Jump to content

என்னவளே .....அடி என்னவளே ..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னவளே .....அடி என்னவளே ..............

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தின் பின் மனம் மாறி அவனை விரும்பியவள். இவள் பத்தாம் வகுப்பு இறுதி சோதனை செய்யும் போது அவன் பல்கலை கழகம் நுழைய இருந்தவன். ரண்டு வயது இவளை விட கூடியவன். ஒரு நாள் இவள் ... பஸ் தரிப்பில் கண்டதும ஓடி வந்து தான் நாட்டு நிலைமை காரணமாக் வெளி நாடு செல்ல இருப்பதாக ஓடி வந்து சொன்னவன் ......"..காத்திரு வருவேன் " என்றவன். கொழும்பில் நின்று இரண்டு மடல்கள் நண்பன் மூலம் கொடுத்து விடிருந்தான். பின் இரண்டு வரு டங்களாக எதுவுமே இல்லை. இவை எதுவுமே சுதாவின் பெற்றா ருக்கோ .........சுந்தரின் பெற்றா ருக்கோ தெரியாது . காலம் யாருக்காகவும் காத்திராமல் உருண்டு ஓடியது .......

...இடப்பெயர்வுகள். ...கெடுபிடிகள். குண்டு சத்தங்கள் ....என்று ஐந்து வருடங்கள். ஓடி விட்டன . எல்லோரைய்ம போலவே சுதாவும் இடம் பெயர்ந்து வவனியாவந்து பின் கொழும்பில் உள்ள ஒரு மாமா வீட்டுக்கு வந்து சிலகாலம் தங்கி இருந்தார்கள். பின் சுதாவின் பெரிய மாமாவின் உதவியுடன் ஒரு வீடின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து கொண்டார்கள். ஒரே ஒரு பிள்ளையான சுதாவை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்கவேண்டும் என்று பெற்றவர்கள். பேசிக்கொண்டனர். சுதாவின் தந்தையும் ஊரில் செய்த தரகு வேலை இல்லாததால் புடவை கடை ஒன்றில் சிறு பணியை தேடிக்கொண்டார். அவர்கள் வாழ்வு அமைதியாகவே போனது .....சுந்தரின் எது வித தொடர்பும் இல்லாததால் சுதாவும் எதுவும் பெற்றவருக்கு சொல்லவில்லை. காலம் தான் யாருக்கும் காத்தி ருப்பதி ல்லையே . சுதாவுக்கு திருமணம் முற்றாகி ...வெளிநாடு மாப்பிள்ளை க்கு மனைவியானாள். ஆறு மாதமாக் வதிவிட விசாவுக்காக காத்திருந்தவள் , மூன்று மாதமுன்பு தான் கனடாவந்து சேர்ந்தாள். தன கதையை சொல்லி முடித்தவள் . மறு முனையில் ...சுந்தரின் கதையை கேடும் அழுதே விடாள். சுந்தர் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டு ..மலாசியா வந்ததும் ...ரண்டு முறை திருப்பி அனுப பட்டதும் , பின் மூன்றாம் முறையில் அமெரிக்க வந்து .....கடந்த மூன்று வருடமாக் கனடாவில் இருப்பதாய் அறிந்து கொண்டாள். இவளை பற்றி விசாரித்த போதுஇவள் வவனியாவில் இருப்பதாக் தான் கேள்வி பட்ட்தாக் சொனார்கள். விதியே நம்மை சேர்த்து வைக்கவில்லை. என் மன ஆதங்கம் தீர தான் உன்னை தேடி உன் தொடர்பு கொண்டேன் . திருமண விடயமும் கேள்வி படேன் . நீ எனக்கு இல்லய் என்றதும் எவ்வளவு கவலை படேன். நம்ம விதி அவ்வளவு தான் சந்தோஷமாக் இரு . நான் உன்னை தொடர்பு கொண்டத்தை கணவனுக்கு சொல்லாதே வீண் சந்தேகங்களும் பிரச்சினைகளும் வரும் . என் சுதா சந்தோசமாக் இருக்கிறாள் என்ற மன அமைதியில் வாழ்ந்து விடுவேன். எப்போதாவது என்னை கண்டால் .... பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்தி ஒரு வார்த்தை கதைத்து விடு . எனக்கு மேலும் யுனி வரை படிக்கவில்லை என்ற கவலை தான் . நாடுக்கு வந்த காசுபிரசினை தீர்க்க வேலை செய்யவெளிக்கிட்டு ...கடன் கட்டியது தான் மிச்சம் . ஒரு காலத்தில் என் பிள்ளையும் உன் பெண்ணும் கல்லூரியில் படித்தால் ....சேர்த்து வைப்போம். இனி மேல் உன்னுடன் தொடர்பு கொள்ள மாடேன். சந்தோசமாயிரு . எந்த விதத்திலும் உன்னை தொல்லை படுத்த மாடேன் இது தான் முதலும் கடைசியுமான அழைப்பு . என்னை நம்பு சுதா .

சுதா கண்ணீருடன் கட்டிலில் விழுந்தாள் .சுந்தர் இங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் நான் கலியாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாடேன். எந்த நம்பிக்கையை வைத்து நான் காத்திருபது ...புயல் வீசியது போல இருந்த உரையாடல் . எழுந்து சென்று குளித்து விட்டு , தன் ஆங்கில வகுப்புக்கு போக ஆயத்தமாகி பஸ் தரிப்பில் நின்றாள் . நிறை வேறாத ஆயிரம் ஆயிரம் காதலில் அவளது காதலும் சேர்ந்து கொண்டது .

Link to comment
Share on other sites

அக்கா கதை படிக்க நல்லாய் இருக்குது............

என்ன அக்கா உங்கட கதை போல கிடக்குது..............

சரி சரி மனசை தேற்றி கிடைத்த வாழ்வை சந்தோசமாய்

வாழுங்கள்!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமாய் என் கதை இல்லை . நாங்க எல்லாம் போராடி (காதலுக்காக ) வென்ற ஆட்கள்.

நட்புக்களுக்குள் உறவுகளுக்குள் நடந்த கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா ரொம்ப அழவைத்து விட்டீர்கள்.உங்களின் சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது.

யாயினி.

Link to comment
Share on other sites

வணக்கம் நிலாமதி அக்கா

சொல்ல முடியாத பலரின் உணர்வுகளை படம் பிடித்து காட்டிய

உங்கள் கதை அழகு .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி டிச்சர் அக்கா..

கதை சூப்பர்..

வாழ்த்துக்கள் அக்கா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.