Jump to content

பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு

திகதி: 19.07.2009 // தமிழீழம்

பிரான்ஸ் தலைநகர் பரிசின் லாச்சப்பல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் மற்றும் சிங்கள இளைஞர்களையும் உள்ளடக்கிய காடையர்கள் குழுவொன்று தமிழ் வர்த்தகரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது.

சம்பவத்திற்கு முதல்நாள் லாச்சப்பல் பகுதியில் வழமைக்கு மாறாக புளொட் குழுவினரால் கொல்லப்பட்ட அக்குழுவின் தலைவர் நினைவாக இரவோடு இரவாக இரகசியமாக வந்து வர்த்தக நிலையங்களின் கதவுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ன. இதனை மறுநாள் காலை அங்கு வந்த வர்த்தகர்கள் கிழித்தெறிந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த குறிப்பிட்ட வர்த்தக நிலையம் ஒன்றுக்கு வந்த காடையர்கள் சிலர், சுவரொட்டியை கிழித்தமைக்காக ஆயிரம் ஈரோக்களை வழங்கவேண்டும் என எச்சரித்திருந்தனர். பின்னர் மாலை 9979 YY 93 எனும் இலக்கம் கொண்ட சாம்பல் நிற (எஸ்பஸ்) ரக வாகனத்திலும், மேலும் அங்கு தயார் நிலையில் நின்ற இருபது வரையான காடையர்களும் இணைந்து வர்த்தகரை மிரட்டி குறைந்தது 500 ஈரோக்களையாவுதல் தரவேண்டும் என எச்சரித்துள்ளனர்.

வர்த்தகர் காவல்துறையினருக்கு தொலைபேசி எடுக்க முனைந்தபோது, காவல்துறையினருக்கு தொலைபேசி அடிக்குமாறும் தங்களை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியாது எனவும் நையாண்டி செய்தவர்கள், இரண்டு நாளில் வெளியே வந்துவிடுவோம் நீ இதிலைதானே கடை வைத்திருப்பாய் என்ற ரீதியில் எச்சரித்துடன், இந்த கடைக்கு முன்னால்தான் வந்து நிற்போம் என எச்சரித்துள்ளனர்.

இறுதியில் அவர்களின் கடுமையான அச்சுறுத்தலால் அப்போது வர்த்தகரிடம் இருந்த 250 ஈரோக்களை அவர்களிடம் வழங்கியுள்ளார். அத்துடன், மேலும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை, லாச்சப்பலில் மேலும் சில வர்த்தகர்களை இவர்கள் மிரட்டியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. கொழும்பில் லாச்சப்பல் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை தாங்கள் புலனாய்வுத்துறையிடம் வழங்கியிருப்பதாகவும், இங்கிருந்து கொழும்பு சென்றால் வர்த்தகர்கள் மீது அங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துவரும் இந்தக் காடையர்கள், அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கும் இலகுவாக கொழும்பு சென்று வருவதற்கும் தங்களுக்கு குறைந்தது 5000 முதல் 1000 ஆயிரம் வரையான ஈரோக்களை வழங்குமாறும் எச்சரித்து வருகின்றனர்.

அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த ஈ.பி.டி.பி. குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது இக்குழுவினருக்கு அவரால் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இவ்வாறான குழுக்கள் என்று சொல்லிக்கொண்டு நடமாடுவதற்கே அச்சப்பட்ட இவர்கள், தற்போது அவ்வாறான குழுக்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு சுதந்திரமாக நடமாட வெளிக்கிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

சங்கதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வெட்கமாக இல்ல. இதென்ன யாழ்ப்பாணமா அல்லது கொழும்பா.

போய் பொலிஸீல முறையிட வேண்டியதுதானே. இங்கு சட்டத்தை மதிக்காதவர்களை குறித்த நாடுகள் தண்டிக்கப் பின் நிற்கா..!

புலிகள் தாயகத்தில் தான் பலவீனம் அடைந்தார்கள்.புகலிடத்திலுமா. ஆயுதத்தை விடுங்கள்.. சட்டத்தை சரியாகப் பாவியுங்கள். இந்தக் கோடரிக்காம்புகளின் கொட்டம் அடக்கலாம்..!

டக்கிளஸ் தேவானந்தா தப்பி விட்டவன் அல்ல. அவனுக்கு எமன் காத்துக் கொண்டுதான் இருக்கிறான்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ரண்டு மூண்டு தரம் போய்க் கேட்டதற்கே "புலிகள் மிரட்டிப் பணம் வாங்கீனம்" எண்டு சட்டத்திடம் முறையிட்டுத் தான் பதினாறு தமிழ் ஆர்வலர்கள பொலிஸ் உள்ள பிடிச்சுப் போட்டது. இதை முறையிட ஏன் தான் நாக்கில்லாமல் போனது? ஓ விளங்குது.. இங்க முரண்டு போட்டு ஈழத்துக்குப் போயிருந்தா புலிகள் உங்கள ஒண்டும் செய்திருக்க மாட்டீனம். ஆனா டக்கி குழு அப்பிடியில்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுகருத்து மந்திரம் இதுதானோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.