Jump to content

புலி பிடிக்க விழையும் “எடியுகேற்றட் பீப்பிளின்” வலை எல்லாம் ஓட்டை


Recommended Posts

தெருவில போன ஏபீக்களின்ட இயந்திரத்தை பறிச்சு கால்நடையாய் வீட்டபோ எண்டு நடுரோட்டில் விட்டுப்போட்டு.. பனை மரத்தில் ஏறுறதுக்கு இயந்திரம் செய் எண்டு உதவிகேட்டால் நல்லாய்த்தான் செய்வாங்கள். :rolleyes:

தவிர, ஏபீக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளியமையும் ஓட்டைகள் ஏற்பட்டமைக்கு காரணம். நான் அறிய ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் ஆயிரக்கணக்கில மண்டையன் குழு என்கின்ற பெயரில சனத்தை தெருத்தெருவாய் சுட்டு சாக்காட்டி அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைவிட ஏபீக்கள் மீது கையைவைத்து அதனால் வி.பு.அ க்கு ஏற்பட்ட எதிர்ப்பு - பாதிப்பு ஏராளம்.

இதற்கு உதாரணமாய் நான் படிச்ச யாழ் பரியோவான் கல்லூரி அதிபரை சுட்டு சாக்காட்டியதமூலம் வந்த எதிர்ப்பை சொல்லலாம். அதிபரை சுட்டு சாக்காட்டியமையால் சாதிக்கப்பட்டது என்ன என்று தெரியவில்லை. ஆனால்.. அதிபர் இப்படி மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டதன் காரணமாக எவ்வளவு எவ்வளவு எதிர்ப்பு தோன்றியது, எவ்வளவு எவ்வளவு எதிரிகள் தோன்றினார்கள், எத்தனைபேர் புலி எதிர்ப்பாளர்களாக மாறினார்கள் என்று நான் அறிவேன். இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

இப்பிடி பல ஓட்டைகள் இருக்கிது. பலர் இங்கு ஓட்டைகளை அடைக்கும் வேலையைவிட ஓட்டைகளை மறைக்கும்வேலைகளையே செய்கின்றார்கள் என்பதற்கு கீழ்வரக்கூடிய கருத்துக்களும் உதாரணமாக அமையலாம். :D

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெருவில போன ஏபீக்களின்ட இயந்திரத்தை பறிச்சு கால்நடையாய் வீட்டபோ எண்டு நடுரோட்டில் விட்டுப்போட்டு.. பனை மரத்தில் ஏறுறதுக்கு இயந்திரம் செய் எண்டு உதவிகேட்டால் நல்லாய்த்தான் செய்வாங்கள். :rolleyes:

தவிர, ஏபீக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளியமையும் ஓட்டைகள் ஏற்பட்டமைக்கு காரணம். நான் அறிய ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் ஆயிரக்கணக்கில மண்டையன் குழு என்கின்ற பெயரில சனத்தை தெருத்தெருவாய் சுட்டு சாக்காட்டி அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைவிட ஏபீக்கள் மீது கையைவைத்து அதனால் வி.பு.அ க்கு ஏற்பட்ட எதிர்ப்பு - பாதிப்பு ஏராளம்.

இதற்கு உதாரணமாய் நான் படிச்ச யாழ் பரியோவான் கல்லூரி அதிபரை சுட்டு சாக்காட்டியதமூலம் வந்த எதிர்ப்பை சொல்லலாம். அதிபரை சுட்டு சாக்காட்டியமையால் சாதிக்கப்பட்டது என்ன என்று தெரியவில்லை. ஆனால்.. அதிபர் இப்படி மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டதன் காரணமாக எவ்வளவு எவ்வளவு எதிர்ப்பு தோன்றியது, எவ்வளவு எவ்வளவு எதிரிகள் தோன்றினார்கள், எத்தனைபேர் புலி எதிர்ப்பாளர்களாக மாறினார்கள் என்று நான் அறிவேன். இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

இப்பிடி பல ஓட்டைகள் இருக்கிது. பலர் இங்கு ஓட்டைகளை அடைக்கும் வேலையைவிட ஓட்டைகளை மறைக்கும்வேலைகளையே செய்கின்றார்கள் என்பதற்கு கீழ்வரக்கூடிய கருத்துக்களும் உதாரணமாக அமையலாம். :D

அதுதான் அவர் கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஏபீ கள் என்று சொல்லிவிடாரே? அதுகளுக்கு ஏன் எப்படி என்று பகுத்தாய்ந்து தேசத்தை நோக்கி உழைக்கும் எண்ணம் எப்படி வரும்?

ஆனால் ஒரு சந்தேகம்..... பட்டம் மட்டுமே பெற்றார்கள் ஆனால் எந்த புத்திசாலிதனமான செயலையும் செய்யவில்லை என்றுதான் கட்டுரையாளர் சொல்கின்றார். ஆனால் நீங்கள் சென்.ஜோன்சில் படித்த மாணவர்களையும் ஏபீக்களில் சேர்துவிட நினைக்கின்றீர்கள்...... ஏதாவது உள்நோக்கம் உண்டோ?

Link to comment
Share on other sites

. இந்த ஆத்திரத்தில் சிறீ லங்கா இராணுவத்தில் இணைந்த யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்கள்கூட இருக்கின்றார்கள். இந்த ஆத்திரங்கள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

கலைஞன் ,சேர்ந்தவர்கள் சாதாரண சிப்பாய்(அன் எடிக்கேட்டட்)பணிபுரிந்தவர்க

Link to comment
Share on other sites

அதுதான் அவர் கட்டுரையின் ஆரம்பத்திலேயே ஏபீ கள் என்று சொல்லிவிடாரே? அதுகளுக்கு ஏன் எப்படி என்று பகுத்தாய்ந்து தேசத்தை நோக்கி உழைக்கும் எண்ணம் எப்படி வரும்?

ஆனால் ஒரு சந்தேகம்..... பட்டம் மட்டுமே பெற்றார்கள் ஆனால் எந்த புத்திசாலிதனமான செயலையும் செய்யவில்லை என்றுதான் கட்டுரையாளர் சொல்கின்றார். ஆனால் நீங்கள் சென்.ஜோன்சில் படித்த மாணவர்களையும் ஏபீக்களில் சேர்துவிட நினைக்கின்றீர்கள்...... ஏதாவது உள்நோக்கம் உண்டோ?

ஓட்டையை மறைக்கும் வேலையை நீங்கள் எப்படி செய்கின்றீர்கள் என்பதற்கு உங்கள் பதிலே சாட்சி. மேலும்... உங்களுக்கு சென்.ஜோன்சுடன் தனிப்பட ஏதாவது கடுப்பு என்று அதற்கு பதில் கூறுவதற்கு ஆள் நான் இல்லை. அதற்கு வேறு எவரையாவது பாருங்கள். இங்கு அதிபரின்கொலையும் அதன்பின்னராக பாதிப்புமே மேலே கூறப்பட்டுள்ளது.

கலைஞன் ,சேர்ந்தவர்கள் சாதாரண சிப்பாய் (அன் எடிக்கேட்டட்) பணிபுரிந்தவர்களோ? அல்லது லெப்டினட்,கப்டன்,மேஜர் ,(ஏடிக்கேட்டட் ..ஏபீ) என்று சேர்ந்து கடமைசெய்கிறார்களோ?அல்லது சும்மா ஒட்டுக் குழு என்று இராணுவத்தோடு திரியினமோ?

இப்ப கொழும்புக்கு பயமில்லாமல் போரது என்றால் ஒட்டுக்குழுக்களுடன் சினேகிதமிருக்க வேணும் இல்லயென்றால் இராணுவ உயரதிகார்களுட்ன் தொடர்பிருந்தால் பயமில்லாமல் கொழும்புக்கு போகலாம் .அதுதான் கேட்டனான்

ஒட்டுக்குழுக்களில் எவராது இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் இராணுவ உயரதிகாரிகளாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். எல்லாப்பாடசாலைகளிலும் எல்லா வகையானவர்களும் இருப்பார்கள். வி.பு.அ இலும் தாராளமாக இருந்தார்கள். ஆனால்.. அதிபரை படுகொலை செய்தது அதிக எதிர்ப்பை தோற்றுவித்தது.

Link to comment
Share on other sites

வசி,

நீங்கள் முன்வைக்கும் உதாரணம் மிகவும் பொருத்தமான ஒன்றே. நன்றி.

கலைஞன்,

இத்திரியில் நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் எல்லாவற்றிலும் இழையோடுகின்ற ஒரு சொல்லாமல் சொல்லப்படும் கருத்து “எடியுகேற்றட் பீப்பிளை” சமூகம் தான் தாஜாபண்ணி உதவி பெறவேண்டும் (ஏனெனில் அவர்கள் சான்றிதழ் பெற்றவர்கள் என்பதால் மற்றோரைக்காட்டிலும் உயர்ந்தவர்கள்--ஏறத்தாள ஒரு ஆண்டான் அடிமை றேஞ்சிற்கு), எல்லாம் தெரிந்த எடியுகேற்றட் பீப்பிளை கோபப்படுத்தினீர்கள் என்றால் அவர்கள் உங்களுடன் கண்ணைக்கட்டிக் கோபம் போட்டு சேர்ந்து விளையாடாது விட்டுவிடுவார்கள் என்ற தொனியிலேயே அமைகிறது. ஆக கல்வி என்பது கண்ணைத் திறக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக சான்றிதழ் என்பது எவ்வாறு கண்ணைக்கட்டுகின்றது என்று காட்டுகின்ற ஒரு மனநிலை இது.

“இயந்திரத்தைப் பறித்ததால் தான் இயந்திரம் கண்டுபிடிக்க எடியுகேற்றட் பீப்பிள் உதவவில்லை” என்ற உங்களது கருத்து ஒரு அடிப்படை உண்மையை நன்கு விளக்குகிறது. அதாவது, இவ்வுதாரணத்தின் பிரகாரம், படித்தவர்கள் அன்றைய தேவைக்கான இயந்திரத்தை கண்டுபிடிக்கவில்லை என்பது இங்கு வாதத்தின் இரு பக்கத்தில் இருப்பவர்களும் ஏற்றுக்கொள்கின்ற ஒன்றாய் இருக்கின்றது. சிக்கல் எங்கு எழுகின்றது என்றால், நீங்கள் கூறுகின்றீர்கள் படித்தவர்களிற்கு எல்லாக் கண்டுபிடிப்பும் சர்வசாதாரணமாய் கைவரும் ஆனால் சமூகத் தலைமையுடன் இருந்த கோபத்தால் அவர்கள் தமது கண்டுபிடிப்புக்களைக் காட்டவில்லை என்று. ஆக, அவர்கள் கண்டுபிடிக்காதபோதும் (அன்றைய நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பது யாவரும் அறிந்தது) படித்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்களால் நிட்சயம் கண்டுபிடிக்க முடியும் என்ற உங்களது அடிப்படை நம்பிக்கை தான் இங்கு ஒரு வெறித்தனமாய் வெளிப்படுகிறது. அதாவது, சோதனையில் கேள்விக்கு, அதுவும் முன்னைய ஆண்டுகளிலும் கேட்கப்பட்டிருந்த மாதிரியான கேள்விகளிற்கு, அதுவும் பரீட்சைக்கு என்னமாதிரியான கேள்விகள் வரும் என்று ஒரு புரிதல் உள்ள கேள்விகளிற்கு பதிலளித்துப் பட்டம் பெற முடிந்த அவர்களால் நடைமுறைக்குத் தேவையான முன்னர் கண்டுபிடிக்கப்படாத புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த ஒருவேளை முடியாதுபோயிருக்கலாம் என்றும் ஒரு சாத்தியம் இருக்கலாம் என்பதை உங்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. படித்தவன் கண்டுபிடிக்கவில்லை என்றால், கோபம் காரணமாக அவன் தனது கண்டுபிடிப்பை மக்களிற்குத் தரவிரும்பவில்லை என்பது மட்டும் தான் காரணமாக இருக்கும் என்று வாதிடுகிறீர்கள். ஆனால் மானுட வரலாற்றில் மானுடத்தின் உயர்விற்காய் உழைத்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் (இன, மொழி, கலாச்சாரம் கடந்து) பெற்றிருந்த மனவமைப்பானது எப்படியாவதும் தமது கண்டுபிடிப்பை எந்த ஆபத்துக்களிற்குள்ளாகவும் மக்கள் முன் முன்வைத்து விடவேண்டும் என்று தான் இருந்ததே அன்றி நீங்கள் சொல்லும் மனவமைப்பில் இல்லை.

மேலுள்ள எனது பின்னூட்டம் ஒன்றில் கார்வட் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியரான இக்னாச்சியவ் நடைமுறைக்கும் ஏட்டுக்கல்விக்குமிடையேயான சிந்தனை பற்றி தனது சுய அனுபவத்தில் மனந்திறந்து பேசியமையும் இங்கு ஒரு உதாரணம்.

இத்திரியில் பேசப்படும் பொருள் என்ன என்பது பற்றியும் அப்பொருள் தொடர்பிலும் சொல்லக் கூடியன எல்லாம் ஓரளவிற்குச் சொல்லியாவிட்டது. வாசிப்பவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனைத்தையும் வாசிக்கக் கூடிய நிலை உள்ளது. எவ்வித புதிய முனையும் இன்றி திருப்பத்திருப்ப ஒரே விதமான வாதங்களை முன்னெடுப்பதில் ஆரிற்கும் எந்த நன்மையும் இல்லை. எனவே அனைவரதும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, இத்திரியில் இதுவே எனது இறுதிப்பின்னூட்டம்.

வாசித்துக் கருத்துக் கூறிய அனைவரிற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

வணக்கம் இன்னுமொருவன்,

எனது வாதத்தின் நோக்கம்.. ஏபீக்களுக்கு வக்காளத்து வாங்குவதைவிட... அவர்களின் தொண்டை திருகுப்படக்கூடாது என்பதே. வாய்திறப்பவர்கள் நன்றாகத் திறக்கட்டும். அது தேனீயாக இருந்தாலும் சரி கொசுவாக இருந்தாலும் சரி நுல்லானாக இருந்தாலும் சரி... அங்கு கூறப்படுபனவற்றில் இருந்து தேவையான ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை உள்வாங்கி ஓட்டைகள் மறைக்கப்படவேண்டும் என்பதைவிட அடைக்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

மேலும், ஏபீக்கள் என்று குறிப்பாய் சொல்வதை விட பொதுவாக தமிழ்மக்கள் அனைவருமே சுயநலவாதிகளே. ஏபீக்கள் மட்டும் சுயநலவாதிகள் என்று குறிப்பாய் சொல்வது தவறானது. அப்படிப்பார்த்தால் புலிகளும் சுயநலவாதிகளே. தமது அமைப்பு என்று மற்றும் தமது மக்கள் என்று இயங்குவதும்கூட ஒருவிதத்தில் சுயநலவாதமே. பிரிவினைவாதம் என்பது ஒட்டுமொத்த சுயநலவாதத்தின் மறுவடிவமே.

கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. இது ஏபீக்களுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும், எனக்கு, உங்களுக்கு என்று அனைவருக்கும் பொருந்தும். நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, ஏபீக்களாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி.. எங்கள் ஓட்டைகள் அடைக்கப்படாதவரை நாங்கள் குறிப்பிட்ட நிலைக்குமேல் வளர்ச்சி அடையமுடியாது, முன்னேறமுடியாது.

எல்லோரிலும் பிழைகள் இருக்கின்றன. எனவே, நான், நீங்கள், ஏபீக்கள், புலிகள் என்று அனைத்து தரப்பினரும் எங்கள் ஓட்டைகளை மறைப்பதைவிட ஓட்டைகளை நிரந்தரமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

உங்கள் லிபரல் தலைவருடனான தொடர்பாடலுக்கு பாராட்டுக்கள். உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி! வணக்கம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன்,

எனது வாதத்தின் நோக்கம்.. ஏபீக்களுக்கு வக்காளத்து வாங்குவதைவிட... அவர்களின் தொண்டை திருகுப்படக்கூடாது என்பதே. வாய்திறப்பவர்கள் நன்றாகத் திறக்கட்டும். அது தேனீயாக இருந்தாலும் சரி கொசுவாக இருந்தாலும் சரி நுல்லானாக இருந்தாலும் சரி... அங்கு கூறப்படுபனவற்றில் இருந்து தேவையான ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை உள்வாங்கி ஓட்டைகள் மறைக்கப்படவேண்டும் என்பதைவிட அடைக்கப்படவேண்டும் என்பதே எனது அவா.

மேலும், ஏபீக்கள் என்று குறிப்பாய் சொல்வதை விட பொதுவாக தமிழ்மக்கள் அனைவருமே சுயநலவாதிகளே. ஏபீக்கள் மட்டும் சுயநலவாதிகள் என்று குறிப்பாய் சொல்வது தவறானது. அப்படிப்பார்த்தால் புலிகளும் சுயநலவாதிகளே. தமது அமைப்பு என்று மற்றும் தமது மக்கள் என்று இயங்குவதும்கூட ஒருவிதத்தில் சுயநலவாதமே. பிரிவினைவாதம் என்பது ஒட்டுமொத்த சுயநலவாதத்தின் மறுவடிவமே.கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. இது ஏபீக்களுக்கும் பொருந்தும், புலிகளுக்கும் பொருந்தும், எனக்கு, உங்களுக்கு என்று அனைவருக்கும் பொருந்தும். நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, ஏபீக்களாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி.. எங்கள் ஓட்டைகள் அடைக்கப்படாதவரை நாங்கள் குறிப்பிட்ட நிலைக்குமேல் வளர்ச்சி அடையமுடியாது, முன்னேறமுடியாது.

எல்லோரிலும் பிழைகள் இருக்கின்றன. எனவே, நான், நீங்கள், ஏபீக்கள், புலிகள் என்று அனைத்து தரப்பினரும் எங்கள் ஓட்டைகளை மறைப்பதைவிட ஓட்டைகளை நிரந்தரமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

உங்கள் லிபரல் தலைவருடனான தொடர்பாடலுக்கு பாராட்டுக்கள். உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி! வணக்கம்! :D

தனது மனைவியுடன் தான்மட்டுமே படுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் அதை ஆமோதிப்பவர்களும் சுயநலத்தின் உச்சங்கள்!

சமூகம்கட்மைப்பு...... அரசியல்கட்டமைப்பு...... கலாச்சார கட்டமைப்பு....... குடும்ப கட்டமைப்பு........எல்லாவற்றையும் தாண்டி ஒரு கருத்தை நீங்கள் முன்வைக்கின்றீர்கள் என்பதை புரிய வைக்க எனக்கு வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

களநிலவரம் அதுதான் எண்டால் ஒன்றும் செய்யமுடியாது. உங்கள் பார்வையில் பார்த்தால்கூட அதே காரணத்தைகூறி ஏபீக்களின் சுயநலத்தை நியாயப்படுத்த முடியும்.

மற்றது, இதில சமூககட்டமைப்பு...... அரசியல்கட்டமைப்பு...... கலாச்சார கட்டமைப்பு....... குடும்ப கட்டமைப்பு........ இவற்றோட இன்னொன்றை மிகவும் முக்கியமானதை எங்கடை இதயத்தின் அடிநாதத்தை சொல்லமறந்து போனீங்கள்.

என்ன தெரியுமோ?

சாதிக்கட்டமைப்பு!

உதைக் கிளற வெளிக்கிட்டால் பிறகு வட்டம்மாதிரி திரும்பவும் ஆரம்பிச்ச அதே இடத்தில வந்து நிக்கவேண்டி வரும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.