Jump to content

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.

எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது

எதுவரைக்கும் தான் முடியும்?

எழும்போது உலகம் தெளியும்.

c0386a.jpg

வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.

வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.

உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்

கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.

மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.

செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்

நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென

வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.

சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.

ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்

பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,

மண்தின்னக் கிடக்கின்றர்,

r3632161679098.jpg

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு

பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.

ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து

உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்

நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்

பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்

இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான

இயலாமை நடிப்பில்

ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.

இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?

அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.

இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.

banyantreeaerialroot.jpg

அகழான்கள் குடைந்தெடுத்தால்…

ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?

விழுதுகள் இறங்கும்.,

குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்

அகழான்கள் வெளியேறும்.,

இல்லை அடியினில் நசுங்குண்டுச் சாகும்.

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு

இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.

கனத்த பெரு வெளியின் கானலை நம்பி

இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்

இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்

அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

19782.51808.file.eng.Gillian-s-friend-Guido-roman-rides-in-Horses-Inside-Out-style-.230.340.jpg

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.

இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய

ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்

இல்லாவிடின்

ஒரு புரவி தடம் மாறட்டும்.

காட்சி மாறுகின்ற வேளைக்காய்

இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.

புதிதென்றால் அல்லவா

நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……,

பழகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா

இது உங்கள் வரிகளல்ல... கொதித்துப் போயிருக்கும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களும் சொல்லும் வார்த்தைகளாகவே நான் பார்க்கிறேன்..... மிக அருமையான வரிகள்... உங்கள் பணி தொடரவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாராக்கா,

உங்களின் கவிவரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.ஏன்.....? படங்கள் கூடத்தான் நிஜத்தை எடுத்து வருகிறது.

யாயினி.

Link to comment
Share on other sites

அறுபதாண்டுச் சாபம் நீங்காமல்

ஆறாவடுக்களை நிரந்தரமாக்கிச் சென்றுளது தோழி....,

ஆறுமாதமோ அதற்கும் பின்னால் இன்னும் எத்தனை மாதங்களோ...?

காலமழை வருமுன் காலாற

ஊர்போக வேண்டும் என் உறவுகள்.

காலம் மாறுமென்ற காத்திருப்பு மட்டுமே

நம்பிக்கை தருகிறது.

ஓராறாய் அழுத கண்ணீர்

ஒற்றித் துடைத்து உள்ளோமெனச் சொல்ல

எவருமில்லாத் தனிமையில்

இதயம் வெறுமையாய்.....

எல்லாளன் போய்விட்ட பின்னர்

எல்லாம் இல்லாததாய் உணர்வு.....

எனினும் கடைசிச் சொட்டு நம்பிக்கையில்

கைகளை பற்றிப்பிடித்திருப்போம்.

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, உங்கடை கவிதைகள் இரண்டு extremeகளில எழுதப்பட்டு இருக்கிது. நடுவில நிண்டும் கவிதைகள் எழுதிப்பாருங்கோ. நடுவில நிக்கிற கவிதைகள்தான் இப்ப எங்களுக்கு அதிகம் தேவை.

அதாவது சோகம் எண்டால்... பெருஞ்சோகம் எண்டும் இல்லாமல்...

நம்பிக்கை என்றால் அதீத நம்பிக்கை என்றும் இல்லாமல்...

கிட்டத்தட்ட யதார்த்தத்துடன் பயணிக்கக்கூடியவாறான கவிதை. அப்பிடி கொஞ்சம் எழுதுங்கோ.

(பிறகு கோவிச்சுக்கொண்டு இயங்கு முயங்கு மயங்கு எண்டு ஏதாவது எக்கச்சக்கமாய் எழுதிப்போடாதிங்கோ :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி, யாயினி, சாந்தி, கலைஞன் மற்றும் இக்கவிதையைப் பார்வையிட்டவர்களுக்கும் நன்றிகள்.

ஆமாம் சாந்தி

காலமழை வருமுன் காலற

ஊர்போக வேண்டும் என் உறவுகள்.

எல்லாத் திசையிலும் நாமிருந்தும்

எட்டா உறவுகளாய்....

என்றோ எழுதாமல் போட்டு வைத்த விதியின் பக்கங்களாய்

எவரெவரோ இழுக்கவும், ஈனப்படுத்தவும்

முடிவற்றதாய் நீள்கின்றன வதைமுகாம்களில் வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்கடை கவிதைகள் இரண்டு extremeகளில எழுதப்பட்டு இருக்கிது. நடுவில நிண்டும் கவிதைகள் எழுதிப்பாருங்கோ. நடுவில நிக்கிற கவிதைகள்தான் இப்ப எங்களுக்கு அதிகம் தேவை.

அதாவது சோகம் எண்டால்... பெருஞ்சோகம் எண்டும் இல்லாமல்...

நம்பிக்கை என்றால் அதீத நம்பிக்கை என்றும் இல்லாமல்...

கிட்டத்தட்ட யதார்த்தத்துடன் பயணிக்கக்கூடியவாறான கவிதை. அப்பிடி கொஞ்சம் எழுதுங்கோ.

(பிறகு கோவிச்சுக்கொண்டு இயங்கு முயங்கு மயங்கு எண்டு ஏதாவது எக்கச்சக்கமாய் எழுதிப்போடாதிங்கோ :D )

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

அவை வதைமுகாம்கள் அல்ல அகதி முகாம்கள் மாத்திரமே…..

மகிந்த அரசின் சனநாயகப்பாதையில் அவர்களின் வாழ்வு

புத்தொளி வீசும் பொன்னாக்கப்படும்.

நம்பிக்கை கொள்வோம்.

தமிழர் வாழ்வு மறுக்கப்படவில்லை

சிங்களத்துடன் ஒற்றுமையாக வாழ அறிவுறுத்தப்படுகிறது அவ்வளவுதான்.

தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

நடுநிலைமையில் நின்று உங்கள் வாழ்வைத் தீர்மானியுங்கள்

அதீத நம்பிக்கையும், அதீத சோகங்களும் கொண்டு

இதுவரை அழியுண்டு போய்விட்டீர்கள்.

நடுநிலையில் நின்று முடிவெடுத்துச் சிங்களத்துடன்

சம பந்தியில் இல்லாவிட்டாலும்

காலடியில் இருந்தாகிலும் உங்கள் வாழ்க்கையை யாசியுங்கள்

அதுதான் இருக்கும் ஒரே வழி

இப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞன் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

உறவுக் கொடியெல்லாம் உயிர்வலிக்கக் கிடக்கும் போது......

இது அவர்களுக்காக விதிக்கப்பட்டது.

எழுவதும் விழுவதுமாக தமிழர் கூட்டம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அவை அந்தக் கூட்டத்தின் தலைவிதி.

மாலையில் விழும் சூரியன் எழுவதை பூமியின் சுழற்சியே தீர்மானிக்கும்.

அழுகைக் குரல்கள் எங்கோ தூரத்தில் காற்றில் கரைந்தன.

நான் சாதாரண மனுசியாக உலகின் கண்களில் நடுநிலைவாதியாக இருக்கிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

என்று சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனுசியாக எழுதச் சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

இப்படி எழுதினால் நல்லாய் இருக்கும் என்று சொல்ல இல்லை. ஆனால் மேலே நீங்கள் எழுதியதில் கீழுள்ள வரிகள் பெரும்பான்மை தமிழருக்கு பொருத்தமானதாய் யதார்த்தமாய் இருக்கிது சகாரா அக்கா:

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது கலைஞன்.

வெறுமைப்பட்டதான மானிட உணர்வை யதார்த்தம் என்று ஓடும் புளியம்பழமும்போல் விட்டேத்தியாக உணர்வை தள்ளி வைக்க முடியவில்லை.

காதலை ஆழமாக எழுதினால் அங்கு நடுநிலமையில் நின்று எழுதுங்கள் என்று யாரும் கேட்பதில்லை.

காமத்தை அழுத்தி எழுதினால் அங்கும் நடுநிலமையில் நின்று எழுதுங்கள் என்று யாரும் வேண்டுகோள் விடுப்பதில்லை.

அது என்ன இதுவரைகாலமும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலமை என்பது எங்கு இருக்கிறது என்று கேள்விகளை வைத்திருந்த நாம் இப்போது மட்டும் முழுக்க முழுக்க உலகத்தரத்திலேயே எம்மினத்திற்கு அநீதி இழைக்கப்படும் நேரத்தில் நடுநிலை பேணவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம்? அப்படியானால் இவ்வளவு அழிவுகளையும் எங்களை நோக்கி, சிங்களம் முதல் அதனுடன் இணைந்து வழிநடாத்திய வல்லரசுகள் வரை திணித்தது நீதி என்கிறீர்களா? சொல்லுங்கள் நானும் நடுநிலை பேணி எழுத முயற்சிக்கிறேன். கவிதையை வாசிக்கும் மற்றவர்களுக்கு நடுநிலை என்று எதிலும் ஒட்டாத மாதிரி, எமக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமே எவருக்கும் இல்லை என்கிற மாதிரி, இல்லாவிட்டால் எம்மோடு ஒட்டாமலே எடுத்ததற்கெல்லாம் போராட்டத்தை முன் நடாத்திய போராளிகளையும், மாவீரர்களையும் பொட்டுத் தாக்கும் எதற்குமே லாயக்கு இல்லாத காகித, கணனி வீரர்கள் எல்லோரோடும் நடுநிலமை பேணி அங்கு வதைமுகாம்களுக்குள் இருக்கிற சனத்திற்கு விடிவே வர விடாமல் மாறி மாறிக் குழம்புவதற்கு ஆவன செய்ய முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதினால் நல்லாய் இருக்கும் என்று சொல்ல இல்லை. ஆனால் மேலே நீங்கள் எழுதியதில் கீழுள்ள வரிகள் பெரும்பான்மை தமிழருக்கு பொருத்தமானதாய் யதார்த்தமாய் இருக்கிது சகாரா அக்கா:

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

இந்த இடத்தில் ஒன்றை நீங்கள் அவதானிக்க வேண்டும் கலைஞன்.

இங்கு நீங்கள் பெரும்பான்மையினர் என்று குறிப்புக் காட்டியது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினரையே தவிர தாயகத்தில் உள்ளவர்களை அல்ல. இதில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் நாமும் இருக்கிறோம். இந்தக் கவிதையின் பொருத்தப்பாடு எப்படி அமைகிறது என்றால் மேலைநாட்டின் வசதியையும், வாழ்வையும் கொண்டு, இனத்தையும், தாய்நாட்டையும் பற்றிச் சிந்திக்காமல் மனிதநேயத்தையும் தொலைத்துவிட்டு (இதைப் பொருத்தமானவர்களுக்குப் போட்டுக் கொள்க), சுயநலத்தோடு வாழும் கூட்டத்திற்கு இதமாக வருடிக் கொடுக்க, முடிந்தால் அவற்றை நியாயப்படுத்த படைக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பே. என்னைப் பொறுத்தவரை இப்படி ஒன்றுக்குமே பிரயோசனம் அற்று தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் ஒரு சமூகத்திற்கு அதன் குரலாக வக்காளத்து வாங்கிக் கவிதை எழுத முடியாது.

இன்றைய நாட்களில் தாயகத்தில் தமிழர் வாழ்வு என்பது அதீத சோகங்களாலேயே சூழப்பட்டு இருக்கிறது. அச்சோகத்தின் கனதியை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உணரவேண்டும். அந்த உணர்வின் வெளிப்பாடே தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிகோலும்.

ஆக சட்டி பானை வனைந்து சோறு சமைத்துச் சாப்பிடுவதோடு தமிழரின் தேவைகள் முற்றுப் பெற்றுவிடுமா? யதார்த்தம் என்று மனித நேயத்தை தொலைப்பதற்கு உடந்தையாக எழுதுகோல்கள் செயற்பட்டால் அவ்வெழுது கோல்களினால் சமூகத்திற்கு என்ன பயன்?

கலைஞன், உங்கள் கருத்துப் போன்று அதீத சோகமும் இல்லாமல், அதீத நம்பிக்கையும் கொள்ளாமல் ஒரு படைப்பிலக்கியத்தைச் செய்து ஒரு தனி மனித சிந்தனையோடு மட்டுப்படும்போது அச்சிந்தனையால் எங்கள் உறவுகளுக்கு என்ன நன்மைகள் விளையும் என்று தெளிவுபடுத்துங்கள்.

Link to comment
Share on other sites

சுயநலம் என்கின்றவகையில பார்க்கும்போது பெரும்பான்மையான தாயக மக்களுக்கும், பெரும்பான்மையான புலம்பெயர் மக்களுக்கும் இடையில எதுவித வேறுபாடுகளையும் என்னால காணமுடியவில்லை சகாரா அக்கா.

Link to comment
Share on other sites

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

கலைஞனுக்கும் கவிதைச் சகாராவுக்கும் கருத்து யுத்தம் ! :lol:

கருத்துக்களை இருவருமு் கருத்துக்களால் வெல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலம் என்கின்றவகையில பார்க்கும்போது பெரும்பான்மையான தாயக மக்களுக்கும், பெரும்பான்மையான புலம்பெயர் மக்களுக்கும் இடையில எதுவித வேறுபாடுகளையும் என்னால காணமுடியவில்லை சகாரா அக்கா.

கலைஞன் தற்கால வாழ்வில் சுயநலம் என்ற விடயத்தில் ஒரே தராசில் புலம்பெயர்ந்தோரையும், தாயக மக்களையும் நிறுத்து பார்த்தல் தவறானது.

Link to comment
Share on other sites

  • 10 years later...
On 7/14/2009 at 12:54 AM, வல்வை சகாறா said:

 

 

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.

எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது

எதுவரைக்கும் தான் முடியும்?

எழும்போது உலகம் தெளியும்.

 

c0386a.jpg

 

வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.

வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.

உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்

கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

 

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.

மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.

செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்

நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென

வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

 

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.

சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.

ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்

பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,

மண்தின்னக் கிடக்கின்றர்,

 

r3632161679098.jpg

 

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு

பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.

ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து

உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்

நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்

பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

 

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்

இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

 

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான

இயலாமை நடிப்பில்

ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

 

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.

இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

 

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?

அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.

இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.

 

banyantreeaerialroot.jpg

 

அகழான்கள் குடைந்தெடுத்தால்…

ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?

விழுதுகள் இறங்கும்.,

குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்

அகழான்கள் வெளியேறும்.,

இல்லை அடியினில் நசுங்குண்டுச் சாகும்.

 

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு

இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.

கனத்த பெரு வெளியின் கானலை நம்பி

இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

 

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்

இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்

அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

 

19782.51808.file.eng.Gillian-s-friend-Guido-roman-rides-in-Horses-Inside-Out-style-.230.340.jpg

 

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.

இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய

ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்

இல்லாவிடின்

ஒரு புரவி தடம் மாறட்டும்.

 

காட்சி மாறுகின்ற வேளைக்காய்

இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.

புதிதென்றால் அல்லவா

நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……,

பழகி விட்டது.

 

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

என்ற வரிகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டதே... மன வலிகளை சரியாக புலப்படுத்தியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.