Jump to content

சாமிக்கு இருக்கும் அக்கறயும்(?) தெளிவும் நமக்கு இல்லை ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் "சுயாட்சி தமிழ் மாநிலத்தை' வலியுறுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் சுயாட்சியுடைய தமிழ் மாநிலத்தை இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் என்பன இலங்கைக்கு உதவியுள்ளதாகவும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பதற்கான அரசியலமைப்பு மூலமான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தூண்டுவதற்கான தார்மிகப்

பொறுப்பு இந்த நாடுகளுக்கு உண்டு என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் சுவாமி இதனைக் கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று வியாழக் கிழமை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவும் இலங்கைக்கு உதவி வழங்கியிருந்தது. அதனால், தனது பொறுப்பையும் இந்தியா விட்டுவிட முடியாது என்றும் சுவாமி கூறியுள்ளார். "இப்போது புலிகள் இல்லை. எம்மால் தமிழருக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அங்கு சுயாட்சியுடைய தமிழ் மாநிலத்தை உருவாக்கும் தேவை உள்ளது' என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் வரை சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்காவில் தங்கியிருக்கவுள்ளார். தெற்காசியாவுக்குப் பொறுப்பான அதிகாரிகளை சந்தித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தூண்டுவதற்காக வாஷிங்டனுக்கு செல்வதென அவர் தீர்மானித்துள்ளார்.

இலங்கையானது கச்சதீவில் இராணுவத்தளம் அமைக்க திட்டமிருக்கிறது. அது இடம்பெற இந்தியா இடமளிக்கக்கூடாது.

இந்தியா இலங்கையை எச்சரிப்பது அவசியம். தனது திட்டத்தை இலங்கை முன்னெடுத்தால் கச்சதீவு உடன்படிக்கையை ரத்துச் செய்யவும் இந்தியா தயங்காது என்று எச்சரிப்பது அவசியம், என்றும் சுவாமி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்துமாறும் சுவாமி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார். சுற்றாடல் பாதிப்பை கருத்தில்கொண்டே சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்துமாறு அவர் கோரியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், சர்வதேச கொள்கலன்களைக் கையாளும் துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுமாறும் கொல்கத்தாவையும் தூத்துக்குடியையும் கரையோர ரயில் பாதைமூலம் இணைக்குமாறும் அவர் கேட்டிருக்கிறார்.

http://tamilskynews.com/index.php?option=c...4&Itemid=53

Link to comment
Share on other sites

சுப்புறுவுக்கு சும்மா சும்மா அறிக்கை விடுவது பொழுது போக்கு.

Link to comment
Share on other sites

ஹம்சா போன பிறகு என்னத்தை கதைப்பது எண்று சொல்லிக்கொடுக்க ஆள் இல்லாமல் அலையுறார் போல கிடக்கு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.