Jump to content

ராமாயி வயசுக்கு வந்திட்டா..!


Recommended Posts

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

பூப்புனித நீராட்டு விழா.. ஒரு சிறுமி வளர்ந்து வரும் ஒரு கட்டத்தில் இயற்கையாக ஏற்படுகின்ற ஒரு உடலியல் மாற்றத்தை சந்தைக்கடை போல் கூவி விக்க வேண்டிய அவசியம் என்ன? யோசிச்சுப் பார்த்ததில எனக்கு மனதில் பட்டது.... :D

அந்தக்காலத்தில் பெண்கள் தலையை நீட்டி வீட்டுக்கு வெளியால‌ எட்டிப்பார்ப்பதே அதிசயம். இந்த நிலைமையில் ஒரு சிறுமி வயதுக்கு வந்திட்டாள் என்றால் யாருக்குத் தெரியும்? மாப்பிள்ளையை ரெடி பண்ண வேண்டுமல்லோ? அதுக்கு இது ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அதாவது மன்னர்கள் மகளுக்கு சுயம்வரம் வைப்பினம். மக்கள் சாமத்தியச்சடங்கு வைப்பினம். :blink:

இது சரியா இருந்தால் இந்தக்காலத்துக்கு இந்த நடைமுறை பொருந்துமா? நான் பார்த்த அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் எப்படா மகள் வயசுக்கு வருவா.. நாங்கள் சாமத்தியவீடு வைக்கலாம் எண்டு திரியுறினம்..! :(

அவையளிட்ட எல்லாம் சிறப்புப் பேட்டிகள் கண்டதில சில விசயங்களை அறிய முடிஞ்சது. :D

1) தன்ர மகளை ஒத்த வயசில உள்ள மற்ற சிறுமிகளின் பெற்றோருடன் போட்டி போட்டு சடங்கு வைக்க நிக்கினம். :o

2) சாமத்தியச் சடங்கை தாங்கள் மேக்கப் போட கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாக நினைக்கினம். :lol:

3) சடங்கு வைத்து கலக்சன் பார்க்கிற எண்ணத்தில பல பேர் இருக்கினம். :D

பெண் வயதுக்கு வந்திட்டால் எங்கட சமூகத்தில சில சடங்குகளை வீட்டில் செய்யிறது வழக்கம்தான்..! அதில ஒரு பிழையும் இருக்கிறதா தெரியேல்ல. ஆனால் ஒரு வருடமோ ரெண்டு வருடமோ கழித்து எதுக்கு மண்டபத்தில பெரிசா வைக்கினம்? பொண்ணு வயசுக்கு வந்திட்டா எண்டு கூவிக்கூவி விக்கிறதில என்ன மரியாதை இருக்கு? இந்தக்காலத்தில இளம்பிள்ளைகள் தாங்களாவே காரியத்தை கொண்டு போகினம். இதில இந்தச் சடங்கு வேற‌ தேவையா? :)

என்ன சொல்லுறியள்?

பி.கு: ஏற்கனவே இப்பிடி சாமத்தியச் சடங்கு வச்சவை தயவு செய்து இந்தத் திரியை வாசிக்கேல்லை எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ..! :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா? இதை இத்தனை பேர் அலசி ஆராஞ்சிட்டாய்ங்களா? தெரியாமல் போச்சே..! :D:D

Link to comment
Share on other sites

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

Link to comment
Share on other sites

ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ!

பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான்.

லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

டெலிபோன் எடுத்தால், எங்கட சனம் ஆடு, மாடு குட்டி போட்டதையே பெரிய புதினமா சொல்லுதுகளாம்... தங்கட மகள் வயதுக்கு வந்ததை ஊருக்குச் சொல்லாதுகளா??

சிறுமி வயதுக்கு வந்து ஒரு வருசத்துக்குப் பின்பு... (நாட்டில சனம் படுற பாடு ஒருபக்கம் இருக்க...) ஊரில கொண்டு போய் பந்தாக்கு சடங்கு செய்தவையலும் இருக்கினம்... இதெல்லாம் சகஜமப்பா புலத்தில... :D

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

Link to comment
Share on other sites

தமிழர் பண்பாட்டில் ...........

உறவினர்களை மிகவும் மதிக்கும் பழக்கம் உள்ளது . அதில் தாய் மாமனுக்கு உள்ள மதிப்பை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

அதுகும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து துடக்கு கழிவு , பல்லுக் கொழுக்கட்டை , சாமத்தியச் சடங்கு , திருமணம் என்று அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் தாய் மாமனின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நடை பெறாது . அப்படியிருக்க குழந்தையின் சாமத்தியச் சடங்கை தாய்மாமன் உட்பட நெருங்கிய உறவினர்களுக்குள் குடும்ப விழாவாக கொண்டாடுவதில் தவறு இல்லை .

ஆனால் ஊரில் குறிப்பிட்ட சிலர் லவுட் ஸ்பீக்கரை பனை மரத்தில் கட்டி ( அது தானாப்பா அந்த சாம்பல் நிறமுள்ள குழாய் ) நாலு நாளாய் ஊர் சனத்தை நித்திரை கொள்ள விடாமல் செய்வதும் ,

புலம் பெயர் நாடுகளில் தாய் மாமன் கிடைக்காமல் ........ கண்ட , கண்ட அங்கிள் மாரெல்லாம் வயசுக்குக் வந்த பெண்ணுக்கு பாத்ரூமுக்கை போய் தலைக்கு தண்ணி வாக்கிறதும் தான் தப்பு .

தமிழ்சிறி ஊரெல்லாம் அலைஞ்சாலும் (அதான் நடந்துகொண்டே இருக்கிறாரே..) நச்செண்டு நாலு வார்த்தை சொல்லியிருக்கிறாரப்பா..! :D

Link to comment
Share on other sites

இதைப் பற்றிக் கதைச்சு ஒரு பிரயோசனமும் இல்லை எண்டுறீங்கள்..! அப்ப இதைச் செய்யிறது நல்லதா எண்டு சொல்லுங்கோ குட்டி..! :D

சுட்டுப் போட்டாலும் நல்லது என்று நான் சொல்லவே மாட்டேன்...!

எல்லாரும் இல்லை, சில தமிழ் பெற்றோர் பிள்ளையைப் பெற்றால் இதுவும் ஒரு கடமையைப் போல ஜோசிக்கினமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...

(பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்... கேட்டல் செருப்படி விழுமோ என்ற பயம் வேறு... இங்க யாரும் பெண் குழந்தைகள் பெற்றவர்கள் இருந்தால் சொல்லித் தெரியப் படுத்தினால் அறிந்து கொள்ளலாம்...)

பெண்ணாகப் பிறந்தால் எல்லாரும் வயதுக்கு வாறது இயற்கை தானே? அதை ஏன் மேடை ஏத்தவேண்டும்? மாறாக பெண்ணின் உடல் உள மாற்றங்களைப் பற்றிய விளங்கங்களை வீடில் உள்ள பெரியவர்கள்(பெண்கள்) அந்தப் பெண்ணுக்கு எடுத்து சொல்லி கொடுக்கலாம்... இப்ப புலத்தில அதுவும் அவசியம் இல்லாமல் போகிறது... பள்ளிக் கூடத்திலே எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்...)

வேற்று இனத்தவர்கள் இப்படி சடங்கு சம்பிரதாயங்கள் என்று நேரத்தைச் செலவு செய்கிறார்களா? நலத்தை தெரிந்து எடுக்கும் மனப் பக்குவம் இருப்பின் இவைகளை தவிர்ப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து...

பாவம் பொடியளுக்குத் தான் சடங்குகள் குறைவு... :D

கஷ்டம்.... இபோதெல்லாம் சடங்கு வைக்கிறது ஒருபக்கமிருக்க அதை youtube-இல் பிரசுரித்து உலகம் முழுதும் தங்கட மகள் வயதுக்கு வந்துட்டா என்று விளம்பரப் படுத்துறவையளும் இருக்கினமே... எல்லாம் ஒரு பகட்டான வாழ்வு....

இங்க சிலவற்றை இணைக்கலாம் என்று தான் நினைச்சன்... யாழ் நிர்வாகம் என்னை ஆபிசில முழங்காலில உக்கார வைச்சுடுவினம் என்பதனால் தவித்துக் கொள்கிறேன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

தெரியலைங்க.

ஓரே குழப்பமா இருக்கு.

அப்படின்னா என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

சமூகத்தில் காணப்படும் அறியாமைகளை களைய வேண்டியது ஒரு நல்ல சமூகவாதிக்கு அழகாகும்.

பலர் சேர்ந்து கதைக்கும் போது இப்படி செய்யக்கூடாது என்பார்கள் பின் அவர்களே அப்பிழைகளை செய்வா்கள்.

இது இங்கு வழமைபோல் தோன்றுகின்றது.

தற்போது சாமத்திய வீட்டு அழைப்பு பத்திரிகையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றமையை பார்தால் வெளிநாட்டுப்பணம் என்பார்கள்.

எதற்கு விளம்பரம் செய்வது என்ற விவஷ்தை இல்லாமல் போட்டுது.

அடுத்து பெரிய வெட்ககேடான விசயம் என்னவென்றால்.

சுபமூகூர்தம் 10மணி தொடக்கம் 12.30வரை என்று அழைப்பிதழில் போடப்பட்டிருக்கும் .

ஆனால் பெண் அலங்காரம் முடித்து முதலில் மண்டபத்திற்கு வருவது இரண்டு மணிக்கு தான்.

பணம் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் நேரம்.

வீடியோ காரரின் விநோதங்கள் . இன்னும் எத்தனை வேடிக்கைகள்.

இங்கு மேலைதேசத்தவர்கள் நேரத்திற்கு கொடுக்கு மதிப்பு ஏன் எம் நாட்டவரின் வைபவங்களில் காணப்படுவதில்லை.

இந்த நிலை எப்ப தான் மாறுமோ.எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயி வயசுக்கு வந்திட்டா..! எண்டு கூவுறது சரியா?

கன‌ நாட்களாக எனக்குள் நானே கேட்டுக்கொண்டிருந்த‌ கேள்வி. இன்னும் சரியான விடை தெரியேல்ல‌. அதனால் இப்போது யாழ் வித்துவான்களிட்ட கேக்கலாம் எண்டு இருக்கிறன்..! :D

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :Dஎனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராமாயிட ஒரு சாமத்திய வீட்டு சடங்கை பற்றி நீங்கள் ஒரு ஆள் தான் கன நாளாய் ஜோசிச்சு இருக்கிறியள்!!!

ராமாயிட படம் இருந்தா போடுங்க, அவாட சாமத்திய வீடு கூவி கூவி செய்ய வேண்டியதா இல்லையா என்று நாங்களும் ஜோசிப்பம்!

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:D

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்... இவரின் மந்தாரப்புன்னகையில் தமிழ் சிரிக்க, சிறக்க, தமிழ்சிறியைக் காண்போம். :D

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில எங்களை மாதிரி புதுசுகள் இளசுகள் ஏல்லாருக்கும் யாழின்ர பழைய கதை தெரியாதுதானே..! அப்ப இடைக்கிடை இது வெளில வாறது நியாயம்தானே..! :lol:

அதுசரி.. யாழ் பழைய களத்தைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்..! நல்ல பரீட்சயமோ? :D:blink:

Danguvaar வெளி வரவேண்டிய பழைய கதையள் வெளியில

வரும் ஆனால் வராது :D

இந்தமாதிரி விசயங்கள்தான்

வரும் திரும்பவும் வரும். :D

மோகன் யாழ் இணையத்தளத்தை தொடங்கின நாளிலையிருந்து

நான் யாழின் நிரந்தர வாசகன் & ரசிகனாக்கும்

அதுதான் சொன்னனான் இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

இணையவன் கன தொடுப்புகளெல்லாம் போட்டுவச்சிருக்கிறார்

அவருக்கும் பழைசெல்லாம் பரிச்சயமோ? கேட்டுப்பாருங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2282815857_a77916e055.jpg

இந்தாங்கோ ........ இளையபிள்ளை , நீங்க கேட்ட ராமாயி வயசுக்கு வந்த படம் .

:unsure:

ஐயோ பாவம்..... இந்த ராமாயி நல்ல மனுசி மாதிரி தெரியுது...

சிறி அண்ணா நீங்கள் வழக்கமாய் போடற தமிழ் நடிகைகளிட மூஞ்சியளை விட

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :wub:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. :lol:எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :(

நாலு மணத்தியாலம் கார் ஓடி ஒரு சாமத்திய வீட்டுக்கு போகோணும் என்றால் - போற வழியில நாலு அஞ்சு ஹிட்ச் ஹைக்கெர்ஸ் ஐயும் எத்தி கொண்டு போய் நல்லாய் மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு சதமும் குடுக்காம வாங்கோ.... அப்படியாவது நிறைய பேர் செய்தால் சனம் திருந்தும்! சீ எனேகென்ன விசரா - எங்கட சனமா? திருந்தவே திருந்தாது!!! <_<

எனக்கு விநோதமாய் இருக்கிறது என்ன சொல்லுங்கோ -

பாவம் நல்ல வடிவான பிள்ளையா இருக்கும் ஆனால் கறுப்பு எண்டதுக்காக எதோ சாம்பல் நிறத்தில முகத்துக்கு மேக் அப் அள்ளி பூசி விட்டு இருக்குங்கள்.... பிறகு வீடியோல பாட்டு பொருத்தமாய் போட்டு இருப்பினம் - - பெண் அல்ல பெண் அல்ல ஊதாப்பூ எண்டு.... :wub:

(பேய் கதை கதையாம சாம்பலை கலைச்சிட்டு பாருங்கோ - அது பெண் தான்... எண்டு தான் சொல்ல தோணும்!!) :unsure:

Link to comment
Share on other sites

இவாட முகம் இயல்பாய் சாந்தமாய் அழகாய் இருக்கு.... :unsure:

கட்டாயம் இவாக்கு ஒரு விழா வைக்க தான் வேணும்..

வைக்கேக்க சொல்லுங்கோ நானும் வாறன்...

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை

சொல்லாட்டியும் கட்டாயம் நீங்கள் வரவேணும்

தூக்க நாலுபேர் வேணும்

மூண்டுபேர் ரெடி நாலாவது நீங்கள்தான் :wub:

<_<

:lol: ஐயோ பாவம், நானே வீட்டை கூட்டி கொண்டு போய் வடிவா சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்.

நான் எங்க சமைக்கிறது..... இந்த ஆச்சி சமைச்சு தந்தால் சாப்பிட்டு நான் தான் வளருவேன்! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு பாக்க யாரோ ரொறன்ரோ வில நடக்க போற சாமத்திய சடங்கு க்கு டங்குவாருக்கு அழைப்பிதள் குடுத்திருக்கினம். நாலு மணித்தியாலம் மினைக்கெட்டு கார் ஓடவேணுமே எண்ட கடுப்பில வந்த ஆராய்சி போல தான் இருக்கு. <_<எனக்கும் ஆராவது உப்பிடியான விழாக்களுக்கு 4.5 மணித்தியாலம் கார் ஒடி வரவேணுமெண்டு சொன்னால், கடுப்பில உப்பிடியான ஆராய்சியளைச் செய்து மனிசியிட்டை வாங்கி கட்டுறது. :lol:

பாம்பின்கால் பாம்பறியும்..! :unsure:

குழையடிக்கிற வேலையை சரியாச் செய்யுங்கோ..! சரிவரும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலையடிக்கும் சீசன் ..........நன்றாக அலை வீசட்டும் . பாராடுக்க்ள. டங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவகை பாலியல் விளம்பரம்..! பெண்களை பாலியல் விளம்பரப் பொருளா பார்க்கிற இந்த உலகத்தில.. இதெல்லாம் சகஜம்..! இதுவே பின்னாடி பெண்களுக்குப் பிரச்சனையாகவும் அமையுது..! அதையெல்லாம் நாம சொல்லி எவன் கேட்கப்போறான். நமக்கு முன்னரே இதுகள பல பேர் எடுத்துச் சொல்லியும் கேட்காதவங்க.. நம்மள... ம்ம்ம்...!

டங்கு.. போனமா.. ராமாயி பார்த்தமா.. கொடுக்கிறதை கொடுத்தமா.. தாறத வாங்கினமா.. சாப்பிட்டமா வந்திட்டு இருக்கனும்..! கூப்பிட்டு வைச்சுத் தாறன் தாறன் என்றாங்க.. ஓசியில வாறத ஏன் விடுவான்..! :unsure:

Link to comment
Share on other sites

எனக்கு இந்த சாமத்தியவீடு செய்யிறதில் உடன்பாடு இல்லை, மகள் வயதிற்க்கு வந்திட்டா அதை ஊருக்கு சொல்லி பெரிசா செய்து அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திறது, அதை பார்த்திட்டு பெடியங்கள் பின்னால சுத்த வெளிக்கிட்டா அவங்களை தப்பா பார்க்கிறது. இதெல்லாம் பறவாயில்லை இதைவிட கொடுமை என்ன தெரியுமா வீடியோ என்ற ஒன்று எடுப்பினமே அதில அந்த பிள்ளை குளிக்கிறதை எத்தனை விதமா எடுப்பினம், பிறகு பூங்காவில் பிள்ளையை ஓடவிட்டு எடுப்பினம், பிறகு இந்த வீடியோ காட்சி ஊர்முழுக்க பார்ப்பினம் , எவ்வளவு பைத்தியக்காரத்தனம். சினிமா பாடல்களில் கூட மழையில் நனையிற காட்சியோ குளிக்கிற காட்சியோ ஒருவித கவர்ச்சிக்காகத்தான் எடுக்கினம். அதைக்கூட நாங்க வித்தியாசமாத்தான் பார்க்கிறம். அப்படிப்பட்ட சமுகத்தில் பிள்ளைகளை பெற்றோரே சாமத்தியாவீடு செய்யிறம் என்று அசிங்கப்படுத்திறது நல்லாவா இருக்கு. சில சாத்திர சம்பிரதாயங்கள் இருக்கு அதை வீட்டுக்குள் வைத்தே செய்யலாமே.

Link to comment
Share on other sites

இந்த விசயம் குறித்து ஏற்கனவே போன வருசம் பூப்பெய்தி அடுத்த வருசம் சாமத்திய சடங்கு மண்டபத்தில் விமரிசையாகக் கொண்டாடக் காத்திருக்கும் ஒரு சிறுமி நேற்று எனக்கு செவ்வி வழங்கினார்..! :unsure:

எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது இந்தச் சிறுமிக்கு இந்த விழா நடக்கிறதில விருப்பம் எண்டு. நேற்றுக் நேராக அவவிட்ட‌ கேட்டபோது சொன்னா.. "I don't care..!" :wub:

ஆக, பெரிய ஆக்கள் தங்கட ஆசைக்கு நடத்திக்கொண்டு சிறுமிமேல பழி போடுகினம் எண்டு விளங்கிச்சிது..! <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.