Jump to content

பசங்களை பார்த்தீங்களோ??


Recommended Posts

நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன்.

படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது.

படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது.

படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம் மூலம் சமுதாயத்துக்கு சொல்ல வருகின்ற செய்திகளும் காத்திரமாய் இருக்கிது. வழமையாக எதிர்மறையான சிந்தனைகளோட, சினிமாத்தனங்கள், ஹீரோக்களிண்ட மெண்டல் ரோதனைகள் இவற்றோட ஓடுகின்ற படங்கள் மத்தியில.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அருமையான படமாக இந்த பசங்க உருவாக்கப்படு இருக்கிது.

தொடர்ந்து இப்படியான படங்களை எதிர்பார்ப்போம். படத்தில நடிச்ச சின்னப்பசங்க, கலைஞர்கள் அனைவருக்கும் யாழ் சோழியன் மாமா சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். :lol:

ஒரு சுவாரசியமான சம்பவம் என்ன என்றால்.. படம் முடியப்போற தருணத்தில எனது பெறாமகன் ஒருத்தன் படம் இப்பிடி முடியப்போகிது.. இப்படியான ஒரு சம்பவம் நடக்கப்போகிது என்று ஏற்கனவே சற்று முன்னதாக சரியாக சொல்லிவிட்டான். எனக்கு படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது அப்படி யோசிக்க முடியவில்லை என்றாலும்... அவன் அப்படி நடக்கப்போகிது என்று சொன்னபிறகு அவனின்ட கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் கேட்டன்.. எப்படி உதை ஊகித்தீங்கள் என்று. அவன் சொன்னான்... தான் அதிகளவில் கதைப்புத்தகங்கள் வாசிப்பதனால் அப்படி ஊகிக்ககூடியதாக இருந்தது என்றான்.

194_pasanga_1.jpg

நீங்கள் ஏற்கனவே பலர் இதை பார்த்து இருப்பீங்கள். நாங்கள் கடைசியிலதான் மூட் வரும்போது படம் பார்க்கிறது. பசங்க பற்றி உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோ. நன்றி!

Link to comment
Share on other sites

நான் நேற்று இரவு ஐங்கரன் DVD (தரவிறக்கம் தான்..) மூலம் பார்த்தேன்... மிக அருமையான படம். என் பள்ளிகூட வாழ்க்கையை மீண்டும் இரண்டரை மணித்தியாலங்களில் வாழ்ந்து விட்டது போன்ற உணர்வைத் தந்தது. பள்ளிக் குழந்தைகளை பள்ளிக் குழந்தைகளாகவே காட்டிய முதல் தமிழ் படம் என்று இதனைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்

குழந்தைகளைத் தவிர காதலர்களாக வரும் இருவரும் கூட மிக இயல்பான காதலை வெளிப்படுத்தி இருப்பதும், பெற்றோர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக காட்டியதும் படத்தை மேலும் சிறக்க வைக்கின்றது.

நல்ல சினிமாவை விரும்புகின்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

:

கலைஞன்,

நாடோடிகளையும் பாருங்கள். இயல்பான காட்சிகளைக் கொண்ட ஓரளவிற்கேனும் நல்ல படம்

Link to comment
Share on other sites

வழமையாக சினிமாவில், நண்பர்கள் காதலர்களை சேர்த்து வைப்பதாக வருவது சாதாரணம். ஆனால் அவர்கள் இணைந்த பிறகும்.. வாழ்க்கையிலும் நண்பர்கள் உதவுவதாக கூறப்பட்டிருக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.

ஐயையோ.. எனக்கும் புதுப் படத்துக்கும் வெகுதூரம்..!! :(:lol:

Link to comment
Share on other sites

நண்பர்கள் காதலர்களை சேர்த்து வைப்பார்களோ? கொஞ்சம் யோசிக்கவேண்டிய விசயம். நெடுக்காலபோவானைத்தான் கேட்டுப்பார்க்கவேணும். :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அருமையான படம்..இப்படிப் படம் வந்து பலகாலம் ஆயிடுச்சு....... எம் சிறுவயது வால்தனங்களையும் பாடசாலை நாட்களையும் மீண்டும் அசைபோட வைத்த படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசியத்தையும் படத்துக்குள் புகுத்தியிருந்தார்கள், கவனித்தீர்களா?

அதில் என்ன தப்பு?

Link to comment
Share on other sites

கவனிச்சம். கவனிச்சம். எல்லாப்படத்திலையும் அதை புகுத்தித்தானே வச்சு இருக்கிறாங்கள். அதாவது இப்ப நீங்கள் சொல்ல வருவது என்ன? உதை பார்க்கலாமோ இல்லாட்டிக்கு புறக்கணிக்கலாமோ என்றாவது சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

நீண்ட நாள்களுக்குப் பிறகு கலைஞன், நிழலியின் கதை விமர்சனத்தைப் படித்த பின்பு இந்தப் படத்தை youtube-இல் பார்த்தேன்... காதலர்களின் தொலைபேசி காட்சி கொஞ்சம் ஓவர் பிளேடு. மற்றப் படி வித்தியாசமான கதையைக் கொண்ட படம், பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

முழுமையாக ஒரு படம் நீண்ட நாளைக்கு பிறகு பார்த்தேன். வித்தியாசமான படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ஓசியில சினிமா பார்க்கும் கொள்கையின் பிரகாரம் ஓசியில் இணையத்தில் பார்த்தேன்.

வித்தியாசமா எதுவும் சொல்வதற்கில்லை. பெரிய வில்லன்களை விலக்கிவிட்டு சிறிய வில்லன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்..!

மொத்தத்தில்.. பசங்கள்.. ரசிக்கலாம்.. புதிதல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனிச்சம். கவனிச்சம். எல்லாப்படத்திலையும் அதை புகுத்தித்தானே வச்சு இருக்கிறாங்கள். அதாவது இப்ப நீங்கள் சொல்ல வருவது என்ன? உதை பார்க்கலாமோ இல்லாட்டிக்கு புறக்கணிக்கலாமோ என்றாவது சொல்லுங்கோ.

நல்ல படம் முரளி, குழந்தை வயதை மீண்டும் அசை போட வைத்த படம். தன்னம்பிக்கை உள்ளவன் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை எண்டதை என்னால் அந்தப்படத்தின் மூலம் உணர்ந்துகொள்ள முடிஞ்சுது.

இயலாமையின் அடிப்படையில் தான் கோவம் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி. என்கின்ற எல்லாமே தோன்றுகின்றன என்பதையும் தெளிவாக விளக்கி இருந்தார்கள்.

பசங்க!..." நமக்கான பாடம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.