Jump to content

எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய்


Recommended Posts

எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய்

(2000ம் ஆண்டில் இந்த ஞாபகம் எழுதப்பட்டது. ஏற்கனவே பத்திரிகையொன்றிலும் வெளியாகியது. தூசுதட்டப்போனதில் கிடைத்தவற்றிலிருந்து ஒரு ஞாபகக்கதையிது)

0929_candlelight.jpg

1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார்.

புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள்.

ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாமாக்களுக்கு அம்மா சாப்பாடு கொடுப்பா. அவர்களது மோட்டார் சயிக்கிள் சத்தம் கேட்டால் அப்பாவும் , அம்மாவும் விழித்துவிடுவார்கள்.

அப்படித்தான் ஒரு இரவு. புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அந்த மாமா இந்தியாவிலிருந்து வந்துவிட்டதாக அப்பாவும் அம்மாவும் கதைத்தார்கள். எனக்கு அந்தமாமாவைப் பார்க்க வேணும்போலிருந்தது. ஏனெண்டா எனக்கு காலிலை முக்கிழுவை குத்தி ஏற்பாக்கியிருக்கேக்கை அந்தமாமாதான் கனநாள் மருந்துகட்டத் தெற்குப் புன்னாலைக்கட்டுவன் ஆசுப்பத்திரிக்குத் தன்ரை சயிக்கிளிலை கூட்டிக் கொண்டு போறவர். மருந்து கட்டேக்கை நான் அழாமல் இருக்க வேணுமெண்டு சொல்லி தெய்வேந்திரம் கடையிலை இனிப்பு வாங்கித்தருவார். பின்சிலகாலம் அவரைக் காணவில்லை. அப்பா ஒருநாள் சொன்னார். பாவம் தாய் அவனை நினைச்சு ஒரே அழுகையா இருக்குது....

ஏன் அந்த அம்மா அழுகிறாவாம் ? எனக்கு விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டேன். ஏனப்பா அவேன்ரை அம்மா அழுகிறா ? அவர் இயக்கத்துக்குப் போட்டார் அதுதான். எந்த இயக்கத்துக்கு ? இது நான். புலிக்குப் போட்டார். அப்பா அடிக்கடி சொல்வார் புலிகள் தான் நல்ல இயக்கமாம். எனக்கு அந்தப்புலிமாமாக்களைப் பார்க்க வேணும்போலிருக்கும். ஒண்டும் பேசாமல் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருப்பன் நான்.

அம்மா இடியப்பமும் அவிச்சு ஆட்டிறைச்சிக்கறியும் வைச்சுப்போட்டு இருந்தவ. அந்த இரவு நானும் நித்திரை முளிச்சு இருந்தனான். அந்த மாமாவைப்பாக்க. ஆனா நித்திரை என்னை விடேல்ல. நீ படுபிள்ளை அவைவர நான் எழுப்பிறனுன்னை....அம்மாவின் சொல்லை நம்பி நான் நல்ல நித்திரை. ஆனா விடிய எழும்பினாப் போலைதான் தெரியும் அவை ராத்திரி வந்து போட்டினமெண்டு. அம்மாவிலை சரியான கோவந்தான் வந்திது. நீங்கென்னை வேணுமெண்டுதான் எழுப்பேல்ல....இல்லைப் பிள்ளை நீ எழும்பமாட்டனெண்டு அழுதனீ அதுதான் விட்டனான். நீங்க பொய் சொல்றீங்க....இல்லை....சரி அடுத்த முறை அவை வரேக்கை கேட்டுப்பார்.....

அப்படி வந்து போன அந்த மாமாக்களில் ஒருமாமாவை யாழ்ப்பாணத்திலை ஆமி சுட்டுப்போட்டுதாம். அதையும் அப்பாதான் வந்து சொன்னார். ஆனால் அந்தமாமாவின்ரை மரணவீட்டுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல அப்பா. சின்னப்பிள்ளையள் அங்கையெல்லாம் போகக்குடாது. அவை ஆவியா என்னட்டை வருவினமாம். ஆனா கோயிலுக்கைதானாம் அவையள் இருப்பினம். அந்த மாமாவை எரித்த பின்னர் அவர்கள் வீட்டுக்கு அப்பாவுடன் போனேன். அந்த மாமாவின் அம்மா அப்பாவுக்கு மாமாவைப்பற்றிச் சொல்லிச் சொல்லியழுதா.

வீட்டை வந்தாப்போலையும் மாமாதான் ஞாபகமாய் இருந்தார். என் நினைவறிந்து நான் நேசித்த முதல் புலிமாமாவை இழந்த மரணமது.

கோவிலில் அவர் இருப்பார் என அப்பா சொன்னதைக் கேட்டு நான் எங்கடை கற்கரைப்பிள்ளையாருக்கு கனநாள் கற்புரமும் கொழுத்தி , பூவும் குடுத்துக் கும்பிட்டனான். அப்பனே பிள்ளையாரே என்னை அந்த மாமாட்டைக் கொண்டு போய்விடு....பிள்ளையாரெங்க கேட்டார்.....அந்தாள் என்ரை கற்பூரத்தையும் , பூவையும் வாங்கினதுதான் மிச்சம். நான் கேட்ட ஒண்டும் தரவுமில்லை , செய்யவுமில்லை. அப்பிடியே அந்தக்கதை போட்டுது....ஆமியின் வருகையும் , அவர்களின் பிடித்துச் செல்லலும் தொடர்கதைகளாக....

(எப்போதோ எழுதியது இப்போது மீள்நினைவாய்....17.07.09)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி மாமாக்கள் பலர் வீரமரணமடைந்துவிட்டார்கள்,இன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன�

��மேல் புலிமருமக்கள் மார்தான் எதாவது செய்யவேண்டும் தமிழ்மக்களுக்கு

அவை தான் இப்ப நான் பெரியன், நீ பெரியவன் என்று புலம் பெயர்ந்த நாடுகளில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.