Jump to content

என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...!

கவிதை - இளங்கவி

சோர்வு ...அரைத்தூக்கம்.....

என் மனதில் பல கலக்கம்....

கண்ணிமைகள் தான் மூட

கனிவான ஓர் குரல்....

மாமா....மாமா.. தூக்கமா?

என் அரைத்தூக்கம் கலைந்து

யாரது...? என பார்க்கிறேன்...!

என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..?

கையில் இரத்தக் கறைபடிந்த

கரடிப் பொம்மையொன்று...?

என்னடா செல்லம் ...?

ஓடோடிச் சென்று

அவளை அணைக்கிறேன்...

ஆமி அடிச்ச செல்லில்

என் அம்மா செத்திட்டா....

அப்பாவும் தான் மாமா...!

நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம்

இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....!

''பெட் ரைம்'' கதைகள் சொல்லி

என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்....

''சின்ரெல்லா'' கதையும் சொல்லி

என்னை சிந்திக்கவும் வைத்தீர்கள்...

நான் அரசகுமரனுக்காய் காத்திருக்க..

ஆமி அரக்க குமாரனாய் வந்தான் மாமா...!

புல்டோசர் கொண்டுவந்து

பதுங்குகுழியில் நெரித்தான் மாமா...!

ஆ...! என்னது...!

அப்ப எப்படி என் செல்லம்

நீ இங்கே வந்தாய்...?

என் அமைதியான அரைத்தூக்கம்

ஏன்னம்மா நீ கலைத்தாய்...?

இல்லை... மாமா...

என் அம்மாவிடம் இருந்து

உனை ஆசையாய் பார்க்கவந்தேன்

அம்மா அழைக்கின்றா..

மறுபடியும் போகின்றேன்...!

என் செல்லமே ''சின்ரெல்லா''

நீயும் அந்த மரணப்படுகுழியின்

மடிந்த ஓர் நிலவா....?

உன் அரசகுமாரனைக் காணாமல்

அழிக்கப்பட்ட ஓ பூவா...?

என் செல்லமே..!

நான் தூங்கவே மாட்டேன்டி...

உன் போன்ற

ஆயிரம் சின்ரெல்லாவின்; ஆசைகள்

நிறைவேறும் வரை

நான் தூங்கவே மாட்டேன்டி...

நம் அரசகுமாரருக்கு

அழகிகள் கிடைக்கும்வரை

நான் தூங்கவே மாட்டென்டி....

மலரென்றும் பாராமல்

உங்களை மண்ணில் புதைத்த

மகிந்தர் சிறை செல்லும் வரை

நான் தூங்க மாட்டேன்டி....

சென்று வா என் தேவதையே....!

உங்கள் ஆசைகளாய் நாமிருந்து

உம் வாழ்வுக்காய் நாமெழுவோம்....

உங்கள் கரடிப்பொம்மைகளின்; இரத்தக்

கறைகளை நாம் துடைப்போம்....

நீ கண்ட கனவெல்லாம்

உன் சந்ததிக்கு நாம் கொடுப்போம்....

உன் தூக்கமிழந்த இரவுகளை

எதிரிக்கு பரிசளிப்போம்....

நான் உன்னை

சிரிக்கவைக்க மறந்துவிட்ட

ஓர் சில்லறை மாமாதான்...

நீ வாழும் விண்ணுலகில்

உனை மகிழ்விப்பேன்; இந்த

விழித்துக்கொண்ட மாமா தான்....!

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமாக்கள் மட்டுமல்ல புலம் பெயர் உறவுகள் யாவ்ரும் ..........விழித்து கொள்ள வேண்டும்.கவிதை பகிர்வுக்கு நன்றி ..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகிழமை தாமத்தின் பின் மீண்டுமோர் நல்ல கவிதையைத் தந்திருக்கிறீர்கள் இளங்கவி.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இப்படி எத்தனை ஆயிரம்....

செல்ல சிட்டுக்கள்களின்

மெல்லன அரும்பிய மொட்டுக்களின்...

மழலை மொழியில் மற்றவரை மகிழ்வித்த....

சின்ரெல்லாக்களின் எதிர்காலம்....???

பிரியமுடன்: யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி அக்கா......

எங்கள் சிறு பிள்ளைகள் சின்ரெல்லா போன்ற பல கதைகள் தொலைக்காட்சியில் பார்ப்பது, புத்தகங்களில் வாசிப்பது என்பனவற்றைப் பார்த்திருக்கிறேன் எனவே தான். இங்கிருந்தால் என்ன அங்கிருதால் என்ன... எல்லாம் பிள்ளைகள் தானே அதுதான் எங்கள் நாட்டில் நடந்துமுடிந்த உண்மைச் சம்பவத்தை சிறு கற்பனையுடன் தந்துள்ளேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...

இப்படி எங்கள் எத்தனையோ சிறுவர்களின் எதிர்காலம் கனவுடனேயே அறிக்கப்பட்டதை நினைக்க என்ன வேதனை ...

இனியாவது இது நடக்காமல் இருக்க முயற்சிசெய்வோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இளங்கவி......

கனவுகளும் கவிதைகளுமே எம் நாளாந்த வாழ்க்கையாகி விட்டன அல்லவா....?

நடந்தவை வலியோடு கடக்கட்டும்.......

கம்பி வழியே விழி நோக்கியிருக்கும் ''சின்ரெல்லா'' க்கள். எத்தனை எத்தனை..... ??

நான் நினைக்கின்றேன்.... அவர்களுக்கும் உங்கள் கவிதை அஞ்சலி செய்யும் காலம் விரைவில் வரும் என்று.....

Link to comment
Share on other sites

நன்றி இளங்கவி உங்கள் உருக்கமான கவிதைக்கு........

அந்த பிஞ்சு குஞ்சுகளின் வாழ்க்கை இப்படி சின்னாபின்னமாகி விட்டதே.........

நினைத்து பார்க்கவே முடியவில்லை.......

நன்றியுடன் பாராட்டுக்கள்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

asan

என் செல்லமே..!

நான் தூங்கவே மாட்டேன்டி...

உன் போன்ற

ஆயிரம் சின்ரெல்லாவின்; ஆசைகள்

நிறைவேறும் வரை

நான் தூங்கவே மாட்டேன்டி...

நம் அரசகுமாரருக்கு

அழகிகள் கிடைக்கும்வரை

நான் தூங்கவே மாட்டென்டி....

மலரென்றும் பாராமல்

உங்களை மண்ணில் புதைத்த

மகிந்தர் சிறை செல்லும் வரை

நான் தூங்க மாட்டேன்டி....

சென்று வா என் தேவதையே....!

உங்கள் ஆசைகளாய் நாமிருந்து

உம் வாழ்வுக்காய் நாமெழுவோம்....

உங்கள் கரடிப்பொம்மைகளின்; இரத்தக்

கறைகளை நாம் துடைப்போம்....

நீ கண்ட கனவெல்லாம்

உன் சந்ததிக்கு நாம் கொடுப்போம்....

உன் தூக்கமிழந்த இரவுகளை

எதிரிக்கு பரிசளிப்போம்....

நான் உன்னை

சிரிக்கவைக்க மறந்துவிட்ட

ஓர் சில்லறை மாமாதான்...

நீ வாழும் விண்ணுலகில்

உனை மகிழ்விப்பேன்; இந்த

விழித்துக்கொண்ட மாமா தான்....!

கடந்த காலத்தை நினைவுபடுத்தி உன் போன்ற எத்தனையோ சின்ரெல்லாக்களை காக்கும் வரை நான் தூங்க மாட்டென்டி என்று என் வரிகளில் தெளிவாக சொல்லியிருந்தேனே...... முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் இருக்கும் நம் உறவுகளை காப்பது தானே தற்போது நம் கடமை இதை நான் மறப்பேனா...

என் சமீபத்திய கவிதைகள் சில முக்கியமாக முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் இருக்கும் அவலங்களை தானே சொல்லியிருந்தேன்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

அழிக்கப்பட்ட எத்தனையோ எங்கள் செல்வங்களைப் பற்றி நினைத்தால் அது மனதில் மாறாத சோகம்... இனி எஞ்சி இருப்பவர்களை காப்பாற்றுவது எங்கள் எல்லோரினதும் கடமை.....

Link to comment
Share on other sites

உண்மையான உருக்கமான வரிகள்... இப்படி எத்தினை பிஞ்சுகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... தொடர்ந்து நல்ல கவிதைகளே குடுக்கிறிர்கள்... உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் இளங்கவி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துப் பொதிந்த கவிதை.

தற்காலத்துக்கு மிகவும் அவசியமானது.

இளங்கவி உங்கள் கவிதையில் தவழ்ந்து விழுகின்ற

இலகு தமிழ்நடை தரமானதாக உள்ளது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்... எங்களின் அர்ப்பணிப்புகள் தான் இந்த அவலங்களை தீர்க்க உதவும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயாவுக்கு

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.