Jump to content

பூரண சூரிய கிரகணம்


Recommended Posts

பூரண சூரிய கிரகணம் - ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை 2009

இந்தியச்சுற்றாடலில்

tse2009_global.jpg

ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை

அ‌திகாலை கிட்டத்தட்ட 5 ம‌ணியில்லிருந்து 7மணி‌வரையில்

மும்பாய் பங்களாதேஸ்ஸை இனைக்கும்மச்சில்

பூரண சூரிய கிரகணம் நிகழ உ‌ள்ளது.

Solar_eclipse_animate_(2009-Jul-22).gif

சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது...

IMG6858-1247661779.png

Ce fichier provient de Wikimedia

Finsternis.jpg

இங்கே இயங்கும் படத்தை பார்கலாம்

சூணாமி போன்ற குளப்பங்கள் ஏற்படுமா?

நிகழவிருக்கும் பூரண சூரிய கிரகணத்தின் போது, சந்திரனதும் சூரியனதும் ஈர்பபு விசைகள் ஒன்று சேரவிருக்கன்றன

IMG6858-1247686134.jpg

இவ்விசைகள் ஏற்கனவே வேடித்திருக்கும் இந்திய தெக்தோணிக் தட்டை முதலிலும் ஜாவா தெக்தோணிக் தட்டை பின்பும் ஈர்த்து பாரிய குழப்பங்களை விளைவிக்கக்கூடும்

அதேநேரத்தில், மேலே காட்டப்பட்ட இயங்கு படத்தின் படி இவ்விசையின் மையம் ஜாவாவிலிருந்து (ஜப்பாணுனுக்குகட்ட) வெகுதூரத்தில் தான் செல்கிறது ஆதலால் சுணாமி போன்ற குழப்பங்கள் ஏற்படாது என்றும் கூறலாம்

Link to comment
Share on other sites

பூமி எனும் பதத்திற்கு பதிலாக நிலம் என்று பயன்படுத்தி இருப்பது சரியா?....

Link to comment
Share on other sites

பூமி எனும் பதத்திற்கு பதிலாக நிலம் என்று பயன்படுத்தி இருப்பது சரியா?....

வணக்கம்,

... விளக்கத்தில் களங்கம் ஏற்படுத்தாத பட்சத்தில் இதில் பாதகமாக எதையும் நான் காணவில்லை... ... தமிழ் சொல்வளம்மிக்கது!

இதோ உங்கள் விருப்பத்தின்படி அந்தப்படம் மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் கவனத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சொல் வளம் மிக்கது. அதற்காக வழம் குளப்பம், சந்திரண் சூரியண் ஜப்பாண் என்றெல்லாம் எழுதுவது சரியா என்பது புரியவில்லை. படங்களோடு மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். புரிதலில் எவ்வித பிரச்சனைகளுமில்லை. ஆனாலும் தமிழில் கவனம் செலுத்தாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் பிழை பிடிப்பது சுலபம்.அதுவும் எமது இனத்தில் சொல்லி வேலையில்லை.

ஜெகுமார்! இவ்வளவு ஆக்கபூர்வமான செய்திகளை விவரணத்துடன் யாழில் இணைப்பதற்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

எங்கும் பிழை பிடிப்பது சுலபம்.அதுவும் எமது இனத்தில் சொல்லி வேலையில்லை.

கு.சா....எல்லாவற்றையும் குதர்க்கமாக பார்ப்பதால் எந்த பயனும் உங்களுக்கு ஏற்படாது...

நீங்கள் சொன்னதின் அர்த்தம் எனது பதிலையும் சேர்த்து தான் என்பதால் கூறுகின்றேன். நான் எந்த இடத்திலும் 'நிலம்' என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை..எனவேதான் நான் பூமிக்கு ஒத்த கருத்தாக நிலம் பயன்படுத்துவது சரியா எனக் கேட்டேன். என் கேள்வியினை புரிந்தமையால் ஜெயக்குமார் தெளிவாக பதில் சொன்னார்...புரியாததால், நீங்கள் குதர்க்கமாக பேசுகின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா....எல்லாவற்றையும் குதர்க்கமாக பார்ப்பதால் எந்த பயனும் உங்களுக்கு ஏற்படாது...

நீங்கள் சொன்னதின் அர்த்தம் எனது பதிலையும் சேர்த்து தான் என்பதால் கூறுகின்றேன். நான் எந்த இடத்திலும் 'நிலம்' என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை..எனவேதான் நான் பூமிக்கு ஒத்த கருத்தாக நிலம் பயன்படுத்துவது சரியா எனக் கேட்டேன். என் கேள்வியினை புரிந்தமையால் ஜெயக்குமார் தெளிவாக பதில் சொன்னார்...புரியாததால், நீங்கள் குதர்க்கமாக பேசுகின்றீர்கள்

:lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய செய்திகள் வெறுமனே புரிந்துகொண்டால் போதுமானது என்ற நோக்கில் மட்டும் எழுதப்படுபவையல்ல. தமிழில் அறிவியலை வளர்த்துக்கொள்ள உகந்த பதிவுகளாகவும் பயன்படக்கூடியவை. அந்த வகையில் திரு ஜெயக்குமாரின் கிரகணம் பற்றிய படவிளக்கங்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கல்வித் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படக் கூடியவை.

ஒரு பொதுவான கலைச்சொல் முறைமையின் கீழ் (உ-ம்- பூமி, சுனாமி) தமிழிலும் கவனமெடுத்து இத்தகைய செய்திகளை எமது சமுதாயத்திற்கு திரு ஜெயக்குமாரைப் போன்ற ஆர்வமிக்க அறிவியலாளர்கள் தரவேண்டுமென்று விரும்புவது எம்மைப் போன்றவர்களின் (நிழலியுட்பட) விருப்பாயிருப்பதில் எவ்வித தவறுமில்லையென எண்ணுகிறேன்.

இங்கே குறைகாணும் நோக்கம் எதுவுமில்லை. தமிழின் அறிவியலை மேம்படுத்த அதில் ஈடுபடுவோரைத் தூண்டுவதும், தமிழில் அறிவியல் செய்திகளை அதன் அழகு குன்றாது தருமாறு வேண்டுவதுமே நோக்காகும்.

தமிழில் சொற்கள் மிகவும் தவறாக இளஞ் சந்ததியினரால் தற்போது உச்சரிக்கப்படுவதை அதில் ஆர்வமுள்ள அனைவரும் சுட்டிக்காட்டி வருத்தப்படுகின்றனர். இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழ் உருமாறி அழிந்துவிட வாய்ப்புகள் இருப்பதாகப் பலரும் வருத்தப்படுகின்றனர்.

இன்னும் நூறு வருடங்களுக்குள் தமிழ் இல்லாதொழிந்து வேறு ஒரு கலப்பு மொழி உருவாகிவிடும் என்றெல்லாம் யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் எச்சரித்திருக்கின்றன.

அறிவியலில் தமிழை வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு திரு ஜெயக்குமார் போன்ற ஆர்வமிக்கவர்களிடமே உண்டு. அவரைப்போல மிகவும் கவனமாகப் படங்களைப்போட்டு தமிழில் விஞ்ஞான விளக்கங்களைத் தரும் ஆர்வமுள்ள அனைவரும் தமிழிலும் கவனஞ்செலுத்தினால் எதிர்காலத்தில் தமிழை அதன் இயல்புகுன்றாது பாதுகாக்க ஏதுவாகும். அந்த நோக்கிலேயே சில விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

அதைவிட்டு ஆஹா! ஓஹோ! என்று பாராட்டி முதுகு சொறிந்து விஞ்ஞானச் செய்தியை எழுதியவரையும் தவறாக வழிநடத்தி, சொல்லவேண்டியதைச் சொல்பவர்களையும் இழிவுபடுத்தித் தமது பெருந்தன்மையை வெளிப்படுத்தத் துடிப்பதன் மூலம் எந்தப்பயனும் ஏற்படப் போவதில்லை. அது வளரும் அறிவியற் தமிழுக்குச் செய்யும் தீங்காகவே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தேவையில்லாத இடத்திலை வாயை குடுத்திட்டனோ?

Link to comment
Share on other sites

வணக்கம் ! வணக்கம் !

கரு சொல்வது சரி, எழுத்துப்பிழைகளை தவிர்க வேண்டும், மிகவும் நன்றி கரு!

பிழை விடுது இயற்கை, பிழையை திருத்துவது கடமை.

பிழைகளுக்கான காரணம் பல : கவனயீனம், எழத்துமுறை, தமிழ் கேட்பது குறைவு, ...

கரு எடுத்துக்காட்டும் பிழைகள் எழுத்து முறையால் வரும் பிழைகள் !

தமிழை ரோமெழுத்துக்களால் எழுதும்பொது "ன ண ந - ல ள ழ - த ட - ர ற" என்ற எழுத்துகளை எழுதுவது அவ்வளவு சுலபமானதல்ல

தமிழை எழுத ஆங்கில உச்சரிப்பு தெரிய வேண்டும் !? வெட்கம்! வெட்கம்!

இந் நிலை ஆயிரம் ஆயிரம் தமிழர் அறிவு சிந்தனை பஃகிர்வுகளைத்தடுக்கின்றது.

--------

நிழலி "நிலம் என்று பூமியை குறிப்பதை.. முக்கியமாக விஞ்ஞான விளக்கங்களில் காணவில்லை.." என்று கூறுகறீர்கள்

இதோ இன்று இங்கு கண்டீர்கள் ! ஒரு படத்துடன்!!

யாராவது அதை எங்காவது ஒரு நாள் சொல்லாத படியால் உங்கள் கற்பனையோ சிந்தனையோ தவறானதாகாது !

மேலும்

"பூமி" (boomi) வடமொழிச்சொல்ல "புவி" தான் சரியான சொல் என்கின்றார்கள்!?

...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தேவையில்லாத இடத்திலை வாயை குடுத்திட்டனோ?

விடுங்க கு.சா. தமிழன் என்றாலே அப்படித்தான். ஒரு கொஞ்சம் தெரிஞ்சிட்டா போதும்.. !!!

ஜெயக்குமார்.. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆனால் எனக்கொரு சந்தேகம்..

கிரகணத்தின் போது தோன்றும் நிழல்களை.. கருநிழல் (Umbra).. அயனிழல் (Penumbra) (நீங்கள் கருநிழலை.. நிழல் என்றும்.. அயனிழலை..அரிநிழல் என்றும் குறித்திருக்கிறீர்கள்.. எனக்கு குழப்பமாக இருக்கிறது எது சரியென்று) என்று வகைப்படுத்துவதாக நினைக்கிறேன். எதற்கும் நீங்கள் குறிப்பிட்டதை உறுதிப்படுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் எனக்கு இது நல்ல பாடம். ஏனெனில் இரண்டு சொற்களும் முடியும் போது (bra) என்று முடிவதால் எல்லோரும் இலகுவாக பாடமாக்கிக் கொண்டார்கள். எனக்கும் சொல்லித் தந்தாங்க.. எப்படி இலகுவாக பாடமாக்கிறதென்று. ஆனால் அதை இதற்கு மேலும் விபரிப்பது சரியல்ல..!

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல. நேரடி ஆங்கிலப் பதங்கள். கடற்கோள்.. ஆழிப்பேரலை என்பன சரியான தமிழ் பதங்கள் என்று நினைக்கிறேன்..!

வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!

அண்ணாமாரே தயவுசெய்து சரியா எழுதிப் போட்டு சண்டையைப் பிடியுங்கோ..! சரியானதை தெரிந்து கொள்வதில் எனக்கு ரெம்ப ஆர்வம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழில் வடமொழிச் சொற்கள் கலக்கப்பட்டுப் பாவனையிலிருப்பதால் மறைமலையடிகள்இ பருதிமாற் கலைஞர் போன்றோரின் தனித்தமிழ் இயக்கம் செயலற்றுப் போய்விட்டது. பாரதியார்இ சுவாமி விபுலானந்தர் போன்றோர் வடமொழிகலந்த மணிப்பிரவாள நடையைக் கையாண்டு இந்தக் கலப்பிற்கு அங்கீகாரம் அளித்துவிட்டனர். அவ்வகையில் தமிழிலும் பூமி என்னும் சொல் எப்போதோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலும் புவி என்னும் சொல்லும் பூமியை ஒத்ததாகத் தமிழில் பாவனையிலுள்ளது.

சுனாமி போன்ற ஜப்பானியச் சொற்களையும்இ ஜப்பான் போன்ற ஆங்கிலச் சொற்களையும் நாம் பெரும்பாலோர் உச்சரிக்கும் ஆங்கில முறைமையிலேயே தமிழிலும் எழுதி வருகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறலாமென்றால் தமிழில் அத்தகைய சொற்களை உள்வாங்கி எமது சொல்வளத்தைப் பெருக்குவதில் ஒரு ஒழுங்குமுறை அற்றுப்போய்விடும்.

தமிழில் பாவனையிலுள்ள பாமினி அல்லது அதையொத்த தொகுதி எழுத்துக்களில் தட்டச்சு செய்யும்போது உச்சரிப்புக் குறைபாடுகள் வருவதில்லை. தமிழ் உச்சரிப்பை நீங்கள் (திரு ஜெகுமார்!) ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்வதாற்தான் உங்களது சொற்கள் பிழையான உச்சரிப்போடு பதிவாகின்றன.

இத்தகைய முறையை சிலர் உருவாக்கிவிட்டார்கள். தமிழில் நேரடியாகவே தட்டச்சு செய்யக் கூடியதாக இப்போது விசைப்பலகைகள் வந்துவிட்டன. ஆகவே மிக இலகுவாகத் தட்டச்சுச் செய்யமுடிகின்றது. ஆங்கில விசைப்பலகையில் தமிழைத் தட்டுச்சு செய்யப்பயில்வதும் சிரமமானதல்ல. விரைவில் பழக்கமாகிவிடும். நான் அப்படித்தான் செய்கிறேன். கடும் விரைவாகச் செய்யமுடியாவிட்டாலும் எனது தேவைகளை அது நிறைவேற்றுகின்றது. நீங்களும் (திரு ஜெயக்குமார்!) முயன்று பாருங்கள். விரைவில் பழகிவிடுவீர்கள். உங்களால் நல்ல பல ஆக்கங்களும் தமிழில் கிடைக்கும்.

நெடுக்கால பாய்ந்து விழுந்து முதுகு சொறிவோர் கவனத்திற்கு! நான் வழமைபோல குறைகளைச் சுட்டிக்காட்டும் இழிவுக்குணங்கொண்ட தமிழனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். தங்கள் பெருந்தன்மை மிக்க பாராட்டும் பண்பாடு வாழ்க. தங்களால் தமிள் வாள்க.

Link to comment
Share on other sites

Nedukkalapoovan, i m not a pandit, ok here we go ...

ஆலபனைகள் இன்றி நேரடியாக ...

"அரிநிழலில் நிற்காதே, வருத்தம் வரப்போகுது" என்று எனது பாட்டி அடிக்கடி கூறுவார்...

இக்கூற்றில்லிருந்து நான் இன்று விழங்கிக்கொள்வதாவது : அரை நிழல் --> அரிநிழல் =பாதி நிழல்

எனக்கு அகநாணூறை விளங்கிக்கொளும் ஆற்றலில்லை,

கீழ் காணும் இரண்டு வரிகளையும் யாராவது, அரிநிழல் என்ற சொல்லைப்பொறுத்தவைரயில் ஆய்ந்து தீர்ப்புக்கூற முடியுமானால் ... ?

யங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,. சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல். ..

அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத், திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன, திண்ணிலை எயிற்ற செந்நாய் ...

- அகநானுறு

கருநிழல் ? யாரவது வெள்ளையோ அல்லது சிவப்பு நிழலை எப்போதாவது கண்டீர்களா?!

அயனிழல் *?!§... ?

"ஆங்கிலத்தில் எனக்கு இது நல்ல பாடம். ஏனெனில் இரண்டு சொற்களும் முடியும் போது (bra) என்று முடிவதால் எல்லோரும் இலகுவாக பாடமாக்கிக் கொண்டார்கள்"

in tamil too!! (நிழல்), அரி(நிழல்) !!! so ?

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல பிழையான ஆங்கில உருபெயர்பு ! ஏன் பிழையானது? என்ன பிழையை தருகிறது?

Tsunami யின் சரியான உருபெயர்பு ஸுனாமி --> மீள் உருபெயர்பு sunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

Tsunami யின் பிழையன உருபெயர்பு சுனாமி --> மீள் உருபெயர்பு chunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

அன்நிய சொலுருபெயர்பை நிர்நயிக்கும் பொதுவான கோட்பாடுகளை உருவாக்க வேண்டியது அவசியம் !

ஜப்பானியரை போல தமிழரும் கடந்த கால்ஙகளில் பாரிய கடற் கொந்தளிப்புகளைக் கண்டார்கள் ஆகஃவே பழைய ஏடுகழளில் தேடிப்பாருங்கள் வேறு சொற்களிருக்கின்றனவா என்று ?...

(பாரிய) கடற் கொந்தளிப்பு = ஸுனாமி, சுனாமி (சூணாமி), கடற்கோள், ஆழிப்பேரலை ...

...

"வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!"

ஞாயிறு, திங்கள் ... சனி ... என்றழைத்தோம் ஆனால் நிலத்திற்கு மட்டும் பூமி (boomi) என்ற வடசொல்லை உபயோகிக்கிறோம் ஏன்?

...

நல்ல வெள்ளிக்கிழமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tse2009_global.jpg

Solar_eclipse_animate_(2009-Jul-22).gif

சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது...

IMG6858-1247661779.png

Ce fichier provient de Wikimedia

Finsternis.jpg

பாம்பு எங்கே ...... ?

சூரிய கிரகணத்தின் போது ராகு காலம் வரும் .

அதே நேரம் சந்திரகிரகணும் வந்தால் மகா ஆபத்து .

ஒரு பாம்பால் சந்திரனையோ .... சூரியனையோ ஒரு முறை தான் விழுங்க முடியும் .

இரண்டையும் ஒன்றாக விழுங்கினால் பாம்புக்கு .... தொண்டையில் விக்கி .... விக்கல் வந்து விடும் .

Link to comment
Share on other sites

பாம்பு எங்கே ...... ?

சூரிய கிரகணத்தின் போது ராகு காலம் வரும் .

அதே நேரம் சந்திரகிரகணும் வந்தால் மகா ஆபத்து .

ஒரு பாம்பால் சந்திரனையோ .... சூரியனையோ ஒரு முறை தான் விழுங்க முடியும் .

இரண்டையும் ஒன்றாக விழுங்கினால் பாம்புக்கு .... தொண்டையில் விக்கி .... விக்கல் வந்து விடும் .

ஏன் என்ன பாவம் செய்தீர்கள்?

சந்திர கிரகணம் பவுர்ணமியின்போதும் சூரிய கிரகணம் அமாவாசையின் போதும் நிகழும். அத்துடன் 22டாம் திகதி வருவது சூரியகிரகணம்!

ஆனால் 05/08/09 23:00மணி போல் வருகிறது சந்திர கிரகணம், பாவம் செய்தவர்களுக்கு ராகு தோஷம் ஏற்படும் இதனால் அந்த ராகு பாம்பு அவரை பிடித்து முடமாக்க முயற்சிக்கும், ஆனால் கடவுளைப்பிரார்தித்தால், இந்த ராகு தோஷம் நீங்கும் என வடக்குப்புராணக்கதை கூறுகிறது!!

ஆனால் தமிழ் கடவுள் விருப்பு வெறுப்பற்றவர் !? ஹம்...

பாம்பின் வயிற்றில் சந்திரன் ?

IMG6858-1247874392.jpg

இந்த ஆண்டு இரண்டு சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன.

கிரகண இலங்கை நேரம் (கிட்டத்தட்ட)

சூரிய கிரகணம் 22.07.2009 (ஆடி மாதம் 6-ந் தேதி), காலை 5.30மணிக்கு தொடங்கி, 7.15 மணிக்கு முடிகிறது.

சந்திரகிரகணம் 05.08.2009 (ஆடி 20-ந்தேதி), காலை 06.00-க்கு தொடங்கி, காலை 9.17-க்கு முடிகிறது. !!

சந்திரகிரகணம் 31.12.2009 (மார்கழி 16-ந்தேதி), இரவு 12.20-க்கு தொடங்கி, இரவு 1.25-க்கு முடிகிறது.

சூரிய கிரகணம் 15.01.2010 ( தை மாதம் 2-ந் தேதி) பகல் 11.20 மணிக்கு தொடங்கி மாலை 3.15 மணிக்கு முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்ன பாவம் செய்தீர்கள்?

------

------

நான் தமிழனாய் பிறந்தது தான் பாவம் என நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

நான் தமிழனாய் பிறந்தது தான் பாவம் என நினைக்கின்றேன் .

அதை பரிசோதிப்பதற்கோர் அரிய சந்தர்பம் 05/08/09 23:00மணி போல் வருகிறது! தவறவிடாதீர்கள்

கிரகணத்தின் பலன்

நாட்டில் சாத்துக்கள் (சாமியார்கள்) பற்றிய தவறான கருத்துக்கள் உண்டாகும்.

ஆயுதம் ஏந்திய வீரர்களுக்கு அதனை பிரயோகிக்கும் நிலை ஏற்படும்.

பயிர் விளைச்சல் இருந்தாலும் விலை குறையாத நிலை உண்டாகும்.

மேலுமறிய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருநிழல் ? யாரவது வெள்ளையோ அல்லது சிவப்பு நிழலை எப்போதாவது கண்டீர்களா?!

அயனிழல் *?!§... ?

என்ன நக்கலா..

நிழல் என்றாலே நிழல் தான். அப்புறம் என்ன.. அரி.. இப்படி நானும் பதிலுக்கு முட்டாள் தனமாகக் கேட்கலாம்.

கருநிழல் என்பது நிழலில் மையப்பகுதியில் ஏற்படும் Darkness பற்றி சொல்லப்படுகிறது. அதனைச் சுற்றிய சுற்றயல் நிழல் Darkness குறைவு என்பதால்.. அதன் அயனிழல் என்று குறிப்பதாக நினைக்கிறேன். பாடசாலையில் இப்படிக் குறித்துப் படித்த ஞாபகம்..! :lol:

அதைவிட்டிட்டு.. கருநிழல்.. வெள்ளை நிழல்.. சிவப்பு நிழல் என்று.. என்ன நக்கலோ. வேண்டாம். அப்புறம்.. நான் நக்கலடிக்க வெளிக்கிட்டன்.. இந்தப் பதிவை.. தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலையே வரும். :)

------------

கீழ்ப்படி செய்தியில் கருநிழல் என்ற பதம் இந்திய கோளரங்கச் செயலர் ஒருவரால் கூட பாவிக்கப்பட்டுள்ளது. அரிநிழல் என்ற பதம் பாவிக்கப்படவில்லை..!

இன்று நள்ளிரவு 11.35 மணிக்குத் தொடங்கி நாளை காலை 1.10 மணி வரை பகுதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம். இதுகுறித்து சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனர் ப.ஐயம்பெருமாள் கூறியதாவது:-

சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இன்று (7-ந் தேதி) நள்ளிரவு 11.35 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி காலை 1.10 மணி வரை பகுதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது.

அப்போது, சந்திரனின் ஒரு சிறு பகுதியில் பூமியின் கருநிழல் படிந்து செல்லும். இது பகுதி சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

வானில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த அற்புதம் நிகழ்வின்போது, பூமியின் கருநிழல் சந்திரனின் 19 சதவீத பகுதியை அதிகபட்ச கிரகணத்தின் போது மறைக்கும். இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதால் எந்த பாதிப்பும் வராது.

ஆசியா கண்டத்தில் உள்ள அனைவரும் இந்த சந்திரகிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். இந்தியா முழுவதும் நன்றாகத் தெரியும்.

செப்டம்பர் மாதத்தில் 2 கிரகணங்கள் வருகின்றன. செப்டம்பர் 7-ந் தேதி சந்திரகிரகணமும், 22-ந் தேதி கங்கண சூரிய கிரகணமும் வருகின்றன. கங்கண சூரியகிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த கிரகணத்தின்போது சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காது. அந்த நேரத்தில் சூரியனின் வெளிப்பகுதி ஒரு வளையம் போல கண்ணுக்கு புலனாகும். எனவே தான், இதனை கங்கண சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள். இவëவாறு ஐயம்பெருமாள் கூறினார்.

http://ilakku.com/?p=731

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி (சூணாமி) தமிழ் பதங்கள் அல்ல பிழையான ஆங்கில உருபெயர்பு ! ஏன் பிழையானது? என்ன பிழையை தருகிறது?

Tsunami யின் சரியான உருபெயர்பு ஸுனாமி --> மீள் உருபெயர்பு sunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

Tsunami யின் பிழையன உருபெயர்பு சுனாமி --> மீள் உருபெயர்பு chunami --> கூகிளில் தேடினால் கிடைக்கும் பெறுபேறு இங்கே பார்க

ஜப்பானியரை போல தமிழரும் கடந்த கால்ஙகளில் பாரிய கடற் கொந்தளிப்புகளைக் கண்டார்கள் ஆகஃவே பழைய ஏடுகழளில் தேடிப்பாருங்கள் வேறு சொற்களிருக்கின்றனவா என்று ?...

(பாரிய) கடற் கொந்தளிப்பு = ஸுனாமி, சுனாமி (சூணாமி), கடற்கோள், ஆழிப்பேரலை ...

...

"வையகம் என்றும் புவியை.. பூமியைச் சொல்வார்கள். புவி தான் தமிழில் அறிவியலில் அதிகம் பாவிக்கப்படும் சொல்...!"

ஞாயிறு, திங்கள் ... சனி ... என்றழைத்தோம் ஆனால் நிலத்திற்கு மட்டும் பூமி (boomi) என்ற வடசொல்லை உபயோகிக்கிறோம் ஏன்?

...

நல்ல வெள்ளிக்கிழமை!

சுனாமிக்கு கடற்கொந்தளிப்பு அல்ல அர்த்தம். கடற்கோள்.. ஆழிப்பேரலையே சரியாக அமையக் கூடிய காரணப்பதங்கள். கடல் கொந்தளிப்பு என்பது சாதாரணமாக சந்திரனின் ஈர்ப்பு மற்றும் புயற்சின்னங்கள் சார்ந்து ஏற்படக் கூடிய வற்றுப் பெருக்கோடு சம்பந்தப்பட்டது. அந்த கடலலைகளுக்கும் கடற்கோள் காரணமாக ஏற்படும் ஆழிப்பேரலைகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

அதனால் கடற்கொந்தளிப்பு என்பதை ஆழிப்பேரலையாக ஏற்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆழிப்பேரலையின் அலை தன்மை.. சாதாரண கடற்கொந்தளிப்பு அலைகளினதும் வேறுபட்டது. அந்த வேறுபாட்டை பதத்தில் புகுத்த வேண்டியது அவசியம்..!

ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாலு கால் என்பதற்காக மாட்டை ஆடு எனலாமா..???! :lol:

Link to comment
Share on other sites

சுனாமிக்கு கடற்கொந்தளிப்பு அல்ல அர்த்தம். கடற்கோள்.. ஆழிப்பேரலையே சரியாக அமையக் கூடிய காரணப்பதங்கள். கடல் கொந்தளிப்பு என்பது சாதாரணமாக சந்திரனின் ஈர்ப்பு மற்றும் புயற்சின்னங்கள் சார்ந்து ஏற்படக் கூடிய வற்றுப் பெருக்கோடு சம்பந்தப்பட்டது. அந்த கடலலைகளுக்கும் கடற்கோள் காரணமாக ஏற்படும் ஆழிப்பேரலைகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

அதனால் கடற்கொந்தளிப்பு என்பதை ஆழிப்பேரலையாக ஏற்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆழிப்பேரலையின் அலை தன்மை.. சாதாரண கடற்கொந்தளிப்பு அலைகளினதும் வேறுபட்டது. அந்த வேறுபாட்டை பதத்தில் புகுத்த வேண்டியது அவசியம்..!

ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாலு கால் என்பதற்காக மாட்டை ஆடு எனலாமா..???! :icon_idea:

துறைமுகம் (விழுங்கும்) அலை

ஜப்பானிய மொழியில் 津 (த்சு) துறைமுகத்தையும் 波 (னாமி) அலையையும் குறிக்கும்

பென்னாம் பெரிய உப்புத்தடாகமும் (கடல்!) வானில் சுழன்றுகொண்டு சுற்றும் உருண்டை திண்மமும் (கோள்!)

ஒரு போதும் வட்டமாக உருளும் (ஆழி) பேரிய (பேர்) அலைகளுக்கு சமனாகாது !!.

மேலும்,

உலக மொழிகள் அனைத்தும் ஸுனாமி என்றுதான் இந்நிகழ்வை அழைக்கின்றன, அத்துடன் இச்சொல் எங்கள் கட்டுமரம் என்ற சொல்லைப் போல உலகம் விளங்கும் சொல்லாகியுள்ளது ஆஃகவே தமிழிலும் அபடியே அழைப்பதை விடுத்து தொல்காப்பியரையும் நாயன்மார்களையும் போல் தமிழில் யாரிற்கும்(1) விளங்காத வகையில் எழுதி, தமிழை ஒரு இறந்த மொழியாக்குவது ஏன்.

(1) - இடையன், மதவிலே குந்தியிருக்கும் சின்னத்தம்பி, ஊர்ரோரத்திலே வசிக்கும் பையன், தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் தொழிலாளி, ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG6858-1248192800.png

IMG6858-1248192850.png

ஆக நிழல் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அது அடர்நிழல்.. மற்றையது அரிநிழல் என்றாக வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நான் நினைக்கிறேன்.. அடர்நிழலையே கருநிழல் என்றும் அழைக்கின்றனர். அரிநிழலையே அயனிழல் என்றும் அழைக்கின்றனர். அவை தவறல்ல. ஆனால் கருநிழலை.. அடர்நிழலை.. நிழல் என்பது தவறு..!

சுனாமி... ஆழிப்பேரலை என்பது சரி என்றே நினைக்கிறேன்.

ஆழி.. கடல்

பேரலை.. வழமையான அலைகளை விட பெரிய அலை..!

தமிழில் புதுச் சொற்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இன்றேல் தமிழ் மொழி நவீன அறிவியல் தோற்றுவிக்கும் புதிய சொல்லாடல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே உருவாகும்.

ஆளாளுக்கு விரும்பின படி எழுதிக் கொண்டிருந்தால்.. மொழி வளம் பெறாது.. மாறாக வழக்கொழியும்..! :D

Link to comment
Share on other sites

சுனாமி... ஆழிப்பேரலை என்பது சரி என்றே நினைக்கிறேன்.

ஆழி.. கடல் பேரலை.. வழமையான அலைகளை விட பெரிய அலை..!

ஆழி என்றால் நேரடியாக கடல் அல்ல அருத்தம்! சூழ்ந்த, வட்டமான, உருளும், சுழரும், ... என்பதே அருத்தம்

நான் நினைக்கிறேன்.. அடர்நிழலையே கருநிழல் என்றும் அழைக்கின்றனர். அரிநிழலையே அயனிழல் என்றும் அழைக்கின்றனர். அவை தவறல்ல. ஆனால் கருநிழலை.. அடர்நிழலை.. நிழல் என்பது தவறு..!

ஆனால் கருநிழல்...

உம்ககு நாக்காலடிக்க விரும்பாதலால் கூறவில்லை ...

முட்டையின் கருவில் ஒரு சிசு அந்த சிசுவிற்கொருநிழல் கருநிழலா !

நீர் சொல்லலும் கருநிழல் வந்து கரிநிழல் அல்லது கறுநிழலாக்ததான் இருக்க வேண்டும் ?

தமிழில் புதுச் சொற்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இன்றேல் தமிழ் மொழி நவீன அறிவியல் தோற்றுவிக்கும் புதிய சொல்லாடல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே உருவாகும்.

ஆளாளுக்கு விரும்பின படி எழுதிக் கொண்டிருந்தால்.. மொழி வளம் பெறாது.. மாறாக வழக்கொழியும்..! :icon_idea:

தவறு பெரியதவறு!!

சொல்லை யாரும்மாக்கக்கூடியதாக விடவேண்டும், சரியான எல்லோரிற்கும் விழங்கக்கூடிய சொல்லு தானாகவே நீண்டகாலம் வாழுந்து வழர்ந்து பலவேறு இணைப்புச்சொற்களையும் தரும்...

ஆக நிழல் அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அது அடர்நிழல்.. மற்றையது அரிநிழல் என்றாக வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நான் கூறவில்லை ஒரு பண்டிதர் கூறுகிறார் ...

முதலில் அகநிழல் புறநிழல் என்றார் கிரகணப்படத்தை பர்துவிட்டு

பின்ப பந்தினதும் பாட்டியின் மரத்தின் படத்தையும் சித்தரித்ததால்

அடர்நிழல் என்றும் அரிநிழல் என்றும் கூறினார்! ...

தமிழ் சொற்கள் ஆங்கில்த்தில் போல வறண்ட வரையறுப்புகு உட்படாதது, உட்படுத்தமுடியாது, நாங்கள் கார்டீசியர்(1) அல்ல !

(1) வைச்சா குடும்பி அடிச்சா மொட்டை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் தெரிந்தவர்கள் விவாதிக்கும்போது சுவாரசியமாகவும் பல தகவல்களை அறியக்கூடியதாகவும் உள்ளது.

இருந்தாலும் ஒருவரை "நீர்" என விளிப்பது படித்தவர்களுக்கு அழகல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.