Jump to content

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2


Recommended Posts

இன்றைய முக்கிய தேவை நாம் ஓரணியில் நிற்கவேண்டும் தலைவர் இருக்கிறார் இல்லை விவாதத்தை வைத்துவிட்டு நாம் கடந்துவந்த பாதையை நாமே சுயவிமர்சனம் செய்து இனி எடுத்து வைக்கும் அடிகளை கவனமாக எடுத்துவைக்க வேண்டும். சும்மா எல்லோரையும் துரோகி என்றுவிட்டு நாளை தனித்துநின்று எதையும் செய்யமுடியாது. எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டிய தருணம்.

எவருமே செய்யாத அளவுக்கு நாம் வீதிகளில் மாதக்கணக்கில் தொடர் போராட்டங்களை நடத்தினோம். ஆனால் எம்மால் எமது மக்களை காப்பாற்ற முடியவில்லை அது ஏன் நாம் என்ன தவறு செய்தோம் எங்கே பிழைவிட்டோம் போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்தி இனிமேல் எடுத்து வைக்கும் அடிகளை கவனமாக வைக்க வேண்டும். அப்போதுதான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தமது ரத்தத்தினால் தாங்கிய உறவுகள் இன்று நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது எமது கடமை. அதனை முன்னிறுத்தி அவற்றை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்று உங்கள் ஆய்வுகளை எழுதுங்கள். பூலத்தில் பூவிறிசு விட்டு புலம்பெயர்ந்தவர்களை மந்நைகளாக்கி மயக்கத்தில் வைத்திருந்த ஆய்வாளர்கள் பலர் இன்று தங்கள் தலையை ஒட்டுக்குள் இழுத்து மௌனித்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியாவில் 90 களின் ஆரம்பம் வரை மொத்த தேசிய வருமானத்தில் 7% இராணுவத்துக்கு செலவு செய்யும் நாடாக இருந்த பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை பின் தள்ளிவிட்டு மொத்த தேசிய வருமானத்தில் காற்பங்கு இராணுவத்திற்கு செலவு செய்யும் இலங்கையில் வெகு விரைவில் இராணுவ ஆட்சி நிட்சயமாக ஏற்படும் அதுவே நீண்டு நிலைத்திருக்கும் ஏனெனில் இலங்கையின் அரசியலமைப்பும் அதற்கு சாதகமாகவே உள்ளது,ஆனால் தமிழரைப்பொறுத்தவரை இன்று ஏற்படுத்தப்படும் சர்வதேச அளவில் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்கள் எதிர்காலத்தில் இலகுவாக சர்வதேச அங்கீகாரம் பெறும் அதற்கு முக்கியம் நமது ஒற்றுமையே!

புலம்பெயர்தமிழினம் தான் செய்வதை மிகச்சரியாகத்திட்டமிட்டே நகர்கிறது சிங்களத்தின்மனித உரிமை மீறலை வெளிக்கொணர விடா முயற்சியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் எமது முயற்சிபலனளித்தால் சிங்கள இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான தண்டனைகள் கொடுக்க முனையும் போது அரசியல்வாதிகள் சிங்கள இராணுவத்தின் மீது பழியைப்போட்டு தாம் தப்பிக்கொள்ளமுற்படுவர் அன்னிலையில் இராணுவத்திற்கு வேறு வாய்ப்பு இல்லை இராணுவ ஆட்சியைத்தவிர

தமிழ் மக்களின் இன்றய நிலையில் இது போன்ற கட்டுரைகள் எமக்குள் பிளவினை உண்டாக்கி ஆக்கபூர்வம்ற்ற கருத்து மோதலே மிஞ்சும்.

Link to comment
Share on other sites

.இப்போது பிரச்சனை தலைவர் உயிரோடு இருக்குறாரா? இல்லையா? என்பது பற்றி அல்ல ஏன் இவர்கள் திரும்ப திரும்ப அதைப் பற்றியே எழுதுகிறார்கள் என்பது தான்.சிங்களப் பேப்பரில் கூட தலைவர் செத்தது என சொல்லப்பட்ட முதல் 3 நாள் மட்டும் தான் பேப்பரில் போட்டார்கள் ஆனால் இவர்கள்?

உண்மை....

இந்த புள்ளியில் எம்மை சிக்க வைத்து விட்டு சிங்கள் பேரினவாதம் இன்னும் ஆழமாக எம்முள் பிரிவினையை ஏறபடுத்தி உள்ளது

நான் may 18/19 இல் தமிழ் மக்களின் விடுதலைப் போர் தற்காலிக பின்னடைவைத் தான் சந்தித்தது என்று நினைத்து இருந்தேன். ஆனால் இன்று அது நிரந்தர தோல்வியை நோக்கி படு வேகமாக செல்கின்றது என்றே கருத தோன்றுகின்றது

சிங்களத்தின் வெற்றியை நிரந்தர வெற்றியாக்கிய பெருமை எம்மை எல்லோரையும் சாரப் போகின்றது

Link to comment
Share on other sites

இங்கு வழுதி எழுதியுள்ள இந்தக் கட்டுரையிலிருந்து அண்ணைக்கு எதிரான சதி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை என்பதையும்; உரிமைகள் யாசித்துப் பெறுவதல்ல போராடிப் பெறுவதே என்பதையும் அண்ணை உறுதியாக நம்பியவர். அந்தப் பலத்தின் அடிப்படையில் தான் அவர் பல வெற்றிகளை குவித்தவர்.

சமாதான தூதுவராகச் சென்ற எரிச் சூல்கைம் சிறீலங்கா அரசாங்கத்தை தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும்படி நிர்பந்திப்பதற்கு பதிலாக ஆயுதப் போராட்டம் சாத்தியம் இல்லை என்று விடுதலைப்புலிகளுக்கு போதிப்பதிலேயே குறியாக இருந்தார்.அதாவது தமிழ் மக்களின் பலத்தை அழித்து சிங்களவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்திப்பட வேண்டும் என்று போதிப்பதிலேயே குறியாக இருந்தார்.அவர் ஒவ்வொரு முறையும் இலங்கைகுச் செல்லும் போதும் இந்தியாவுக்கு சென்று ஆலோசனை நடத்துவிட்டுத்தான் சென்றார் அல்லது வந்தார்.

ஏறக்குறைய இதையே அவர்கள் (அதாவது நோர்வே) பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலும் செய்தனர்.யாசிர் அரபாத்தை பலவீனவினப்படுத்தும் அரசியல் பொறி ஒன்றுக்குள் திட்டமிட்டுத் தள்ளினார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்தையும் போராட்ட உறுதியையும் குலைப்பதற்கு மென் போக்காளரான ரணில் சரிப்பட்டு வரமாட்டார் என்பதை கண்டு கொண்ட இந்தியா மகிந்தவை பதவிக்கு கொண்டுவருவதற்கு நோர்வேயை வைத்து காய் நகர்த்தியது.

ரணில் அமெரிக்க சார்பாளர் அமெரிக்கப்படை இலங்கைக்கு வந்துவிடும் என்று அண்ணைக்குப் போதிக்கப்பட்டது.இதை செய்வித்தவர் சூல்கைம். செய்தவர் பேரை நான் சொல்ல விரும்பவில்லை……

பல நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த போது அந்தந்த நாடுகளின் அகச் சூழல்களில் அதற்கான சாத்தியப் பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.தடைக்கு எதிராக துறைசார் ரிதியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதில் திட்டமிட்டு அசமந்தப் போக்கு காண்பிக்கப்பட்டது.மேற்கு நாட்டு ஊடகங்களுக்கும் மக்களுக்கும் ஈழப் போராட்டத்தின் நியாயப் பாடுகள் தெரிவிக்கபடவே இல்லை.

பலர் மிக நெருக்கடிகளுக்கு மத்திலும் தாயகத்துக்கு வேண்டிய பொருட்களை கொள்வனவு செய்த போதிலும் அவற்றை வன்னிக்கு கொண்டு சேர்ப்பதில் திட்டமிட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு அண்ணைக்கு நொண்டிச் சாட்டுகள் செல்லப்பட்டது.

சமாதான காலத்தில் பெருந் தொகை ஆயதங்களை விடுதலைப்புலிகள் இறக்கியதாக சிங்கள ஊடகங்கள் பிரச்சரம் செய்த போதிலும் போர் காலத்தில் சென்றதை விட மிகக் குறைந்த ஆயுத தளபாடங்களே சமாதான காலத்தில் சென்றன.

மகிந்த அரசு வன்னியை ஆக்கிரமிப்பதற்கு ஆயதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த போது அண்ணைக்கு ஆயதங்கள் சென்றுவிடாமல் தடுக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.ஆயுதங்களை கைவிடுமாறு அவர் மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டார்.

அதாவது மகிந்தவிடம் அவரை மண்டியிட வைக்க முயற்சிகள் நடந்தன….

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த முயற்சிகளின் பின்னணியல் இந்தியா நோர்வே இந்த இரண்டு நாடுகளும் தான் இருந்தன.

வழதியின் இந்த் கட்டுரையை கூர்ந்து கவனித்தால் இது புரியும்.

அடுத்து அண்ணையோடு இருந்தவர்களில் இரண்டு பேர் தான் இன்னும் இருக்கிறார்கள் என்று வழுதி கூறுவது அவரது அறிவீனத்ததை காட்டுகிறது; அல்லது மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்ற ஒரு மாயையை அவர் ஏற்படுத்தப் பார்க்கிறார். ஏன்றே நான் நினைக்கிறேன்.வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

கடைசி நேரத்தில் கேபிக்கு ஊடாக சில வேலைகளை செய்தது உண்மை ஆனால் எல்லோரும் அவரின் தலைமையை ஏற்று நடவுங்கோ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இனிச் சாத்திமே இல்லை என்று யாரும் சொல்லவில்லை

இன்றைக்கும் என்றைக்கும் அண்ணை தான் தலைவர்.அவரது தலைமைத்துவத்தை ஏற்கொள்பவை அவர் இருக்கிறாரா இல்லையா என்ற விமர்சனங்களை விட்டுவிட்டு அவையவை அவையவையின்ரை வேலையளை அர்ப்பணிப்போடு செய்வம்.

ஒரு விடுதலைப் போராட்டத்துக்கான ஆயதப் போராட்டம் என்பது அடக்குமுறையிலிருந்து தான் கருக் கொள்கிறது.அந்த அடக்கு முறை இன்று உச்சத்தில் இருக்கிறது.இந்த உச்சக் கட்ட அடக்குமுறை ஆயுதப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிட்டது.மக்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மத்தியில் கருத்து வேற்றுமைகள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. ஆனால், அது செல்ல வேண்டிய பாதை பற்றியதே அல்லாமல், செல்ல வேண்டிய இலக்கு பற்றியதல்ல.

எம் மத்தியில் குழப்ப நிலை இருந்தது; இப்போதும் இருக்கின்றது. ஆனால், அது தமிழீழத் தனியரசு சாத்தியமானதா இல்லையா என்பதே அல்லாமல், தமிழீழத் தனியரசு தேவையானதா இல்லையா என்பது பற்றியதல்ல.

சிங்களப் பேரினவாதம் தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்ற தெளிவிலும், ஏதோ ஒரு வகையில் நாமாகவே போராடித்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவிலும் - எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளோ அல்லது குழப்ப நிலைகளோ இருந்ததில்லை; இப்போதும் இல்லை.

அந்த முடிவோடும் தெளிவோடும் தான் - நாம் வரித்துக்கொண்ட அதே இலட்சியத்தைத் தாங்களும் வரித்துக்கொண்டு தான் - எம் தேசத்தின் 30 ஆயிரம் புதல்வர்களும் எம் தேசியத் தலைவனும் தமிழீழத் தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்தார்கள்; தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் போராடினார்கள்; தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

அண்ணனை நேசிப்போர் அவருக்காகவும், அவரை விமர்சிப்போர்கள் - அவருக்காக அல்லாவிட்டாலும், எமக்காகத் தமது உயிர்களை தந்த அந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர்களுக்காகவேனும் அவர்கள் அணிவகுத்த அதே கொடியின் கீழே அணிவகுப்போம்.

புதினம்

Link to comment
Share on other sites

தலைவர் இல்லை... இருக்கின்றார் என்ற வாதவிவாதங்கள் வேண்டாம். அதனை காலத்தின் கையில் விட்டுவிடுங்கள்.

நாம் இனி என்ன செய்யப் போகின்றோம்???

தயவுசெய்து... அதைப்பற்றி மட்டும் விவாதியுங்கள்,சிந்தியுங்கள்!

எமது எதிர்காலம் இப்பொழுது எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்க தருணத்தில் மிகவும் தெளிவான கட்டுரை.....????

இதை இப்படியும் சொல்லலாம் என்றுதான் நினைக்கின்றேன்.... ஆனால் அதற்கு நான் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா? நான் தெளிவு பெறுவதென்றால் தெளிவான செய்திகளை நான் பெற்றிருக்கவேண்டும்.... இங்கு இருக்க கூடியே அனேக கருத்துக்கள நண்பர்களைபோல செய்திகளை பெற எனக்கும் இணையம் ஒன்றே ஒரே ஊடகம் தவிர சத்தியமாக எந்த தொடர்வும் வன்னியில் இருந்து எனக்கு மேமாதம் முதலாம் திகதிக்கு பின் இருக்கவில்லை. பின்பு வந்ததெல்லாம் முகம்களில் வந்து அடைபட்ட உறவுகளின் தொலைபேசி அழைப்புகள்தான். அனேகரின் நிலையும் இதுதான். கட்டுரையாளர்களுக்கு வழுதி உட்பட தெரிந்த தெளிவான நிலை இதுதான். இந்த நிலையில்தான் பலஇலட்சம் ஈழதமிழர்கள் புலம்பெயாந்து பிறநாடுகளில் வாழ்கிறார்கள் குறிப்பாக ஒரு கட்டுரையை இன்று ஒருவர் புலத்தில் இருந்து எழுதினால் அது யாரையெல்லாம் சென்றடையுமோ அவர்கள் எல்லோரது நிலையும் அதுதான். ஆகவே கட்டுரைகள் வாசர்களின் நிலை அறிந்தே வருகின்றன. வாசகர்களுக்கு எது தேவையோ அதை கொடுப்பதே கட்டரையாளர்களின் நோக்கமாக இருந்ததால்....... உண்மைகளை ஊமைககள் ஆக்க வேண்டிய ஒரு கட்டாயம் அவர்களுக்கு நிற்சயம் ஏற்படும். தவிர தற்போதைய சூழ்நிலையில் ஏது நடந்திருப்பினும் வெளிஉலகத்திற்கு புலிகள் இல்லை தலைவர் உட்பட அனைவருமே இறந்துவிட்டார்கள் இப்போது ஆயுதங்கள் கட்ந்த ஒரு அரசியல் போரையே முன்னேடுக்கிறோம் என்று ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதே புத்திசாலித்தனமானதும் யாருக்குமே (ஈழதமிழருக்கு) நன்மையை தர கூடியதும் ஆகும். ஆகவே அப்படியானதொரு சூழலை உருவாக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் சில கட்டுரையாளர்களுக்கு கூட இருக்கலாம். ஆனாலும் பல துரோகங்களையும் பல சூழ்சிகளையும் கடந்து போராட்டத்தை இதுவரைக்கும் தமது மன உறுதியையும் சத்தியத்தையுமே நம்பி தர்மத்தின் வழியில் நின்று போராடிய போராளிகளின் மேல் சேறு பூசவேண்டிய கட்டாயம் சிலருக்கு ஏற்பட்டிருப்துதான் சில கட்டுரையாளர்களின் கட்டுரைகளை கக்கூசில் இருக்கும் பேப்பருக்கு உரிய வேலையை கொடுப்பதற்கு எமை துண்டுகின்றது என்பதையும் அதையே நாம் செய்கின்றோம் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வது அவர்களின் எதிர்கால பத்திரிகைவாழ்விற்கும் அவர்களின் கட்டுரை வாழ்விற்கும் வழிவகுக்கும் என்பதை நாம் இங்கே தெளிபடுத்த வேண்டி நிற்கின்றோம்.

"25 வருட காலமாக புலிகள் ஆயுதபோராட்டத்தை நம்பி உலக சூழலை புரிந்துகொள்ள மறுத்ததுதான் இன்றைய சூழ்நிலைக்கு காரணம்" என்று ஒரு தமிழனால் தமிழில் எழுத முடிந்தால் அவனை பார்த்து நான் கேட்கும் கேள்வி ****

ஆயுதமே வேண்டாம் இந்தா பிடியுங்கள் தழிழருக்கு ஒரு தீர்வை தாருங்கள் என்று புலிகள் 1987 ஆயுதங்களை கைவிட்டது என்ன உங்கள் ****

ஒரு திலீபன் பசியோடு போராடி அணு அணுவாய் இறந்தானே?

எமது போராட்ட வரலாற்றை கடலோடு உறவாக்கி பல கரைகள் கண்ட "கடல்புறா" வை கைதுசெய்ய பணிந்தார்களே???

உணவென்று கூறி முக்கிய தளபதிகளிடம் நஞ்சை கொடுத்துவிட்டு உணர்வுகள் ஏதும் இன்றி வந்தார்களே ஆயுத போராட்த்தை நம்மியா செய்தார்கள்??

சுனாமிக்கு உலகம் ஒதுக்கிய தொகையை தமிழரிடம் கொடுங்கள் என்பதில் இதை விட இனி புலிகளால் எப்படி இறங்கியிருக்க முடியும் என்பதை தெளிவுற கூறலாமே?

**** ஆனால் அதர்மம் தலைவிரித்தாடும் உலகில் தர்மத்தின் நிலை ஏதுவாக இருக்குமோ இந்நிலையில்தான் ஈழதமிழரும் அவர்களுக்காக போரடிய புலிகளின் நிலையும் இருக்கின்றதே தவிர. புலிகளுக்கு புல்லுருவிகள் பாடம் எடுக்கும் நிலை உலகம் அழிவில் நிற்கும்போதும் கூட வாராது என்பதை அப்படி ஒரு கற்பனையில் மிதப்வர்கள் வைத்திருப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி

எனக்கும் தாங்கள் தனிப்பட எழுதியிருந்தீர்கள்

தங்கள்போல் மனம் எனக்கு கிடைக்காதது கண்டு பொறாமைப்படுகின்றேன்

இ;ன்னும் எழுதுங்கள்

தங்கள்போன்றவர்களின் எழுத்துக்களே இன்றைய நிலையிலிருந்து எமை ஓரளவாவது மீட்கும் என்று நினைக்கின்றேன்

நன்றி

என்னைப்பொறுத்தவரை

இந்த முன்னால போ.....பின்னால வாறன் என்ற.....

வசனமே பிழை

ஏதோ எமது போராட்டம் முன்னுக்கு அனுப்பிப்போட்டு .......பின்னால போய் அவையோட இணையிற இலட்சியத்துக்காக தொடங்கப்பட்டதுபோல்......கேவலப்

Link to comment
Share on other sites

மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும்.

தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை:

ஒரு கெரில்லாப் போராட்டத்தை நடத்தும் ஏது நிலையோ அல்லது அதன் விளைவுகளைத் தாங்கும் சக்தியோ மக்களுக்கு இப்போது இல்லவே இல்லை.

பல நெருக்கடியான காலகட்டங்களில் எல்லாம் போராட்டத்தை தாங்கிய வன்னி உழைக்கும் மக்களை பலியாக்கி சர்வதேச அங்கீகாரம் ஒன்றை போராட்டம் எதிர்பார்த்தது. சர்வதேசத்தின் முன்னால் வன்னி மக்கள் குழந்தைகள் ஈவிரக்கமின்றி பிணங்களாக்கப்பட வழிகோலப்பட்டு சிங்கள அரசை குற்றவாழியாக்கி எமது போராட்ட நியாயம் |பேசப்பட்டது. இறுதியில் பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிகள் எமது மக்களுக்கு எதிராக திருப்பப்பட்ட மிகப் பெரிய கொடுரங்கள் பற்றி வவுனியா முகாம்களில் உள்ள மக்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். மிகவும் அதிர்ச்சியான விசயங்கள் இனி வெளிவரும். எண்ணிக்கைக்காக எமது தரப்பு துப்பாக்கிகளே மக்களை சல்லடை போட்ட கணங்களை தப்பியவர்கள் விபரிப்பார்கள். யாரைக் கொன்று யாருக்கு தமிழீழம்? இனி ஒரு கெரில்லாப் போர் என்பது மக்களால் நிர்மூலமாக்கப்படும். சக்தி இல்லை அது இல்லை என்றும் சாள்சை அவன் கொன்றான் இவன் கொன்றான் ஊடுருவல் அது இது என்றும் சப்பை கட்டு கட்டி எதை நியாயப்படுத்த முனைகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை சாகடிக்க முயலும் பச்சோந்திகள்

பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது. தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது.

சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.

சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.

காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.

10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.

உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.

தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையயன்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.

தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின.

ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.

19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையயான்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.

சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.

பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள்.

அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.

அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையயன்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.

ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.

சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.

இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.

33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.

தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.

பிரிகேடியர் தமிழ் செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள்.

பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும்.

சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.

திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.

ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.

பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப் படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்து கொள்ளவில்லையயன்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.

ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள்.

கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.

தலைவர் இல்லையயன்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு.

மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.

இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.

அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உரு

வாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.

- இருக்கிறாரா? இல்லையா?- என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும். இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.

பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டும். 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யை உண்மையாக்க பலமுறை சொல்ல வேண்டும்.உண்மையை ஒரு முறை சொன்னால் போதும்.தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற வாதத்தை விட்டு விட்டு நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம். நாடு கடந்த அரசு பற்றிச் சிந்திப்போம். இருக்கிறார் என்று நம்புவர்கள் நாடு கடந்த அரசுக்கும் ஆதரவளிக்கிறார்கள்.காரணம் அவர்கள் இறுதி இலட்சியத்தை நோக்கிய தெளிவோடு இருக்கிறார்கள்.இல்லை என்று சொல்பவர்களில் பெரும்பாலானோர் இல்லை இல்லை என்று எழுதியே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதாவது தமிழினத்தை கூறுபோடுவதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று எழுதுவது எல்லோராலும் செய்யக் கூடியதே இப்படியான எழுத்துக்கள் தமிழினத்தை ஒற்றமைப்படுத்துவதற்குப் பதில் பிரிப்பதற்கே வழிவகுக்கும். எழுத்தாற்றல் உள்ளவர்கள் இலட்சியத்தை அடைவது எப்படி என்பதையே இலக்காகக் கொண்ட எழுதுவார்கள்.மக்களைக் குழப்பும் திசை திருப்பும் வேலையில் ஈடுபட மாட்டார்கள்.

ரதியின் கருத்தே எனது கருத்துமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது

Thursday, June 25, 2009 0

மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் அறுபத்து ஒரு வருடங்களை பல பரிணாமங்களின் ஊடாக கடந்த போதும், அது தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைபலத்தை பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு முறியடித்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைக்கான போரின் அடுத்த கட்டத்தை நகர்த்துவதில் தமிழ் சமுதாயம் பல நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றது.

விடுதலைப்போர் சந்தித்த மிகப்பெரும் மனிதப்பேரவலத்தின் இறுதி நாட்களில் வீறுகொண்டு எழுந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுச்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் வரை தொடர வேண்டும். அதன் மூலம் தான் எமது இனம் சந்தித்த இழப்புக்களையும், துன்பங்களையும், பேரழிவுகளையும் உலகின் பதிவுகளில் இருந்து அழியாது பேணமுடியும்.

கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்படுத்தியிருந்த பெரும் எழுச்சிக்கு கடந்த 20 ஆம் நாள் பிரித்தானியா தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

எமது எழுச்சிகள் அடங்கிப்போனால் எமது உரிமைகளும் அதனுடன் அடங்கி போய்விடும் என்ற சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கு அவர்களின் இந்த எழுச்சி மீண்டும் ஒரு பேரிடியை கொடுத்துள்ளது.

போராட்டம் அடுத்து பயணிக்கப்போகும் பாதைக்கு அனைத்துலகத்திலும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுகள் தேவை. ஆனால் அதனை சிதைத்துவிடுவதில் இந்திய - சிறீலங்கா அரசுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மையமாக கொண்டே நகர்த்தப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே வன்னியில் படை நடவடிக்கைகயை மேற்கொண்ட பல படை அதிகாரிகளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிறீலங்கா அரசு பணிகளில் அமர்த்தியுள்ளது. அவர்களின் மூலமும் பல ஊடுருவல்களை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை எல்லாம் புறம்தள்ளி நாம் மேற்கொள்ளப்போகும் தொடர் போராட்டங்கள் மூலமே காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் அணிதிரண்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை போல எதிர்வரும் 28 ஆம் நாள் பிரான்ஸிலும், ஏனைய நாடுகளிலும் நாம் ஒன்று திரண்டு எமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.

எமது மக்கள் தாயகத்தில் சந்தித்த பேரழிவுகளுடன் எமது போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை நாம் தான் மாற்ற வேண்டும். ஆனால் எமது மக்களின் உளவுரைனையும், போராடும் மனவலுவையும் சிதறடிப்பதற்கு பல புறச்சூழல்கள் எம்மை சுற்றி உருவாக்கப்டுகின்றன.

பல அறிக்கைகளும், நேர்காணல்களும் எமது மக்களின் மனஉறுதியை தகர்க்கும் நோக்கங்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகின்றன. இது பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் உளவியலை மேலும் பல மடங்கு சிதைப்பதற்கே உதவும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எதிரி ஒரு முறைதான் தனது ஊடக வலிமையை கொண்டு சாகடித்தான்;

ஆனால் எம்மில் சிலர் மீண்டும் மீண்டும் அந்த மாமனிதனை தமது ஊடகச்சமரில் சாகடித்து வருகின்றனர். மேலும் எத்தனை முறை அவரை சாகடிக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்த ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறத

Link to comment
Share on other sites

அதிவிட அது சார்ள்ஸ் அண்டனி அல்ல, புலனாய்வுத்துறை சார்ள்ஸ்

அட அப்பிடியா விசயம் தெரியாமல் போச்சு. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு வழுதி எழுதியுள்ள இந்தக் கட்டுரையிலிருந்து அண்ணைக்கு எதிரான சதி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை என்பதையும்; உரிமைகள் யாசித்துப் பெறுவதல்ல போராடிப் பெறுவதே என்பதையும் அண்ணை உறுதியாக நம்பியவர். அந்தப் பலத்தின் அடிப்படையில் தான் அவர் பல வெற்றிகளை குவித்தவர்.

சமாதான தூதுவராகச் சென்ற எரிச் சூல்கைம் சிறீலங்கா அரசாங்கத்தை தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும்படி நிர்பந்திப்பதற்கு பதிலாக ஆயுதப் போராட்டம் சாத்தியம் இல்லை என்று விடுதலைப்புலிகளுக்கு போதிப்பதிலேயே குறியாக இருந்தார்.அதாவது தமிழ் மக்களின் பலத்தை அழித்து சிங்களவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்திப்பட வேண்டும் என்று போதிப்பதிலேயே குறியாக இருந்தார்.அவர் ஒவ்வொரு முறையும் இலங்கைகுச் செல்லும் போதும் இந்தியாவுக்கு சென்று ஆலோசனை நடத்துவிட்டுத்தான் சென்றார் அல்லது வந்தார்.

ஏறக்குறைய இதையே அவர்கள் (அதாவது நோர்வே) பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திலும் செய்தனர்.யாசிர் அரபாத்தை பலவீனவினப்படுத்தும் அரசியல் பொறி ஒன்றுக்குள் திட்டமிட்டுத் தள்ளினார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்தையும் போராட்ட உறுதியையும் குலைப்பதற்கு மென் போக்காளரான ரணில் சரிப்பட்டு வரமாட்டார் என்பதை கண்டு கொண்ட இந்தியா மகிந்தவை பதவிக்கு கொண்டுவருவதற்கு நோர்வேயை வைத்து காய் நகர்த்தியது.

ரணில் அமெரிக்க சார்பாளர் அமெரிக்கப்படை இலங்கைக்கு வந்துவிடும் என்று அண்ணைக்குப் போதிக்கப்பட்டது.இதை செய்வித்தவர் சூல்கைம். செய்தவர் பேரை நான் சொல்ல விரும்பவில்லை……

பல நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்த போது அந்தந்த நாடுகளின் அகச் சூழல்களில் அதற்கான சாத்தியப் பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.தடைக்கு எதிராக துறைசார் ரிதியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதில் திட்டமிட்டு அசமந்தப் போக்கு காண்பிக்கப்பட்டது.மேற்கு நாட்டு ஊடகங்களுக்கும் மக்களுக்கும் ஈழப் போராட்டத்தின் நியாயப் பாடுகள் தெரிவிக்கபடவே இல்லை.

பலர் மிக நெருக்கடிகளுக்கு மத்திலும் தாயகத்துக்கு வேண்டிய பொருட்களை கொள்வனவு செய்த போதிலும் அவற்றை வன்னிக்கு கொண்டு சேர்ப்பதில் திட்டமிட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு அண்ணைக்கு நொண்டிச் சாட்டுகள் செல்லப்பட்டது.

சமாதான காலத்தில் பெருந் தொகை ஆயதங்களை விடுதலைப்புலிகள் இறக்கியதாக சிங்கள ஊடகங்கள் பிரச்சரம் செய்த போதிலும் போர் காலத்தில் சென்றதை விட மிகக் குறைந்த ஆயுத தளபாடங்களே சமாதான காலத்தில் சென்றன.

மகிந்த அரசு வன்னியை ஆக்கிரமிப்பதற்கு ஆயதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த போது அண்ணைக்கு ஆயதங்கள் சென்றுவிடாமல் தடுக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.ஆயுதங்களை கைவிடுமாறு அவர் மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டார்.

அதாவது மகிந்தவிடம் அவரை மண்டியிட வைக்க முயற்சிகள் நடந்தன….

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த முயற்சிகளின் பின்னணியல் இந்தியா நோர்வே இந்த இரண்டு நாடுகளும் தான் இருந்தன.

வழதியின் இந்த் கட்டுரையை கூர்ந்து கவனித்தால் இது புரியும்.

அடுத்து அண்ணையோடு இருந்தவர்களில் இரண்டு பேர் தான் இன்னும் இருக்கிறார்கள் என்று வழுதி கூறுவது அவரது அறிவீனத்ததை காட்டுகிறது; அல்லது மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்ற ஒரு மாயையை அவர் ஏற்படுத்தப் பார்க்கிறார். ஏன்றே நான் நினைக்கிறேன்.வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

கடைசி நேரத்தில் கேபிக்கு ஊடாக சில வேலைகளை செய்தது உண்மை ஆனால் எல்லோரும் அவரின் தலைமையை ஏற்று நடவுங்கோ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இனிச் சாத்திமே இல்லை என்று யாரும் சொல்லவில்லை

இன்றைக்கும் என்றைக்கும் அண்ணை தான் தலைவர்.அவரது தலைமைத்துவத்தை ஏற்கொள்பவை அவர் இருக்கிறாரா இல்லையா என்ற விமர்சனங்களை விட்டுவிட்டு அவையவை அவையவையின்ரை வேலையளை அர்ப்பணிப்போடு செய்வம்.

ஒரு விடுதலைப் போராட்டத்துக்கான ஆயதப் போராட்டம் என்பது அடக்குமுறையிலிருந்து தான் கருக் கொள்கிறது.அந்த அடக்கு முறை இன்று உச்சத்தில் இருக்கிறது.இந்த உச்சக் கட்ட அடக்குமுறை ஆயுதப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிட்டது.மக்கள

Link to comment
Share on other sites

போச்சடா போச்சு! தலைமையால் இறுதியாக உலகிற்கு காட்டியவரும் துரோகி! இதுவரை காலமும் புலத்தில் அயராது உழைத்த உருத்திரகுமாரும் துரோகி!! புதினம் இணையத்தளம், தமிழ்நாதம், ஒருநியூஸ், GTV, TV , அவுஸ்ரேலிய தமிழ் வானொலி, எல்லாம் துரோகிகளின் கூட்டம்! அமெரிக்க தமிழர்களின் தமிழ்சங்கம் துரோகக்கூட்டம்!..................

ஆனால் எம் பணத்தில் புலத்தில் மூக்கு முட்ட அடித்து வாழும் பூசாரிகளும், அவர்கள் புகழ் பாடும் இணையங்கள் வானொலிகள், இப்பூசாரிகளுடன் ஒட்டியிருக்கும் பாபியாக்கும்பல்களும் மட்டும் துரோகிகள் இல்லை!

இந்த வழுதி பற்றி ஒரு தகவல்,

***

அப்பு மல்லாந்து படுத்து துப்புகிறாய்!! கவனம் உன் மூஞ்சையில் தான் விழப்போகிறது!!

ஆமா, இயக்கத்தில் பாலியல் சேஸ்டைகள், நிதி மோசடிக்கு தண்டனையாக அமெரிக்கா அனுப்புவார்களா????????? வாவ்வ்வ்வ்வ்வ்வ் ...... கேட்கிறவன் கேணையன் என்றால் .............

Link to comment
Share on other sites

இதுவரை கருத்தாடியவர்கள் சொன்ன தகவல்கள், எனக்குத் தெரிந்தவை, வாசித்தவை வைத்துச் சில கருத்துக்கள்,

இலங்கையில் சிங்களப்பேரினவாதாம் அழியாமால் ஈழத் தமிழருக்கு ஒரு தீர்வு வரப்போவதில்லை.

சிறிலங்கா அரசு என்பது சிங்களப் பேரினவாத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட்டது.

இந்தப் பேரினவாத்திடம் இருந்து ஒரு தீர்வை எங்கனம் இந்தியாவோ அல்லது மேற்குலாமோ பெற்றுத் தரும் என்பதை வழுதி எழுத வேண்டும்.

வழுதியின் கருதுக்குக்கள் அண்மைக் காலமாக நாம் மேற்குலகம் சார்ந்தும் இந்தியா சார்ந்தும் இயங்க வேண்டும் என்று சொல்கின்றன. நல்லது அவர் சொல் படி கேட்டாலும், எங்கனம் சிங்கள அரசானது தமிழருக்கு ஒரு தீர்வைத் தரும் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.இல்லாது விடின் அவரின் கட்டுரைகளுக்கு உள் நோக்கம் இருப்பதாகவே மக்களால் பொதுவாகாக் கருதப்படும்.

மேலும் தமிழரின் அடிப்படை அரசியற் கோரிக்கையான சுய நிர்ணய உரிமை என்பதை இந்தியா ஏற்றுக்கொள்கிறதா?

இல்லை என்பதே உண்மை.அப்படியாயின் நாம் இந்தியாவை அனுசரித்து எதாவது ஒரு தீர்வுக்குப்போயாக வேண்டும்.சீனா,பாக்கிஸ்த்தன போன்றவற்றை இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியாக நலன் சார் சதுரங்க்கத்தில் பாவிக்கும் சிறிலங்கா அரசானது ஒரு கிராம அபிவிரித்திச் சபையயியே தீர்வாக முன் வைக்கும்.இந்த நிலையில் இந்தியாவாலோ அல்லது பலவீனமான நிலையில் இருக்கும் மேற்குலகினாலோ ஒரு தீர்வை பெற்றுத் தர முடியாது.

ஆனால் களத்தில் மக்கள் மிகவும் வலு விழந்து பலமற்றுப் போய் உள்ளனர்.இந்த நிலையை நிவர்த்தி செய்ய ஒரு அவகாசாம் எமக்கு நிச்சயமாகத் தேவை.இந்த அவகாசாமே எமக்குத் தீர்வாகாது.ஆகவே நாம் எம்மை ஆசுவாசப்படுத்த வழுதி எழுதியதன் படி ஒரு இளைப்பாறும் புள்ளி அவசியம்.ஆனால் இளைப்பறும் புள்ளியே தமிழருக்குத் தீர்வைத் தந்துவிடாது என்பது சிறிலங்காவின் இன முரண் தரும் அரசியல் அடிப்படை.

தமிழர்கள் இந்தியாவின் தயவில் ஒரு தீர்வைப்பெற்று விடலாம் என்பதை நான் நம்பவில்லை அது சாத்தியபாடானது இல்லை.அதற்கான எந்த அரசியல் அடிப்படையும் இல்லை.தனது நாடிற்குள்ளையே தேசிய இனக்களை அடக்கி ஒடுக்கும் ஒரு அரசு இன்னொரு தேசிய இனத்துக்கு அதுவும் தமிழ்னாட்டோடு நெருங்கிய அடையாளத்தை உடைய ஒரு இனத்துக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பது என்பது தற்கொலைக்குச் சமனானாது.தமிழர்கள் தமது பலத்தை தக்கவைப்பது பெருக்குவதன் மூலமே தமது அரசியல் அபிலசைகளைப் பெற்று விட முடியும்.தமிழர்களின் தலமை நலன் சார்ந்து இயங்கும் இந்த உலகில் மனிதப்பேரவலத்தைக் கண்டு இந்த உலகு தமக்காக இரங்கி வந்து உதவும் என்று நம்பியே தமது பலம் அனைத்தையும் இழந்தது.எமது அரசியர் பலத்தையும் நாம் இனி இழக்க வேண்டுமா?

மற்றாகா புலத்தில் கட்டப்படும் புற நிலை அரசு தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான அரசியற் போராட்டத்தின் அடிப்படையில் இயங்கட்டும்.

இந்தியாவின் தயவில் இயங்க விரும்புபவர்கள் சிறைப்படிருக்கும் மக்களை வெளியால் எடுத்து அவர்களுக்கு வாழ்வை வழங்குபவர்கள் அதனைச் செய்யட்டும்.

ஆயுதப்போரின் மூலமே தீர்வைக் காணாலாம் என்பவர்கள் அதன் மூலம் தீர்வைக் காணட்டும்.

எல்லோரின் நோக்கமும் ஒன்றாக இருக்கும் போது ஏன் இந்தச் சண்டைகள்?

எவரையும் நாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.எமக்கான தீர்வு எது என்பதை நாமே தீர்மானிக்கிறோம்.

எமக்கான தீர்வை நாமே போராடிப்பெற முடியும்.போராடும் முறமைகள் சூழ் நிலைக்கு ஏற்ப மாறலாம்.

சர்வதேச சூழ் நிலைகள் இப்படியே இருக்கப் போவதில்லை.எதாவது ஒரு புள்ளியில் முரண்பாடுகள் வெடிக்கும்.அந்தத் தருணத்தைப் பயன் படுத்த நாங்கள் பலம் பெற வேண்டும்.

பேச்சுவார்த்தைக் காலகட்டத்திலும் இதனைத் தான் நாம் செய்திருக்க வேண்டும்.எதிரியின் பலத்தை கணிப்பிடாது எமது வளம் அனைத்தையும் சாதகமற்ற களத்தில் ஒன்று திரட்டியமை மிகப்பெரிய தவறு.இந்தத் தவற்றைச் செய்யத் துண்டியவர்கள் யார்? பலர் எழுதியதைப்போல் இதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளி வந்து சொல்லும் மட்டும் எமக்கு இதில் இருக்கும் உண்மை பொய் தெரியப்போவதில்லை.தமிழரின் தலமை விட்ட மிகப்பெரிய கணிப்புத் தவறு இது என நான் கருதுகிறேன்.

மீண்டு எழும் போராட்டச் சக்திகள் இவற்றிலிருந்து பாடங்களைக் கற்று போராட்டத்தை முன் நகர்துவார்கள்.அது வரை புலத்தில் நாம் போராட்டத்துக்கு அவசியமான பக்கபலமாக ஒன்று பட்டு இருப்போம்.முடிவில் எந்தச் சதிகளையும் சதிகாரர்களையும் மக்கள் இனம் காணுவார்கள்.புலத்தில் இருப்பவர்கள் களம் சென்றாலையே ஆயுதப் போராட்டத்தை முன் எடுக்க முடியும்.அப்படி நம்புகிறவர்கள் சென்று போராடட்டும்.செல்லமுடியாதவர்

Link to comment
Share on other sites

ரதி, தமிழ்த்தங்கை போன்றோரின் கருத்தே எனது கருத்தும், உண்மையும் அதுவே.

பலர் சில விடயங்களை சாதிப்பதிற்காக உயிரோடு இருக்கும் தெய்வத்தை இறந்ததாக புனைகதைகளை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

எது எப்படியிருப்பினும் எங்களுக்கு விரோதியான "றோ" இந்த புனை கதைகளை முறியடித்து விட்டது என்பதையிட்டு இந்த கதைகளுக்கு உரியவர்கள் வருந்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது என்னையும் துரோகி பட்டியலில் சேர்க்கலாமா என்று சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

இலங்கை அரசுக்கு தேவைகள் கருதி முண்டு கொடுக்கும் நாடுகளின் போட்டி நிலை ஒரு சந்தர்ப்பத்தில் முறண்படும். அந்த வேளை தமிழர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகும். ஆனால் அதையும் தமிழர்களால் நிச்சயம் பயன்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். இதற்கான காரணங்களே ஆராயப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய காலமிது தவிர எந்த ஒரு வடிவத்திலான போராட்டத்துக்குமான காலமில்லை இது என்பதை புரிந்து கொள்தல் அவசியமானது.

தமிழர்களை எதிர்கொண்டது உள்ளகமான சமூகப் பிரச்சனை மற்றும் வெளியே இனப்பிரச்சனை. இன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு காணப்படாமல் போனதற்கு உள்ளகமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமையே காரணமாகின்றது. தமிழர் எப்படி சிதைந்து சீரளிந்து கிடக்கின்றானர் என்பதை யாரும் முதன்மைப்படுத்துவதில்லை. சாதியாக மதமாக வர்க்கமாக இவைகளின் பல கூறுகளாக தமிழர்கள் முரண்பட்டு பிளவுபட்டு சீரளிந்து போயுள்ளனர். இதன் காரணமாக ஒரு வலுவான இனமாக ஒன்றுபட்டு எழுச்சி கொள்ள முடியாது.

இவ்வாறான பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்றுபடுதல் என்ற புள்ளியில் மட்டும் இல்லாமல் சக மனிதனை நேசிக்கும் தன்மையையே அடிப்படையில் இல்லாதொழித்துள்ளது. சிங்களவர்கள் மட்டும் தமிழர்களை கொல்வதில்லை தமிழரின் முரண்பாடுகளால் எழுந்த வேற்றுமை உணர்வுகள் சக மனிதனை கொன்றொழிப்பதற்கு அதிகம் தயங்குவதில்லை. சமூகத்தினுள்ளான போட்டி நிலைக்காக வாழ்ந்த பிரதேசங்களை துறந்து வெளியேறத் தயங்குவதில்லை. மதப்பிளவுகளுக்காக கொல்லத் தயங்குவதில்லை. பிரதேசவாதப் பிளவுகள். மேலாண்மை. புத்திஜீவிதக் கர்வம். இவ்வாறு பலவுமான முரண்பாடுகளை கடந்து இனமாக ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றுபடும் அடிப்படை மனப்பான்மையை இழந்து நிற்கின்றது தமிழினம். இந்த முரண்பாடுகளில் இருந்து புலிகள் உட்பட எந்த இயக்கமும் அமைப்பும் தனிமனிதனும் இன்னும் வெளியில் வரவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா? எதுவும் இல்லை. நாம் ஒருவன் சட்டையை மற்றவன் பிடித்து கடிபட்டு குத்துப்படுகின்றோம் ஆனால் தமிழில் பேசிக் குத்துப்படுகின்றோம் கடிபடுகின்றோம். அதற்காக தமிழர் என்கின்றோம்.

நாளைக்கே சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் முரண்பாடு வந்து தமிழர்களிடம் வாக்கெடுத்து அவர்கள் பிரிந்து போக விரும்பின் போகட்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதில் தமிழன் படுதோல்வி அடைவது நிச்சயமானது. இஸ்லாமிய தமிழர்கள் மலையக தமிழர்கள் பிரதேசவதத்தை முன்நிறுத்தும் தமிழர்கள் மாற்றுச் சிந்தனை உள்ள தமிழர்கள் தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எவரும் பிரிவினை கோரி வாக்களிக்;கப்போவதில்லை.

எமக்குள்ளான முரண்பாடுகள் தீர்க்கப்படுதல். எமது பிரதேசங்களில் நாம் வாழும் எண்ணம் பெறுதல். ஒருவரை ஒருவர் நேசித்தல் போன்ற பல நிலைகளை ஏற்படுத்த போராடுதலே இன்றய காலம். பம்மாத்தின்றி இனமாக உருவமதலே நாளை ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் இல்லையேல் அதுவும் நடக்காது.

Link to comment
Share on other sites

வணக்கம்.

நிச்சயம் தலைவர் உயிருடன் இருக்கமாட்டார். இருந்திருப்பின் வழுதி போன்றோர் கொரில்லா போர் சாத்தியமே இல்லை என்பதற்கும், புலிக்கொடி பிடிக்ககூடாது, துப்பாக்கி தூக்கக்கூடாது என்று சொல்ல கே,பிக்கும் துணிச்சல் கிடையாது. தலைவர் இல்லை என்றீர். சரி நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். காந்தி கதரும் கடலை மிட்டாயும் வைத்துக்கொண்டு, கடலை பொரி புலிப்படை என ஏதாவது சல்லி பார்க்கும் வேலை பாருங்கள். மணிக்கணக்காய்.. செத்தவன் கதை பேசுவதை விடுத்து.. தடுப்பு முகாமில் இருக்கும் மக்களுக்காக போராளிகளுக்காக என்ன எழுதி கிழித்தீர்கள். நீங்கள்தானே சொன்னீர்கள்.கடைசி வரை தன் கொள்கையில் உறுதியுடன் நின்று களமாடினான் பிரபாகரன் என்று.. இப்ப இருக்கின்ற மக்களுக்காக மட்டும் அல்ல இனி வரும் தமிழருக்காக போரடினான்..

எம் புலிகள். ஆயுதம் அவர்கள் விரும்பிய முறை அல்ல. கொடுஞ் சிங்களவன் திணித்த முறை. இந்த உலகம் வெள்ளைக் கொடியில் செத்த எமது அண்ணன்களை வேடிக்கை பார்த்தது. இனியும் பார்க்கும். நீங்கள் செல்லும் வ்ழிதான் சரி என்றால் சொல்லுங்கள்.செல்லுங்கள். ஆனால் பிரபாகரன் முட்டாள் என்ற தொனியில் பேசாதீர்கள். ஒரு போராளியின் தியாகத்தை குறைத்து பேச.. உங்களையும் என்னையும் போன்ற காகித புலிகளுக்கு அருகதை இல்லை. டக்ளஸ், கருணா போல நீங்களும் புதிதாய்.. இயக்கம் கட்டுங்கள், போராடுங்கள். எப்படியோ.. தமிழனை வாழ விடாது நாசம் செய்யுங்கள்.

நன்றி

எத்தனையோ கடமைகள் எங்களுக்கு இருக்கிறது( வன்னிச் சிறைகளில் இருக்கும் உறவுகளை வெளியில் எடுப்பது). அதை விட்டு , நீங்கள் நினைக்கும் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்களை கூறுபவர்களை துரோகி என்று கூறிக் கொண்டு சிங்களவன் எதைச் செய்ய நினைத்தானோ அதற்கு துணை செய்கிறீர்கள். தமிழன் உருப்பட்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

நீங்க எல்லா பக்கத்திலேயும் தலைவரை அண்ணா......அண்ணா.....என்கிறதை பாத்தால் அண்ணாக்கு நெருங்கினமாதிரி... புலிகள் அமைப்பிலை 88களிற்கு முன்னர் நேர்ந்தவர் போலை தெரிகிது ஏணெண்ணா அதுக்கு பிறகாலை யாரும் தலைவரை அண்ணா எண்ணு அழைப்பதில்லை..அப்படி அண்ணான்னு சொல்லுற அளவிற்கு நெருக்கம் உள்ள நீங்க தலைவரிற்கு ஆபத்து வெளியிலை இருந்து வரைலை உள்ளையேதான் அனைத்துலக செயலக பொறுப்பாளராவும்.. சிறப்பு தளபதியாவும் .. அவரோடை பாதுகாப்பு பிரிவிலையும் இருந்தது தெரியாமல் போச்சுதேங்கண்ணா...எண்னிக்கு யாரிற்காக போராட தொடங்கினாங்களோ யாரு இவங்களை பொத்தி பொத்தி பாதுகாத்தாங்களோ அவங்களிற்கெதிராவே கடைசியா துப்பாக்கியை திருப்பி அதை வீடியோவிலை போட்டு வெளிநாட்டுக்கு பிரச்சாரம் பண்ணி தங்கனை பாதுகாத்துக்க நினைச்சாங்களோ அன்னிக்கெ புலிகள் தங்களோடை அழிவை நோக்கி நடக்க தொடங்கிட்டாங்க...இதுக்காக என்:னோடை கோவிக்காதீங்க.. அதக்கான ஆதாரங்களை யாழ் நிருவாகம் அனுமதிச்சா இங்கையெ கொண்டாந்து போடுறனுங்க..

இதேமாதிரியான கருத்து(குப்பை) ஒன்றை ஒட்டுக்குழு ஊடகம் ஒன்றில் கீழே "கொமண்ட்" ல் பார்த்தேன். அப்ப யாழ்களம் ரொம்ப ஓவரா கருத்து சுதந்திரம் குடுத்திட்டுது போல :rolleyes: சும்மா கருத்துசுதந்திரம் எண்டு போட்டு தேவையில்லாத கண்ட கண்ட குப்பைகளை எல்லாம் எழுதமுடியாதுங்கொ..

Link to comment
Share on other sites

ரதி, தமிழ்த்தங்கை போன்றோரின் கருத்தே எனது கருத்தும், உண்மையும் அதுவே.

பலர் சில விடயங்களை சாதிப்பதிற்காக உயிரோடு இருக்கும் தெய்வத்தை இறந்ததாக புனைகதைகளை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

எது எப்படியிருப்பினும் எங்களுக்கு விரோதியான "றோ" இந்த புனை கதைகளை முறியடித்து விட்டது என்பதையிட்டு இந்த கதைகளுக்கு உரியவர்கள் வருந்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது என்னையும் துரோகி பட்டியலில் சேர்க்கலாமா என்று சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள்.

அய்யோ! அய்யயோ!! ....... ஒருதரும் உங்களை சொல்லேலைங்கோ!! நேங்கள் தானுங்கோ உந்த து..து....வைத் தொடங்கினீர்கள் .......

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய், இறுதியில் உள்ளுக்குள், வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனா, வியட்னாம், அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாது, அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்களை மெளனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது.

நோர்வே அரசு, குறிப்பாக திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் இதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். அவரும் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

(...)

2009, மே 14, வியாழக்கிழமை வரை - தொடர்ந்து போராடுவதில் தமக்கு இருந்த உறுதிப்பாட்டையே விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியபடி இருந்தது.

ஒருகுடம் பாலும்..... ஒரு துளியாய் நஞ்சும்.

தமிழீழப் போர் - 1 மற்றும் தமிழீழப் போர் -2 ஆகியன கற்றுத் தந்திருக்கும் பாடங்களை அடிப்படையாக வைத்து தமிழீழப் போர் - 3 இனை நாம் வடிவமைக்க வேண்டும்.

அட இனித்தான் 3ம்கட்ட ஈழப்போரா???? அப்போ ஏற்கனவே வி.புலிகள் நடத்தியது எல்லாம் சேர்ப்பில்லையா? :rolleyes::rolleyes:

please tell me....

Link to comment
Share on other sites

மொத்தத்தில் தலைவரை ஒரு கேனையணாக சித்தரித்து விட்டார்கள்.

35 ஆண்டுகளிற்கு மேலாக இந்த போராட்ட கனவிலேயே வாழ்ந்த அந்த உன்னத மனிதனை யார் யாரோ பேச்சிற்கெல்லாம் தலைசாய்த்தவர் என்று கருதிவிட்டார்கள்.

தமிழ்ச்செல்வன் சொன்னலென்ன அன்ரன்னா சொன்னாலென்ன எல்லாவற்றையும் கேட்டாலும் அவரிற்கென்று ஒரு அறிவு இருந்தது இருக்கினறது அதன்படிதான் செயற்பட்டார். யாரையும் நம்பிக்கெடவில்லை. பொட்டம்மான் அருகில் இருக்கும்வரை அவரை யாராலும் அசைக்க முடியாது.

என்னை துரோகி என்று சொன்னாலும் சொல்லுங்கள்

அவர் தனது கடமையை சரிவர செய்துவிட்டார். நாம்தான் அதனை கொண்டு இழுக்க வேண்டும்.

கைசேர்ப்போம் வெற்றிக்கொடி நாட்ட அவர் வருவார்.

நம்புங்கள் தமிழீழம் பிறக்கும் தலைவனும் வருவார்

Link to comment
Share on other sites

அன்ரன்னா சொன்னாலென்ன எல்லாவற்றையும் கேட்டாலும் அவரிற்கென்று ஒரு அறிவு இருந்தது இருக்கினறது அதன்படிதான் செயற்பட்டார். யாரையும் நம்பிக்கெடவில்லை.
......????? :rolleyes:

அவர் தனது கடமையை சரிவர செய்துவிட்டார்.
...???? :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.