Jump to content

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீர மரணம் அடைந்துவிட்டார் என்றால் ஒருமுறை சொல்லிவிட்டு அதை விட்டு விடுங்களேன். அதையேன் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். இதனால் ஏற்படப்போகும் நண்மை என்ன? சனங்களிடத்தில் மேலும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமா? இப்படி ஆளாளுக்கு நாளுக்கொரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதன் மூலம் எதுவுமே நடக்கப்போவதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் இவ்வாறான அறிக்கைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழரின் கவனத்தைக் குழப்பவென்று பரவ விடப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

ஆக வேண்டியவைகளை கவனிப்பதற்கு நாளுக்கு ஒரு அறிக்கை இப்படி வர யாழும் அனுமதித்து கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றுக்கூட உட்புக முடியாத இடங்களுக்குள் சென்று தகவல்களைச் சேகரிக்கும் புலிகளின் புலனாய்வுத்துறைக்கா அந்த அமைப்பின் தலைவர் இறந்த செய்தியை உறுதிப்படுத்த பல நாட்கள் சென்றன...? ( இராணுவத்தின் புலனாய்வுத்துறை செய்தி போல்லல்லவா இருக்கிறது)

முன்னுக்குபின் பல முரணான தகவல்கள் மிக குறுகிய காலத்தினுள் வந்துகொண்டிருக்கின்றன, இவைகளிலிருந்தே இந்தச் செய்திகளின் நம்பகத்தன்மையை அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே இப்படியான செய்திகளைக்கேட்டு போராட்டங்களில் ஈடுபடுவதை ஈடுபடுவதையும்/ ஈடுபடுபவர்களையும் குழப்பாமல் ஒரே லட்சியத்தோடு போராடுவோம் ...அது தான் தலைவரின் வேண்டுகோளும் கூட.

Link to comment
Share on other sites

ஐயோ... கடைசியில இப்ப அறிவழகன் என்று சொல்லப்படுபவரும் துரோகி என்று சொல்லப்படபோறாரோ?

புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் உயிர்தப்பினார்கள் ஆனால் தலைவரால் ஏன் தப்பமுடியவில்லை என்று கேட்பது கேணைத்தனமான ஓர் கேள்வியாக இருக்கின்றது.

புலனாய்வு என்றால் என்ன என்று முதலில் பலருக்கு அரிவரி படிப்பிக்கவேண்டி இருக்கிறது. முதலில் புலனாய்வு என்றால் என்ன... புலனாய்வாளர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி எப்படியான ரூபத்தில் இருப்பார்கள் என்பதை ஆகக்குறைந்தது புத்தகங்களிலாவது படித்துவிட்டு வாருங்கள்.

புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் உயிர்தப்பக்கூடிய சூழ்நிலையில் தலைவர் உயிர்தப்ப முடியாமல் போவது என்பது உண்மையில் 100% நடைமுறைச் சாத்தியமான சம்பவமே! ஏன் என்றால் புலனாய்வுப் பிரிவில் இருப்பவர்களின் நிலமை அப்படிப்பட்டது. அவர்கள் மக்களோடு மக்களாக இருக்கலாம். ஏன் முன்னேறிச்சென்ற சிறீ லங்கா இராணுவத்தில்கூட இருந்து இருக்கலாம்.

எனது நோக்கம் அறிவழகன் அவர்களது அறிக்கைக்கு வக்காளத்து வாங்குவது அல்ல. முதலில்... எல்லாத்தையுமே எல்லாரையுமே சந்தேகப்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். யார் என்ன சொன்னாலும்... அதை மறுத்து அதீத கற்பனை உலகில் வாழ்வது எங்கள் வழக்கம். இப்படியான அதீத கற்பனை உலகில் நாங்கள் இவ்வளவு காலமும் வாழ்ந்தபடியால்தான் இன்று இந்த நிலையில் தாயகத்தில் மக்கள் கேவலம்கெட்டு இருக்கின்றார்கள்.

இனியாவது கற்பனை உலகில் சஞ்சரிக்காது யதார்த்தத்தை உணர்ந்து நிஜ உலகில் வாழ்வோம். செய்யவேண்டிய கடமைகளை சாணக்கியமான முறையில்... உணர்வுடன் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்வோம்.

Link to comment
Share on other sites

ஆக வேண்டியவைகளை கவனிப்பதற்கு நாளுக்கு ஒரு அறிக்கை இப்படி வர யாழும் அனுமதித்து கொண்டிருக்கிறது.
.

அதெப்படி?

ஒவ்வொருக்காலும் இப்பிடி ஒருத்தன் எழுதும்போதெல்லாம் இஞ்சயம் எவராவதொருவர் அழுது வடிஞ்சு புறணி பாடிக்கொண்டுருப்பார்..

அவருக்கு எல்லாரும் சேந்து ஆறுதல் சொன்னாலும் அவரும் இல்லை என்று அடம்பிடிச்சு அழுவார்....

இந்த இலச்சனத்தில எங்க அடுத்தகட்டம் போறது... இதுக்கே கலம் சரியாக்கிடக்கு.

அழுததுபோது மூக்கை நல்ல துடைச்சுப்போட்டு உறிஞ்சிகொண்டு வேலைகளைப்பாருங்கப்பா.

Link to comment
Share on other sites

ஐயோ... கடைசியில இப்ப அறிவழகன் என்று சொல்லப்படுபவரும் துரோகி என்று சொல்லப்படபோறாரோ?

கலைஞன் அண்ணா... யார் இங்கு அறிவழகனை துரோகி என்று சொன்னது???

இது எழுதினது அறிவழகனா என்பதே சந்தேகம் பலருக்கு.. :lol:

அடுத்தது என்ன சொல்லப் போறீங்கள் என்று எனக்கு இப்பவே தெரியுது.. மீ த எஸ்கேப்... :lol:

--------

இங்கு யாருக்காவது சேது அல்லது சிவாஜினி என்ற பெயருடையவரை தெரியுமா?

Link to comment
Share on other sites

தலைவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி அழுவதும் மற்றவர்களை நம்பவைத்து அழவைப்பதுமல்ல. தலைவர் எங்களிடம் ஒப்படைத்த தாயக மீட்பு பணியினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதும் முகாங்களில் அவலங்களின் மத்தியில் வாடும் மக்களையும் போராளிகளையும் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுதலுமேயாகும். அதுவே நாம் உண்மையிலேயே எமது தலைவன் மீது வைத்துள்ள பாசத்திற்கும் மரியாதைக்கும் சான்றாகும் .

Link to comment
Share on other sites

உது வேற அறிவழகன் எண்டால் உண்மையான அறிவழகன் பொத்திக்கொண்டு இருக்கமாட்டார் தானே? மேலும்.. புதினம், தமிழ்நாதத்திலையும் உது போடப்பட்டு இருக்கிதாம்.

தமிழ்நெட்தான் முதன் முதலில் யாரோ மூத்த ஊடகவியலாளரோட தொடர்புகொண்டாராம் எண்டு அறிவழகன் என்று ஒருவரை அறிமுகம் செய்தது. ஆகக்குறைந்தது தமிழ்நெட் சொன்ன அந்த மூத்த ஊடகவியலாளர் முதலாவது அறிவழகனை உறுதி செய்யக்கூடியவராக இருப்பார். எண்டபடியால கவலைப்படாதிங்கோ.

நாங்கள் எழுப்புகின்ற ஒவ்வொரு சந்தேகமும் - கேள்விகளும்... வி.பு அமைப்பு எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதை காட்டுகின்றது. முன்பு என்றால்.. ஓர் அறிக்கைபோதும். இப்போது என்றால் ஆளை நேரில பார்த்தால்தான் நாங்கள் நம்புவம் எண்டுற நிலையில சனங்களிண்ட மனநிலை காணப்படுகிது.

சேது எண்டு தமிழ்ப்படங்களில ஒருத்தர் வாறவர். அவரையோ கேட்கிறீங்கள். சிவாஜினி எண்டுற பெயரில எனக்கு தூரத்து உறவான ஒரு அக்காவும், தங்கச்சியும் இருக்கிறீனம்.

Link to comment
Share on other sites

எத்தனை பேர் அறிக்கை விட்டாலும், தலைவர் இறந்துட்டார் என்று சொல்லிக்கொண்டு திரியிறவை வந்து கண்ணை சிமிட்டுகினம் தாங்கள் வெற்றி பெற்று விட்டினமென்று. தவைவர் இருக்கிறார் என்று உறுதியா நம்பும் நாங்கள் தொடர்ந்தும் தலைவர் இருக்கிறார் என்று நம்புவோம்/ நம்புகிறோம்.

Link to comment
Share on other sites

அடுத்த தடவை அறிக்கை விடும்போது சரியான சின்னத்தைப் பாவிக்கவும். புலி வலது பக்கமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் கருணாவுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

diltstatementtamil1page.gif

ltte_emblem.jpg

சரியான தெரிவு. மலைத்துப்போயிருப்பார்கள். அறிக்கை விட்டவர்கள்.

lttelogo.jpg

Link to comment
Share on other sites

என் தலைவனுக்காக ஒரு பாட்டாவது யாராவது எழுதமாட்டீர்களா?

கேட்கவேண்டும்போல் உள்ளது

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

எத்தனை பேர் அறிக்கை விட்டாலும், தலைவர் இறந்துட்டார் என்று சொல்லிக்கொண்டு திரியிறவை வந்து கண்ணை சிமிட்டுகினம் தாங்கள் வெற்றி பெற்று விட்டினமென்று. தவைவர் இருக்கிறார் என்று உறுதியா நம்பும் நாங்கள் தொடர்ந்தும் தலைவர் இருக்கிறார் என்று நம்புவோம்/ நம்புகிறோம்.

எவ்வளவு காலத்துக்கு நம்பப் போகிறீர்கள்? மாவீரர் தினம் வரையா?. ஒருவருடம்? 5 வருடம்?..

சாதரண போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாங்கள் தனது வாழ்க்கை முழுவதையும் எமக்காக அற்பணித்த எமது தலைவனுக்கு உரிய நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல் விட்டது சரியா? .

Link to comment
Share on other sites

எவ்வளவு காலத்துக்கு நம்பப் போகிறீர்கள்? மாவீரர் தினம் வரையா?. ஒருவருடம்? 5 வருடம்?..

சாதரண போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்திய நாங்கள் தனது வாழ்க்கை முழுவதையும் எமக்காக அற்பணித்த எமது தலைவனுக்கு உரிய நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல் விட்டது சரியா? .

எல்லோரையும் கேள்வி கேக்கவோ இண்டைக்கு கிளம்பியிருக்கிறியள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை வந்த அனைத்து அறிக்கைகளும் வெளிநாடுகளில் இருந்து வந்த அறிக்கைகள்!! இதுவரை எந்த ஒரு போராளியோ அல்லது தளபதியோ எந்த ஒரு அறிக்கையும் ஈழத்திலிருந்து விடவில்லை!! இதை கவனியுங்கள்!!

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

Link to comment
Share on other sites

இதுவரை வந்த அனைத்து அறிக்கைகளும் வெளிநாடுகளில் இருந்து வந்த அறிக்கைகள்!! இதுவரை எந்த ஒரு போராளியோ அல்லது தளபதியோ எந்த ஒரு அறிக்கையும் ஈழத்திலிருந்து விடவில்லை!! இதை கவனியுங்கள்!!

[

மட்டு அரசியல் பொறுப்பாளார் தயா மோகன் என்ன வெளினாட்டிலையா இருக்கிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அரசியல் துரையைச் செர்ந்தவர். போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் தான் உன்மை செய்திகள் தெரியும். அதை விட அவர் வெளிநாட்டிலிருந்து பத்மநாதன் விட்ட அறிக்கையை சுற்றிக் காட்டியுள்ளார்.

அதைவிட புதினத்தை தவிர சங்கதி, பதிவு அல்லது தமிழ்நெட் நேற்று வந்த அறிக்கையை வெளியிடவில்லை!

Link to comment
Share on other sites

எல்லோரையும் கேள்வி கேக்கவோ இண்டைக்கு கிளம்பியிருக்கிறியள்

எனக்கும் உங்களைப் போல தாயகத்தில் கொல்லப்பட்ட 50000 உறவுகள் மீது கவலை தான். தாயகத்துக்காக வீரமரணம் அடைந்த போராளிகள் நினைத்துக் கவலை தான். ஆனால் எம்மில் பலர் 5ம் ஈழப்போர் வெடிக்கும் என்று எழுதுவதை நினைக்க இன்னும் கவலையாக இருக்கிறது. இந்தப் போரில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது என்பது கசப்பான உண்மை. பல அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் சிங்களத்தின் கொடிய சிறையில் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல போராளிகள், அப்பாவி இளையோர் பாலியல், கொலைகள், சித்திரவாதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

நாளைக்கு நானும் அறிவழகன் என்ர பெயரில் தலைவரைப் பற்றி ஒரு அறிக்கை விடப் போரன் கட்டாயம் எல்லோரும் கருத்து எழுத வேணும், இல்லாட்டி நான் கண்ணைக் கட்டி கோபம் போடுவன், முதலில் எனக்குத் தேவை ஒரு துண்டு பேப்பர், புலிகளின் சின்னம்.

Link to comment
Share on other sites

முதலில் புலத்தில் உள்ள பூசாரிகளை "உழைத்து வாழ வேண்டும்", என்ற வாத்தியாரின் சொல்லை நடைமுறை படுத்த சொல்ல வேண்டும்!! அது நடைபெற்றால் ............ தலையென்ன ..... அடிவரை முடிந்தென்று ஒத்துக் கொள்வார்கள்!!!

அவனவன் சீவியத்தில் சீவித்தவர்களுக்கு உண்மைகள் புளிக்கும்!!!!!! என்ன செய்வது!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனக்கும் உங்களைப் போல தாயகத்தில் கொல்லப்பட்ட 50000 உறவுகள் மீது கவலை தான். தாயகத்துக்காக வீரமரணம் அடைந்த போராளிகள் நினைத்துக் கவலை தான். ஆனால் எம்மில் பலர் 5ம் ஈழப்போர் வெடிக்கும் என்று எழுதுவதை நினைக்க இன்னும் கவலையாக இருக்கிறது. இந்தப் போரில் சிங்களம் வெற்றி பெற்றுள்ளது என்பது கசப்பான உண்மை. பல அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் சிங்களத்தின் கொடிய சிறையில் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல போராளிகள், அப்பாவி இளையோர் பாலியல், கொலைகள், சித்திரவாதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்
Link to comment
Share on other sites

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Link to comment
Share on other sites

என்ன தூயா , ஒரே புழுக்கமா ?

அல்லது , இதுகளை வாசிக்க தலையை சுத்துதா ? :icon_idea:

பின்ன இருக்காதா? செம வெயில்ல “எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல...எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல...” இதையே திரும்ப திரும்ப கேட்கச் சொன்னா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.