Jump to content

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.


Recommended Posts

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.

Visit My Website

இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள்.

என்ன தம்பி நித்திரை வரேல்லயா ? கேட்டாள். இல்லையம்மா…அவங்கள் வருவாங்கள் போல கிடக்கம்மா….பின்கதவுப்பக்கத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

Link to comment
Share on other sites

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

Link to comment
Share on other sites

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

Link to comment
Share on other sites

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே.

வேண்டாம் இவ் வலி இனி எம்மவர்க்கு

வேண்டாம் என்றுதான் விரும்புகிறோம். ஆயினும் தொடர்கிறதே இத்தகைய நிகழ்வுகள்

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

நித்தியமாய் அவன் உறங்கிவிட்டான். அவனது அன்புக்குரிய சின்னக்காவும் உறவுகளும் அவன் நினைவில் சாகாத பிணங்களாக.... :huh:

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

ஏன் எங்களுக்கு இப்படியொரு துயரம் வந்து தொலைந்தது என அழத்தான் முடிகிறது.

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

இத்தகைய துயர்களைப் பதிவிட்டு வைப்போம். எங்கள் சந்ததி எதிர்காலத்தில் இதைத்தான் எங்களுக்கான எழுச்சியாகக் கொண்டு எழட்டும்.

Link to comment
Share on other sites

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

நுணாவிலான்,

எஞ்சியவர்கள் இன்னும் எதிரியின் கையில் உள்ளவர்கள் யாவரின் நிலையையும் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும். :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.