Jump to content

பாதை தெரியாத சுவடுகள். ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியாத சுவடுகள். ............

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்..

.பாக்கியம் என்னை ஏன் காப்பற்ற முயற்சி எடுத்தாய்....என்று வலியில்..புலம்புவான். ஐயா ...நீ ...காலில்லாவிடாலும்...இந்த கட்டை வேகும் வரை துணையாய் இருக்க வேணும் ...அல்லது நாம் இருவரும் ஒன்றாய் போய் விட வேண்டும் என்பாள். கணவனின் பணிவிடை முடிந்த நேரங்களில் ..அயலில் உள்ள ....வார்டு இல ஒரு சிறுமி ..பெயர் அரசி ............ஆச்சி ஆச்சி என்று ....இவளுடன் மிகவும் அன்பாக இருப்பாள்.அவளுக்கு இவளும் அந்த ஏழுவயது சிறுமிக்கு அவளுமாக இவர்கள் வாழ்கை கடந்த இரு மாதங்களாக போய் கொண்டு இருக்கிறது. அந்த சிறுமிக்கு யாரும் இல்லை

த ற்போது ...எப்ப அம்மா அப்பா என்னை பார்க்க வருவினம் என்று கேட்பாள் .

சிறுமியின் ஒரு கால் முழங்க்காலுடனும் மற்றியது கணுக்காலுடனும் அகற்ற பட்டு விட்டது ....தாதிகளின் ஏனோ தானோ என்ற புறக்கணிப்பின் மத்தியிலும் ஆச்சி தான் இவளுக்கு துணை. தன் பேரப் பிள்ளியாகவே கவனித்து வருகிறாள். காலயில்முகம் கழுவி சுத்தமாக இருக்க உதவி செய்வாள். கணவனின் உணவில் சிறிது இவளுக்கும் ஊட்டி விடுவாள். அந்த குழந்தை அடிக்கடி தாய் தந்தையை கேட்பாள்... வெளியில் விளையாட முயார்சிக்கும் குழந்தை களை ஏக்கத்துடன் பார்ப்பாள்.எத்தனை மட்டும் ஆசுபத்திரி கட்டிலே தஞ்சம் என்று இருப்ப்து. இவர்களது கல்வி போய் எதிர் காலமே கேள்விக்குறியாக உள்ளபோது ....அதைக்கூட சிந்திக்க தெரியாத இவர்கள்.........

பாக்கியம் இப்போதெலாம் அழுவதில்லை...மனம் மரத்து போய் விட்டு இருந்தது . ஒரு காலாத்தில் எம்மை ...போக சொன்னால் ...என்....ஐயா வையும் (கணவனை இப்படி தான் அழைப்பாள்) இந்த குழந்தையையும் கூடவே கொண்டு போக வேணும்....இப்பவே தாய் தந்தை யை கேட்கும் குழந்தை ...அவர்களுக்கு நடந்த அனார்த்த்தில் இருவரும் ..சதை துண்டங்களாக சிதறிபோனார்கள் ...........எனற உண்மையை எப்படிசொல்வேன் ....?எப்படி த்தாங்குவாள் ? இவளின் மூத்த இரு சகோதரர்களை எங்கே தேடுவேன் .....?. . .

குழந்தை ....பாத்ரூம் (சிறு நீர் ) போவதற்காக .....ஆச்சியை அழைத்தது ...சோகத்தின் எல்லையில் வைத்திய சாலை சுவரில் சாய்ந்து சஞ்சரித்து கொண்டவளின் சிந்தனை கலைந்தது ....இவர்களின் எதிர்காலாம்.....எதிர்பார்பாக......

.நீண்ட

........முடிவு தெரியாத வானம் போல ..........இப்படி இன்னும் எத்தனை மனிதர்கள் ......

கதை உண்மை ........பெயர்கள் கற்பனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் மிகவும் நன்றி.இவர்களின் எதிர்காலம் எம் நாட்டில் இருக்கும் வரைக்கும் ??? தான்.உங்களின் கதையை வாசித்து விட்டு அழுவதைத் தவிர வேறு ஓண்டுமே தோன்றவில்லை. :(

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி .....யாயினி .நீண்ட நாளாக மனதில் உறைந்து கிடந்த சோக கதை ..

என் இனம் படும் பாடு எழுத்தில் வடிக்க முடியாதவை ..

Link to comment
Share on other sites

நன்றி அக்கா .. கண்ணிலை கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... இப்படி எத்தனை குழந்தைகளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுஜி .........உங்கள் பாராடுக்கு .

Link to comment
Share on other sites

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெறியாத நிலையில் இப்படியான பல சோக கதைகள் ஒவ்வொறு

ஈழதமிழன் மணதிலும் புதைந்து கிடக்கு.

Link to comment
Share on other sites

பாதை தெரியாத சுவடுகள். ............

பாதைதெரியாத சுவடுகள் எம்மண்ணில் நீளமாகிக் கிடக்கிறது....துயரம் முட்டிய வாழ்வும் அவலம் நிரம்பிய நாட்களுமாக நிலாமதி யார் யாரைத் தேற்றுவதென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும்

சோகங்கள்......இதற்கு ஒரு முடிவு எப்ப வருமோ?புத்த மதம் ......மதங்களின் பெயரால் மரணித்தவர்கள் பலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளி டைகர் .......சாந்தி .......புத்தன் ...........என நன்றிகள் உங்கள் கருத்து பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

இன்றைய எமது உறவுகளின் கண்ணீர் கதையை கண்முன் காட்டிய விதம்

அழகு .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.