவனையும் செய்ய விடமாட்டன் ...வேறு எவனாவது அதனை செய்ய நினைத்தால் குறை சொல்லியே தடுப்பேன் , ஆக மிஞ்சினால் காடிக்கொடுப்பேன் ....பாழப் போன பரதேசித் தமிழனல்லவா நான் ....

Link to comment
Share on other sites

இந்ததெண்டு நிறுவனம் தவறு செய்வது இதொண்ணும் முதல் தடைவை இல்லியே.. ஏற்கனவே பெரிய விளம்பரத்தோடை ஈழத்தில் ஊனமுற்றவர்களிற்காக செயற்கைக் கால்கள் வழங்கப்போறமுன்னு மண்டபம் எடுத்து நிகழ்ச்சியெல்லாம் செய்து பணம் சேத்து செயற்கை கால்களும் வாங்கி அனுப்பினாங்க அதிலை ஒண்ணுகூட எங்களோடை உறவுகளிற்கு போய் சேரலை என்கிறது எத்தினை பேருக்கு தெரியும் ..அத்தனை செயற்கை கால்களும் சிங்களவனுகக்கே போய் சேந்தது.. இது உண்மையான விடயமுங்க வேணுமின்னா அந்த நிறுவனம் சம்பத்தப்பட்ட யாரிற்காவது போனை போட்டு கேட்டுப்பாருங்க..அது மட்டுமில்லீங்க யெர்மனியிலை அதே நிறுவனம் 6 மாத்திற்கு முன்னாடி ஈழத்தமிழரிற்கு உணவு அனுப்புறோமின்னு ஒரு பட்டியலும் தயார்பண்ணி பொருள்களை சேமித்து கொண்டுபோய் பேர்லிலை உள்ள தமிழர்களோடை வீடுகளில் நிலவறைகளிலையும் கார்கராஜ்சுகளிலேயும் கிடந்து இன்னிக்கு ரைக்கும் இழுபடுது...இதெல்லாம் யார் கேகக்கிறது...கடைசியா நீங்க சொன்னமாதிரி அரசியல் வாதிங்:க மேல்தான்..அதுதான் நீங்களும் அரசியல் வாதியாயிடலாமுன்ணு படாத பாடு படுறிற்க பாரிசிலையெல்லாம் இரகசிய சந்திப்பு நடத்துறீங்க.. ஏதோ நல்லது நடந்தா சரிங்க ..

நீங்கள் ஏதாவது காசு குடுத்தீங்களா? தொண்டு நிறுவனத்துக்கு காசு குடுக்கிறது நம்பிக்கையின் அடிப்படையில. நம்பிக்கையோட குடுக்குறவை அந்தக் காசு பற்றிக் கவலைப்பட மாட்டினம். அதுமாதிரி ஒருதடவை ஏமாந்தால் இன்னொரு தடவை குடுக்க மாட்டினம். அப்பிடி குடுத்தாலும் அது உங்கட பிரச்சினை இல்லை.

நீங்கள் அவையள் ஏற்கனவே கனக்க தரம் பிழை விட்டதா சொல்லுறீங்கள். ஆனால் சனம் இன்னும் அவைக்கு காசு குடுக்குது. ஆக பிழை உங்களின்ர குற்றச்சாட்டிலயா அல்லது சனத்திலையா?

Link to comment
Share on other sites

நீங்கள் ஏதாவது காசு குடுத்தீங்களா? தொண்டு நிறுவனத்துக்கு காசு குடுக்கிறது நம்பிக்கையின் அடிப்படையில. நம்பிக்கையோட குடுக்குறவை அந்தக் காசு பற்றிக் கவலைப்பட மாட்டினம். அதுமாதிரி ஒருதடவை ஏமாந்தால் இன்னொரு தடவை குடுக்க மாட்டினம். அப்பிடி குடுத்தாலும் அது உங்கட பிரச்சினை இல்லை.

நீங்கள் அவையள் ஏற்கனவே கனக்க தரம் பிழை விட்டதா சொல்லுறீங்கள். ஆனால் சனம் இன்னும் அவைக்கு காசு குடுக்குது. ஆக பிழை உங்களின்ர குற்றச்சாட்டிலயா அல்லது சனத்திலையா?

:(:lol::lol: :

டங்கு சனம் செருப்புக்கு காசு கேட்டாலும் கொடுக்கின்றார்கள்.அவர்கள் தங்களுடைய இனத்துக்குதானே என்று திரும்பவும் கொடுக்கின்றார்கள். க.பொ.த உயர்தரத்தில் நீங்கள் முதலாம் தடவை சித்தியடையவில்லையென்றால் அடுத்த தடவை முயற்சி செய்வீர்கள்தானே? அதுபோலதான் இதுவும். சேர்க்கின்ற செருப்புக்கள் எல்லாம் யார் கால்களுக்கு அளவாகின்றதோ? :lol::lol::lol: :

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol: :

டங்கு சனம் செருப்புக்கு காசு கேட்டாலும் கொடுக்கின்றார்கள்.அவர்கள் தங்களுடைய இனத்துக்குதானே என்று திரும்பவும் கொடுக்கின்றார்கள். க.பொ.த உயர்தரத்தில் நீங்கள் முதலாம் தடவை சித்தியடையவில்லையென்றால் அடுத்த தடவை முயற்சி செய்வீர்கள்தானே? அதுபோலதான் இதுவும். சேர்க்கின்ற செருப்புக்கள் எல்லாம் யார் கால்களுக்கு அளவாகின்றதோ? :lol::lol::lol: :

ஒவ்வொரு திட்டத்திற்கும் பணம் கொடுத்தபடியால் தான் கவலைப்படுறன்..எதுவுமே கொடுக்காமல் புளுகிதிரியலைங்க..எல்லாத்திற

்குமே தலையாட்ட நாங்க ஒண்ணும் வலது குறைந்தாளுங்களோ அல்லது எங்க புள்ளைகுட்டிங்க வலது குறைந்ததுகளோ இல்லீங்க.. இந்த செருப்பும் உங்களிற்கு அளவாயிருக்காம் போட்டுப்பாருங்க :(:lol:

Link to comment
Share on other sites

தனி நபர் தாக்குதல்களை விடுத்து எமது மக்களின் அவலத்தில் இதயபூர்வமாக செயற்படுங்கள் சகோதரர்களே. எம்மை தவிர யாரும் உதவ போவதில்லை என்ற நிலையில் நாமே எம்மை தாக்கி கொண்டால் பாதிக்கப்படுவது எமது இனம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்காமண் சென்னையில் நங்கூரமிட்டுள்ளது. தற்போதைய கப்பலின் நிலவரம் குறித்து அக்னி சுப்ரமணியம் தரும் ஒலிவடிவிலான தகவல் http://www.tamilnewscenter.com/audio/

Link to comment
Share on other sites

இந்த தலைப்பில் ஆளையாள் குடும்பியை பிடித்து இழுபறிப்பட்டு இருந்தாலும்.. பலவிதமான கருத்துக்களை, தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது.

வணங்காமண் கப்பல் உண்மையில் புலம்பெயர் தமிழருக்கு சிறீ லங்கா அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ள ஓர் சவால்தான். கேவலம் ஆகக்குறைந்தது ஓர் கப்பலில் பொருட்களை ஏற்றி தாயகத்தில் சேர்ப்பிப்பதற்கு ஆற்றல் இல்லாத புலம்பெயர் மக்களாகிய எங்களால் எப்படி தாயக மக்களிற்கு விடிவை பெற்றுக்கொடுக்க முடியும்?

நாங்கள் செல்லவேண்டிய பயணம் எவ்வளவு தூரம் மிகவும் நீண்டது மற்றும் கடினமானது என்பதற்கு வணங்காமண் ஓர் சாட்சி.

Link to comment
Share on other sites

கலைஞன் இதன் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா? உலக நாடுகள் சில அழுத்தங்களை தரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இடம் பெறவில்லை. வழமையாக 50000 மக்கள் கொல்லப்பட்ட போது உலகம் பார்த்து கொண்டிருந்தது. ஆற்றல் எம்மிடம் இருந்த படியால் தான் இவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடிந்தது. ஏதோ மெயிலில் அனுப்பிய கடிதம் வீட்டுக்கு போகவில்லை என்பது போல் "பேரிச்சம்பழம், செருப்பு போன்ற தலைப்புகளால் எம்மை நாமே சிறுமை படுத்தி கொள்கிறோம். தமிழர் வரலாறில் இப்படி ஒரு சம்பவம் முதலாவது தடவையாக நடந்துள்ளது. அடுத்த முறை எப்படி சரியாக நடாத்தலாம் என்று ஆராய்வதை விட்டு விட்டு நக்கல் நளினம் விடுவதால் நாம் கீழ் நோக்கி தான் செல்ல முடியும்.

Link to comment
Share on other sites

கலைஞன் இதன் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கவில்லையா? உலக நாடுகள் சில அழுத்தங்களை தரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இடம் பெறவில்லை. வழமையாக 50000 மக்கள் கொல்லப்பட்ட போது உலகம் பார்த்து கொண்டிருந்தது. ஆற்றல் எம்மிடம் இருந்த படியால் தான் இவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடிந்தது. ஏதோ மெயிலில் அனுப்பிய கடிதம் வீட்டுக்கு போகவில்லை என்பது போல் "பேரிச்சம்பழம், செருப்பு போன்ற தலைப்புகளால் எம்மை நாமே சிறுமை படுத்தி கொள்கிறோம். தமிழர் வரலாறில் இப்படி ஒரு சம்பவம் முதலாவது தடவையாக நடந்துள்ளது. அடுத்த முறை எப்படி சரியாக நடாத்தலாம் என்று ஆராய்வதை விட்டு விட்டு நக்கல் நளினம் விடுவதால் நாம் கீழ் நோக்கி தான் செல்ல முடியும்.

இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன்.... நன்றி நுணாவிலான்!

Link to comment
Share on other sites

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு

திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST]

சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் இன்று சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணங்காமண் குறித்து சந்தேகமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தரப்பில், என்ன மாதிரியான சந்தேகம் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்படவில்லை.

தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சகோதரி ஒருவர் தனது கருத்தினை தனது இணையத்தளத்தில் எழுதி அக்கருத்தினை வரவேற்றோ அன்றேல் எதிர்த்தோ ஓரிரு பின்னூட்டங்கள் வந்தவுடன். ஆகா இதுவும் நன்றாக இருக்கின்றதே என்பதுபோல், அதன் பின்பு யாழ் களத்தில் இணைக்கப்பட்டு இப்போது சக்கைபோடு போடுகிறது வணங்காமண் விவகாரம்.

இதே யாழ்களத்தில் ஒரு சகோதரன் புலத்தில் வாடும் தமிழுறவுகட்கு உதவிசெய்யும் வகையில் நாம் தினமும் ஒரு டாலர் வீதம் மாதம் முப்பது டாலராக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின்மூலம் பணம் அனுப்பி உறவுகளின் பசிப்பிணி தீர்ப்போம் அதேவேளை உலகநாடுகளை, போரினை நிறுத்தவும,; தமிழர்க்காக தார்மீகக் குரல் கொடுக்கவும் எமது உரிமைகளை மீட்டிட உதவுங்கள் எனவும் வோண்டுகோள் விடுப்போம் இப்படிச்செய்யுமிடத்தே எமது கோரிக்கை வலுவானதாக இருக்கும் எனக் கருத்தெழுதியிருந்தார்

அந்தவோளையில் இதேபோன்று அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு எவரும் அதற்கு ஆதரவாகப் பின்னூட்டம் எழுதவில்லை.

ஆனால் இப்போது புலி இளைத்து எலி ஆகிவிட்டதாலோ என்னவோ ஆளாளுக்கு ரொம்ப ரொம்ப உங்கள் சுயபுத்தியைக் காட்டுமாப்போல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

அதிருக்கட்டும் கடந்த முன்று தசாப்த காலமாக தமிழினம் ஆயுதம் ஏந்திப்போராடியதே, அப்போராட்டத்தின்போது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் வொடிபொருட்கள் மேலும் தொடர்புசாதனங்கள் போராளிகளின் பயிற்சி அனைத்துக்குமான செலவுகளில் கணிசமான அளவினை புலம்பெயர் தமிழ் சமூகம்தானே பங்களிப்புச்செய்தது அச்செலவுகளை அண்ணளவாகக் கூட்டிக்கழித்துப்பார்த்தால

Link to comment
Share on other sites

“எனது முயற்சசி (ஒப்பியல் நியதி) மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். முயற்சசி (நியதி) பிழையானது என்று நிரூபண மானால், பிரான்ஸ் என்னை ஜெர்மானியன் என்று ஏசும்! ஜெர்மெனி என்னை யூதன் என்று எள்ளி நகையாடும்! “

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண் கப்பலுக்குள் நுழைந்த கருப்பாடு!

இத்தனை நாட்களாக ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம் மற்றும் அரசியல் காரணங்களால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணங்கா மண், சென்னை துறைமுகத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நுழைந்தது. இது, நிவாரணக் கப்பல்தான் என்றாலும், ஒருசிலருக்கு பல லட்சம் ரூபாய் சுருட்டும் நிதிக் கப்பலாகவும் இருக்கிறது.அதில் உள்ள நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கு மற்றொரு சரக்குக் கப்பல் மூலமாகக் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. அப்படியென்றால் கேப்டன் அலி எங்கே போகிறது? அது கொல்கத்தா துறைமுகத்தில் சுக்குநூறாக உடைத்து பழைய -இரும்புக் கடைக்குப் போகிறது. தனது கடைசிப் பயணத்தில் உலகப் புகழ் பெற்று விட்ட அந்தக் கப்பல் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உடைக்கப்படுகிறது.கப்பல் கேப்டன் முகமது முஸ்தஃபா, கப்பல் சிப்பந்தி உதயன் ஆகியோர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு விமானம் மூலம் இந்தியாவில் இருந்து பறந்து சென்று விட்டனர். எனது நண்பர்கள் சிலர் மூலமாக எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை சொல்கிறேன்:இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வரும் பட்சத்தில் அதில் உள்ள சரக்குகளை இறக்கவும், இலங்கை செல்லும் சரக்குக் கப்பலில் ஏற்றவும் ஏதாவது ஒரு ஏஜெண்டுக்கு வேலை தரவேண்டும். அந்த வேலையைச் செய்யும் ஏஜெண்டுக்கு பல லட்சம் ரூபாய் கூலி வெளிநாட்டுத் தமிழர்கள் மூலம் கிடைக்கும். ஏற்கெனவே இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் வரை வாடகை செலுத்தியது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு. இப்போது இந்த ஏஜெண்டுகளுக்கும் இலங்கை செல்லும் சரக்குக் கப்பலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் பணம் செலுத்துவார்கள்.இந்தக் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்குச் செல்ல நடவடிக்கை எடுங்கள் என்று தமிழுணர்வாளர்கள் முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் நிவாரணப் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி பெற்றிருந்த ஒரு ஏஜெண்ட் இருந்ததாகத் தெரிகிறது. பாவம் இந்த லாபி அந்த உணர்வாளர்களுக்கு உண்மையில் தெரியாது.அதிலும¢ அண்மையில் பாதிரியார் ஜெகத் கஸ்பரால் உளவாளி என்று அடையாளம் காட்டப்பட்ட ஒரு நபர், டெல்லி சென்றான். சரக்கை ஏற்றி இறக்கும் வேலைய தனக்குச் சாதகமான ஒரு ஏஜெண்டுக்குப் பெற்றுத் தர டெல்லியில் இருந்து பல லாபிகளை செய்திருக்கிறான். அதன்படியே, கப்பல் வந்து சேர்ந்த அன்று நிருபர்களை கப்பல் பக்கம் போகவிடால் தடுத்துக் கொண்டிருந்த காவல் துறையினர், அந்த உளவாளி நபரைப் பார்த்தும் சல்யூட் அடித்து மரியாதையோடு கப்பலுக்குள் அனுப்பி வைத்தனர். என் நண்பர்கள் சொல்கிறபடி பார்த்தால் பாதிரியர் கஸ்பர் சொன்ன அந்த நபர் ஒரு ‘மாமா பையன்’ என்று தெரிகிறது.உலகத் தமிழர்கள் உரிமைக்காகப் போராடுவதை சில கருப்பாடுகள் காசு பார்க்கப் பயன்படுத்திக் கொள்கின்றன!

ஆதாரம் -http://ponnusamypalani.blogspot.com/2009/0...og-post_03.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண் கப்பலுக்குள் நுழைந்த கருப்பாடு!

அப்படியென்றால் கேப்டன் அலி எங்கே போகிறது? அது கொல்கத்தா துறைமுகத்தில் சுக்குநூறாக உடைத்து பழைய -இரும்புக் கடைக்குப் போகிறது. தனது கடைசிப் பயணத்தில் உலகப் புகழ் பெற்று விட்ட அந்தக் கப்பல் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உடைக்கப்படுகிறது.கப்பல் கேப்டன் முகமது முஸ்தஃபா, கப்பல் சிப்பந்தி உதயன் ஆகியோர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு விமானம் மூலம் இந்தியாவில் இருந்து பறந்து சென்று விட்டனர்.

வணங்காமண் கப்பல் பேரீச்சம் பழத்துக்குப் போகுது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Pathivu Toolbar ©2009thamizmanam.com

நாளை எழப்போகும் வணங்காமண்ணை தமிழக மண் வணங்கும்.

ஒரு படுகொலைக்காக ஒரு இனத்தையே சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டது. முகாம் பெயரால் சொந்தமண்ணின் மைந்தர்கள் அகதி முகாம்களின் முள்வேளிகளுக்கு பின்னால்.

· தாய் மண்ணுக்கான இடர் உதவிப் பொருட்களோடு வந்த வணங்காமண் கப்பலை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. பல நாட்கள் நடுக்கடலில் தவித்த நிலையில் இருந்த வணங்காமன் கப்பல்.....

சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் அனைத்து பொருட்களும் இலங்கைக்கு செல்ல ஆவணச் செய்யப்பட்டுள்ளதாக கலைஞர் தொலைக்காட்சியும் மற்ற ஊடகங்களும் வெற்றிச்செய்தியாக அறிவித்த்து.

“தவித்த வாயிக்கு தண்ணீர் கொடு “ என்பார்கள். இங்கும் தண்ணீர் கொடுத்து இருக்கிறார்கள். 1 இலட்சம் கட்டணத்தை பெற்றுக்கொண்ட பிறகே தண்ணீரின்றி தவித்த பணியாளர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

இது தான் கலைஞரின் வெற்றியா?

இத்துறை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கையில் உள்ளது ? பச்சைத்தமிழன் மீண்டும் மீண்டும் துறோகத்தை நிருபித்துக் கொண்டே இருக்கிறான்.

சிங்கள அரசு பெற மறுத்த பொருட்களை ஏற்றி அனுப்பும் செலவை ஏற்றுக் கொள்ள இந்திய அரசு மறுத்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. ஆகும் செலவை ஐரோப்பிய தமிழர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இத்துறை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அமைதிகாக்கிறார். இது சோனியாவின் அமைதி. கலைஞரின் அமைதி.

*

· ஒர் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இப்படுகொலைக்கு எந்தவித வெளியுறவு கொள்கையும் இல்லை. சோனியாவின் துயரம், இராகுல் பியங்காவின் வேதனைக்கு பரிகாரம் தேடி இருக்கிறார்கள் 25 வருடகால ஈழத்தமிழின எழுச்சி மூவர்ணக் கொடி கம்பத்தின் கீழே புதைக்கப்பட்டுள்ளது.நாடற்ற ஈழமக்களின் கனவு துரோகங்களால் நசுக்கப்பட்டுவிட்டது.

*

· துரோகத்தின் தூண்களாக

சோனியாவின் அமைதி..

கலைஞரின் “ கண்டு கொள்ளாத அரசியல் “

ஜெயாவின் கயமையான ஆதரவு முழக்கம்..

வெற்று வேட்டு அரசியல் கட்சிகளின் முழக்கங்களை பார்த்து.

வணங்காமண் தமிழகத்தை விட்டு விடை பெறுகிறது.

*

· புதிய கனவுகளோடு...

புதிய அரசியலோடு...

அப்போது

நாளை எழப்போகும் வணங்காமண்ணை தமிழக மண் வணங்கும்.

ஓவியம் : வீரச்சந்தானம்

ஆதாரம் - http://anjaan1.blogspot.com/2009/07/blog-p...388998612813046

Link to comment
Share on other sites

நன்றி தற்ஸ்தமிழ்..

சென்னை: தமிழரர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை ராணுவம் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து பல தரப்பில் இருந்து வந்த நெருக்குதலையடுத்து கப்பலை தனது நாட்டுக்குள் அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால்இ அந்த நிவாரணப் பொருட்களை இறக்க இலங்கை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுமார் 884 டன் நிவாரண பொருட்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியது.

இந்தப் பொருட்களை ஏற்றிவந்த 'வணங்காமண்' என பெயரிடப்பட்ட 'கேப்டன் அலி' கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக இலங்கை கூறியது.

இதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் ஜூன் 14ம் தேதி இந்தியப் பகுதிக்கு வந்தது. அதை இந்தியாவும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு தலையிட்டதால் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர அனுமதி தரப்பட்டது.

இதையடுத்து இந்தப் கப்பலில் இருந்த நிவாரண பொருட்கள் கொழும்பு செல்லும் 'கேப் கொலரடோ' கப்பலுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து திங்கள்கிழமை இரவு புறப்பட்ட இந்தக் கப்பல் இலங்கை கிளம்பியது.

இக் கப்பல் நேற்று இலங்கை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால்இ இந்தக் கப்பலையும் இலங்கை கடற்படை தனது எல்லையில் தடுத்து நிறுத்தியது.

ஆனால் பல்வேறு தரப்பின் நெருக்குதலையடுத்து கப்பல் நுழைய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் கப்பலில் 891 கண்டெய்னர்கள் உள்ளன. இதில் 27 கண்டெய்னர்கள் மட்டுமே நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்டவை. மற்றவை கொழும்பில் இருந்து வேறு கப்பல்கள் மூலம் அமெரிக்காஇ ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டியவை.

எனவே கப்பல் நுழைவதில் தாமதம் ஏற்பட்டால் பல்வேறு வர்த்தக சிக்கல்கள் ஏற்படும். இதற்கு இலங்கை மீது அமெரிக்க-ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்று கப்பல் நிறுவனம் கூறியதையடுத்து கொழும்பில் நுழைய அனுமதி தரப்பட்டுள்ளது.

ஆனால் இதில் உள்ள பிற நாட்டு சரக்குகளை மட்டும் மற்ற கப்பல்களுக்கு மாற்ற அனுமதித்துவிட்டு நிவாரணப் பொருட்கள் அடங்கிய 27 கண்டெய்னர்களையும் இலங்கை கிடப்பில் போட்டுவிடும் என்றே தெரிகிறது.

இதனால் இந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேருவது நிச்சயமில்லாததாகியுள்ளது.

தமிழக அரசும்இ மத்திய அரசும்இ செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டு நெருக்கடி தந்தால் ஒழிய இலங்கை இந்த நிவாரணப் பொருட்கள் கெட்டுப் போகும் வரை துறைமுகத்திலேயே போட்டு வைக்கப் போவது மட்டும் உறுதி.

Link to comment
Share on other sites

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள் நின்ற அந்த மக்கள்கூட வணங்காமண்ணைப் பெரிதும் நம்பினர். தனது உறவுகளைப் பலிகொடுத்த ஒரு இளைஞன் கண்ணீரோடு கப்பல் வருமா எங்களைக் காக்குமா எனக் கதறியது எங்கள் எல்லோரையும் அழ வைத்தது.

புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் இந்தக் கப்பல் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மட்டுமல்ல ஒர் உணர்வு கலந்த உதவிகளை அனைத்துத் தமிழர்களும் ஓடியோடிச் செய்தது மட்டுமல்லாமல் வளமை போல் தம்மைத் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் முதலாக பிரபல ஆய்வாளர்கள் வரை, இந்தக் கப்பல்தான் முல்லைத்தீவில் முடக்கப் பட்டிருந்த பல இலட்சம் மக்களினதும் மீட்புக் கப்பல் என்பதைப்போல பேசியும் எழுதியும் கொண்டிருந்தனர்.

அவையெல்லாம் அந்தக் கப்லின் பயணத்திற்கான விபரங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அதற்கான உதவிகளைப் பெறுவதே நோக்கமாக இருந்தது .எனவே அதில் தவறு சொல்வதற்கில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடனும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் இந்தத் திட்டத்தினைத் தொடக்கியவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கத்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையரசினாலும் மற்றும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்ததனால் எந்தவொரு கப்பல் நிறுவனமும் இவர்களுக்குக் கப்பலை வாடைகைக்குக் கொடுக்க முன்வரவில்லை.அது மட்டுமல்ல சர்வதேசத் தொண்டு நிறுவனங்களோ செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவிகளோ கிடைக்க முன்னரே சட்ட வல்லுனர்களின் உதவியுடன் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டங்களிற்கமைய , அதே நேரம் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் , அதன் உறுப்பினர்களுடனும் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றுடனும் தான் இந்தக் கப்பல் புறப்படும் என்றும் சொல்லப்பட்டது. எனவே இலங்கையரசு இந்தக் கப்பலைத் தடுத்தாலும் சர்வதேச நாடுகளும் உதவி அமைப்புக்களும் இலங்கையரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்ஆகவே அது கூட எமது போராட்டத்திற்கான ஒரு பரப்புரையாக அமையும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்களினால் மக்களிற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது. எனவே மக்களும் தங்கள் உறவுகளுக்கு எல்லாம் போய்ச்சேரப்போகிறதென நம்பிப் பணமாகவும் பொருட்களாகவும் போதும் வேண்டாம் என்று சொல்லும் வரை அள்ளிக் கொடுத்தனர்.

பணம் பொருட்கள் எல்லாம் தயாரான பின்னரும் கப்பல் தயாராகாததால் கப்பல் பறப்படுமா இல்லையா என்றொரு குழப்பம் இருந்தது. பணம் கொடுத்த மக்கள் ஊடகங்களில் நேரடியாகவே தங்கள் கோபங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர். மக்களின் கோபத்தினை திசை திருப்புவதற்காக பிரான்சிலிருந்து ஒரு கப்பலும் யெர்மனியிலிருந்து ஒரு கப்பலும் பறப்படுவதற்கு தயாராகின்றது என்று பரபரப்புக் கதைகளைப் பரப்பிவிட்டபடியே ஒருவாறு பழைய கைவிடப்படவேண்டிய நிலையிலிருந்த *கப்டன் அலி* என்கிற சிரிய நாட்டுக் கப்பலைப் பல இலட்சம் யுரோக்களிற்கு விலைக்கு வாங்கி அதில் 800 தொன் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு பின்லாந்து நாட்டுக்காரரின் தலைமையில் ஒரு தமிழர் உட்பட கப்பல் ஊழியர்கள் 13 பேருடன் வணங்காமண் கப்பல் கடலில் நகரத் தொடங்கிய பொழுது முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாய் இருந்த அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டிருந்தனர்.

இந்தக் கப்பலின் எற்பாட்டாளர்கள் கூறியது போல கப்பலில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ வைத்தியர் குழுவோ இருந்திருக்கவில்லை.கப்பலும் இலங்கையரசினால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு கப்பலில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை மருந்துகளும் உணவுப் பொருட்கள் மாத்திரமே உள்ளது ஆனாலும் அதனைப் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்குக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று திமிராகக் கூறிவிட்டுக் கப்பலையும் திருப்பி அனுப்பிவிட்டது.

பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்த மக்களின் எதிர் பார்ப்பின்படி எந்தப் பொருட்களும் எமது உறவுகளிடம் சென்று சேரவுமில்லை அதே நேரம் ஏற்பாட்டாளர்கள் கூறியதைப் போல எந்தப் பரப்புரையும் நடக்கவுமில்லை. எந்தவொரு நாடும் ஏன் எந்தவொரு மனிதவுரிமை அமைப்புக்கூட ஒரு கண்துடைப்புக்கேனும் ஒரு கண்டனத்தைக்கூட வெளியிடவில்லையென்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். காரணம் இதன் எற்பாட்டாளர்கள் சர்வதேச ரீதியான ஆதரவினைப் பெற்றுக் கொள்ளாததும். சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட புலிகளின் உப அமைப்பு எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் இதனை ஏற்பாடு செய்ததுமேயாகும்.

அது மட்டுமல்ல கப்பல் இலங்கையிலிருந்து திருப்பப்பட்டதும் அதில் உள்ள பொருட்களையாவது பொறுப்பெடுத்து பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கும்படிதொண்டு நிறுவனங்களிடமும் சில இந்திய(தமிழ்நாட்டு)அரசியல் வாதிகளிடமும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. தங்களுக்கும் புலிச்சாயம் அடிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் யாரும் பொறுப்பெடுக்க முன்வராததால் கப்பல் தற்சமயம் இந்தியாவின் கல்கத்தா துறைமுகம் நோக்கிப் பயணித்தபடி இருக்கின்றது.

கல்கத்தா சென்றடைந்ததும் கப்பலில் உள்ள பொருட்களை யாரோ ஒருவர் ஏலத்தில் எடுக்கப்போகிறார் , மீதி கடலில் எறியப்படும் , கப்பலும் பழைய கப்பல்கள் உடைக்கும் ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டு உடைக்கப்பட்டு கல்க்கத்தாவில் உள்ள கலாயன் கடைகளில் விலைக்குப் போடப்படும்.

இங்கு உடைபடப்போவது வணங்காமண் என்கிற கப்பல் மட்டுமல்ல , புலம்பெயர் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் , உணர்வும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் தான்.

இது யாருடைய தவறு??? இப்படி ஒரு திட்டத்தினைப் போட்டது தவறல்ல ஆனால் அதனை வழிநடத்தியவர்களின் தவறேயாகும். தங்களிற்கே எல்லாம் தெரியுமென்கிற அதிமேதாவித்தனம் , இங்கிலாந்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவுக்குரல் தந்துவிட்டால் நாடாளுமன்றமே ஆதரவு தந்துவிட்டதாகக் கட்டப்பட்ட மனக்கோட்டைகள் என எங்களது தவறான புரிதல்களும் வழிநடாத்தல்களுமேயாகும்.

பலவிடயங்கள் சட்டரீதியாக சர்வதேச விதிமுறைகளிற்கு அமையாமலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஆதரவுகளைத் திரட்டாததும் தான் காரணமாகும். இப்படி மக்களின் பணமும் , உழைப்பும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் சில புலத்து மேதாவிகளால் விணடிக்கப்படுவது இது முதல் தடைவையல்ல என்பதை எல்லோருமே அறிவார்.. ஆகவே இனியாவது இப்படியான தவறுகளை விடாதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இதற்கு மேலும் ஏமாற்றங்களைத் தாங்க எம்மால் முடியாது.

10.06.09

Link to comment
Share on other sites

வணங்காமண் நிவாரணம் மீண்டும் சிக்கல் :

இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மெர்ஷிமிஷன் என்ற அமைப்பின் மூலம் 884 டன் உணவுப் பொருட்கள் கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. பல மாதங்களாக இலங்கை கடற்பகுதியில் சுற்றிவிட்டு கடைசியில் தமிழகத்துக்கு சென்ற கப்பலை இந்தியாவும் அனுமதிக்க மறுத்தது. தமிழகத்திலிருந்து எழுந்த அழுத்தம் காரணமாக ஒரு வழியாக சரக்குகள் வேறு கப்பலில் ஏற்றப்பட்டு கொழும்பு சென்றடைந்தது அந்தக் கப்பல்.

இந்தக் கப்பலையும் ஏற்றுக் கொள்ள மறுத்த இலங்கை கடைசியில் கொழும்பு துறைமுகத்தில் பொருட்களை இறக்க சம்மதித்தது. ஆனால் இப்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கமோ ரூபாய் 32 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே பொருட்களை இறக்க முடியும் என இந்த நிவாரணப் பொருட்களுக்கு பொறுப்பு எடுத்துக் கொண்ட மனிதம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கடிதம் மேலும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

இது தொடர்பாக மனிதம் அறக்கட்டளை நிறுவனர் அக்னி சுப்ரமணியம் கூறும் போது, மெர்ஷி மிஷனின் பிரதிநிதிகளாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சென்னையில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு இப்பொருட்களைக் கொண்டு செல்லவே ரூபாய் 15 லட்சம் செலவு செய்து விட்டோம். அதை ஈடு கட்ட தமிழகத்தில் வசூலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் 32 லட்ச ரூபாய் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம். இது எங்களால் இயலாத காரியம். எனவே என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார் அக்னி.

updated - 2009-07-16

மூலம் - GTN செய்தியாளர்:

Link to comment
Share on other sites

  • 1 month later...

http://parantan.com/pranthannews/

போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளான வன்னி மக்களுக்கு, ஐரோப்பா வாழ் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் "வணங்கா மண்" (கப்டன் அலி) கப்பல் மூலம் அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருள்கள் அவர்களின் கைக்கு எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ள

Link to comment
Share on other sites

இதேநேரம், கப்டன் அலியில் கொண்டுவரப்பட்டிருக்கும் மருந்துப்பொருள்களும் தற்போது பாவனைக்கு உகந்த நிலையில் இருக்கின்றனவா அல்லது பழுதடைந்து விட்டனவா என்பது குறித்து இலங்கை சுகாதார அமைச்சு பரிசோதனைகளை நடத்தி முடிவை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கும்.

பரிசோதனைகளின் முடிவைக் கருத்தில்கொண்டே மருந்துப்பொருள்களும் அகதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்

ஜயோ தமிழ்மக்களின் மீது மகிந்த அரசுக்கு எவ்வளவு அக்கறை பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனை முடிவில் மருந்துகளும் காலாவதி யானவை என் அறிவிக்க படும். கடலில் கொட்டப்படும்.கால இழுத்த்டிப்பினால் தான் இவ்வளவும் நடந்ததன .இதற்கு பொறுப்பானவர்கள் ,இந்த அவலம் நடந்தேற பொறுப்பானவர்கள். தாகத்துக்கு தண்ணீர் இன்றி சாகவேண்டும்."தெய்வம் நின்று கொல்லும் " தெய்வங்களும் சிலையாகி விட்டன ஈழத்தமிழர் விடயத்தில்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.