Jump to content

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை அபாரம் நிழலி. உங்கட நக்கல் நளின வெறுப்பைத் திசை மாற்ற நல்ல வழியக் கண்டு பிடிச்சிருக்கிறீங்கள். எனக்கும் அடையாளம் தெரியுது படத்தில இருக்கிற இடம். அந்த இரண்டாவது படத்தில இருக்கிற இயந்திரப் படியால இறங்கிப் போனால் சன நெரிசல் மிக்க வரித் தீர்வையற்ற கடைகளுக்குப் போகலாம் (முதலாவது படம்). நானும் வரித்தீர்வையற்ற கடையெண்டவுடன எல்லாம் புறக்கோட்டை நடை பாதை றேஞ்சில கிடைக்குமாக்குமெண்டு போய்ப் பார்த்தன்,விலையள் பார்க்கவே கண்ணக் கட்டீற்றுது, திரும்பி மற்றப் பக்கப் படியால ஏறி வந்து கேற்றுக்குக் கிட்ட இருந்திட்டன்.

அது சரி, எயார் போட் படம் போட்டது மாதிரி இம்பீரியல் படமும் போடுவியள் தானே? இல்லையோ?! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பவுணை ......

நம்ம ஊர் சந்தையில கத்தரிக்காய் , தக்காளிப்பழம் மாதிரி குவிச்சு வைச்சிருப்பாங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை பவுணை ......

நம்ம ஊர் சந்தையில கத்தரிக்காய் , தக்காளிப்பழம் மாதிரி குவிச்சு வைச்சிருப்பாங்கள் .

இது கொஞ்சம் அவியல்.. நான் போன இடத்தில கண்ணாடிப் பெட்டியுக்க பூட்டித் தான் வைச்சிருந்தவங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் adults only என்று எழுத வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டியள்......ஆறுமுக நாவலர் பெரிய புராணத்தை கை கழுவிட்டு இப்ப இதை தான் follow பண்றாராம் என்று கேள்வி!!!

:rolleyes:

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் அவியல்.. நான் போன இடத்தில கண்ணாடிப் பெட்டியுக்க பூட்டித் தான் வைச்சிருந்தவங்கள் :rolleyes:

கத்தரிக்காய் , தக்காளிப்பழம் என்னும் போதே ........ அவியல் தானே .....

ஆனால் ...... கண்ணாடிப் பெட்டிக்குள்ளும் குவித்து வைத்திருப்பார்களே பவுணை கிலோ கணக்கில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் adults only என்று எழுத வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டியள்......ஆறுமுக நாவலர் பெரிய புராணத்தை கை கழுவிட்டு இப்ப இதை தான் follow பண்றாராம் என்று கேள்வி!!!

:rolleyes:

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

வேலையெல்லாம் செய்யேல்ல, இரண்டு தரம் எமிரேட்சில போய் வரேக்க டுபாய்க்கால போய் வந்திருக்கிறன். ஒரு தடவை ஒரு நாள் ஹோட்டலில தங்கி வந்தன்..நிழலி சொல்ற இரண்டு விஷயங்கள் தெளிவாத் தெரிஞ்சுது

1. அந்த அனல் வெய்யில். ஹோட்டல விட்டு வெளியில வரும் போது காவலாளியிட்டக் கேட்டன் ஏதாவது பல் பொருள் அங்காடி பக்கத்தில இருக்க எண்டு..இருக்குது பத்து நிமிஷ நடையில எண்டான். அவனே தொடர்ந்து நடந்தா போகப் போறியள் (பி .ப 3 மணி அப்ப!) எண்டு கேட்டுப் போட்டு ஒரு மாதிரிப் பார்த்தான். வெளியில இறங்கி நடக்கேக்க தான் அவன்ர பார்வையின்ர அர்த்தம் விளங்கீச்சு.

2. பெண்கள் மூடிக் கட்டிக் கொண்டு திரிவினம் எண்டு போனால், அங்க படு தாராளம் கண்டியளோ. அது வெள்ளையும் இல்லாம பிறவுணும் இல்லாம ஒரு கலர் வேற..ஆவெண்டு பாத்து மனிசியிட்ட நுள்ளு வாங்க வேண்டியதாப் போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

ஜஸ்டின்/ தமிழ் சிறி அண்ணாமாரும் அங்க வேலை செய்தனிங்களே??

இளையபிள்ளை ,

நான் விமானத்தில் பயணம் செய்யும் போது கவனித்து ......

அங்குள்ள பயண மாற்றங்களை முன்யோசனையாக செலவிடுவது வழக்கம் .

இதற்கு என்று தனியாக செலவு செய்ய விருப்பமில்லை . ( ஆகா..... தமிழனுக்கே உள்ள குணம் என்று நீங்கள் புறு , புறுப்பதும் கேட்குது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலையெல்லாம் செய்யேல்ல, இரண்டு தரம் எமிரேட்சில போய் வரேக்க டுபாய்க்கால போய் வந்திருக்கிறன். ஒரு தடவை ஒரு நாள் ஹோட்டலில தங்கி வந்தன்..நிழலி சொல்ற இரண்டு விஷயங்கள் தெளிவாத் தெரிஞ்சுது

1. அந்த அனல் வெய்யில். ஹோட்டல விட்டு வெளியில வரும் போது காவலாளியிட்டக் கேட்டன் ஏதாவது பல் பொருள் அங்காடி பக்கத்தில இருக்க எண்டு..இருக்குது பத்து நிமிஷ நடையில எண்டான். அவனே தொடர்ந்து நடந்தா போகப் போறியள் (பி .ப 3 மணி அப்ப!) எண்டு கேட்டுப் போட்டு ஒரு மாதிரிப் பார்த்தான். வெளியில இறங்கி நடக்கேக்க தான் அவன்ர பார்வையின்ர அர்த்தம் விளங்கீச்சு.

2. பெண்கள் மூடிக் கட்டிக் கொண்டு திரிவினம் எண்டு போனால், அங்க படு தாராளம் கண்டியளோ. அது வெள்ளையும் இல்லாம பிறவுணும் இல்லாம ஒரு கலர் வேற..ஆவெண்டு பாத்து மனிசியிட்ட நுள்ளு வாங்க வேண்டியதாப் போச்சு!

தமிழ் சிறி: "இளையபிள்ளை ,

நான் விமானத்தில் பயணம் செய்யும் போது கவனித்து ......

அங்குள்ள பயண மாற்றங்களை முன்யோசனையாக செலவிடுவது வழக்கம் .

இதற்கு என்று தனியாக செலவு செய்ய விருப்பமில்லை . ( ஆகா..... தமிழனுக்கே உள்ள குணம் என்று நீங்கள் புறு , புறுப்பதும் கேட்குது )"

:lol: நல்லது நல்லது... :)

இங்க வரி கட்ட பஞ்சில கொஞ்ச நாள் dubaiக்கு கிட்ட இன்னொரு oven உக்குள்ள இருந்து (வெட்கையை தான் சொல்கிறேன்) வேகினான் - அதான் கேட்டேன்!

ஆனால் நிச்சயமாக நிழலி அண்ணாவின் adults only திரியில் குறிப்பிடும் படியான அனுபவம் ஒன்றுமில்லை என்னிடம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

அங்கம் 4: எரிக்காத வெயில்

....

ஒரு மூன்று நிமிடம் நடந்து இருப்பன். போறணைக்கு பக்கத்தில் நின்றால் உடம்பு சூடாகுவது போல் உடல் முழுக்க சூடு ஏறத் தொடங்கியது. நடு மண்டையில் நச் சென்று சூரியன் வந்து குந்தி இருந்து எகத்தாளமாக சிரிப்பது போல ஒரு உணர்வு. மூன்று நிமிடத்தில் கடந்த தூரத்தை முப்பது செக்கனில் ஓடிக் கடந்து மீண்டும் விடுதிக்கே வந்து விட்டேன்.

....என்னைப் போன்ற நல்ல தங்க நிறமான ஆக்கள் (யாழ் களத்தில் உள்ள அனேகம் பேரை நிச்சயம் சந்திக்க மாட்டன் என்ற துணிவு இருக்கு...என்னை நேரில் பார்த்தவர்கள் தம் திருவாயை மூடிக் கொள்ளவும்) எவ்வளவு வெயில் அடித்தாலும் கறுக்க மாட்டினம். கையில் முட்டையுடன் போனால், நடு வீதியில் வைத்து பொரியள் செய்து சாப்பிடலாம்.

...

நிழலி அண்ணா, உங்கள் சொந்த அனுபவங்களுடன் இடைக்கிட நகைச்சுவையையும் கலந்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை கொடுத்து எழுதுறீங்கள்... :)

ஒரு சின்ன சந்தேகம்... :D நீங்கள் மெகா சிரியல் பார்ப்பீர்களோ??? :unsure: அடிக்கடி தொடரும்... என்று பாதில நிறுத்திவிடுப் போகிறீர்கள் அது தான் கேட்டேன்.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி.

இப்படிக்கு

பென்மன்

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்,நாங்களும் டூபாய் யில *சலாம் அலைக்கும் ,அலைக்கும் சலாம் ,கேவில் கால்,தமாம் " எல்லாம் சொன்னமாக்கும்...தொடருங்கள் உங்கள் பிஸ்முல்லா வை

Link to comment
Share on other sites

ஐயா நிழலி

ஒரே தடவையில் 5 வசனங்களுக்கு மேல் எழுதுவதில்லை என்று யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்திருக்கிறீர்களா?

பொறுமையைச் சோதிக்கத் தான் வேண்டும் அதற்காக இப்படியா........

ஒரு சின்ன சந்தேகம்... :lol: நீங்கள் மெகா சிரியல் பார்ப்பீர்களோ??? :( அடிக்கடி தொடரும்... என்று பாதில நிறுத்திவிடுப் போகிறீர்கள் அது தான் கேட்டேன்.... :icon_idea:

நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகின்றேன். அனேகமாக அலுவலகத்தில் இருக்கும் போது கிடைக்கும் சொற்ப நேரங்களில் தான் எழுதுகின்றேன். வீட்டில் vista OS என்பதால் கடினம். அத்துடன் விஸ்டா (Vista) வில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் மூன்று முறை மறைந்து மறைந்து பின் தான் சரி வருகின்றது (Vista 64BIT + IE8)...

அத்துடன் எழுதுவதற்கு என்று சரியான Mood கிடைக்க வேண்டும். வீட்டில் நிற்கும் போது Mood வேறு எங்கோ போவதால் எழுத முடிவது குறைவு

சின்ன ஒரு கவலை அண்ணா உங்கட பேயருக்கு பக்கதில் இருப்பவரைக்காணத்தான் கொஞ்சம் கண் கூசுது . :D^_^ அண்ணா.ஆதிகால மனிதரின்ட நினைப்பு வருகிறது.ம்ம்ம்.... :lol::lol:

யாயினி.

ம்ம்ம்... அது நான் இன்னும் டார்வின் கூர்ப்பின் படி சரியாக பரிணாமம் அடையவில்லை என்பதை காட்ட....

உங்கட நக்கல் நளின வெறுப்பைத் திசை மாற்ற நல்ல வழியக் கண்டு பிடிச்சிருக்கிறீங்கள்.

உண்மை தான் ஜஸ்ரின்... அரசியல் பற்றி எதனை எழுதினாலும், வெறுப்பு ஒரு மேகக் கூட்டமாக கவிந்து கொள்கின்றது. அதனூடாக எரிச்சலும், ஆத்திரமுமே வந்து எழுத்தில் தங்கி நிற்கத் தொடங்கி விட்டது. குற்ற உணர்வு மேலிட்டு மற்றவரை குற்றம் கண்டு பிடிப்பதில் போய் முடிகின்றது. எனவே இப்போதைக்கு தீவிரமாக எதனையும் எழுதாமல் விடுவது என்று நல்லம் என்று நினைத்துள்ளேன். அது வரை இந்த தொடர் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த விரும்புகின்றேன்

Link to comment
Share on other sites

அங்கம் 5: சிதைவுற்ற ஆளுமைகள்

எமக்கு கூச்சம் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும்

என் தொழில் ரீதியான கூட்டங்களி்ல் (Meetings), கற்றல் தொடர்பான அரங்குகளில் (seminars) நான் இலகுவில் எனது கருத்துகளை முன் வைக்க மாட்டன். என் புரொஜக்ட் தொடர்பான கூட்டங்களில் எத்தனையோ நல்ல திட்டங்கள் மனதில் எழுந்தாலும் அதனை எல்லோரும் முன் தைரியமாக சொல்ல மனம் விடாது. "எங்கே நான் சொல்லப் போய் அதில் ஏதாவது பிழை இருந்திட்டால் அவமானமாகப் போய் விடுமே என்ற" என்ற ஒரு தயக்கம் வந்து எட்டிப் பார்க்கும். இத்தகைய கூச்சம், தயக்கம் என்னில் மட்டும் அல்லாது எம்மவர்களில் அநேகமானோரிடம் கண்டுள்ளேன். இதற்கு நாம் வளர்க்கப் படும் தமிழ் சூழ்நிலையும் முக்கிய காரணம். அப்பாவில் இருந்து பெரியப்பாவின் மனிசியின் ஒன்று விட்ட சித்தப்பன் வரைக்கும் நாம் சிறுவர்களாக இருக்கும் போது எம்மில் அதிகாரம் செலுத்த முனைவதும், எம் பள்ளிக் கூட கல்வி முறையும் இந்த தயக்கத்தினை எமக்குள் விதைத்து வைத்திருக்கின்றது. எந்த இடத்திற்கு போனாலும், அந்த இடத்தில் உள்ள அதிகார மையத்துடன் சமரசம் செய்து கொண்டு மறு பேச்சில்லாமல் எம்மை மெளனிகளாக வைத்திருக்க இந்த சமூக அமைப்பு எமக்கு கற்றுத் தந்துள்ளது.

இது ஒரு ஆளுமைச் சிதைவு.

ஒன்றுமே தெரியாதவன் தன் வாயால் வெட்டி வீழ்த்தி உயர் நிலையை அடையும் போது, ஓரளவிற்கேனும் திறமையுள்ள எம்மவர்கள் தம்மோடு கூடப் பிறந்த தயக்கத்தினால் வாயே திறக்காமல் இருந்து அதே நிலையிலேயே (position) தொடர்ந்து இருப்பதை அவதானித்துள்ளேன். இந்த தயக்கம் எமக்குள் இயலாமையை தோற்றுவித்து இருக்கும். இத்தகைய மனப்பான்மையை ஒப்பீட்டளவில் அதிகம் வாய்ப்புகளை பெற்று இருக்கு சிங்கள இளைய சமூகத்திடம் கூட கண்டுள்ளேன்.

இந்த ஆளுமைச் சிதைவால் எமக்குள் இருக்கும் திறமைகளை மற்றவர் முன் வெளிக்காட்ட தயங்குவோம். அதேபோல் எமக்குள் இருக்கும் ஆசைகளையும் கூட வெளியே காட்ட மாட்டோம். ஒரு விடயதிற்காக ஆசைப் பட்டாலும், அதனை வெளியே காட்டாது, அந்த ஆசையே எமக்கு இல்லை என்பது போல் நடிக்க முற்படுவதில் எம்மை விட சளைத்தவர்கள் யாரும் இல்லை

என் நண்பன் ஷான், வந்த முதல் நாளே இரவு விடுதிக்கு போவோமா எனக் கேட்கும் போது எனக்கும் போக வேண்டும் என்ற ஆசை எக்கச்சக்கமாக வந்தது. வெளியே திரியும் அழகான பெண்களை அருகே சென்று தொட்டுப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. ஆனால் பாழாய்ப் போன தயக்கமும், ஆசையை வெளியே காட்டக் கூடாது என்ற பழக்க தோசமும் அன்று என்னை "வேண்டாம் மச்சான்.. இன்னொரு நாளைக்கு பார்ப்பம்" என்று பதில் சொல்ல வைத்தது.

அடடா, நிழலி உண்மையைச் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறான் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ஆனால் உண்மையில் அன்று நடந்தது அது தான். அதன் பின்னான ஐந்து வருட டுபாய் வாழ்வில் என் சக அலுவலக தமிழ் நண்பர்களுடன் சென்று இப்படி எத்தனையோ இரவு விடுதிகளுக்கு சென்று இரவிரவாக கூத்தடித்து இருந்தாலும் அன்று (வந்த முதல் நாளே) என்னால் போக முடியவில்லை என்பதே உண்மை.

அவனுக்கு அப்படி சொன்னேனே ஒழிய, அன்றிரவு முழுதும் "போயிருக்கலாமே" என்று என்னையே எனக்குள் திட்டிக் கொண்டு இருந்தேன்.

இரண்டாவது நாள்

இந்த நாளை என்னால் மறக்க முடியாது. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியவனை ஒரு பெரிய அண்டாவுக்குள் இறக்கி விட்டதாக உணர்ந்த நாள். இலங்கையில் சிறிய நிறுவனங்களில் வேலை செய்த நான் கிட்டத் தட்ட 1100 பேர் வரைக்கும் வேலை செய்யும் நிறுவனத்துக்கு மாறிய நாள். அத்துடன் இந்தியர்கள் அதிகளவில் நிறைந்து இருக்கும் ஒரு நிறுவனத்தில் இந்தியர்களுடன், அதுவும் ஒரு மலையாளியை முகாமையாளராக கொண்ட ஒரு Project இல் வேலை செய்ய சந்தர்ப்பம் வந்த நாள்.

இந்த நாளும் அதன் பின்னான வாழ்வும் எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்தது. இந்த ஐந்து வருடங்களில் சிங்கள நண்பர்களுடனான உறவு, இந்தியர்களுடனான நட்பு, சக தமிழ் நண்பர்களுடனான உறவு என்பன எம் தேசிய விடுதலைப் போராட்டம் சார்பான என் கருத்துருவாக்கங்களில் பின்னாட்களில் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தன. இந்த 5 வருட காலகட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான சமாதான காலகட்டத்தினையும், கருணாவின் பிரிவையும், சுனாமி வந்ததையும், மகிந்தவவின் வரவையும், மாவிலாறில் இருந்து தொப்பிகல வரையான பிரதேசங்களை இழந்தமையும் உள்ளடக்கிய காலகட்டம். தமிழ் நண்பர்களை விட அதிகமான சிங்கள நண்பர்களையும், முஸ்லிம் நண்பர்களையும், இந்திய நண்பர்களையும் கொண்ட, தன் வாழ்நாளில் அதிகமான கால கட்டத்தினை சிங்கள பிரதேசத்தில் கழித்த, ஒரு ஈழத் தமிழனான எனக்கு இந்த காலகட்டம் உணர்த்திய உண்மைகள் பல.... அதே போல், மிக சுதந்திரமான உணர்வுகளுடனான பெற்றோரால் வளர்க்கப் பட்ட ஒருவனின் கையில் தேவையான அளவு காசும், சுதந்திரமான சூழ்நிலையும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதையும் இவை எனக்கு உணர்த்தின.

இந்த தொடரை எழுத வேண்டும் என என்னை தூண்டிய காரணங்களும் அவையாகவே அமைந்தன.

(தொடரும்)

Link to comment
Share on other sites

என் தொழில் ரீதியான கூட்டங்களி்ல் (ஆநநவiபௌ)இ கற்றல் தொடர்பான அரங்குகளில் (ளநஅiயெசள) நான் இலகுவில் எனது கருத்துகளை முன் வைக்க மாட்டன். என் புரொஜக்ட் தொடர்பான கூட்டங்களில் எத்தனையோ நல்ல திட்டங்கள் மனதில் எழுந்தாலும் அதனை எல்லோரும் முன் தைரியமாக சொல்ல மனம் விடாது. "எங்கே நான் சொல்லப் போய் அதில் ஏதாவது பிழை இருந்திட்டால் அவமானமாகப் போய் விடுமே என்ற" என்ற ஒரு தயக்கம் வந்து எட்டிப் பார்க்கும். இத்தகைய கூச்சம்இ தயக்கம் என்னில் மட்டும் அல்லாது எம்மவர்களில் அநேகமானோரிடம் கண்டுள்ளேன். இதற்கு நாம் வளர்க்கப் படும் தமிழ் சூழ்நிலையும் முக்கிய காரணம். அப்பாவில் இருந்து பெரியப்பாவின் மனிசியின் ஒன்று விட்ட சித்தப்பன் வரைக்கும் நாம் சிறுவர்களாக இருக்கும் போது எம்மில் அதிகாரம் செலுத்த முனைவதும்இ எம் பள்ளிக் கூட கல்வி முறையும் இந்த தயக்கத்தினை எமக்குள் விதைத்து வைத்திருக்கின்றது. எந்த இடத்திற்கு போனாலும்இ அந்த இடத்தில் உள்ள அதிகார மையத்துடன் சமரசம் செய்து கொண்டு மறு பேச்சில்லாமல் எம்மை மெளனிகளாக வைத்திருக்க இந்த சமூக அமைப்பு எமக்கு கற்றுத் தந்துள்ளது.

இது ஒரு ஆளுமைச் சிதைவு.

உண்மை சரியான விடயத்தை விளக்கமாகச் சொல்லியள்ளீர்கள் நிழலி

அடடாஇ நிழலி உண்மையைச் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறான் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. ஆனால் உண்மையில் அன்று நடந்தது அது தான். அதன் பின்னான ஐந்து வருட டுபாய் வாழ்வில் என் சக அலுவலக தமிழ் நண்பர்களுடன் சென்று இப்படி எத்தனையோ இரவு விடுதிகளுக்கு சென்று இரவிரவாக கூத்தடித்து இருந்தாலும் அன்று (வந்த முதல் நாளே) என்னால் போக முடியவில்லை என்பதே உண்மை.

அவனுக்கு அப்படி சொன்னேனே ஒழியஇ அன்றிரவு முழுதும் "போயிருக்கலாமே" என்று என்னையே எனக்குள் திட்டிக் கொண்டு இருந்தேன்.

உண்மையை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள்

எத்தனைபேர் இப்படி உண்மையை சொல்வார்கள் நான் உட்பட

Link to comment
Share on other sites

நேரம் கிடைக்கும் போது தான் எழுதுகின்றேன். அனேகமாக அலுவலகத்தில் இருக்கும் போது கிடைக்கும் சொற்ப நேரங்களில் தான் எழுதுகின்றேன். வீட்டில் vista OS என்பதால் கடினம். அத்துடன் விஸ்டா (Vista) வில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் மூன்று முறை மறைந்து மறைந்து பின் தான் சரி வருகின்றது (Vista 64BIT + IE8)...

அத்துடன் எழுதுவதற்கு என்று சரியான Mood கிடைக்க வேண்டும். வீட்டில் நிற்கும் போது Mood வேறு எங்கோ போவதால் எழுத முடிவது குறைவு

நிழலி அண்ணா, நீங்கள் நேரம் கிடைக்கும் பொது எழுதுங்கள்... யாழ் கள உறவுகளுக்கும் ஒரு பிராக்கு வேணும் தானே... எல்லாத்தையும் ஒரேயடியா எழுதினால், முழு மூச்சாக இருந்து வாசிச்சுடுப் போய்விடுவினம்... நீங்கள் இப்படியே தொடருங்கோ... நன்றி!

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா, நீங்கள் நேரம் கிடைக்கும் பொது எழுதுங்கள்... யாழ் கள உறவுகளுக்கும் ஒரு பிராக்கு வேணும் தானே... எல்லாத்தையும் ஒரேயடியா எழுதினால், முழு மூச்சாக இருந்து வாசிச்சுடுப் போய்விடுவினம்... நீங்கள் இப்படியே தொடருங்கோ... நன்றி!

ஹி ஹி... "இருக்கிறாரா இல்லையா" என்று விதண்டாவாத பத்திகள் வாசிப்பதை விட இப்படி வாசிக்கிறது நல்லம் என்பது என் தாழ்மையான கருத்து.

இப்படியான நக்கல் நையாண்டி விமர்சனங்கள் நிறைய வரும் என்று முன்னமே நிறைய எதிர்பார்த்தேனுங்கோ.. நீங்கள் கொஞ்சம் லேட்டுங்கோ..... உப்படி எல்லாம் எழுதினால் நான் எழுதுறதை நிப்பாட்ட போறதில்லைங்கோ.... நான் இழுக்கும் அளவுக்கு நீங்களும் இழுபட்டு தொடர்ந்து வாசிங்கோ...வேற வழி இல்லைங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளுமைச் சிதைவால் எமக்குள் இருக்கும் திறமைகளை மற்றவர் முன் வெளிக்காட்ட தயங்குவோம். அதேபோல் எமக்குள் இருக்கும் ஆசைகளையும் கூட வெளியே காட்ட மாட்டோம். ஒரு விடயதிற்காக ஆசைப் பட்டாலும், அதனை வெளியே காட்டாது, அந்த ஆசையே எமக்கு இல்லை என்பது போல் நடிக்க முற்படுவதில் எம்மை விட சளைத்தவர்கள் யாரும் இல்லை

எமது சமூக அமைப்பால் ஏற்பட்ட பாதிப்பு என்பது , சரியான கணிப்பு நிழலி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிழலி என்ற பெயரில் எழுதுவது உங்கள் மனைவிக்கு தெரியுமா...அப்படியாயின் நீங்கள் உண்மையிலேயே தைரியசாலி தான்...வாழ்த்துகள் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி அண்ணா.நன்றாகப்போகிறது உங்கள் மெகா தொடர் ச்சி......டுபாய் தொடர்.மற்றத்தொடர் எப்ப வரும் என்று காத்திருந்து வாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.வேலை இல்லமாமல் மண்டையைப் குளப்பிக்கொண்டு இருக்கிற என் போன்றவர்களுக்கு நல்ல விடயத்தை கொண்டு வாறயள் அண்ணா.நல்ல விடயம். :D:D:D

பிரியமுடன்:யாயினி.

Link to comment
Share on other sites

ஹி ஹி... "இருக்கிறாரா இல்லையா" என்று விதண்டாவாத பத்திகள் வாசிப்பதை விட இப்படி வாசிக்கிறது நல்லம் என்பது என் தாழ்மையான கருத்து.

இப்படியான நக்கல் நையாண்டி விமர்சனங்கள் நிறைய வரும் என்று முன்னமே நிறைய எதிர்பார்த்தேனுங்கோ.. நீங்கள் கொஞ்சம் லேட்டுங்கோ..... உப்படி எல்லாம் எழுதினால் நான் எழுதுறதை நிப்பாட்ட போறதில்லைங்கோ.... நான் இழுக்கும் அளவுக்கு நீங்களும் இழுபட்டு தொடர்ந்து வாசிங்கோ...வேற வழி இல்லைங்கோ

நிழலி அண்ணா... நீங்கள் சொன்னது போல "இருக்கிறாரா இல்லையா", "மீசையா தாடியா" என்னும் சில தலைப்புகளால் என் தலை படும் பாடு நான் மட்டுமே அறிவேன்... என்னைப் போன்று பலர் யாழில் தலையைப் பிச்சுக்கொண்டு இருப்பதை என்னால் உணரமுடிந்தது... அதனால் தான் உங்கள் கதை, யாழுக்கு ஒரு புதுப் பிராக்கு என்று சொனேனே தவிர, உங்ககளை எழுதவிடாமல் தடுப்பதுக்குரிய எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இருக்க இல்லை.... நேரம் கிடைக்கும் பொது தொடர்ந்து எழுத்துங்கள்.... நன்றி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தொடருங்கள் ...பேரீச்சைப்பழத்துடன் கவ்வா...அடிச்ச அனுபவமுண்டோ?

Link to comment
Share on other sites

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

முதல் நாள் அலுவலகத்துக்கு செல்கின்றேன். எனது குழு (team) இருக்கும் அறையினுள் அலுவலக பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டிச் செல்கின்றார். என்னை வேலைக்கு தொலைபேசி மூலம் நேர்முகம் செய்த பெண்மணியான 'யஸ்மின்' வரவேற்கின்றார். வரவேற்று என் இருக்கையை காட்டுகின்றார். என்னை விட ஆகக் குறைந்தது அரை அடியாவது உயரமான இந்த முகாமையாளர் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கு..ஆரம்பத்தில் கடும் சண்டை பிடித்து பின் திடீரென ஒரு நாளில் நண்பர்கள் ஆவது ஒரு நல்ல நட்பான உறவைத் தரும் என்பார்கள்.அதேபோல் தான் இந்த கேரளாவைச் சேர்ந்த யஸ்மினும் இன்று வரைக்கும் தொடர்பில் இருக்கும், எனக்கு கிடைத்த மிகச் சிறந்த தோழிகளில் ஒருவராக இருக்கின்றார். நீங்கள் எல்லாரும் கொடுப்புக்குள் சிரித்தாலும், உண்மை அதுதான்

என் இருக்கையில் ஒரு வித அன்னியத்தன்மையுடன் போய் அமர்கின்றேன். எப்பவுமே புதிய வேலை ஒன்றுக்கு போய் அது எமக்கு சரியாக பொருந்திக் கொள்ள ஒரு மாதமாவது எடுக்கும். ஆனால் என்னைப் போன்ற எந்த திறமையும் இல்லாவிடினும் எக்கச்சக்கமான தலைக்கனமும் விட்டேத்தி தனமும் கொண்ட ஒருவனுக்கு புதிய வேலை சரியாக பொருந்த பல நாட்கள் எடுக்க வேண்டி இருக்கும்.

என் இருக்கையில் அமர்ந்த பின் முன் தெரிந்த யன்னலால் வெளியே தெரியும் காட்சியை முதன் முதலில் பார்க்கின்றேன். என்னால் நம்பவே முடியாத ஒரு காட்சி விரிகின்றது.... வரிசையாக விமானங்கள் தரை இறங்குவதும். வரிசை கட்டி நிற்பதும், மேலே கிளம்பி போவதுமாக எவருக்குமே பார்க்க பிடிக்கின்ற அருமையான காட்சி விரிகின்றது. விமான நிலையத்துக்கு அருகாமையால் வேலை செய்யும் கட்டிடம் இருப்பதும் நான் ஏழாம் மாடியில் வேலை செய்வதும் இத்தகைய காட்சிகளை பார்க்க மிக இலகுவாக இருந்தது.

நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இலங்கையர்கள் அதிகம். எப்பவுமே இரு சாராருக்கும் நிழல் யுத்தம் போன்ற ஒன்று நிகழ்ந்து கொண்டே இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. முக்கியமாக சிங்களவர்கள் இந்தியர்கள் மீது கடும் விரோத மனப் பான்மையுடன் ஆனால் வேறு வழி இன்றி பழக வேண்டி இருக்கின்றதே எனும் உணர்வினால் உந்தப்பட்டவர்களாகவே காணப் படுவர். இந்திய முகாமையாளர்கள் (Project managers) பலரைக் கொண்ட இந்த நிறுவனத்தில் நாம் அவர்களின் குழுவில் இருக்கும் உறுப்பினர்களாகவே (Team members) அதிகமாக இருந்தோம். எனவே இந்தியர்களின் Domination மிக அதிகமாகவே உணர முடிந்தது. மென் பொருள் உற்பத்தியில் Project manager இன் பங்கு அதிகமாக திட்ட வடிவமைப்பில் காணப்படுவது இயல்பான ஒன்று. இதனை சிங்களவர்கள் அடியோடு வெறுத்தனர். ஆனால், வேறு வழியின்றி வேலையும் செய்தனர். எப்போதும் சாப்பாட்டு மேசைகளிலும், வேறு இடங்களிலும் இந்தியர்கள் மீதான முழு வெறுப்பை கொட்டித் தீர்ப்பர். இந்தியர்களின் இயல்பு இவற்றுக்கு வேறுபட்டதாக இருக்கும்

இந்தியர்கள் சற்று உயர் பதவியில் இருந்தால், அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவர். தன் கீழ் உள்ள உறுப்பினரிடம் இருந்து தேவைக்கு மேலாக அதிகமான மரியாதையையும் எதிர் பார்ப்பர். பல PM கள் தம் குழுவில் இருப்பவர்களை வரன்முறைக்கு மேலாக அதிகாரம் செலுத்த முனைவர். அதே போல் ஒரு PM இற்கு கீழ் இருக்கும் சக இந்திய உறுப்பினர்கள், தம்மை என்ன சொன்னாலும் சரி என்பது போல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமுள்ள ஒரு வேலைக்காரன் போல் நடந்து கொள்வர். எதிர்த்து ஒரு சிறு குரல் தானும் வராது. அப்படியானவர்கள் உயர் பதவியினை அடைந்த உடனேயே, தாம் எவ்வாறு முகாமையாளரால் சிரமத்துக்குள்ளானார்களோ அதே போன்ற அதிகாரத்தினை மற்றவர் மீது பிரயோகிக்க முயல்வர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கைத்தமிழர்களான என்னைப் போன்ற சிறிய எண்ணிக்கையானவர்களின் பாடுதான் திண்டாட்டம். இந்தியர்களில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கே எம் தேசிய இனப்பிரச்சனை பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் இருக்கும் போது, தமிழகம் தவிர்ந்த மற்ற எல்லோரும் எம்மையும் சிங்களவர்களாகவே பார்த்தனர். சிங்களவர்களோ எம்மை இந்தியர்களின் நண்பர்களாக பார்த்தனர். மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது இது தான் போலும்.

எனக்கோ அடிப்படையில் இந்திய படையினரின் அடாவடித்தனங்களாலும், இந்திய தேசத்தின் துரோகத்தனத்தாலும் சிங்களவர்களின் மீது இருப்பதை விட அதிகமாக இந்தியர்கள் மீது இருந்தது. சிங்களவர்கள் வரலாற்று எதிரிகள்.. இந்தியர்கள் வரலாற்று துரோகிகள் எனும் புரிதலில் இன்றும் கூட இருக்கும் எனக்கு ஆரம்பத்தில் எந்த தனிப்பட்ட இந்தியர்களை கண்டால் கூட பிடிக்காமல் இருந்தது. என் குழுவில் அப்போது 18 பேர் இருந்தனர், அதில் ஒரு அரபுப் பெண்ணையும் என்னையும் தவிர்த்து விட்டால் மிகுதி அனைவரும் இந்தியர்களே, எனவே முதல் நாளில் இருந்து பிரச்சன ஆரம்பமானது

வேலை நேரம் காலை 7 இல் (ஆம் காலை 7) இல் இருந்து மாலை 03:30 வரை. ஆரம்ப நாட்களில் நான் சரியாக 7 மணிக்கு வேலைக்கு போனால் மாலை 3:30 க்கு வேலை முடியும் நேரத்தில் வெளியே வந்து விடுவேன். மற்ற அனைத்து இந்தியர்களும் இரவு 7 மணி வரையாவது இருந்து வேலை செய்து தம் பிறவிக் கடனை தீர்த்துக் கொண்டிருக்கும் போது எந்த அலட்டலும் இன்றி நான் மட்டும் வெளியே வருவேன். மானேஜர் 04:30 இற்கு Meeting போட்டால், எக்காரணம் கொண்டும் வரமாட்டேன் என்று சொல்லி வெறுபேத்துவன். 8:30 மணித்தியாலம் என்றால் 08:30 மணித்தியாலம் தான்....Noway என்பது போன்ற ஒரு திமிர் தனம் ஒட்டிக் கொண்டு இருந்தது. உண்மையில் மென் பொருள் உற்பத்தி துறையில் அதிகப் படியான வேலை என்பது சர்வ சாதாரணம். பல இடங்களில் இரவு 12 மணிவரை கூட வேலை செய்ய வேண்டி வரும். அப்படிச் செய்தும் இருக்கின்றன்....ஆனால், எல்லாம் தெரியும் என்ற தலைக்கனமும்,. இந்தியர் மீதான் வெறுப்பும், விட்டேத்தி தனமும்

ஒன்று சேர்ந்து கூத்தாடிக் கொண்டு இருந்தன எனக்கு

எனவே என்னை மீண்டும் எப்படியாவது இலங்கைக்கு அனுப்பி விட துடித்துக் கொண்டு இருந்தார் யஸ்மின் எனும் என் முகாமையாளர். அதற்கு உடனே அவல் மாதிரி ஒரு காரியம் செய்தேன் நான்

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஆன்டி.. ஆன்டின்னு சொல்லுறீங்க.., சீக்கிரம் ஆன்டியையும் அங்கிளையும் பத்தி சொன்னீங்கன்ன நாங்க எங்கள் வேலையைப் போய் பார்ப்போமில்ல...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஆன்டி.. ஆன்டின்னு சொல்லுறீங்க.., சீக்கிரம் ஆன்டியையும் அங்கிளையும் பத்தி சொன்னீங்கன்ன நாங்க எங்கள் வேலையைப் போய் பார்ப்போமில்ல...:rolleyes:

அது தானே ....... ராஜவன்னியன் , :D

அங்கம் 6 ல் ஆன்டியும் , அங்கிளும் வந்தவையா ? அட கொடுமையே ....... நான் வாசிக்க முதல் நிழலி சுய தணிக்கை செய்து போட்டாரே . :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.