Jump to content

துரோகிகள்!!!!!!!!!


Recommended Posts

........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த ....

.... "என்னவாம், நாடு நிலவரம்" .

..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்....

.... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" ....

.... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்"....

.... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" ....

.... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ணிப் போட்டு வலைக்குள் வீழ்ந்து விட்டார்கள்" ...

.... "உண்மைதான், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த மாதிரித்தான், இவையளும் நடந்திருக்கினம். அவங்கள் எல்லாப்பக்கத்தாலையும் விசயங்களை கொண்டு போனதை உதுகள் கவனிக்கவில்லை" ....

.... "பெரிய படிச்சதுகளும் இல்லைத்தானே, உந்த ஓட்டங்களை அறிவதற்கு" ...

.... "சண்டையை தொடங்கப் போகிறோம், தொடங்கப் போகிறோம் என யுத்த நிறுத்த காலத்திலை சனங்களை வைத்து ஊர்வலங்கள் நடத்தியும், அவன் சிங்களவனை வீணாக உசுப்பேற்றி விட்டதுதான் மிச்சம்" ...

... "அது போதாததற்கு இங்கை வெளியிலையும் இறுதி யுத்தம் என காசு சேர்க்கத் தொடங்கி உலகத்துக்கும் நாம் சண்டைக்கு போகப் போகிறோம், எமக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என சொன்னது..." ....

.... "உண்மைதான்" ...

.... அவன் அடிக்கத் தொடங்கியவுடன் பரவ விடுகிறம் எண்டாங்கள், இறுதி மட்டும் விழுந்தாலும் மீசையில் ..." ...

.... "கடைசி, புதுக்குடியிருப்பு போகத்தான் வெளிநாட்டு சனம் காப்பாற்ற ரோட்டில் இறங்கச் சொன்னாங்கள்"...

.... "எல்லாம் லேட்ட்ட்ட்ட்" ....

... "ம்ம்ம்ம், இறங்கியும் என்னத்தை செய்ய முடிந்தது?? யாராவது ஏறெடுத்து பார்த்தார்களா?" .....

.... "அரசியல் ஞானசூனியங்கள்" ...

.... "சரி, சண்டையையும் சரியாகவா செய்தாங்கள்?? ...

.... "உண்மைதான், சிங்களவன் அடிக்கத்த் தொடங்க ஒரு ஆயிரக்கணக்கில் சிங்கள இடங்களில் போட்டிருந்தால், காலிலை விழுந்திருப்பாங்கள்!, இது என்னடா என்றால் வளவுக்குள் எதிரியை கூட்டி வந்து, ... முடிச்சதுதான் மிச்சம்" ....

... "உண்மைதான், சொன்னாங்கள் .... தெற்கில் இரத்த ஆறு ஓடும், சிங்கள இனம் யுத்தம் தொடங்க பாடம் படிக்கும், ... எண்டு எல்லாம் சொன்னாங்கள். கடையில் ஒண்டும் நடக்கேலை!!!!!" ....

... "உலக அபிப்பிராயமாம், அங்கீகாரமாம் ... அதுதான் சிங்க்களவனை சாக்கொல்லேலையாம்" ...

... "உலக அபிப்பிராயம் எண்டு நாம் முடிந்ததுதான் மிச்சம்" ....

... ""சிங்களவங்கள் நல்லாப் பயப்பட்டவங்கள் முந்தி, சண்டை தொடங்கினால் தாமும் நிறைய பாதிக்கப்படப் போறம் எண்டு, ஆனால் நாங்கள் அவங்களை நோகப்பண்ண கூட விடேலை" ...

... "இண்டைக்கு முன்பு பயத்திலை இருந்த சிங்களவங்கள் எல்லாம் கிளம்பி கூத்தடிக்கிறாங்களாம்" ...

........ "......" .....

...... "முடிபுகள் எடுத்தவைகள் தவறானவை, செயற்படுத்தினதுகள் தவறானவை, ... மொத்தத்தில் எல்லாம் பிழைதான்" ...

சாப்பாடு முடிந்து கையை கழுவி, கோயிலை விட்டு வெளியேறும் போது ....... நினைத்தேன் ... உந்தக் கதைத்த கிழடுகள் ..... துரோகிகள் ......!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் துரோகிகள் எனவே எச்சரிக்கை!

இனிக் கனபேர் கதைப்பினம். கதைவிடுவினம். முந்தியும் இந்த பொடியள், நடந்து அலைஞ்சு களைச்சு மொட்டையும் விழுந்து....., இப்ப மனிசராயும், தாத்தாவாயும்..., பனியுக்கையும் மழையுக்கையும் திரிஞ்சு கதவு தட்டேக்கையும் உதைத்தான் சொன்னவை. இப்பிடியொரு கூட்டமும் எங்களோட கூட இருக்கும்வரை தமிழனால் நிமிர முடியாது.

எட உந்த அறிவுஜீவித்தனத்தை எடுத்து விட்டு ஒருக்கா மகிந்த மாத்தயாவிட்டக் கேட்டகலாமே.

Link to comment
Share on other sites

இப்போ கணபேர் வெளிக்கிட்டுட்டினம்.

முந்தி பெடியள் செய்வாங்கள் என்று கணபேர் இருந்திட்டோம்,இப்ப பெடியள் தோல்வியை தழுவிய படியால் கணபேர் வெளியால் வெளிக்கிட்டுட்டிடோம்

Link to comment
Share on other sites

உங்கு கோயிலில் கதைத்துக் கொண்டிருந்த வயது மூத்த கூட்டம் உண்மையைத்தான் கதைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் துரோகிகள். அப்படியென்றால் சரி. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

Link to comment
Share on other sites

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

:D வாயை திறவுங்கோ,ஆனால் நாங்கள் சொல்லுவதற்கு ஜால்ரா போடமட்டும் ,மற்றும்படி திறந்தா எங்களுக்கு கேட்ட கோபம் வரும் :D:D

தமிழக உறவுகளை பற்றியும் நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது,அவர்களைப்பற்ற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.