Jump to content

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை.

-ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

"ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது..."

kittu7.jpg

emerson.gif

Emerson

gorky.jpg

Gorky

thangathuraismall.jpg

Thangathurai

gramsci.png

Gramsci

thileepan1.jpg

Thileepan

cheguvera.jpg

Che Guvera

இத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன். புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி

"ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது"

என்று கூறினார்.

ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.

மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது. அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது.

கறுப்பு யூலை தமிழர்களை அவர்தம் தாயகம் நோக்கி ஓடவைத்தது. அவர்களில் பலர் பல நாடுகள் நோக்கி ஓடினார்கள். இன்று அவர்கள் தங்கள் தாயகத்தில் அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு வதை முகாங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேசிய விடுதலைக்காக நாடோடியாக மாறிய கிட்டு என வாஞ்சையோடு அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் :

kittu6.gif

நாடிருந்தும்

நாடோடியாக

நாளெல்லாம்

நாடெல்லாம்

ஓடுகின்றேன்

ஓடுவதற்கு உடல் வலு தேவையில்லை

மனவலு இருந்தால் மட்டும் போதும்

ஓடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை

போதிய உளஉரம் வேண்டும்

ஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதிபெறுகின்றேன்

நாம் ஓடாமல் இருப்பதற்கு

ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டும்

என்று ...தனக்கே உரிய அழகான ஆளுமையுடன் கூறுகின்றார்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம், தங்கத்துரை, கிட்டு, திலீபன் எனப் பல புத்திஜீவிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் கிட்டு என்ற புத்திஜீவி பற்றியே எனது பார்வை இடம் பெறுகிறது.

"கிட்டு ஓரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு." எனகிறார் கிட்டுவை ஆட்கொண்ட தேசியத் தலைவர்.

"தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய உண்மையான ஒரு தமிழ் புத்திஜீவி கிட்டு" என்கிறார், அவரால் ஆட்கொள்ளப்பட்ட திரு நடேசன் சத்தியேந்திரா.

அவ்வாறான கிட்டுவைப்பற்றி எமது பார்வையைத் திருப்பு முன்னர், புத்திஜீவி என்றால் யார்? புத்திஜீவியின் இலக்கணம் என்ன? பண்புகள் என்ன ? என்பவை பற்றி சுருக்கமாக நோக்குவோம்

ஆங்கிலத்தில் Intellectual என்று கூறப்படும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே புத்திஜீவி என்னும் பதமாகும். ஆனால் ஆங்கிலச் சொல் உருவாவதற்கு முன்பே தமிழில் சான்றோன் என்ற பதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது. சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும், அவர்களின் பாடல்களை சான்றோர் இலக்கியங்கள் என்றும் அழைப்பர். சங்ககாலத்தின் பின் எழுந்த திருக்குறளும் சான்றோன் என்ற சொல்லையே பயன் படுத்தியுள்ளது.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்,

என்னும் குறள் இதற்கு ஒரு உதாரணமாகும்.

ஆனால் சங்க இலக்கியங்கள் கூறும் சான்றோருக்கும், வள்ளுவர் காணும் சான்றோருக்கும் வேறுபாடுகள் உண்டு. காதலையும் வீரத்தையும் பாடிய சங்கச் சான்றோர் சமுதாய மாற்றங்களின் கருவியாகச் செயல்பட, திருக்குறள் காட்டும் சான்றோர் கல்வி அறிவு மிக்கவர் என்ற அர்தத்தைப் பெறுகின்றனர்.

பின் வந்த பக்திநெறிக் காலத்தில் சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் போன்ற சமய குருவர் சான்றோராகப் போற்றப்படுகின்றனர். சமுதாய மாற்றங்கள் புத்திஜீவி பற்றிய வரைவிலக்கணத்தையும் காலத்திற்குக் காலம் மாற்றுவதைக் காண்கின்றோம்.

அந்தவகையில் நவீன அரசின் தோற்றத்தோடும், அந்த அரசுகளுக்கு உள்ளே காணப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் புத்திஜீவியின் பண்புகளும் மாற்றம் அடைவதைக் காண்கிறோம்.

"Intellectuals are to be considered as formulators of the nationalist ideology. Their task does not end here, however, since many of them also act as agitators and mobilizers of the nationalist movement. It has to be added that not all intellectuals perform both functions. In the case of a nation without a state of its own, its intellectuals' discourse is opposed by the state's intellectuals, some of whom will operate within the territory of the national minority defending the status quo, questioning its nationalist ideology and displaying a clear 'pro-state nationalist' attitude." Nations without States: Political Communities in a Global Age, by Montserrat Guiberna

இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க புத்திஜீவிகளில் ஒருவரான எமர்சன் ( Ralph Waldo Emerson ) " The American Scholar " என்னும் புகழ்பெற்ற கட்டுரையில் புத்திஜீவி என்பவன் பூரண மனிதனைக் குறிக்கும் " ஒரு மனிதன் " என்கிறார்.

அந்த ஒரு மனிதனுள் பல ஆற்றல்களும், செயல்களும் ,வெளிப்படும் எனக் கூறும் எமர்சன் அந்த மனிதனை உருவாக்குவதில், இயற்கை, புத்தகங்கள், செயல்கள் ( nature, books and action) என்பன ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவரின் செயல்பாடுகள் அவரது குணநலனின் வெளிப்பாடு என்றும், குணநலன் புத்தியைவிட உயர்வானது எனவும் கூறுகிறார். (Character is higher than intellect ) எமர்சன் கூறும் ஒரு மனிதனில் " விவசாயி, பேராசிரியர், பொறியியலாளர், சமயகுரு, அறிஞன், போர்வீரன், கலைஞன் " என்னும் பன்முக ஆற்றல்கள் புதைந்து கிடக்கும் . இந்தப் புத்திஜீவி

தன்காலத்தின் எல்லா ஆற்றல்களையும்

கடந்த காலங்களின் அர்ப்பணிப்புக்களையும்

எதிர்காலத்தின் நம்பிக்கையையும்

தன்னுள் சுமக்கின்றான் என்கிறார் எமர்சன்.

"The scholar is that man who must take up into himself all the ability of the time, all the contributions of the past, all the hopes of the future."

எமர்சன் கூறும் "ஒரு மனிதன்" பெண்களை உள்ளடக்கவில்லை என்ற குறைபாடு அவர்மேல் சிலரால் சுமத்தப்படுகிறது.

எமர்சன், கிறாம்சி போன்றோர் கூறும் வரைவிலக்கணங்களுக்கு இலக்கியமாக விளங்கக்கூடிய புத்திஜீவிகளை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கியுள்ளது என்பதே எமது வாதமாகும்.

19 வயதிலேயே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கிட்டு சமாதான முன்னெடுப்புடன் சர்வதேச சமாதான உலகிற்கு தெரியப் படுத்திய நிலையில் ஜரோப்பாவில் இருந்து தன் மண்ணை நோக்கி கப்பலில் பிரயாணம் செய்தபோது சர்வதேச கடற்பரப்பில்வைத்து இந்தியக் கடல்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பலவந்தமாக இந்திய கடற்பரப்புள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சரண் அடையாது வங்கக் கடலில் சங்கமமாகியபோது அவருக்கு வயது 31 மட்டுமே.

kittumap.jpg

"On Wednesday 13 January 1993 the ship, M.V.Ahat was unlawfully interceptedby the Indian Navy in international waters in the Indian Ocean. The ship was intercepted about 290 miles east of Hambantota in the south of the island of Sri Lanka and about 440 miles south east of South India (Latitude 6 degrees North, Longitude 85 degrees East).The boat was carrying Sathasivam Krishnakumar, (also known as Kittu), one time Deputy Leader of the Liberation Tigers of Tamil Eelam (and one of its founding members), and several other members of the LTTE. The ship was then forced to travel towards the South Indian coast by Indian Navy frigates.... Nine survivors from the M.V.Ahat were arrested by the Indian Navy and lodged in solitary cells in a special wing of Vishakapatnam jail with maximum security. They were charged with criminal conspiracy, shipment of explosives and threatening Navy officials under the TADA Act. The TADA court judge, Mr.P. Lakshman Reddy, rejected the submissions of the Prosecution as well as the charge of carrying explosives against the crew, and held that the Navy and the investigating agencies, including the Central Bureau of Investigation and the Special Investigating Team, had failed to prove their charges against the crew of the MV Ahat. The Judge said there was no case under the TADA Act against the accused as they were brought forcibly into the Indian waters and also there was no evidence of any offence. He agreed with the defence argument that the Coast Guard ship was not justified in intercepting m. v. Yahat, when it was in international waters and when the accused had revealed that the ship belonged to Honduras. Dissatisfied with the judgment of the Trial Court, the Prosecution appealed to the Indian Supreme Court. But the Supreme Court upheld the Trial Court finding and ordered the release of the accused... The Indian authorities, faced with the decision of the Indian Supreme Court, adopted an interesting approach. They re arrested all the freed accused on charges of entering India without valid travel documents! " India's Act of Piracy, 1993

சாவை வென்ற கிட்டு ஒரு போராளியாக, தளபதியாக. ஓவியனாக, சமையல்காரனாக, அரசியல் ஞானியாக, ஆத்மீகவாதியாக, கலைஞனாக பன்முக ஆற்றல்களை உள்ளடக்கிய எமர்சன் கூறும் " ஒரு மனிதன் ".

இவரை அறியாதோர் ஓரளவு தன்னும் இவர் பற்றிய தேடலில் ஈடுபடுவதற்கு இவரின் வீர மரணத்தைத் தொடர்ந்து இவரது தோழர்களால் வெளியிடப்பட்ட "தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு " என்ற நூலும், புலம் பெயர்ந்து இருந்த காலத்தில் கிட்டு தன் காதலிக்கு எழுதிய " என் இனியவளுக்கு " என்ற மடல்களும் உதவியாக உள்ளன எனலாம்.

கிட்டுவைப்பற்றி அவரது தோழர்களில் ஒருவரான ச.பொட்டு கூறுகையில் ...குட்டிசிறியின் மோட்டார் செல் லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதில் இருந்து , நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை, எல்லாக் காரியங்களிலும் செய்வன திருந்தச் செய்தார் எனக் கூறுகிறார்.

செய்யும் தொழிலே தெய்வம் ,அதில் திறமைதான் தமது செல்வம் என்ற கீதாசாரத்தை வாழ்வாக்கிய கிட்டு " போராளிகளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை என்றாலும் அதை எப்படி வெள்ளையாகத் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன் " என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

போராட்டச் சுஸ்ரீழலில் சிறுவர்களின், குழந்தைகளின் மனநிலை. உளநிலை பாதிக்கப்படுவதை உணர்ந்த கிட்டு அவர்களுக்காக பல சிறுவர் பூங்காக்களை உருவாக்கியதை நாம் அறிவோம்.

அதேபோல் போராட்டச் சுஸ்ரீழலில் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வு குன்றாமல் இருப்பதற்காக அந்த மக்களுக்கு நன்கு பரிச்சியமான கலை வடிவங்களான வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நாடகம் என்பன மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

போராளிகள் மத்தியில் புரட்சிகரமான அரசியல் சிந்தனைகளை செப்பனிடுவதற்காக வாசிப்புக்களை தூண்டியதோடு அவ்வாறான வாசிப்பிற்கு உரிய புத்தகங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வாறான புத்தகங்களில் ஒன்று றஸ்சிய நாவலாசிரியர் மக்சிம் கோர்கியின் " தாய் " என்னும் நாவல் என அவர் சகபாடி பொட்டு கூறுகிறார். இந்த நாவலை வாசிக்கத் தூண்டியதோடு அவர்கள் வாசித்து முடிந்ததும் அவைபற்றிய கருத்துப் பரிமாற்றங்களைச் செய்தாராம்.

இந்த இடத்தில் இந்த நாவலை வாசியாதோரை கருத்தில்கொண்டு சில வார்த்தைகள் கூறுவது பலனாக இருக்கும்.

புகழ்பூத்த றஸ்சிய நாவலாசிரியர்களில் ஒருவரான Maxim Gorky என்பவரால் 1905 ஆம் ஆண்டில் இடம் பெற்ற றஸ்சியப் புரட்சியின்போது எழுதப்பட்ட அழியா ஓவியம் இந்த " தாய் " . இதில் வரும் பெலகீயா (Pelageya ) ஒரு பட்டிக்காடு. படிப்பறிவற்றவள். ஆலைத் தொழிலாளி ஒருவரின் மனைவி. தாழ்வுற்று வறுமைமிஞ்சி ,விடுதலை தவறிக்கெட்டு ,பாழ்பட்டு நின்ற தங்கள் நிலமையை விதிவசம் என ஏற்றுக்கொண்டவள். ஆனால் இந்தத் தாயின் மகன், நாவலின் கதாநாயகனான பவல் (Pavel Mikhailovich ) ஒரு இளம் ஆலைத் தொழிலாளியாக இருந்தபோதும் நன்கு வாசிப்பவன், ஒரு கருமயோகி, ஒரு புத்திஜீவி. ஒரு புரட்சியாளன்.

ஆரம்பத்தில் மகனில் ஏற்பட்ட மாற்றங்களை, அவனின் புதிய நண்பர்களை, அவன் வாசிக்கும் நூல்களை எதுபற்றியும் அறியாது இருந்த தாய் கால ஓட்டத்தில் அவனை அவன் நண்பர்களை, அவர்கள் செயற்பாடுகளை உன்னதமான, தூய்மையான காரியங்களாக நோக்கத் தொடங்குகிறாள். வாசிக்க கற்றுக்கொள்கிறாள்.

அதிகாரவர்க்கத்தால் பவல் கைது செய்யப்படுகிறான். அந்தத் தாய் புரட்சிகரமான துண்டுப்பிரசுரங்களை ஆலைக்குள் இரகசியமாக கொண்டு செல்லும் அளவிற்கு மாற்றம் அடைகிறாள். வழக்கு விசாரணை நடைபெறுகிறது. புரட்சியைத் தூண்டியவன் என பவல் சைதூரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறான். ஆனால் அவன் மூட்டிய விடுதலைத் தீ பரவுகிறது. அவன் தாயும் அதற்கு விலக்கல்ல . நெஞ்சை நெருப்பாக்கும் சொற்களால் கதையைப் பின்னுகிறார் கோர்கி.

இதில் வரும் வழக்குரைகாதை, அதில் யாரின் துணையின்றியும் வாதாடும் பவலின் வாதம், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் வழக்குரைகாதையை, சோக்கிரட்டிஸ் வழக்கை எம் கண்முன் நிறுத்தும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அலிப்பூர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்தர் அவரின் சட்டத்தரணியான இளம் சித்தரஞ்சன் தாஸ்போல் தன் கதாநாயகன் பவல் மூலம் கோர்கி உதிரவிடும் சொற்கள் இரத்தத்தோடும் சதையோடும் பீறிட்டுபாய்வதை தமிழ்மொழிபெயர்ப்பிலும் காணலாம்.

தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் இது போன்ற வழக்குரைகாதை உண்டு. திரு நடேசன் சத்தியேந்திரா தங்கத்துரை சார்பில் தோன்றியபோதும் கோர்கியின் பவலாக தங்கத்துரை மாறிய காட்சி ஒரு உன்னதமான அரசியல் அரங்கம் (a poweful political theatre ) எனலாம். இவைபற்றி பிறிதொரு சமயம் எம் பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவை.

கோர்கியின் நாவல் கிட்டுவை ஆகர்சித்ததில் அதிசயம் இல்லை.

கிட்டுவின் புத்திக் கூர்மைக்கும் அதனை வெளிப்படுத்தும் படைப்பு ஆற்றலுக்கும் உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அவர் ஜரோப்பாவில் ஒழித்து ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் அவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழீழத்தின் எல்லைகள் எது என்ற கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் கிட்டுவிடம் கேட்கிறார். சற்று யோசித்துவிட்டு கிட்டு கூறிய பதில் பத்திரியையாளரை வியக்க வைத்தது. இலங்கையின் வரைபடத்தை எடுத்து அதில் சிறிலங்கா அரசின் போர்விமானங்கள் குண்டு வீசிய இடங்களுக்கு சாயம் பூசினால் முடிவில் தமிழீழத்தையும் அதன் எல்லைகளையும் காணலாம் எனக் கூறினாராம்.

சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் சிங்கள இளைஞர் ஜே.வி.பி அணியாகப் புரட்சி செய்தபோது அவர்கள் குரூரமாக அழிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருந்த பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுக்கள் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கிட்டு தன் மண்ணைவிட்டு பிரிந்து இருந்ததை தாங்க முடியாது தவித்ததை தன் இனியவளுக்கு எழுதிய மடல்களில் கொட்டும் விதம் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியை எம் கண்முன்னே நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக,

".....அங்கு

தெருவோரத்துச் சொறிநாய்களும்

கோபம் கொண்டு

அலையாய் மோதும்

மாரிக் கடலும்

அடித்து, அடங்கி

வற்றிப்போகும்

கோடைக் கடலும்

பகலில் மகளிர் கல்Âரிகளைச் சுற்றும்

விடலைப் பையன்களும்

இங்கு காணமுடியாது, ஆனால்

காணத் துடிக்கிறேன் ...."

கிட்டுவின் படைப்பு ஓசையில் அயர்லாந்து தேசத்தின் குடிமனைகளும், கிராமப்புறங்களும் வயல்வெளிகளும் எப்படி இருக்கவேண்டும் எனக் கனவு கண்ட டி வலறாவின் குரலையும் கேட்கிறேன்.

இன்னொரு மடலில் ஆத்மீகத்தை தேடும் கிட்டு அந்த ஆத்மீகத்தை போராட்டத்தின் நோக்கமாக அதன் தேடலாகக் காண்கிறார்.

" வறியவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது

இந்நிலை மாற வேண்டும்

விறகு கொத்தும் கந்தனும்

கள்ளு வடிக்கும் பூதனும்

கோவணத்துடன் தோட்டம் கொத்தும் ராமையாவும்

கரவலை இழுக்கும் போபுவும்.....

கிட்டுவின் காட்சியில்வர இவர்களின் வாழ்வு வளம்பெற உழைப்பது ஆத்மீகமாகிறது.

" இதைத்தான் ஆத்மீகமும் சொல்கிறது, புரட்சியும் சொல்கிறது

ஆத்மீகம் போதிக்கிறது, புரட்சி வழிகாட்டுகின்றது.

ஆத்மீகமும் புரட்சியும் வேறல்ல

இரண்டும் ஒன்றுதான் "

அதிசயிக்கத் தக்க வகையில் தன் கடைசி நாட்களில் ஆத்மீகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

" ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். எம்முள்ளே இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். தேடல் என்பது எம்முள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றுவதைதான் குறித்து நிற்கின்றது "

தன் இனியவளுக்கு வரைந்த கடைசி மடலில்:

போராட்டம் புரட்சி என்பவையை சேவையின் உயர் வடிவமாக் காணும் கிட்டு அதற்காக

" சனங்களிடையே ஆன்ம விழிப்பு ஏற்படுத்துவது அவசியம். உண்மையையும் சத்தியத்தையும் தம்முடைய வாழ்வின் உயரிய லட்சியமாகக் கொள்வதற்கு மக்களைப் பயிற்றுதல் வேண்டும். எம்மால் புரிந்துகொள்ள முடியாத கடவுளைத் தேடுவதை விட நாம் சாதிக்கக்கூடிய சத்தியத்தைத் தேடுவது மேலானது.

சத்தியம் என்பது வார்த்தையிலும் செயலிலும் உண்மையுடன் இருப்பது மட்டுமல்லாமல் உள்ளத்திலும் உண்மையுடன் இருப்பதுமாகும் "

" நாம் உண்மையுடனும் சரியாகவும் நடக்க வேண்டியதே எமது கடமை. எமது கடமையின் உண்மை எம்மைச் சரியான பாதையிலேயே இட்டுச் செல்லும்.

தன் இனியவளுக்கு அவர் எழுதிய கடைசி வரிகளான

" வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எமக்கு ஏற்படும் சோதனையாகத்தான் கொள்ளவேண்டும். எவ்வித சோதனைகளையும் எதிர்நின்று வெற்றி பெறுவோம் "

என்பது தமிழ் இனத்திற்கு அவர் விட்டுச் சென்ற ஆணையும் உறுதியும். இதில் உள்ள சோதனையும் வேதனையும் என்னவென்றால் சத்தியமே வெல்லும் என்னும் வேதவாக்கியத்தை தன் இலச்சனையில் தாங்கி நிற்கும் இந்தியப் பேரரசு கிட்டு என்ற " ஒரு மனிதனின் " மரணத்தை சம்பவித்ததாகும்.

தொலை நோக்குக் கொண்ட கிட்டு ,விழிப்புப் பற்றி தன் கடைசி வாசிப்புக்களைச் செய்த கிட்டு இதனையும் அறிந்திருந்தாரோ?

சே குவரா, காந்தி, அரவிந்தர் ஆகியோரின் வாழ்க்கைக் கோலங்களையும் எமர்சன், கிறாம்சி என்பாரின் எழுத்தோவியங்களையும் வாழ்வாக்கிய கிட்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்துள் இருந்து வந்த ஒரு உண்மையான புத்திஜீவி. அதே சமயம் அந்தப் போராட்டமும் இவரால் வலுப்பேற்றது. கிட்டு கூறுவதுபோல், எமது கடமை அந்தக் கடமையின் உண்மை எம்மை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும்.

- தமிழ் நேசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டுவின் ஆளுமைகளை இதமாய் இரைமீட்கும் ஆக்கத்தைத் தந்தமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.