Jump to content

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

on 20-07-2009 05:07

ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி!

இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா? என்று இந்தியர்களாகிய நாம் நினைக்கிறோம். ஏனென்றால் நம் முன்னோர்கள் திருமண விஷயத்தில் வகுத்துக் கொடுத்து சென்ற பாதை அப்படி. திருமணம் முடிவதற்கு முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துப் பேச அனுமதித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையை பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையே உடலுறவுக்கு வற்புறுத்தினாலும் பெண் அதற்கு சம்மதிக்காமல் "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று வெட்கத்துடன் மறுத்து விடுகின்றனர். திருமணமான பின் ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று இருதரப்பும் அவசரப்படுவதற்கு காரணம் பல இருந்தாலும், அதில் ஒரு காரணமாக பொறுப்புணர்ச்சியும் அமைகிறது.

என்ன முணுமுணுக்கிறிர்கள்?

நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் என்று கேட்கிறீர்களா?

அதெல்லாம் பழங்காலம். இப்போது புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது என்கிறீர்களா? அதுவும் சரிதான். இந்தியா கம்ப்யூட்டர் மயமாகி அவுட் சோர்ஸிங் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பின் தற்கால இளைய சமுதாயம் நம்முடைய பழம்பெரும் பண்பாட்டை-ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் கருத்துக் கணிப்பு செய்து ரூம் போட்டு யோசித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவை- மறந்து திருமணத்துக்கு முன்னே உறவு வைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலும் சமீபத்திய பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வாசிக்கும் பாக்கியம் பெற்றிருப்பார்கள்.

இப்படியே அமெரிக்க பண்பாட்டை பின்பற்றி இந்திய இளைய உள்ளங்கள் செல்ல ஆரம்பித்தால் இன்னும் சில வருடங்களில் இந்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்.

அது...

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அதே விஷயத்தைத்தான் ஆராய வேண்டியிருக்கும்.

- ஏ.ஆர்.முருகேசன்

அதிகாலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போத்துட்டு படுத்தாலும் படுத்திட்டு போத்தினாலும் ஓன்று தான் ஆனால் பெட் சீட்டை மாத்தாமல் இருந்தால் சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வியில் பதில் உள்ளதே .......... திரு (புனித, தூ ய்மையான )மணம் . அதை அவசரப்பட்டு அசிங்க படுத்த்வேனாமே .

குற்ற உணர்வு ஏற்படுமே.கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளமா அடித்துக்கொண்டு போய் விடும் . பொறுமை.....தேவை.

பழகலாம் எல்லை தாண்ட கூடாது . எந்த முறை யானாலும் மத அனுஷ்டானக்களுடன் தொடங்குவது தான் ஒரு நல்ல காரியத்துக்கு அழகு.

உடல் இணைய முன் மனங்கள் இணையவேண்டும்.புரிந்து கொள்ளவேண்டும்.

எமது பண்பாடு கலாசாரம் உள்ளவரை. எல்லை மீற வேண்டாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

மோனே இதுவிடை சொல்ல நீங்கள் நல்ல பொருத்தமானவர் எங்க சொல்லுங்கோ பார்ப்பம்,சிரிச்சு தப்பிடலாம் என்று பார்கிறிங்கள் என்ன,கோவிலுக்குள்ள போகலாம் கோபுரத்தில ஏறக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

உடல் இணைய முன் மனங்கள் இணையவேண்டும். புரிந்து கொள்ளவேண்டும்.

ஹிஹி.. இது வேற லோகத்தில நடக்குதா? :lol:

நடக்கிற திருமணங்களில பாதிக்கு மேல பெற்றோரால பார்த்து நிச்சயிக்கபட்டவை. இவையளெல்லாம் மாசக்கண‌க்கில இணையாமல் இருந்து ஆளையாள் புரிஞ்சு கொண்டு பிறகு விசயத்துக்கு வந்தவையோ? :lol:

காதல் கல்யாணம் பண்ணினவங்களை விட இவையள்தானப்பா பத்து மாசத்தில டாண் எண்டு பிள்ளையோட நிக்கினம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

காதல் கல்யாணம் பண்ணினவங்களை விட இவையள்தானப்பா பத்து மாசத்தில டாண் எண்டு பிள்ளையோட நிக்கினம்..! :lol::lol:

10 அல்ல டங்கு 9 மாதம், அதிகம் தமிழ் சினிமா பார்த்தால் இப்படியெல்லாம் தப்புத் தப்பா தான் புரிஞ்சு கொள்வீர்கள்

Link to comment
Share on other sites

...என் பிள்ளைகள் இப்படி திருமணம் செய்ய முனைந்தால், நிச்சயம் வரவேற்பேன் ஆதரவு கொடுப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாணத்திற்கு முன் குடித்தனம்?

இரண்டு பேருக்கும் ஒத்து வராம போகுமாய் இருந்தால் - பிரிவதற்கு மன பக்குவம் உள்ளவர்கள் தாராளமாய் இருக்கலாம் இப்படி. :lol:

இல்லை, என்ன தான் ஆனாலும் கடைசில கல்யாணத்தில் தான் முடியோனும் :lol: என்று நிர்பந்தம் இருப்பின், என்ன வில்லங்கத்திற்கு- முன்னரே ஒன்றாக குடித்தனம் நடத்துவான்? :lol:

அதில் ஏதும் லொஜிக் இருப்பதாய் படவில்லை. ஆயுள் தண்டனைக்கு யாரவாது வேளைக்கே போய் செக் இன் பண்ணுவானா?!! :lol:

ஆனால் வருட கணக்கில் கல்யாணம் முடிக்காமல் சந்தோசமாக ஒன்றாக உள்ளவர்களும் உண்டு. கலாச்சாரம் என்ற பெயரில், அவர்களின் சந்தோசத்தை - தரம் குறைத்து பார்க்கிறவர்கள் - விளங்கி கொள்ள வேணும் - மனுசர் மனுசருக்காக உண்டாக்கியது தான் கலாச்சாரமே தவிர கலாச்சாரத்திற்காய் மனுசர் படைக்க படவில்லை.

ஆக்கபூர்வமான மாற்றங்களை தழுவுவது ஒரு காலகட்டத்தில் இருந்து இன்னொரு காலகட்டத்திற்கு சந்ததிகளை சீராக வழிநடத்தி செல்லும். :lol:

எனது தனிப்பட்ட கருத்து அது.

எனது நண்பர்கள் அவ்வாறு இருக்க விரும்பினால் நானும் அதை வரவேற்பேன்.

ஆனால் எனது சுதந்திரத்தில், எனது தனிமையில் எனக்கு உள்ள பிடிப்பினால் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :lol:

Link to comment
Share on other sites

சேர்ந்து வாழ்வது என்று மொட்டையாக சொன்னால் எப்பிடி? கிச்சுக்கிச்சு இல்லாமல் என்றா அல்லாட்டிக்கு கிச்சுக்கிச்சு செய்துகொண்டோ?

...என் பிள்ளைகள் இப்படி திருமணம் செய்ய முனைந்தால், நிச்சயம் வரவேற்பேன் ஆதரவு கொடுப்பேன்

உதை நீங்கள் இப்பிடி வாழ்ந்து பார்த்துப்போட்டு அனுபவத்தோட பிள்ளைக்கு சொன்னால் இன்னமும் நல்லாய் இருந்து இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த வீண் வம்பு கறுப்பி

இதைப்பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

10 அல்ல டங்கு 9 மாதம், அதிகம் தமிழ் சினிமா பார்த்தால் இப்படியெல்லாம் தப்புத் தப்பா தான் புரிஞ்சு கொள்வீர்கள்

ச்சே.. ஒரு மாசம்கூட டைம் (Grace Period) தரமாட்டிங்களா? :lol:

ஆனால் எனது சுதந்திரத்தில், எனது தனிமையில் எனக்கு உள்ள பிடிப்பினால் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :lol:

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிழை இல்லை, ஆனால் எங்கட தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ளது...!

புலம் பெயர் சமுதாயத்தில் பல இடங்களில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

Link to comment
Share on other sites

புலம் பெயர் சமுதாயத்தில் பல இடங்களில் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே?

ஒரு சில இடங்களில் நடக்கிறது உண்மை கறுப்பி... புலத்திற்கு வந்து நீண்ட காலம் (25- 30 வருடங்களாக) இங்கேயே வாழ்ந்தவர்களாக இருக்கும், அல்லது அவர்களின் பிள்ளைகளாக இருக்கும்... அவர்கள் தங்களை வெளிநாட்டுப் பிரஜைகள் என்று தான் அறிமுகப் படுத்துவார்கள்.... கவனித்துப் பாருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர்ந்து வாழ்வது என்று மொட்டையாக சொன்னால் எப்பிடி? கிச்சுக்கிச்சு இல்லாமல் என்றா அல்லாட்டிக்கு கிச்சுக்கிச்சு செய்துகொண்டோ?

:lol:

கிச்சுகிச்சு + joint bank accounts + joint mortgage + தெரிஞ்ச துன்பம் +தெரியாத துன்பம் etc etc ... எல்லாம் தான் கலைஞன்......

கூட்டி கழிச்சு பார்த்தால் நட்டம் தான் கூட என்று என்ர spreadsheet சொல்லுது.

அதனால அந்த spreadsheet ஆலேயே போர்த்து கொண்டு படுக்கிறது மேல்... சுப்பண்ணை சொன்ன பெட்ஷீட் வீண் செலவு & வேலில போன ஒணானை பிடித்து பெட்ஷீட்டுக்குள் விடக்கூடாது!!! :lol:

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..!

:lol: ஆப்பு இட்டதால தான் வலி..வேதனை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு முன் குடித்தனம்?

இரண்டு பேருக்கும் ஒத்து வராம போகுமாய் இருந்தால் - பிரிவதற்கு மன பக்குவம் உள்ளவர்கள் தாராளமாய் இருக்கலாம் இப்படி. :lol:

எனக்கு அந்த பக்குவம் இருக்கெண்டுறதால நான் இப்பவும் READY :lol:

இல்லை, என்ன தான் ஆனாலும் கடைசில கல்யாணத்தில் தான் முடியோனும் :lol: என்று நிர்பந்தம் இருப்பின், என்ன வில்லங்கத்திற்கு- முன்னரே ஒன்றாக குடித்தனம் நடத்துவான்? :lol:

உதுக்கு ஒரு மாதிரியும் மூளைச்சலவை செய்யேலாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?

எதுக்கும் தாலியை கட்டிய பின் ........

முதலிரவு , தேன்நிலவு கொண்டாடுவதில் தான் ஒரு திரில் இருக்கு . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா சொன்னீங்க மாப்பிளை அவசர படஇ பொண்ணு வெக்கப்பட எல்லாம் ஒரு திரில் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒண்டும் ஆப்பிடேல்ல எண்டதை டீச்ன்டா சொல்லுறார் இளையபிள்ளை..! :lol:

இல்லை டங்கு இ பிள்ளை ஏற்கனவே பார்த்து வைச்சிருக்கிறார் அதாலதான் நாங்கள் எல்லாம் கலியாணத்துக்கு முதல் என்ன செய்தனாங்கள் என்று பார்க்கத்தான் இப்பிடி கதைக்கிறார் :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் தாலியை கட்டிய பின் ........

முதலிரவு , தேன்நிலவு கொண்டாடுவதில் தான் ஒரு திரில் இருக்கு . :lol:

என்ன மச்சான் இப்பிடி சொல்லுறிங்கள்,ஒரே ஒருக்கா போட்டோவில பார்த்தவளோட எப்பிடி உந்த நிலவு எல்லாத்தையும் கொண்டாடுறது எல்லாம் இழவாயல்லோ போயிடும்,கொஞ்சம் எழும்படியப்பா என்றாலும் காது கேக்காதவள் போல படுத்திருப்பாள்,ஆனால் காதலிச்சு தாலிகட்டினபின் கொண்டாடுறதில நீங்க சொன்ன ஒரு திரில் இருக்கு தான்,ஆனால் பக்கத்தில பழம் இருந்தால் கடிக்க சொல்லுமே, :D

Link to comment
Share on other sites

கிராமத்து பெண்ணை கட்டின மாப்பிள்ளை சொன்னாராம் உன்னை" கனிமூன்''அழைத்து செல்லுகிறன் என்று ஒரு வெளிநாட்டுக்கு அழைத்து சென்றார் மாப்பிள்ளை.ஒருகிழமையால கிராமத்து பெண்கேட்டாலாம் கனிமூண் காட்டுறன் என்று சொன்னியள் ஒன்றயையும் காட்டவில்லையேஎன்று,இதைத்தான

Link to comment
Share on other sites

எமது நிலை அப்படி அகிவிடக்குடாது என்று தான் நம் முன்னோர்கள் பாதை வகுதுகொடுதிருக்கிரர்கள், அதன்படி வகுத்த பண்பாடு கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும், இவ்வாறு பின்பற்றினால் இப்படி ஒரு ஆராட்சி செய்யவேண்டி வராது!

என்ன அண்ணன்மார்களே சொல்வது சரிதான?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.