இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாள் முடிவில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 202/5 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 59, ஒஷாட பெர்ணான்டோ 40, தனஞ்சய டி சில்வா ஆ.இ 38, அஞ்சலோ மத்தியூஸ் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 2/51, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37, உஸ்மான் கான் ஷின்வாரி 1/47, மொஹமட் அப்பாஸ் 1/50)
http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்கெதிரான-முதலாவது-டெஸ்டில்-முன்னிலையில்-பாகிஸ்தான்/44-242355
மு. களஞ்சியமும் விகடன் வெளியிட்ட செய்தியும்
இயக்குனரும், அரசியல் ஈடுபாட்டாளருமான மு. களஞ்சியம் கடந்த நவம்பர் 27 ம் நாள் - மாவீரர் நாளை அண்டிய நாட்களில் தமிழர் தாயகத்தில் இருந்தார்.
பயணமொன்றை மேற்கொண்டு வந்தவர், அதிலும் ஆட்சி மாற்றம் நடந்த சூழலில் வந்த ஒருவர் + நாம் தமிழர் கட்சியோடு தேர்தல் காலங்களில் இணைந்து பயணிப்பவர் என்கிற அடிப்படையிலும், அவரது புதிய படம் தொடர்பான விடயங்களை பெறும் நோக்கிலும் ஒரு நேர்காணலில் சந்தித்தேன்.
அவரை இயக்குனராக கொண்டு ஆரம்பித்த கேள்வி பதில்களில் தொல் திருமாவளவன் தொடர்பாகவும், சீமான் தொடர்பாகவும் அவராகவே தொட்டுச்செல்ல குறித்த நேர்காணல் அரசியல் பக்கம் திரும்பியது.
நிற்க.
நேர்காணல் நவம்பர் 29ம் நாள் பதிவு செய்யப்பட்டது.
அரசியல் களத்தில், ராஜீவ் காந்தி மரணம் பற்றிய சீமானின் கருத்து தொடர்பான நிலைப்பாட்டில் தொடங்கிய தீவிர அரசியல் கேள்விகள், யாழ்ப்பாணத்துக்கான வருகை பற்றியதாக திரும்பியது.
இந்த கேள்விக்கு பதில் தந்த மு. களஞ்சியம்,
தான் இலங்கைக்கு வந்திருப்பது, "சுற்றுலா வீசாவில்" என்றும், நாட்டை சுற்றிப்பார்க்க வந்துள்ளேன் என்றும், குறிப்பாக sightseeing என்ற சொல்லை 2 தடவைகள் பயன்படுத்தியும் சொன்னார்.
யுத்தம் நடந்து 10 வருடத்தின் பின்னர் இந்த மண் எப்படியிருக்கிறது என்பதை "பார்க்கவே" வந்ததாக சொன்னார்.
நிற்க. விகடன் செய்தியில் பின்வருமாறு,
//மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காகக் கடந்த மாதம் 27-ம் தேதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றிருக்கிறார் தமிழர்நலன் பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம். இவ்விழாவை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் இப்படியொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.///
சுற்றிப்பார்க்கவே வந்திருப்பதாகவும், சந்திப்புகள் எதையும் திட்டமிடவில்லை எனவும் நேர்காணலில் குறிப்பிட்டவர், சில இயக்கத்தவரையும் நண்பர்களையும் சந்தித்தாக சொன்னார். தவிர விகடன் சொன்னது போல, பல்கலை மாணவர் அழைப்பிலோ, அவர்களின் நிகழ்வை மையமாக கொண்டோ அவர் வந்ததாக சொல்லவில்லை.
பல்கலைக்கு சென்றதாக சொன்னவர், " தமிழர்களின் பெருமைக்குரிய ஒரு பல்கலைகழகத்துக்கு வந்தேன், சுற்றிப்பார்த்தேன் என இருக்க வேண்டும்" என்பதற்காகவே அங்கு சென்றேன் என்றார்.
தவிர, பல்கலை நிகழ்வில் கலந்துகொள்ளாமல், கோப்பாய் நிகழ்வை தான் இவர் சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கான பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் சொன்ன அவர், இங்கு வருவது தொடர்பான அச்ச நிலை தமக்கு இந்தியாவில் சொல்லப்பட்டதாகவும், ஆபத்தான சூழல் இருப்பதாகவும் தாம் அறிந்ததாகவும் என்ற பொருள்பட சொன்னவரிடம்,
இங்கு வந்த பின்னர் அந்த அச்சநிலை எப்படியிருக்கிறது என கேட்டபோது,
நிற்க. நேர்காணல் எடுக்கப்பட்டது நவம்பர் 29.
"அச்சநிலை இருக்கிறது, ஏன் இப்ப வந்தனீங்க எண்டு காண்றவை கேக்கினம், பழைய ஆட்சி காலத்தில வந்திருக்கலாமே என எல்லாரும் சொன்னார்கள்" என்றவர் நேரடி விசாரிப்புகள், மிரட்டல்கள் நடந்ததாக ஒரு வார்த்தையேனும் சொல்லவில்லை.
இப்போது, விகடன் செய்தி
//மாவீரர் நாள் நிகழ்வுக்காக ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உரையை நிகழ்த்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், இலங்கையில் நடத்தினால் என்ன என்று நினைத்தேன். அதற்கேற்ப, இலங்கையில் உள்ள இளைஞர்கள் சிலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு அறைக்கு வந்தேன். அப்போது இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, `நீங்கள் யார்.. எங்கிருந்து வருகிறீர்கள். இங்கு உங்களுக்கு என்ன வேலை?' என மிரட்டும் தொனியில் கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தேன்.////
இந்த விகடன் செய்தியில் சொன்ன 27ம் திகதி விடயத்தை 29ம் திகதி நேர்காணலில் சொல்லவேயில்லை. தவிர மிகச்சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.
இடையில், "இலங்கையின் புதிய அதிபர் கௌரவ மதிப்புக்குரிய கோட்டபாய ராஜபக்ச அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் தனக்கு வாக்களிக்காத தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் தானே அதிபர் என சொல்லியுள்ளார்" என்றார் மு. களஞ்சியம்.
அப்போது, கோட்டபாய ராஜபக்ச இந்தியாவில் நின்ற நிலையில் " உங்கள் அமைப்பு சார்ந்து முன்னெடுக்கப்பட்ட விடயங்கள்" பற்றி கேட்ட கேள்விக்கு பதில்களை வழங்கியவரிடம்,
தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக, யாழ் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினீர்களா? என கேட்டபோது, இல்லை என்றும், சுற்றிப்பார்க்க வந்தவர் என்பதையும், திரைப்பட விடயமாக தமிழகம் செல்லவேண்டும் என்பதையும் பதிலாக சொன்னார்.
இப்படியாக அந்த நேர்காணல் நிறைவுக்கு வந்தது.
மிக சாதாரணமாக சினிமா விடயங்கள் உரையாடியவர், தற்போது அவர் சொல்லும் 27, நவம்பரில் நடந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் 29, நவம்பரில் எதுவும் சொல்லாதவர், சுற்றிப்பார்க்க வந்தேன் என்றும், யுத்தம் நடந்த இடத்தை sightseeing செய்ய வந்தேன் என சொல்பவரும், தமிழகம் சென்ற பின்னர் விகடன் ஊடாக வெளியிட்டுள்ள செய்தி நகை முரணாகவே இருக்கிறது.
பல்கலைகழகம் சார்ந்த விடயங்களும், மாவீரர் நாள் பற்றிய விடயங்களும் உலகிற்கு உடனுக்குடன் வெளிவந்த நிலையில், இவர் மறிக்கப்பட்டதும், விசாரிக்கப்பட்டதும் பற்றிய நிகழ்வுகள் வெளித்தெரியாமல் போவதென்பது ஆச்சரியமானதாக தெரிகிறது.
"கதை திரைக்கதை வசனம்" என்ற படம் நல்ல படம்.
https://www.youtube.com/watch?v=yoC7NCg8o2w&feature=youtu.be&fbclid=IwAR3I5jcrwufC1TbDTU2Ftu-vn_seU_y9AOZd-61LVAqhbNTa5PjkwnM7zmM&app=desktop