Jump to content

அந்த இறுதி நிமிடங்கள்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இறுதி நிமிடங்கள்.....

கவிதை - இளங்கவி....

ஆயிரம் சூரியன்கள்

எங்கள் இதயத்தை எரித்துவிட.....

அந்தாட்டிக்கா பனிமலைகள்

எங்கள் கண்களில் உருகிவர.....

அண்டசராசரமும் எங்கள்

உயிரினை பிடுங்கிட....

ஆழிப்பேரலையில் எங்கள்

வாழ்வெல்லாம் மூழ்கிவிட......

அமைதியானது எங்கள்

இறுதி நிமிடங்கள்......

அழிக்கப் பட்டது எங்கள்

எங்கள் உயிர்களின் சுவடுகள்....

நமை காத்திருந்த வேங்கையெல்லாம்

வேட்டுப்பட்டு செத்து விழ....

கடல்தாண்டி அக்கரையில்

நாற்காலிக்கு போட்டி எழ....

புலம்பெயர் தேசத்திலே

நாங்கள் பிணம்போல நின்றிருக்க.....

பொய்யான செய்திகளால்

எங்கள் காதுகள் நிரம்பிவிட......

புலிகள் முடிந்தார்களாம்....

தமிழர் இனி அடிமைகளாம்.....

பயங்கரவாத விடுவிப்பில்

இலங்கை முதலிடமாம்......

முடித்துவிட்டால் ஏனின்று

மூச்சிறைக்க ஓடுகிறாய்....

மூலை முடுக்கு காடெல்லாம்

என்ன மும்மரமாய் தேடுகிறாய்.....

விட்டகுறை தொட்டகுறை

முடியல்லையா...? உன் கணக்கு...

நீ விதைத்ததெல்லாம் விருட்சமாய்

வளருமடா...! நம் கணக்கு...

அங்கே நீ மூட்டிய தீ

புலத்திலே எரியுதடா...

பனிக்காலக் குளிரினிலும்

அது பற்றி எரியுமடா....

சும்மாவே சீண்டிவிட்டால்

பூனைகூட பாயுமடா....

புலம்பெயர் மக்களினால்

நம் தேசம் பிறக்குமடா....!

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒருநாள் எம்தேசம் எமக்காய் விடியும்...

நாம் நம்பிக்கோயோடு காத்திருப்போம்.

காத்திருப்புக்கள் எண்டைக்குமே சுகமானவைதான்.... :rolleyes:

அவ்வப்போது நீங்கள் எடுத்துவரும் கவிதைகள் மிகவும் நன்றாக உள்ளது.

நன்றி உங்களின் அற்புதமான கவிக்கு. :D

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவிக்கு எனது மனமார்த பாராட்டுகள் உங்கள் படைப்புகள் யாவும் நன்றே

இளங்கவிக்கு எனது மனமார்த பாராட்டுகள் உங்கள் படைப்புகள் யாவும் நன்றே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா அற்புதமான கவிதை வரிகள். எத்தனை கவிதைகள் படித்தாலும் உங்கள் கவியின் எழிமையும்,வசனங்களின் கோர்வையுமே தனி அழகு.

தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

மிக்க நன்றிகள்... எங்கள் விடிவுவரை உழைப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

analai theevaan

மீண்டும் நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவுக்கு

மிக்க நன்றி என் கவிதையை பாராட்டியதற்கு....

நான் இருந்து ஏதாவது படிப்பதில் சற்று பொறுமையில்லாதவன்.... என் மன நிலையிலும் மற்றவர்கல் இருப்பார்கள் நீண்ட வசனங்களில் கவிதைகலை எழுதினால் மக்கள் வெறுப்படைந்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் தான் முடிந்தளவுக்கு வரிகளைச் சிறிதாக்கி எழுதுகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

உங்களுக்கு மிக்க நன்றிகள் தொடர்ச்சியாக எனது கவிதைகளுக்கு ஊக்கம் தருவதற்கு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.