Jump to content

முகம் தெரியாத நண்பனும் நாங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் தெரியாத நண்பனும் நாங்களும்

“வணக்கம்”

அங்கிருந்தொருவன்

அருகிருப்பதுபோல் பேசுவான்

தொலை தூர வாழ்வில்

அதிகாலைப்பொழுதில்

தினந்தோறும் வருவான்.

தாய்நாட்டு வாசனை

தன் குரலாலே தெளிப்பான்.

முன்னைய நாட்களில்..

தனித்தேசக் கனவை

தன்மான உணர்வை

செயல் திறன் ஆற்றலை

எங்களுக்குள்

இன்னும் அதிகமாக்கியவன்

இறுதி நாட்களில்..

முள்ளி வாய்க்கால்

இப்போது என்ன சொல்லுதென்று

வரி விடாமல் சொல்லுவான்

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி

நிமிர்ந்து வந்து

குரல் தருவான்.

எங்களைப்போல்

முகம் தெரியா நண்பர்கள்

அவனுக்கு அதிகம்.

அத்தனை பேரும்

தேடுகின்றோம் அவனை.

இப்போது

நீண்ட நாட்களாய்

காணவில்லை.

அவனை?

அவன் குரலை?

இன்று..

அருகிருப்பவன்

சொன்னான்

அவன் வீர மரணமென்று

படம் கிடைத்தது.

முதன் முதலாய்

முகம் பார்த்தோம்.

முகத்தோடு முகம் புதைத்து

அழுதோம்

இனம் புரியா உணர்வால்

தவித்தோம்

அவன் செய்தி படித்தோம்

“அழுகை நிறுத்துங்கள்”

அதில் ஒன்று.

“எழுந்து நடவுங்கள்”

இன்னொன்று.

விழுப்புண்ணாய் இருக்கையிலே

வெளி வேலை செய்வாயாம்

ஆறிய மறுகணமே

களம் நோக்கி

நடப்பாயாம்.

புல்லரித்துப்போகின்றோம்

உன்னைத் தொட்டபடி

நடந்தது வரம்.

தொலைத்துவிட்டுத்

தவிப்பது சாபம்.

நாங்கள் பதில் போடவும்

எங்கள் முகம் காணவும்

நீயில்லை

எங்கள் முகந்தெரியாத நண்பனே!

இப்போது

புடம் போடுகின்றோம்,

நீ சொன்னதுபோல்

விடுதலைக்காய்

எங்களை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவி இந்திரன் இது ஒரு கால அனுபவம். பத்திரப்படுத்தி உங்கள் இலக்கியத்திற்குள் புகுத்தி வையுங்கள். ஒரு நூற்றாண்டுக்குப் பின் இவையெல்லாம் பெறுமதி மிக்கவையாக எங்கள் இனத்தின் தேடல்களில் இருக்கும். முகங்கள் அறியாமலே இனத்தின் விடுதலைக்காக கண்காணாத் தூரவெளிகளில் இருந்தவர்கள் எப்படிப் பிணைக்கப்பட்டார்கள் என்பன எல்லாம் நாளைய நாட்களில் தேடலில் ஈடுபடப்போகும் எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இன்றைய நாட்களின் கதைகளைக் கூறுபவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கவிதை..எப்படி பாராட்ட என்று தெரியவில்லை.

எத்தனை பேரை தட்டி எழுப்பிய நண்பன் அவன்... :icon_idea::D

Link to comment
Share on other sites

முகம் அறியாமல் போனவன் போல் ஆயிரமாயிரமாய் எங்கள் முகவரிகள் போய்விட்டனர் இந்திரன்.

கவிதை கனத்துக் கண்ணீர் விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, நெஞ்சைத் தொட்டுவிட்டது. நாம் எல்லாம் தமிழராய் பிறந்துவிட்ட குற்றம். இது நம்மைப் படைத்தவனுக்குகே சமர்ப்பணமாக வையுங்கள் ரவி இந்திரன்.

நன்றியுடன்

பென்மன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவி இந்திரன் இது ஒரு கால அனுபவம். பத்திரப்படுத்தி உங்கள் இலக்கியத்திற்குள் புகுத்தி வையுங்கள். ஒரு நூற்றாண்டுக்குப் பின் இவையெல்லாம் பெறுமதி மிக்கவையாக எங்கள் இனத்தின் தேடல்களில் இருக்கும். முகங்கள் அறியாமலே இனத்தின் விடுதலைக்காக கண்காணாத் தூரவெளிகளில் இருந்தவர்கள் எப்படிப் பிணைக்கப்பட்டார்கள் என்பன எல்லாம் நாளைய நாட்களில் தேடலில் ஈடுபடப்போகும் எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இன்றைய நாட்களின் கதைகளைக் கூறுபவையாக இருக்கும்.

வல்வை சகாரா அக்கா உங்கள் கருத்துக்கு நன்றிகள்

இன்றைய காலகட்டத்தில், எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆவணப்படுத்துதலும், வீரம் தியாகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக கலை, இலக்கிய படைப்புக்களுக்குள் உள்வாங்கி பத்திரப்படுத்துதலும், நம்முன்னுள்ள முக்கிய பணி ஆகும். ஏனெனில் எங்களுக்கு உலகம் பதில் சொல்லாவிட்டாலும் வரலாறு நிச்சயம் பதில் சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கவிதை..எப்படி பாராட்ட என்று தெரியவில்லை.

எத்தனை பேரை தட்டி எழுப்பிய நண்பன் அவன்... :lol::)

ஜீவா உங்கள் கருத்துக்கு நன்றிகள்

அந்த நண்பன் எங்களை உருவாக்கியது போல் நாங்கள் ஒவ்வொருவரும் நிறைய நண்பர்களை உருவாக்குவது காலத்தின் தேவை.

அதுவே ஈழத்தின் எதிர்காலத்திற்கு தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் அறியாமல் போனவன் போல் ஆயிரமாயிரமாய் எங்கள் முகவரிகள் போய்விட்டனர் இந்திரன்.

கவிதை கனத்துக் கண்ணீர் விடுகிறது.

முகமறியாமல் அவர்கள் போயிருந்தாலும் அவர்களே எங்கள் முகவரிகள்.

எங்கள் முகவரிகளை நாங்கள் தொலைக்கவில்லை விதைத்துள்ளோம். மீண்டும் முளைகொண்டு விருட்சமாய் விரியும் விடுதலை வேட்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை, நெஞ்சைத் தொட்டுவிட்டது. நாம் எல்லாம் தமிழராய் பிறந்துவிட்ட குற்றம். இது நம்மைப் படைத்தவனுக்குகே சமர்ப்பணமாக வையுங்கள் ரவி இந்திரன்.

நன்றியுடன்

பென்மன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பென்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.