Jump to content

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!

இளங்கவி - கவிதை

பூக்களும் பூக்காத

கந்தக பூமியாய்....

பிணங்களின் குவியலில்

நிரம்பிட்ட பூமியாய்.....

கரும்புலி வேட்டைகள்

பல நடத்திட்ட பூமியாய்....

பாய்ந்த இரத்தத்தின்

ஈரம் காயாத பூமியாய்.....

நாம் வாழ்ந்த பூமியின்று

நடுத்தெருவில் தத்தழிக்க

நாய்களும் நரிகளும்

நக்குத் தீனிக்கு அலைகிறது.....

புத்தரின் சரித்திரம்

புதைந்து கிடக்குதாம்.....

அதை புனரமைத்துக் கட்டிவிட

புத்த பிக்குகள் அலையுதாம்....

போய்விடுங்கள் இங்கிருந்து

எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது.....

நீர் விதைத்துவிட்ட விதைகளின்று

முளைப்பதற்காய் தவிக்கிறது.....

அநியாயத்தின் வெற்றி

அதிக நாள் நிலைக்காது.....

நியாயம் எங்கள் பக்கம்

நம் விடுதலையும் பொய்க்காது......

எத்தனை முறைகள் எம்மை

அடியோடு அழித்திருந்தாய்

இன்றும் இறுதியாய் ஓர்தடவை

அடியோடு அழித்துவிட்டாய்.....

நீ அழித்துவிட இதுவொன்றும்

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா....! ; அது

தமிழன் அமைதிபெற்றால்

அமைதியாய் படுத்துவிடும்....

தமிழர் அழிவு கண்டால்

சிந்தித்துப் பார்

உனக்கு விடைதெரியும்.... ?

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:unsure:

வீரமான வரிகளுக்கு 100/100!!

உங்களுக்கு நீங்களே போட்டியாக எழுதுவது போல உள்ளது...ஒவ்வொரு முறையும் உங்கள் கவித்திறமையையும் எழுத்து திறமையையும் நீங்களே வெல்கிறீர்கள்...

பாராட்டுக்கள்.... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வேலைப் பழுக்களுக்கு மத்தியிலிலும் அவ்வப்போது. சமகால நிகழ்வுகளைத் அப்படியே வடிக்கும் உங்களின் திறமையை. எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை. இளவல் இளங்கவி அவர்களே. :unsure:

பிரியமுடன்:யாயினி கனா. :unsure:

Link to comment
Share on other sites

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா

....! ;

இது இப்ப சிந்திக்க வேண்டிய விடயம்

Link to comment
Share on other sites

அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...!

இளங்கவி - கவிதை

....

நீ அழித்துவிட இதுவொன்றும்

அரையடிப் பூனையல்ல.....

அடங்காமல் பாய்ந்து நின்ற

ஆறடிப் புலியடா....! ; அது

தமிழன் அமைதிபெற்றால்

அமைதியாய் படுத்துவிடும்....

தமிழர் அழிவு கண்டால்

சிந்தித்துப் பார்

உனக்கு விடைதெரியும்.... ?

இளங்கவி

தலைப்பை பார்த்தும், ஓடிவந்து படித்தேன்... உங்கள் கவி படித்ததில் முழுத் திருப்பதி... மிகக் குறுகிய நேர இடைவெளிக்குள் மிக உணர்ச்சிபூர்வமான கவிகளை படைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

உண்மையான சில செய்திகள் படிக்கவே கசப்பாகவும், விரக்க்த்தியகவும் இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் உணர்ச்சிபூர்வமான கவிகள் என்னைபோன்று பலருக்கு மனஉறுதி தரும் என்பதில் ஐயமில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ilayapillai

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு... நீங்கள் சொன்னதும் ஒருவிதத்தில் உண்மைதான் போலிருக்கிறது... நான் கவிதை எழுத முதல் யோசிப்பது எனது முதல் கவிதையிலும் பார்க்க இது நன்றாக வரவேண்டுமென்பதே....

என்னையே நான் போட்டியாக நினைத்து எழுதுவது உண்மைதான் ஆனால் சில நேரங்களில் பிழைத்துவிடுவது உண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

கிடைக்கும் நேரங்களில் அவசரமாக கணனி முன் அமர்ந்து யோசிப்பேன் எங்கள் அவலங்களையோ அல்லது வேறு உணர்வுகளையோ எப்படி மக்களுக்கு சொல்லலாம் என்று அது வரிகளாய் வந்து விடும்....

நாட்டுக்காக எத்தனையோ தியாகங்கள் நடைபெற்ற பொழுது எனக்கு சற்று நேரம் தானே!

நன்றி உங்கள் கருத்துக்கு....

Link to comment
Share on other sites

மிகச் சரியான வரிகள்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jil

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

Link to comment
Share on other sites

அற்புதம்.........அற்புதம்.............

தமிழன் அமைதி கண்டால் அது அமைதியாய் படுத்து விடும்

உண்மை உண்மையிலும் உண்மை.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிக்கு

மிக்க நன்றி, எனது கவிதைகள் உங்களைப் போன்றோரின் உள்ளத்துக்கு மகிழ்சி அளிப்பதையிட்டு எனக்கு மிகுந்த சந்தோசம். எங்கள் முப்பது வருட வீரவரலாறு அடியோடு அழிக்கப்பட்டதாக நினைத்ததாலேயும் எங்கள் மக்களின் இழப்புக்களாலேயும் இலட்சோப லட்சம் மக்கள் மிகுந்த மன அழுத்தங்களுக்கு உள்ளான நிலையில்தான் தற்போது உள்ளனர்.

எங்கள் வீரம் அழிக்கப்படவில்லை உலக சதிகளினால் வீரர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதுவே யதார்த்தம் .மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவே இந்தக் கவிதையை தர முயன்றேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sitpi

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilmaran

இது தமிழனின் உரிமைப்போர் எமது உரிமைகளைக் கொடுத்துவிட்டால் பின்னர் போரெதற்கு....

நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இளங்கவி உங்கள் சிந்தனையும் படைப்புகளும் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

நன்றி இளங்கவி மீண்டும் ஓர் நல்ல கவிதைக்கு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவிதை மழை.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தின் வெற்றி

அதிக நாள் நிலைக்காது.....

நியாயம் எங்கள் பக்கம்

நம் விடுதலையும் பொய்க்காது.

நீதி .........தூங்குவது போல் தெரிந்தாலும் அது ஒரு நாள் பூகம்பமாய் வெடிக்கும். நசுக்க பட்ட இனம் என்றோ ஒரு நாள் விடிவை காணும்.

பாராடுக்கள் இளங்கவி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.... எப்போதும் என்னால் முடிந்தவற்றை தந்துகொண்டிருப்பேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு.... உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் என்னை மேலும் மெலும் எழுதத் தூண்டுகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி அக்கா

எங்களின் பக்கம் நியாயம் இருக்கிறது... நிச்சயம் வெற்ரி நமக்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.