Jump to content

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.


Recommended Posts

சயனைட்டைச் சாப்பிட்டிட்டான்.

Visit My Website

இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள்.

என்ன தம்பி நித்திரை வரேல்லயா ? கேட்டாள். இல்லையம்மா…அவங்கள் வருவாங்கள் போல கிடக்கம்மா….பின்கதவுப்பக்கத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

Link to comment
Share on other sites

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

Link to comment
Share on other sites

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

Link to comment
Share on other sites

இழப்பின் வலியை அனுபவித்தவர்களால்தான் அதை ஓரளவுக்கேனும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நான் வேறு வலிகளுக்குப் பழக்கப்பட்டிருந்தாலும், இந்த வலி புதிது. தொடருங்கள் நண்பரே.

கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே.

வேண்டாம் இவ் வலி இனி எம்மவர்க்கு

வேண்டாம் என்றுதான் விரும்புகிறோம். ஆயினும் தொடர்கிறதே இத்தகைய நிகழ்வுகள்

நித்தியமாய் உறங்க போகும் அவன் இதய வலிகள் ........சொன்ன விதம் அழகு .

நேரில் பார்த்து போல இருந்தது பதிவுக்கு நன்றி.

நித்தியமாய் அவன் உறங்கிவிட்டான். அவனது அன்புக்குரிய சின்னக்காவும் உறவுகளும் அவன் நினைவில் சாகாத பிணங்களாக.... :huh:

இது கதையல்ல நிஜம்.... உண்மை...

வன்னியில் இருந்து தப்பி நண்பன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு வெளிநாடு ஒன்றில் சில தினங்களுக்கு முன் என் நண்பன் தற்கொலை செய்து கொண்டான்

ஏன் எங்களுக்கு இப்படியொரு துயரம் வந்து தொலைந்தது என அழத்தான் முடிகிறது.

3 மாதங்களுக்கு முன்பு சக கள உறுப்பினர் சயந்தனின் வடலி பதிப்பகத்தில் இருந்து அகிலனின் 'மரணத்தின் வாசனை' யை வாங்கி படிக்கத் தொடங்கி இருந்தன். 'ஒருத்தீ' யையும் வாசித்து விட்டு அதன் பின் மிச்சம் இருக்கின்ற சிறுகதைகளை மிக துயரமாக இருக்கு என்றதால் இப்போதைக்கு வாசிக்க கூடாது என்று முடிவெடுத்து புத்தகத்தினை மூடி வைத்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தெரிந்தவர்களின், உறவினர்களின், பழகியவர்களின் சாவு செய்தி வந்து கொண்டும் மக்கள் தொகை தொகையாக அழிக்கப் பட்டும் கொண்டிருக்கும் ஒரு சூழலில், மனம் மரத்து போய், மனவழுத்தம் அதிகரித்து இருந்த நேரத்தில் அந்த சிறுகதைக்களும் மேலும் மேலும் கடும் துயரத்தினை தந்தன என்பதால் அதனை இன்னும் 2 வருடங்களின் பின் வாசிப்பம் என்று வைத்து விட்டேன்

இப்போது சாந்தி அக்காவின் இந்த சிறுகதையை தெரியாத்தனமாக வாசித்து விட்டேன். மீண்டும் மனம் இறுகி, துயரம் மழையாக உள்ளே பெய்கின்றது. பெயர்களையும் ஊர்களையும் மாற்றி எமக்கு தெரிந்தவர்களை நிரப்பி பார்க்கும் போது இது எல்லாருக்குமான கதையாக உணரப்படுகின்றது.

இத்தகைய துயர்களைப் பதிவிட்டு வைப்போம். எங்கள் சந்ததி எதிர்காலத்தில் இதைத்தான் எங்களுக்கான எழுச்சியாகக் கொண்டு எழட்டும்.

Link to comment
Share on other sites

உண்மை கதை தான். நன்றி சாந்தி அக்கா. எஞ்சி இருக்கும் போராளிகளுக்கு , ஆயிரம் கனவுகளுடன் சென்றவர்களுக்கு இது தான் விதியா.?

நுணாவிலான்,

எஞ்சியவர்கள் இன்னும் எதிரியின் கையில் உள்ளவர்கள் யாவரின் நிலையையும் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும். :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.