Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிஐம்!!!

காற்றும் ஒருகணம் வீசமறந்தது

கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது...

தேற்றுவாறின்றி நம தேசம் தேம்பி நிற்குது

தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........

சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்.......

மகிழ்ச்சிகள் எல்லாம்.

இன்று முட்கம்பி வேலிக்குள்...

முடங்கிக் கிடந்திட

நான்கு சுவற்றுக்குள்

நடப்பவை எல்லாம்

கந்தல் துணியால் கட்டிய முகாமில்.....

வேட்டை நாய்களுக்கு நடுவில்

வேதனையுடன் நடக்குது.......

குளவி முதல் கிளவிவரை....

மாற்ற ஒர் உடையில்லை...

அன்றொரு நாள் நம் இளசுகள்

காத்திருந்து காதல்செய்த

வீதிகள் எல்லாம்

வேதனை தாங்கி

விம்மியே நிற்கின்றன.....

தண்ணீர் ஊற்றி

நாம் வளர்த்த நந்தவன

மரம்,செடி,கொடிகளெல்லாம்...

உறவுகள் இன்றி

சோடைபற்றிப்போய் நிற்கின்றன......

திசைகள் பார்த்துக்

கட்டிய வீடுகள்

அரக்கனின் குண்டுமழையிலே

சின்னா பின்னமாகி

சிதவுற்ற நிலையில்;இன்று

பேய்கள் உலாவும்

வீடாகிப் போனது......

களிவறைமுதல் கொண்டு

உணவறை வரைக்கும்

கூப்பன் கடையிகளின்

வரிசை போல் நிற்குது....

காரிகையே காத்திரு நான்

என் கடமையால் வரும்வரைக்கும்;என்று

முத்தத்தால் திலகமிட்டு

முடிவாக சென்றவனை

பிரியமுடியாத பிரியமான காதலி

கையத்து விடைபெற்று;இன்றும்

கடைசிவரை காணாத

உறவுகள் படும் பாடு

மகிந்தாவே நீ....அறிவாயடா.......?

நாடு,நாடாய் நாங்களெல்லாம்

ஊனுமின்றி உறக்கமின்றி

என்ன செய்தி என் நேரம்

எப்படி வருமென்று தெரியாமல்

நிமிடத்துக்கு ஓர் தடவை

தொலைபேசியப் பார்த்திடுவோம்

அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்.....

தவிப்பவர்களின் தவிப்புகளை

ஏன் உள்ளத்து குமுறல்களை...

எங்கிருந்து யார் அறிவார்....?

இறுதியாய் தெரிந்துகொண்டோம்

உலகத்தின் சதிகளினால்

இன்று தமிழனின் இறப்பு மட்டும்

தடையேதும் இன்றி

வரிசைக்கு நிற்காமல்

மிகவும் வேகமாய் செல்கிறது

பிரியமுடன் யாயினி கனா.

நன்றி மறப்பது நன்றன்று அவர்நாண நன்நயம் செய்யவேண்டும்.இந்தகவிதை இளங்கவிக்கு சமர்ப்பிக்கின்றேன்.ஏனெனில் அவரின் வளிகாட்டலின் படி உங்கள் மத்தில் இன்று முதல் நான் உங்களில் ஒருத்தியாய் பிரகாசிக்க தொடங்கி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திசைகள் பார்த்துக்

கட்டிய வீடுகள்

அரக்கனின் குண்டுமழையிலே

சின்னா பின்னமாகி

சிதவுற்ற நிலையில்;இன்று

பேய்கள் உலாவும்

வீடாகிப் போனது......

களிவறைமுதல் கொண்டு

உணவறை வரைக்கும்

கூப்பன் கடையிகளின்

வரிசை போல் நிற்குது....

நிசமாய் தந்த உங்கள் கவிதை அழகு.

வாழ்த்துகள்.

தொடருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தை கவி வரிகளாய் தந்த யாயினிக்கு பாராடுக்கள். தொடருங்கள். படிக்க காத்திருப்போம்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் யாயினி. கவிதை நன்றாக வந்துள்ளது. நல்ல கவிஞர்களை உருவாக்கும் இளங்கவிக்கு என் நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிமாலை............

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினி அக்கா அற்புதமான கவிதை.. வாழ்த்துக்களும்,பாராட்டுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

வரி(லி)களால் சொல்லப்பட்ட நிஜம் ஒரு கனமான கவிதை.... வாழ்த்துக்கள் யாயினி. உங்கள் ஆக்கங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி கறுப்பி உங்களின் வாழ்த்துக்களுக்கு.கண்டிப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா உங்களின் வாழ்த்துகளுக்கு.தற்சமயம் எங்களின் நாட்டில் நடக்கின்ற அவலத்தைதான் எடுத்து வந்தேன்.மீண்டும்........மீண்டும் பல உண்மை நிகழ்வுகளை எடுத்து வருவேன். :)

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழமகள் நிச்சமாக யாழ்கழத்தில் என்பணிதொடரும். :)

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜீவா உங்களின் வாழ்த்துக்களுக்கு. :)

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி உங்களின் வாழ்த்துக்களுக்கு.இந்தக் கவிதையில் சிலவரிகள் எழுதும் போது என் கண்களே குளமாக்கியது.நானா இப்படி எல்லாம் எழுதுகிறேன் என்று எண்ணத்தோன்றியது.தொடர்ந்து எழுதுவேன். :)

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

அற்புதம் யாயினி...............

சோகமான எம் தாய் மண் நிகழ்வுகளை கவி வடிவில் படிக்கும் போதே இவ்வளவு

வலி வருகிறதே...............அதையே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள்

எவ்வளவு துன்பப் படுவார்கள் என எண்ணும் போது வலி இன்னும் அதிகமாகிறது.............

உங்கள் பணி தொடரட்டும்.......வாழ்த்துக்கள்!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வாழ்த்துக்கு நன்றி தமிழ்மாறன்.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் தினம்.........தினம் எம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.என்னால் முடிந்தவரை தொடரும் என்பணி.

பிரியமுடன் யாயினி கனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: நன்றி தியா உங்களின் வாழ்த்துக்களுக்கு. :wub:

பிரியமுடன்:யாயனி கனா.

Link to comment
Share on other sites

வணக்கம் யாயினி!.

கவிதை அருமை...

உங்கள் தமிழ் உணர்வும் பெருமை....

சிங்களவன் ஒரு எருமை...

இறைவன் தருவான் அருளே...உங்கள் கவிதை தொடர வரமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நலீம் உங்களின் வாழ்த்துகளுக்கு.உண்மைதான் சிங்களவன் ஒரு எருமைதான்.உண்மைகளை தொடர்ந்து எழுதுவேன். :mellow:

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

நன்றி நலீம் உங்களின் வாழ்த்துகளுக்கு.உண்மைதான் சிங்களவன் ஒரு எருமைதான்.உண்மைகளை தொடர்ந்து எழுதுவேன்.

உண்மைகளை எழுத உங்களைப் போன்ற பெண்கள் முன்வருவது மகிழ்ச்சியே....உண்மைகளை எழுத தயங்காதீர்கள்....உங்களிற்கு எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும்.

இதோ இன்னொரு பெண்ணின் துணிச்சலான வரவு.....

http://reginidavid.wordpress.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாய் தெரிந்துகொண்டோம்

உலகத்தின் சதிகளினால்

இன்று தமிழனின் இறப்பு மட்டும்

தடையேதும் இன்றி

வரிசைக்கு நிற்காமல்

மிகவும் வேகமாய் செல்கிறது

யாயினி அக்காவுக்கு வாழ்த்துக்கள்

உங்களின் வரிகளில் அவர்களின் வலிகள்

எம் இன அழிவில் இந்த உலக்கிற்கும் பங்கு உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனலைதீவான்,

கண்டிப்பாக எங்கள் உறவுகள் ஒவ்வொருவரின் இறப்பிலும் அவர்களின் துன்பத்திலும் அகில உலகத்தின் பங்கு உண்டு.உங்களின் வாழ்த்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது கண்ணீர் வருகிறது. உண்மைகள் எழுதப் படுவதால்.ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எல்லோரும் விடுவதுதான். பொருட்சுவை நன்றாக இருக்கிறது சொற்சுவையும் நன்றாக இருப்பின் இன்னும் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது கண்ணீர் வருகிறது. உண்மைகள் எழுதப் படுவதால்.ஒரு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எல்லோரும் விடுவதுதான். பொருட்சுவை நன்றாக இருக்கிறது சொற்சுவையும் நன்றாக இருப்பின் இன்னும் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி.

யாயினி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.